• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இவள் என்னவள்-21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
446
Reaction score
650
Location
Theni

இவள் என்னவள்-21

சஞ்சு அவளுடைய இறுதி ஆண்டு தேர்வை எழுதி முடித்திருந்தாள். அந்த விடுமுறையை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்கனவே தந்தையுடன் ஆலோசித்திருந்தாள். மோகன், தான் முடிவு செய்து வைத்திருந்ததை தன் மகளிடம் கூறினார். சஞ்சுவின் தந்தைக்கு பிஸினஸை மகளும், மருமகனான சிவுவும் சேர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது.


சிவுவுடன் அலுவலகத்திற்கு சென்று தொழிலைக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார் மோகன். சஞ்சுவுக்கோ தொழிலின் மீது ஆர்வம் இல்லாமல் இருப்பினும் தனது மம்முவுடன் அலுவலகம் செல்ல மனமானது துடித்தது. வீட்டில் அனைவரிடமும் சென்று தன் முடிவைக் கூறினாள். சிவுவோ இந்த வாய்ப்பை தனதாக்கிக் கொள்ள முடிவு செய்தான்.


அடுத்த நாள் சஞ்சு ஆபிஸ் கிளம்புகிற நேரத்தில் அவளது தோழி அர்ச்சனா போனில் வாழ்த்து தெரிவித்தாள். வாழ்த்தைப் பெற்றுவிட்டு தன் மொபைல் வால் பேப்பரைப் பார்த்தவளின் இதழில் தன்னை மீறி ஒரு மென்னகைத் தோன்றியது. சிவு, சஞ்சு இருவரும் ஒரே வண்ணத்தில் உடையணிந்து தோள்கள் மட்டும் உரசும் படி நின்ற நிழற்படம் இருந்தது. ஒரு முறை அந்த புகைப்படத்தைப் பார்த்த அவளது தோழிகள் நல்ல ஜோடிப் பொருத்தம் என்றும் உனக்கு மாப்பிள்ளை வீட்டிலேயே இருக்கிறார் எனவும் கூறினார்கள். அது அவள் நினைவில் வந்து போனது…


அச்சு, “ஏய் சஞ்சு நீங்க இரண்டு பேரும் செம்ம பேர்....பா, தெரியாதவங்க யாராச்சும் பார்த்தா லவ்வர்ஸ்னுதான் கண்டிப்பா நினைப்பாங்க”


இதைக்கேட்ட சஞ்சுவுக்கு இதயத்தை ஒட்டி பட்டாம்பூச்சி பட.... பட...வென அடித்துக் கொண்டது. இத்தனைக்கும் அந்த புகைப்படத்தில் அவ்வளவு நெருக்கமும் இல்லை எனிலும், அவர்களின் தோற்றம் அப்படிக் கேட்க வைத்தது. அதை சமாளித்தவாரே “எனக்கும் மம்முக்கும் ஆறுவருடம் வித்தியாசம் தெரியுமா?” என்று பதில் தந்தாள் சஞ்சு


தோழி “எங்க அக்காவுக்கு போன வருஷம் கல்யாணம் ஆச்சே அந்த அக்காவுக்கும், மாமாவுக்கும் பத்து வருஷம் வித்தியாசம் இருக்கு”


“என்னப்பா.. ஆறு வயசு தான, என்னமோ அறுபது வயசு வித்தியாசம் மாதிரி பேசுற, எங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பதினைந்து வருடம் வித்தியாசம் தெரியுமா?” என்றாள் மற்றொரு தோழி,


இதை கேட்டுக் கொண்டு இருந்த திவ்யா, அச்சுவும் கூட தோழிகளுக்கு சாதகமாக பேசினார்கள்


“உனக்கும், உங்க மம்முக்கும் அப்படி ஒண்ணும் பெரிய வயசு வித்தியாசம் இல்ல சஞ்சு, இப்பலாம் வயது மூத்த பொண்ணயே கல்யாணம் பண்றாங்க, மெச்சுருட்டி லெவல் ஒண்ணு இருக்குல அது உனக்கும் சிவா அண்ணாவுக்கும் ரொம்ப சரியா இருக்கும்” என்றாள் அச்சு.


