தேவையான பொருட்கள்: பால் 1லிட்டர், சர்க்கரை 3\4 கிலோ, எலுமிச்சம் பழம் 1, வெனிலா எசன்ஸ் சில துளிகள், முந்திரி, பாதாம் தலா 10.
செய்முறை: (நல்ல பசும் பால் கிடைத்தால் அதில் செய்யுங்கள்) ஒரு லிட்டர் பாலை தண்ணீர் ஊற்றாமல் அடி கணமான பாத்திரத்தில் இட்டு காய்ச்சவும் ,
பால் காய்ந்ததும் அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை வடிகட்டி சேர்க்கவும், சற்று கரண்டி யால் கலந்து விடவும், பால் நன்கு திரிந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் சில ஐஸ் துண்டுகளை சேர்க்கவும்,
(ஐஸ் துண்டுகளை சேர்க்கும் போது கிடைக்கும் பனீர் மிருதுவாக இருக்கும்).
பால் ஆறியதும் அதனை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய பனீரை மேலும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் அலசி கொள்ளவும்(எலுமிச்சம் பழத்தின் புளிப்பு சுவை நீக்குவதற்கு).
நீர் நன்றாக வடிந்ததும் ( சுமார் 1\2 மணி நேரம் கழித்து) பனீரை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும் (சுமார் 20 நிமிடங்கள்).
அதனை ஒரு நெல்லிக் காய் அளவுக்கு சிறு உருண்டைகளாக உருட்டி உருண்டையின் நடுவில் பொடியாக நறுக்கிய முந்திரி பாதாம் வைத்து நன்றாக மூடி உருட்டிக் கொள்ளவும் .
பின்னர் சற்று அகலமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 1\2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சுமார் இருபது நிமிடங்கள் கொதித்ததும் அதில் பனீர் உருண்டைகளை போட்டு கொதிக்க விடவும் ( உருண்டைகள் கரையாது)
அடுப்பை மிதமாக வைத்து சுமார் இருபது நிமிடங்கள் கொதிக்க விடவும் ,
பனீர் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து வெனிலா எசன்ஸ் சில துளிகள் சேர்க்கவும், எசன்ஸ் விரும்பாதவர்கள் ஏலக்காய் தூள் சேர்க்கலாம். சுவையான ரசகுல்லா தயார்.
பின்குறிப்பு: போன தீபாவளி க்கு நான் செய்ததில் எல்லோருடைய பாராட்டுக்களை பெற்ற ஸ்வீட் இது. மிகவும் ருசியாக இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள்.
செய்முறை: (நல்ல பசும் பால் கிடைத்தால் அதில் செய்யுங்கள்) ஒரு லிட்டர் பாலை தண்ணீர் ஊற்றாமல் அடி கணமான பாத்திரத்தில் இட்டு காய்ச்சவும் ,
பால் காய்ந்ததும் அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை வடிகட்டி சேர்க்கவும், சற்று கரண்டி யால் கலந்து விடவும், பால் நன்கு திரிந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் சில ஐஸ் துண்டுகளை சேர்க்கவும்,
(ஐஸ் துண்டுகளை சேர்க்கும் போது கிடைக்கும் பனீர் மிருதுவாக இருக்கும்).
பால் ஆறியதும் அதனை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய பனீரை மேலும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் அலசி கொள்ளவும்(எலுமிச்சம் பழத்தின் புளிப்பு சுவை நீக்குவதற்கு).
நீர் நன்றாக வடிந்ததும் ( சுமார் 1\2 மணி நேரம் கழித்து) பனீரை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும் (சுமார் 20 நிமிடங்கள்).
அதனை ஒரு நெல்லிக் காய் அளவுக்கு சிறு உருண்டைகளாக உருட்டி உருண்டையின் நடுவில் பொடியாக நறுக்கிய முந்திரி பாதாம் வைத்து நன்றாக மூடி உருட்டிக் கொள்ளவும் .
பின்னர் சற்று அகலமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 1\2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சுமார் இருபது நிமிடங்கள் கொதித்ததும் அதில் பனீர் உருண்டைகளை போட்டு கொதிக்க விடவும் ( உருண்டைகள் கரையாது)
அடுப்பை மிதமாக வைத்து சுமார் இருபது நிமிடங்கள் கொதிக்க விடவும் ,
பனீர் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து வெனிலா எசன்ஸ் சில துளிகள் சேர்க்கவும், எசன்ஸ் விரும்பாதவர்கள் ஏலக்காய் தூள் சேர்க்கலாம். சுவையான ரசகுல்லா தயார்.
பின்குறிப்பு: போன தீபாவளி க்கு நான் செய்ததில் எல்லோருடைய பாராட்டுக்களை பெற்ற ஸ்வீட் இது. மிகவும் ருசியாக இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள்.
Last edited: