Barkkavi Murali
இணை அமைச்சர்
ஹாய் பிரெண்ட்ஸ்...??? ஒரு வாரமா கதையை காணோம்னு நீங்க என்ன திட்டுறது எனக்கு தெரியுது??? ரொம்ப சாரி??? இதோ உங்க நதி உங்கள தேடி வந்துட்டா...??? க்ரிஷ் யாருங்கிற கேள்விக்கு இந்த எபில க்ளு இருக்கு... ??? ஆனா நதிக்கு இன்னும் யாருன்னு தெரியல...??? ஹ்ம்ம் எப்போ அவ கண்டுபிடிச்சு...??? வழக்கம் போல படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க ???
யாருமற்ற ‘பொடிக்’கில் முற்றிலும் குழப்பமாக அமர்ந்திருந்தேன். சற்று நேரத்திற்கு முன்பு நேஹா கூறிய செய்தி என்னை நன்றாக குழப்பியிருந்தது. அவளைக் கல்லூரியில் இறக்கி விட்டு நான் எவ்வாறு ‘பொடிக்’ வந்து சேர்ந்தேன் என்பதே எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.
என் மனதினுள் ஆனந்தை சந்தித்ததிலிருந்து நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தேன். சில நிகழ்வுகளினால் என் மூளை அவன் க்ரிஷாக இருக்கலாம் என்று கூறினாலும் என் மனம் அதை ஏற்க மறுத்தது.
‘ஆனந்த் தான் ‘பொடிக்’ஆரம்பிச்ச அன்னைக்கு வந்தான்… அந்த கிருஷ்ணா அன்னைக்கு வரலைல’
‘ஓ… ஆனா க்ரிஷ் என்கிட்ட அன்னைக்கு வர முடியாதுன்னு சொல்லி அதுக்கு அடுத்து தான வந்ததா சொன்னான்… அப்போ கிருஷ்ணாவா இருக்க தான நெறைய சான்ஸ் இருக்கு???…’
‘ஆனா கிருஷ்ணா ஒரு போலீஸ்… க்ரிஷ் என்ஜினியர் தான???…’
‘ஆமால… ஆனந்த் என்ன வேலை பாக்குறான்…??’
எவ்வளவு யோசித்தும் அவன் என்ன வேலையில் செய்கிறான் என்று தெரியவில்லை.
‘ச்சே இவ்ளோ நாள் பழகிருக்கோம்… என்ன வேலை பாக்குறான்னு கூட சொன்னது இல்ல… ஹ்ம்ம் இப்போ என்ன பண்றது…???’
மீண்டும் மூளையை குடைந்து யோசித்ததில், அவனைப் பற்றி ஷீலா சொன்னது நினைவு வந்தது…
‘மப்ச்… அவ பணக்காரன்னு தான சொன்னா…???’
‘இப்படி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு அவன் கிட்டயே கேட்டுடலாம்….’ என்று நினைத்தவாறு அலைப்பேசியில் அவனை அழைத்தேன்.
“ஹலோ மிஸ்டர் ஆனந்த்…”
“சொல்லுங்க மிஸ் கரடி…”
“ஹலோ…” என்று கோபமாக நான் பேச…
“அதான் ஃபார்ஸ்டே ஹலோ சொல்லிடேல அப்பறம் எதுக்கு திரும்பியும் ஹலோ சொல்லுற…”
“இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு அனுபவிப்ப…”
“அம்மா தாயே தெரியாம ஒரு ஃப்லோல கலாய்ச்சுட்டேன்… நீ இதெல்லாம் மனசுல வச்சுட்டு என் வாழ்க்கைல கும்மி அடிச்சிறாத மா...”
“ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்… சரி என் கூட எவ்ளோ நாள் பழகிருக்கீங்க மிஸ்டர் ஆனந்த்…”
“அது இருக்கும் ஒரு மூணு மாசம்… ஏன் கேக்குற…”
“மூணு மாசம் என் கூட பழகிருக்கீங்க… ஆனா இன்னும் என்ன வேலை பாக்குறீங்க… எங்க வேலை பாக்குறீங்கன்னு சொன்னதே இல்லையே… ஏன்?”
“அ.. அத்…அது வந்து…. நதி மா… நீ தான் என்கிட்ட கேட்கவே இல்லையே…”
“ஓ அப்போ கேட்டா தான் சொல்வீங்க….”