“இவ்வளவு ஏன்? ஜான்சி ராணிக்கும் அவரோட கணவர் கங்காராவ்க்கும் நாற்பது வயசு வித்தியாசம், எவ்வளவு பெரிய வயது வித்தியாசம் தெரியுதா?, ஆனால் அவங்க ரெண்டு பேரும் மனம் பொருந்தி எப்படி வாழ்ந்தாங்க தெரியுமா? ஜோடிப்பொருத்தம் வயசப் பொருத்தது இல்ல மனசப் பொருத்து அமையிறது”


“சஞ்சு சீக்கிரம் கிளம்பி வா. சிவு உனக்காக வெயிட் பண்றான்”, என்று பத்மாவதி அழைத்த பிறகே தோழிகளின் உரையாடல் நினைவில் இருந்து மீண்டு சுயநினைவுக்கு வந்தாள். அதற்கு ஜான்சி ராணி கதையெல்லாம் கொஞ்சம் ஒவர்தான் என்று யோசித்தவாரே கிளம்பினாள்.


கீழே ஹாலில் சிவுவும் அவனது தாயரும் பேசிக்கொண்டு இருந்தனர். பத்மாவதி, சஞ்சு வருவதைப் பார்த்தவுடன் “வேகமா வா, உனக்காக சிவு காத்துக்கொண்டு இருக்கிறான்”


சஞ்சு வேகமாக உணவை முடித்து சமையல்கார ஆச்சியிடம் பூ கொண்டு வாங்க என்றாள். லட்சுமி ஆச்சி மல்லிகைப் பூவுடன் வர, அதே நேரம் சிவு ஒற்றை ரோஜாவுடன் வந்து நின்றான். இரண்டு பேர் கைகளில் உள்ள பூக்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருக்க, பத்மாவதி “இரண்டையும் வச்சுக்கோ சஞ்சு” என்று சொல்ல


“இரண்டையும் வைத்துக்கொண்டால் கல்யாணத்துக்குப் போற மாதிரி ஆயிரும் அத்தை”


சிவு, சிறிது ஏமாற்றத்துடன் “அப்ப மல்லிகைப் பூவையே வச்சுக்கோ” என்று நகல அவன் கையைப் பிடித்து, “மம்மு அந்த ரோஜாப்பூவைக் குடுங்க” என அவன் கொண்டு வந்ததை வாங்கி வைத்துக் கொண்டாள். ஏதோ அவன் கொண்டு வந்த பூவை சூடிக்கொண்டவள் மனம் நிறைந்தது.


கம்பெனிக்கு சென்ற சஞ்சுவிற்கு ஆச்சரியம் இவள் வருவதை முன்பே கூறி வரவேற்புக்கு ஏற்பாடு செய்து இருந்தான்.


கம்பெனி நுழைவு வாயிலில் இருந்து கார் நிறுத்தம் வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சஞ்சுவின் புகைப்படத்தோடு கூடிய வரவேற்புப் பதாகை அங்கு அலங்கரித்துக் கொண்டு இருந்தது. காரை விட்டு கீழே இறங்கியதுமே சஞ்சுவிற்கு கம்பெனியின் அலுவலர்கள் பொக்கே கொடுத்து இன்முத்தோடு வரவேற்றார்கள்.


“என்ன மம்மு வரவேற்பெல்லாம் தடபுடலா இருக்கு? எதுக்கு இதெல்லாம்? “


“சஞ்சுமா நீ முதல்முறை ஆபீஸ் வர்ரப்ப இதக்கூட செய்யாட்டி எப்படி டா? உனக்கும் இந்த கம்பெனியில் சமஉரிமை இருக்கு. உனக்கு எப்ப வரைக்கும் ஆபீஸ் வரணும்னு தோணுதோ, அதுவரைக்கும் நீ வரலாம்”


“வாவ்.. ஆனாலும் இது உங்களோட கம்பெனி மம்மு. இது உங்களோட உழைப்பு,. இது எனக்கு எப்படி சொந்தமாகும். உங்களுக்கும், உங்க வருங்கால மனைவிக்கும் தான் முழு அதிகாரம் இருக்கு” என்றாள் சஞ்சு


“அதனால தான் உனக்கும் இதில் சமஉரிமை இருக்கு” என்றான் அதன்பின் சுதாரித்துக் கொண்டு “வரப்போகிற அவளுக்கு உரிமை உண்டு என்றால் உனக்கும் உண்டு” என்று சமாளித்து வைத்தான். இதை ஆமோதிக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் சஞ்சு தவித்தாள், சிவு அவளது தவிப்பை உணரத் தவறவுமில்லை.


