• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1542808452283.png
வாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டுதல் வைத்தால் மேற்கண்ட அனைத்தையும் திரும்ப பெறலாம். கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வரலாம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நீண்ட நாள் துன்பங்கள் தடைகள் நீங்க

தினசரி செம்பு பாத்திரத்தில் குளித்து வர நீண்ட நாள் துன்பங்கள், தடைகள் ஒரு முடிவுக்கு வரும், மேலும் கங்கையில் குளித்த புண்ணியத்தை தரக்கூடியது செம்பு ஜல ஸ்நானம். இது சிவபெருமான் ராவணனுக்கு உபதேசித்த ஒன்றாகும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அனுதினமும் வெற்றியடைய தாந்த்ரீக மூச்சு பயிற்சி

காலை கண்விழித்தவுடன் படுக்கையில் இருந்தபடியே சுவாசம் எந்த நாசி வழியே வருகிறது என்று பார்க்கவும். உதாரணமாய், வலது நாசி வழியே வரின், வலது கையால் முகம் முழுதும் நன்றாக தேய்த்து கொள்ளவும். பின்பு வலது காலை எடுத்து வைத்து படுக்கையில் இருந்து எழவும். இப்படியே இடது நாசி வழியே வரின், இடது கையால் தேய்த்து கொண்டு, இடது காலை எடுத்து வைத்து எழவும். சில சமயம் இரு நாசிகளிலும் வரின், இரண்டு கைகளாலும் முகத்தை தேய்த்து கொண்டு, இரு கால்களையும் கீழே தரையில் படும் படி வைத்து எழவும். இப்படி செய்யும் ஒவ்வொரு நாளும் மிகுந்த மன அமைதி, கூரிய புத்தி கூர்மை கொண்டு செயல் படும் நாளாக அமையும். நம் 'தாந்த்ரீக மூச்சு' பயிற்சி'யில் வழங்கப்படும் மிக முக்கியமான முறை இது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
தடைப்பட்ட பண வரவு பிரச்சனை தீர


கோள்களில் செவ்வாயின் ஆதிக்கத்தை பெற்ற இஞ்சியை (காய்ந்தது) நன்கு பொடி செய்து அதை சிறு சிகப்பு காகிதத்தில் வைத்து மடித்து பாக்கெட் / பர்சில் வைத்து செல்ல மேற்சொன்ன பிரச்சனை தீரும். வீட்டில் / வியாபார இடத்தில் பணம் வைக்கும் இடத்தில் சிறு துண்டுகளை போட்டு வைத்து அவ்வப்போது மாற்றி வரலாம். இதை ஆரம்பிக்க உகந்த நாள் : செவ்வாய் ஆகும். மதியம் 1:15 மணி முதல் 2 மணிக்குள் செய்யலாம். தெற்கு திசையில் நின்றவாறு செய்ய பலன் கூடும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
தொடர்ந்து வரும் காரிய தடைகள் மற்றும் எதிலும் தோல்வி நிலை மறைய

சூரியனின் ஆதிக்க சக்தி கொண்ட குங்குமப்பூவை சிறிது நீரில் குழைத்து தினசரி நெற்றியில் திலகமாக இட்டு செல்ல, மேற்கண்ட நிலை மாறி அனைத்திலும் வெற்றி உண்டாகும்
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
நல்ல தகவல்...

வாராஹி தேவியை வணங்கிய பின்னரே மன்னர்கள் போருக்கு செல்வர்....
இவரை வெற்றி தேவதை எனவும் குறிப்பிட்டு உள்ளனர்...

லலிதா சஹஸ்ரத்தில்... "விசுக்ர ப்ராண ஹரண வாராஹி வீர்ய நந்திதா....",
76 ஆவது நாமாவளி.....

நன்றி தோழி....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top