“ச்ச அப்படி எல்லாம் இல்ல… கொஞ்சம் பிஸியா…”
“எது டிரைவர் வேல பாக்குறது தான் உங்க ஊருல பிஸியா இருக்கிறதோ…”
“இப்படி எந்த பக்கம் போனாலும் கேட் போட்டா எப்படி…” என்று அவன் பாவமாக கூறவும்… நானும் சிறிது மனமிரங்கி, “சரி சரி ஓவர் ஃபீலிங்ஸ் உடம்புக்கு ஆகாது… இப்போ சொல்லுங்க என்ன வேலை பாக்குறீங்கன்னு…” என்றேன்.
“அச்சோ இப்படி திடீர்னு கேட்டா நான் என்ன சொல்வேன்…”
“ஹலோ உண்மைலேயே நீங்க வேலை பாக்குறீங்களா… இல்ல… ஹே அப்போ நீங்க உண்மைலேயே டிரைவரா… அதான் எப்போ பாத்தாலும் ‘பிக்-அப்’பு ‘ட்ராப்’புன்னு பேசுனீங்களா...”
“எம்மா கொஞ்சம் உன் கற்பனைய ஸ்டாப் பண்ணு மா… நீ பேசுறத பார்த்தா எனக்கே நான் டிரைவரான்னு சந்தேகம் வந்துடும் போல...”
“சார் இன்னும் உங்க ஜாப் பத்தி சொல்லையே…”
“ஹான் அது வந்து… நான் என்ஜினீயர்…”
“ஹப்பா இத சொல்றதுக்கு இவ்ளோ நேரமா… சரி எங்க ஒர்க் பண்ணுறீங்க…”
“ஹே அதான் என்ன வேலை பாக்குறேன்னு சொல்லிட்டேன்ல… அப்பறம் என்ன…”
“ஹ்ம்ம் என்ஜினீயர்னு சொன்னா போதுமா… என்ன ப்ரான்ச்னு சொல்ல வேணாமா…”
“இப்போ அத தெரிஞ்சுட்டு நீ என்ன எனக்கு வேலை தர போறீயா…”
“ம்ம்ம் ஆமா இங்க ‘பொடிக்’க கிளீன் பண்ண ஆள் வேணும்… அதான் போன்ல இன்டெர்வியூ எடுத்துட்டு இருக்கேன்…”
“அந்த பொட்டிக் கடைய கிளீன் பண்ண ஒரு இன்டெர்வியூ… அதுக்கு குவாலிஃபிகேஷன் என்ஜினீயரா… ச்சே என்ன ஒரு கிரேட் இன்சல்ட்…”
“ஹலோ கிளீன் பண்ணுறதுனா என்ன அவ்ளோ மட்டமா… வெளிய போய் பாருங்க நெறையா என்ஜினீயர்ஸ் வேலை இல்லாம அத தான் பண்ணிட்டு இருக்காங்க… ‘பொடிக்’னு வாயில வராததெல்லாம் என்ஜினீயரா…”
“அச்சோ நதி மா… மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு சத்தமா பேசிட்டேன்… ??? நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத… சரி எனக்கு வேலை இருக்கு நான் அப்பறமா கால் பண்ணட்டா…”
“ஓ அப்போ எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா…”
“அச்சோ வேலை இருந்தா அத பாரு டா நதி… நான் அப்பறம் கூப்பிடுறேன்… பை…”
“ஹலோ… ஹலோ…” என்று நான் கத்த கத்த அலைபேசியைத் துண்டித்து விட்டான்.
‘ச்சே எங்க வேலை பாக்குறான்னு சொல்லாம கால கட் பண்ணிட்டானே… சரி அவன் ஒரு என்ஜினீயருன்னாவது தெரிஞ்சுதே…’
‘அப்போ ஆனந்த் தான் க்ரிஷ்…’
‘இல்ல இல்ல… ஆனந்த் க்ரிஷா இருக்க இது மட்டும் போதுமா…’
‘க்ரிஷ் தான் இந்த ஒன் வீக்ல எப்போவாவது பொடிக்குக்கு வரேன்ன்னு சொல்லிருக்கான்ல… அப்பறம் என்ன இன்னும் ஒன் வீக் இருக்கு....ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்…’
இவ்வாறு எனக்குள்ளேயே இரு பக்கமாக பிரிந்து ஆலோசித்து அப்போதும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் இருந்தேன். எதர்ச்சியாக வாசலைப் பார்த்த போது அங்கு சாண்டி என்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹே என்ன டி ஏதோ ஏலியன பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருக்க…”
“ஷப்பா ஒரு வழியா ரியாலிட்டிக்கு வந்துட்டீயா… நான் உன்னை பார்க்க ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷமாச்சு… உன் பேர சொல்லி பத்து தடவ கூப்பிட்டுட்டேன்… இப்போ தான் அதுக்கு ரியாக்ட் பண்ணிருக்க நீ…”
“அது… ஒன்னும் இல்ல… சும்மா யோசிச்சுட்டு இருந்தேன்… ???”