அவள் வேண்டாம் என மறுத்தப்போதும் அவளை எம்.டி. நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்தான் சிவு. “இல்ல மம்மு நீங்க உட்காருங்க” என அவள் எழ நினைக்க... “மே ஐ கம்மின் சார்” என குரல் வர, அவன் சஞ்சுவிடம் கைகாட்டி அங்கே அமரச் சொல்லிவிட்டு சஞ்சுவின் எதிர்நாற்காலியில் அமர்ந்து “எஸ்..” என அனுமதி தந்தான்.


உள்ளே நுழைந்தவள் சிவுவின் பி.ஏ. மது, அவளின் உடைகளைக் கண்டவுடன் சஞ்சுவுக்கு ஏதோ நெருடலாக இருந்தது. மது அவளுக்கு கொடுத்த மரியாதையில் அந்த நாற்காலியின் மதிப்பை உணர்ந்து கொண்டாள் சஞ்சு. இதை யோசித்து விட்டு திரும்புகையில் சிவு மீது உரசிக்கொண்டு நின்றாள் மது.


சஞ்சு கோபத்துடன் எழுந்து சிவு அருகில் வந்தாள், “ஹலோ மிஸ். மது, உங்களுக்கு சத்தமா பேச வராதா? பக்கத்தில் வந்து நின்னு இப்படி பேசற வேலை எல்லாம் வேண்டாம். எது சொல்லனும்னாலும் தள்ளி நின்னு சத்தமா பேசுங்க. அதுசரி என்ன டிரஸ் இது? இங்க என்ன கிளப் பார்ட்டி எதுவும் நடக்குதா? நாளைக்கு ஆபீஸ்ல டிரஸ் கோட் அறிவிப்பு தர்ரேன், அதுபடி எல்லோரும் நடத்துக்கோங்க. நவ் யூ கேன் கோ” என்று அதிகாரத்தை வெளிப்படுத்தினாள்.


தலையை குனிந்துக் கொண்டு அமைதியாக வெளியே சென்றாள் மது.


“என்ன மம்மு அப்படி பார்க்குறீங்க, நான் சொன்னது சரிதான?”


“ஆமா மேடம், இந்த கம்பெனியோட எம்.டி மேடம் சொன்னா சரியாதான் இருக்கும் மேடம்” மென்னகையுடன் கூறினான்.


அவன் வாய் வாய்க்கு மேடம் என்று சொல்ல அவளுக்கும் சிரிப்பு வந்து இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.


“மம்மு, நான் என்ன வேலை செய்ய?”


“அதான் ஆல்ரெடி ஸ்டார்ட் பண்ணிட்டியே!”


சிறிது யோசித்தவள்... “மம்மு அது வேலை இல்ல, என் மம்முவோட கற்ப காப்பாத்தினேன்”


“அடிப்பாவி.. என்ன கற்பா? இப்படி லேசா உரசினதுக்கா?” என்றான் அதிர்ச்சி மேலோங்க


“மம்மு தப்பு சின்னதா இருந்தாலும் சரி, அதிகமா இருந்தாலும் சரி தப்பு தப்புத்தான்” அவளின் பேச்சை ஆமோதித்து அதற்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர்.


சிவு வேலை செய்யத் தொடங்கியவுடன் சஞ்சு அவனைத் தொந்தரவு செய்யாமல் அங்கு இருந்த புக்கை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள். அதுவும் சற்று நேரத்தில் அவளுக்கு சலிப்பைத் தர போனில் கேம் விளையாடினாள். அவ்வப்பொழுது சிவுவை பார்த்து ரசித்தாள், இது என்னோட சிவு மம்மு என பூரித்துப் போனாள்.


“சஞ்சுமா உனக்கு ஏதவது குடிக்க கொண்டு வரச்சொல்லவா?”


