அன்பான வாசகர்களே,
"குறும்பு பார்வையிலே..." பற்றி உங்களோடு சில வார்த்தைகள்.
சற்று தயக்கத்தோடு ஆரம்பித்த கதைக்களம். ஒரு மாதம் அவகாசம் எடுத்துக்கொண்டேன். இந்த கதையை எழுதலாமா? வேண்டாமா? என்ற கேள்வி என்னுள். நம் கதைக்கான வாசகர்கள், இந்த கதையை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற குழப்பம்.
இன்றைய காலகட்டத்தின் நடைமுறையைத் தொட்டு விட வேண்டும் என்ற உறுதியோடு எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆனால், வாசர்களாகிய நீங்கள் முகம் சுழித்து விடக் கூடாது என்ற பயம் என்னுள்.
நேற்றைய பதிவில், கதையின் மையப் புள்ளிக்குப் பயணித்துவிட்டேன், உங்கள் அனைவரின் விமர்சனங்களையும், கருத்துக்களையும் எதிர்பார்த்து.
நீங்கள் கொடுத்த வரவேற்பு, சொல்ல வார்த்தைகள் இல்லை.
நீங்கள் என்னை ஏமாற்றவில்லை. கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். பலரின் கருத்து பரிமாற்றம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இன்றைய தலைமுறையினரின் பார்வையை அறிந்து கொள்ள, நான் அவர்களிடமும் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
முகம் சுழிக்காமல் எனக்குக் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
குறும்புகள் தொடரும் என்று தெரிவித்து கொண்டு
அகிலா கண்ணன் ????????
"குறும்பு பார்வையிலே..." பற்றி உங்களோடு சில வார்த்தைகள்.
சற்று தயக்கத்தோடு ஆரம்பித்த கதைக்களம். ஒரு மாதம் அவகாசம் எடுத்துக்கொண்டேன். இந்த கதையை எழுதலாமா? வேண்டாமா? என்ற கேள்வி என்னுள். நம் கதைக்கான வாசகர்கள், இந்த கதையை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற குழப்பம்.
இன்றைய காலகட்டத்தின் நடைமுறையைத் தொட்டு விட வேண்டும் என்ற உறுதியோடு எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆனால், வாசர்களாகிய நீங்கள் முகம் சுழித்து விடக் கூடாது என்ற பயம் என்னுள்.
நேற்றைய பதிவில், கதையின் மையப் புள்ளிக்குப் பயணித்துவிட்டேன், உங்கள் அனைவரின் விமர்சனங்களையும், கருத்துக்களையும் எதிர்பார்த்து.
நீங்கள் கொடுத்த வரவேற்பு, சொல்ல வார்த்தைகள் இல்லை.
நீங்கள் என்னை ஏமாற்றவில்லை. கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். பலரின் கருத்து பரிமாற்றம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இன்றைய தலைமுறையினரின் பார்வையை அறிந்து கொள்ள, நான் அவர்களிடமும் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
முகம் சுழிக்காமல் எனக்குக் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
குறும்புகள் தொடரும் என்று தெரிவித்து கொண்டு
அகிலா கண்ணன் ????????