“என்னாது யோசிச்சியா???… நீ யோசிச்சு நான் பார்த்ததே இல்லையே டி???…”
“ஹே நீ வேற ஏன் டி கடுப்பேத்துற…” என்று சலித்தவாறே நடந்ததை சொன்னேன்.
“ஹாஹா இதெல்லாம் உனக்கு தேவையா???… நமக்கு நைட் வச்ச பொருள காலைல கண்டுபிடிச்சு எடுக்கவே கஷ்டமா இருக்கும்… இதுல நீ இது வரைக்கும் நேர்லயே பார்க்காத ஒருத்தன கண்டுபிடிக்க போறீயா???… அதுவும் ஒன் வீக்ல… ஏன் டி காலைலேயே காமெடி பண்ணிட்டு இருக்க..???”
“ஓய் என்ன உங்களுக்கெல்லாம் இந்த நதிய பார்த்தா காமெடியா இருக்கா… இன்னும் ஏழே நாள்ல அவன கண்டுபிடிச்சு காட்டுறேன் டி.. இது உன் மேல சத்தியம் டி…”
“அடிப்பாவி… நீ கண்டுபிடி இல்ல கண்டுபிடிக்காம தோத்து போ… அதுக்கு ஏன் டி என் உசுர பணயம் வைக்கிற… எரும மாடு…” என்று அவள் என்னை துரத்த நான் ஓடினேன். இவ்வாறு கலகலப்பாக ஆரம்பித்தது அந்த நாள்…
அன்று முழுக்க ‘பொடிக்’கிற்கு வருவோரையெல்லாம் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடியே இருந்தேன் நான். சாண்டி கூட என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் என் வேலையைத் தொடர்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து, “என்ன உங்க ‘பொடிக்’ல நடமாடும் ‘சிசிடிவி’யா நீ???…” என்ற குரலில் திரும்பிப் பார்த்தேன்.
ஈர்ப்பு 35
யாருமற்ற ‘பொடிக்’கில் முற்றிலும் குழப்பமாக அமர்ந்திருந்தேன். சற்று நேரத்திற்கு முன்பு நேஹா கூறிய செய்தி என்னை நன்றாக குழப்பியிருந்தது. அவளைக் கல்லூரியில் இறக்கி விட்டு நான் எவ்வாறு ‘பொடிக்’ வந்து சேர்ந்தேன் என்பதே எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.
என் மனதினுள் ஆனந்தை சந்தித்ததிலிருந்து நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தேன். சில நிகழ்வுகளினால் என் மூளை அவன் க்ரிஷாக இருக்கலாம் என்று கூறினாலும் என் மனம் அதை ஏற்க மறுத்தது.
‘ஆனந்த் தான் ‘பொடிக்’ஆரம்பிச்ச அன்னைக்கு வந்தான்… அந்த கிருஷ்ணா அன்னைக்கு வரலைல’
‘ஓ… ஆனா க்ரிஷ் என்கிட்ட அன்னைக்கு வர முடியாதுன்னு சொல்லி அதுக்கு அடுத்து தான வந்ததா சொன்னான்… அப்போ கிருஷ்ணாவா இருக்க தான நெறைய சான்ஸ் இருக்கு???…’
‘ஆனா கிருஷ்ணா ஒரு போலீஸ்… க்ரிஷ் என்ஜினியர் தான???…’
‘ஆமால… ஆனந்த் என்ன வேலை பாக்குறான்…??’
எவ்வளவு யோசித்தும் அவன் என்ன வேலையில் செய்கிறான் என்று தெரியவில்லை.
‘ச்சே இவ்ளோ நாள் பழகிருக்கோம்… என்ன வேலை பாக்குறான்னு கூட சொன்னது இல்ல… ஹ்ம்ம் இப்போ என்ன பண்றது…???’