“இப்போதாவது கேட்டிங்களே, இப்பவே லைட்டா பசிக்குற மாதிரி இருக்கு மம்மு”


“எம்.டி. மேடம் என்ன வேணும்? தாங்கள் உத்தரவிட்டால் சேவை செய்வதற்கு இந்த அடியேன் தயாராக உள்ளேன்” என்று பவ்வியமாகக் கூறினான்.


“மம்மு... யூ ஆர் சோ ஸ்விட்” என்று அவன் கன்னத்தைக் கிள்ளினாள்


“ஏய்.. ஸ்வீட்னு சொல்லி கன்னத்தைக் கடிச்சிடாத”


“மம்மு.. கடிக்க மாட்டேன். ஆனால் பிச்சு சாப்பிடுவேன். அவனது கன்னத்தை பிய்த்து அப்.. அப்..” என்று வாயை அசைத்தாள்.


அவளுக்குப் பிடித்த சிற்றுண்டிகளைக் கொண்டு வரச்செய்து சாப்பிட வைத்தான். அதன் பின் சிவு தனது வேளையில் கவனம் செலுத்தினான்.


மதிய வேளை வர, “சஞ்சு நீ போய் சாப்பிடு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு”


“எனக்கும் தான் வேலை இருக்கு மம்மு”


அவளைக் கண்டு யோசனையாக “உனக்கு என்ன வேலை, நான் எதுவும் வேலை சொல்லவில்லையே?”


“நீங்க சொல்லல, ஆனால் எனக்கு வேலை இருக்கு, உங்களை கவனித்துக் கொள்ளும் வேலைதான். சரி.. சரி.. நீங்க வேலையைப் பாருங்க”


ப்யூனை அழைத்துக் கொஞ்ச நேரத்திற்கு உள்ளே யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தாள்.


“மம்மு நீங்க வேலையைப் பாருங்க நான் ஊட்டிவிடுறேன்” என்று தட்டில் உணவுகளை வைத்துக்கொண்டே கூறினாள். “இல்ல சஞ்சு, இருக்கட்டும் உனக்கு ஏன் சிரமம்?” என்றானேத் தவிர அதற்கு ஆசைப்படத்தான் செய்தான்.


அவனுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டே அவளும் சாப்பிட்டாள், இருவரும் சாப்பிட்டுக் கொண்டு வேலையை முடித்தனர், “எனக்கு பிஸினஸ் டீல் விஷயமா ஒரு மீட்டிங் இருக்குடா, நான் கான்பிரன்ஸ் முடிச்சுட்டு கொஞ்ச நேரத்தில் வந்துடறேன்” என்று அவளிடம் சொல்லி விடைபெற்றான். அவன் சென்ற பிறகு டேபில் படம் பார்த்துக்கொண்டு இருந்தவள் தூங்கிவிட்டாள். சிவு மீட்டிங் முடித்து வந்த பார்த்தது தூங்கிக்கொண்டு இருந்த சஞ்சுவைதான். ப்யூனை அழைத்து உள்ளே யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றான். அவள் தூங்கும் அழகை பார்த்து பார்த்து ரசித்தான். சற்று நேரம் சென்றது, கோடி முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறாய் என்னவளே....! பிறகு அலுவலக வேலையில் மூழ்கிப் போனான். நேரம் செல்ல செல்ல அவள் சோபாவில் அசெளகரியமாக படத்திருப்பதால் உடல் நோகுமோ என்று எண்ணி அவளை எழுப்பினான். அவளை எழுப்பி “நீ வீட்டிற்கு கிளம்பு சஞ்சு, நான் மாலை வந்திடறேன்” அவளோ அரைத் தூக்கத்தில்,” இல்ல மம்மு நானும் உங்க கூடவே வர்ரேன் என முனங்கினாள்”, “நீ வீட்டிற்கு போய் தூங்குடா, எழுந்திரு..” என உசுப்பினான்


“இல்ல மம்மு” என்று முளித்தவள், முகத்தைக் கழுவி அவன் அறையைவிட்டு வெளியே வந்தாள். இளம் வயதினர் இருந்த பகுதிக்கு சென்றாள் “ஹைய் நான் சஞ்சு.. சஞ்சனா..” என்று கைகுலுக்கினாள்


“ஹலோ மேடம், நான் தீபா, இவங்க..” என அங்கு உள்ள ஆண், பெண் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.