மீண்டும் மூளையை குடைந்து யோசித்ததில், அவனைப் பற்றி ஷீலா சொன்னது நினைவு வந்தது…
‘மப்ச்… அவ பணக்காரன்னு தான சொன்னா…???’
‘இப்படி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு அவன் கிட்டயே கேட்டுடலாம்….’ என்று நினைத்தவாறு அலைப்பேசியில் அவனை அழைத்தேன்.
“ஹலோ மிஸ்டர் ஆனந்த்…”
“சொல்லுங்க மிஸ் கரடி…”
“ஹலோ…” என்று கோபமாக நான் பேச…
“அதான் ஃபார்ஸ்டே ஹலோ சொல்லிடேல அப்பறம் எதுக்கு திரும்பியும் ஹலோ சொல்லுற…”
“இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு அனுபவிப்ப…”
“அம்மா தாயே தெரியாம ஒரு ஃப்லோல கலாய்ச்சுட்டேன்… நீ இதெல்லாம் மனசுல வச்சுட்டு என் வாழ்க்கைல கும்மி அடிச்சிறாத மா...”
“ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்… சரி என் கூட எவ்ளோ நாள் பழகிருக்கீங்க மிஸ்டர் ஆனந்த்…”
“அது இருக்கும் ஒரு மூணு மாசம்… ஏன் கேக்குற…”
“மூணு மாசம் என் கூட பழகிருக்கீங்க… ஆனா இன்னும் என்ன வேலை பாக்குறீங்க… எங்க வேலை பாக்குறீங்கன்னு சொன்னதே இல்லையே… ஏன்?”
“அ.. அத்…அது வந்து…. நதி மா… நீ தான் என்கிட்ட கேட்கவே இல்லையே…”
“ஓ அப்போ கேட்டா தான் சொல்வீங்க….”
“ச்ச அப்படி எல்லாம் இல்ல… கொஞ்சம் பிஸியா…”
“எது டிரைவர் வேல பாக்குறது தான் உங்க ஊருல பிஸியா இருக்கிறதோ…”
“இப்படி எந்த பக்கம் போனாலும் கேட் போட்டா எப்படி…” என்று அவன் பாவமாக கூறவும்… நானும் சிறிது மனமிரங்கி, “சரி சரி ஓவர் ஃபீலிங்ஸ் உடம்புக்கு ஆகாது… இப்போ சொல்லுங்க என்ன வேலை பாக்குறீங்கன்னு…” என்றேன்.
“அச்சோ இப்படி திடீர்னு கேட்டா நான் என்ன சொல்வேன்…”
“ஹலோ உண்மைலேயே நீங்க வேலை பாக்குறீங்களா… இல்ல… ஹே அப்போ நீங்க உண்மைலேயே டிரைவரா… அதான் எப்போ பாத்தாலும் ‘பிக்-அப்’பு ‘ட்ராப்’புன்னு பேசுனீங்களா...”
“எம்மா கொஞ்சம் உன் கற்பனைய ஸ்டாப் பண்ணு மா… நீ பேசுறத பார்த்தா எனக்கே நான் டிரைவரான்னு சந்தேகம் வந்துடும் போல...”
“சார் இன்னும் உங்க ஜாப் பத்தி சொல்லையே…”
“ஹான் அது வந்து… நான் என்ஜினீயர்…”
“ஹப்பா இத சொல்றதுக்கு இவ்ளோ நேரமா… சரி எங்க ஒர்க் பண்ணுறீங்க…”
“ஹே அதான் என்ன வேலை பாக்குறேன்னு சொல்லிட்டேன்ல… அப்பறம் என்ன…”
“ஹ்ம்ம் என்ஜினீயர்னு சொன்னா போதுமா… என்ன ப்ரான்ச்னு சொல்ல வேணாமா…”
“இப்போ அத தெரிஞ்சுட்டு நீ என்ன எனக்கு வேலை தர போறீயா…”
“ம்ம்ம் ஆமா இங்க ‘பொடிக்’க கிளீன் பண்ண ஆள் வேணும்… அதான் போன்ல இன்டெர்வியூ எடுத்துட்டு இருக்கேன்…”
“அந்த பொட்டிக் கடைய கிளீன் பண்ண ஒரு இன்டெர்வியூ… அதுக்கு குவாலிஃபிகேஷன் என்ஜினீயரா… ச்சே என்ன ஒரு கிரேட் இன்சல்ட்…”
“ஹலோ கிளீன் பண்ணுறதுனா என்ன அவ்ளோ மட்டமா… வெளிய போய் பாருங்க நெறையா என்ஜினீயர்ஸ் வேலை இல்லாம அத தான் பண்ணிட்டு இருக்காங்க… ‘பொடிக்’னு வாயில வராததெல்லாம் என்ஜினீயரா…”
“அச்சோ நதி மா… மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு சத்தமா பேசிட்டேன்… ??? நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத… சரி எனக்கு வேலை இருக்கு நான் அப்பறமா கால் பண்ணட்டா…”
“ஓ அப்போ எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா…”
“அச்சோ வேலை இருந்தா அத பாரு டா நதி… நான் அப்பறம் கூப்பிடுறேன்… பை…”
“ஹலோ… ஹலோ…” என்று நான் கத்த கத்த அலைபேசியைத் துண்டித்து விட்டான்.
‘ச்சே எங்க வேலை பாக்குறான்னு சொல்லாம கால கட் பண்ணிட்டானே… சரி அவன் ஒரு என்ஜினீயருன்னாவது தெரிஞ்சுதே…’
‘அப்போ ஆனந்த் தான் க்ரிஷ்…’
‘இல்ல இல்ல… ஆனந்த் க்ரிஷா இருக்க இது மட்டும் போதுமா…’
‘க்ரிஷ் தான் இந்த ஒன் வீக்ல எப்போவாவது பொடிக்குக்கு வரேன்ன்னு சொல்லிருக்கான்ல… அப்பறம் என்ன இன்னும் ஒன் வீக் இருக்கு....ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்…’
இவ்வாறு எனக்குள்ளேயே இரு பக்கமாக பிரிந்து ஆலோசித்து அப்போதும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் இருந்தேன். எதர்ச்சியாக வாசலைப் பார்த்த போது அங்கு சாண்டி என்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹே என்ன டி ஏதோ ஏலியன பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருக்க…”
“ஷப்பா ஒரு வழியா ரியாலிட்டிக்கு வந்துட்டீயா… நான் உன்னை பார்க்க ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷமாச்சு… உன் பேர சொல்லி பத்து தடவ கூப்பிட்டுட்டேன்… இப்போ தான் அதுக்கு ரியாக்ட் பண்ணிருக்க நீ…”
“அது… ஒன்னும் இல்ல… சும்மா யோசிச்சுட்டு இருந்தேன்… ???”
“என்னாது யோசிச்சியா???… நீ யோசிச்சு நான் பார்த்ததே இல்லையே டி???…”
“ஹே நீ வேற ஏன் டி கடுப்பேத்துற…” என்று சலித்தவாறே நடந்ததை சொன்னேன்.
“ஹாஹா இதெல்லாம் உனக்கு தேவையா???… நமக்கு நைட் வச்ச பொருள காலைல கண்டுபிடிச்சு எடுக்கவே கஷ்டமா இருக்கும்… இதுல நீ இது வரைக்கும் நேர்லயே பார்க்காத ஒருத்தன கண்டுபிடிக்க போறீயா???… அதுவும் ஒன் வீக்ல… ஏன் டி காலைலேயே காமெடி பண்ணிட்டு இருக்க..???”
“ஓய் என்ன உங்களுக்கெல்லாம் இந்த நதிய பார்த்தா காமெடியா இருக்கா… இன்னும் ஏழே நாள்ல அவன கண்டுபிடிச்சு காட்டுறேன் டி.. இது உன் மேல சத்தியம் டி…”
“அடிப்பாவி… நீ கண்டுபிடி இல்ல கண்டுபிடிக்காம தோத்து போ… அதுக்கு ஏன் டி என் உசுர பணயம் வைக்கிற… எரும மாடு…” என்று அவள் என்னை துரத்த நான் ஓடினேன். இவ்வாறு கலகலப்பாக ஆரம்பித்தது அந்த நாள்…
அன்று முழுக்க ‘பொடிக்’கிற்கு வருவோரையெல்லாம் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடியே இருந்தேன் நான். சாண்டி கூட என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் என் வேலையைத் தொடர்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து, “என்ன உங்க ‘பொடிக்’ல நடமாடும் ‘சிசிடிவி’யா நீ???…” என்ற குரலில் திரும்பிப் பார்த்தேன்.