அனைவருக்கும் ஹலோ சொல்லி சஞ்சு பேச ஆரம்பித்தாள், “நான் உங்களை தொந்தரவு செய்றதா நினைக்க வேண்டாம், உங்க ஒர்க் பற்றி பேசிக்கிட்டு இருக்கலாம்” என்று பேசும் போது மற்றவர்கள் இவளுக்கு கம்பெனியின் உரிமையாளருக்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடுத்து பேசிக்கொண்டு இருந்தனர். அவ்வப்பொழுது நண்பர்களாக பேச சொல்லுவோமா என்று எண்ணினாள். ஆனால் சிவு கொடுத்த எம்.டி. உரிமையை உதாசீனப்படுத்த விரும்பவில்லை. ஆகையால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டு இருந்தாள்.


எதுவும் கூறாமல் முகத்தை கழுவிக்கொண்டு சென்றவள். எங்கு, எதற்கு சென்றாள்? என்பதை மேஜையில் உள்ள கணினி மூலம் பார்வையிட்டான் சிவு. அலுவலர்களுடன் அவள் சகஜமாகப் பழகுவதை பார்த்து நிம்மதியடைந்தான். ப்யூனை அழைத்து சஞ்சு இருக்கும் இடத்திற்கு தேநீர் கொண்டு போகும்படி கூறி முடித்த சிவு அவனது வேலைகளை கவனிக்க தொடங்கினான்.


“மேடம்..... எம்.டி. சார் டீ கொடுக்கச் சொன்னாங்க” என ப்யூன் வந்து நிற்க


“சார் டீ குடீச்சிட்டாங்களா?” சிவுவை பற்றி விசாரித்தாள்


“இல்லைங்க மேடம்” அப்போதும் பவ்வியமாக பதில் தந்தான் ப்யூன்


“சரி, இவங்க எல்லோருக்கும் கொடுங்க” அவர்கள் அனைவரையும் டீ குடிக்கச் சொல்லிவிட்டு, அங்கு இருந்து விடைப்பெற்றாள் சஞ்சு


சிவுவின் கேபின் நோக்கி சென்றாள், “மே ஐ கம் இன் சார்?” “வாங்க மேடம், என்னை விட்டுட்டு டீ குடிக்கமாட்டேன்னு நினைச்சேன் வந்துட்ட” என்றான்


“அச்சோ மம்மு நீங்க டீ குடிக்கலையா..! ஆனால் நான் அவங்களோட பேசிக்கிட்டே டீ
குடிச்சிட்டேனே...


அவனின் பார்வை ஏக்கத்தை காட்ட ,” மம்மு.. சும்மா.. சும்மா.. சொன்னேன் “ என்று தன் நாக்கை நீட்டினாள்


“உனக்கு வர.. வர கிண்டல் அதிகம் ஆயிருச்சு” அவள் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்தான், இருவரும் சியர்ஸ் சொல்லிக் குடிக்க, சாதாரண தேநீரையே அவர்களின் மகிழ்ச்சியால் விருந்தாக மாற்றினார்கள்.
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
446
Reaction score
650
Location
Theni

AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,461
Reaction score
8,853
Location
Chennai

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஆபீஸ் க்கு வந்தாச்சு... 🥰

சஞ்சு... எப்போ தான் ம்மா லவ் அஹ் புரிஞ்சிப்பீங்க?

ஆத்தர் ஜி லாஸ்ட் எபி னு fix பண்ணிடீங்களா.... 😅

ஆனாலும் அவங்க bonding அழகா இருக்கு... 🥰
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
446
Reaction score
650
Location
Theni
ஆபீஸ் க்கு வந்தாச்சு... 🥰

சஞ்சு... எப்போ தான் ம்மா லவ் அஹ் புரிஞ்சிப்பீங்க?

ஆத்தர் ஜி லாஸ்ட் எபி னு fix பண்ணிடீங்களா.... 😅

ஆனாலும் அவங்க bonding அழகா இருக்கு... 🥰
Cute pair..la💗💗
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top