• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபி இதோ??? சண்டே ஸ்பெஷல்...??? இந்த எபில நீங்க எதிர்பார்த்த ரெண்டு ஸ்பெஷல் இருக்கு??? படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க???

IMG_20200202_214526.jpg

ஈர்ப்பு 39

இரவு முழுவதும் காதல் கனவுகளில் மூழ்கியதால் விடியலில் கண்ணயர்ந்த என்னை அடித்துப் பிடித்து எழும்பச் செய்து தன் வேலையை செவ்வனே செய்தது என் அலைப்பேசியில் நான் வைத்த அலாரம்…

இரண்டு மணிநேரமே தூங்கியிருந்ததால் கண் ரெண்டும் சிவந்திருக்க, என்னால் சிறிது நேரம் கூட கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனாலும் நடைப்பயிற்சிக்கு செல்ல ஆயத்தமானேன் உற்சாகத்துடனே…

கஷ்டப்பட்டு கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே மெல்ல நடந்து சென்றேன். சற்று நேரத்தில் அவனும் வந்து என்னுடன் சேர்ந்துக் கொண்டான்.

என் கண்களைப் பார்த்து, “என்ன பப்ளி நைட் ஃபுல்லா தூங்கலையா? யார நெனச்சு தூக்கம் வரல உனக்கு… ???” என்று கேட்டான்.

எனக்கு அவன் கேள்வியில் உள்ளே பட்டாம்பூச்சிக்கள் பறந்தாலும், வெளியே அதைக் காட்டிக்கொள்ளாமல், “எனக்கு யாரு நெனப்பும் இல்லையே…??? என்ன சுத்தியிருக்க ஆபத்துலயிருந்து எப்படி தப்பிக்கலாம்ன்னு யோசிச்சுட்டு இருந்தேனா… அதான் நைட் தூங்க நேரமாயிடுச்சு…” என்றேன்.

என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “நீ நைட் ஃபுல்லா யோசிச்சியா… அதுவும் அவங்க கிட்டயிருந்து எப்படி தப்பிக்கலாம்ன்னு… சரி இப்படி வெறித்தனமா யோசிச்சுருக்கியே கண்டிப்பா ஏதாவது ஐடியா தோனிருக்குமே…???” என்றான் கிண்டலாக.

‘அச்சோ லூசுத்தனமா எதையோ உளறி வச்சுட்டேன்… இப்போ இவன் ஐடியா வேற கேக்குறானே…???’

“அது… அது வந்து… ஹான்… எனக்கு மறந்துருச்சு…”

அவன் என்னை ஒரு மாதிரி பார்க்க, அவன் பார்வையை அலட்சியப் படுத்தி சுற்றியிருந்த காட்சிகளில் என் கவனத்தைத் திருப்பினேன். எங்கும் பனி நிறைந்திருக்க, மார்கழி மாதக் குளிரனால், நான் போட்டிருந்த ஸ்வெட்டரை என்னுடன் இறுக்கிக் கொண்டேன். அப்போது தான் நாங்கள் செல்லும் வழி எப்போதும் செல்லும் வழி அல்ல என்பதை உணர்ந்தேன்.

அதை அவனிடம் சொல்லத் திரும்பிய போது, நான் சொல்லவருவதை ஏற்கனவே அறிந்த மாதிரி சிரித்துக் கொண்டே, “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு பப்ளி… இப்போ எதுவும் என்கிட்ட கேட்காத…” என்றான்.

‘என்ன நடக்குது இங்க... ??? நேத்துலயிருந்து ஒரே அதிர்ச்சியா இருக்கு… இன்னைக்கு என்ன அதிர்ச்சி தர காத்திருக்கானோ???’ என்று மனதிற்குள் புலம்பியவாறே அவனுடன் நடந்து சென்றேன்.

சிறிது நேரத்திலேயே ஒரு இடத்தில் நின்றோம். பனி சூழ்ந்திருந்த காரணத்தினாலும், சரியாக தூங்காததினால் கண்ணில் ஏற்பட்ட எரிச்சலினாலும் அது என்ன இடம் என்று எனக்கு சரிவர தெரியவில்லை.

பனி விலகியதும், அங்கு தென்பட்ட காட்சியில் வாயைப் பிளந்து ஆச்சரியத்துடன் நின்றிருந்தேன். தரை முழுவதும் சிறு புற்கள் முளைத்திருக்க… அவற்றின் நுனியில் இருந்த பணித்துளிகளைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை எனக்கு. சற்று தூரம் நடந்து சென்றால், சிறிய அளவில் பள்ளம்… அதற்குள் விழுந்து விடாதபடி தடுப்பும் இருந்தது… அங்கிருந்து மேலே பார்த்தால், பனி விலகியதும் சூரியன் தன் செந்நிறக் கதிர்களை எல்லா திசைகளிலும் செலுத்தி அவற்றின் மேல் தன் ஆதிக்கத்தை புதுப்பித்துக் கொண்டான்.

இவ்வளவு நேரம் குளிரினால் ஜில்லென்றிருந்த உடல், சூரியனின் காலை நேரத்து மிதமான வெப்பத்தினால் சற்று இயல்பாகியது. இந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த நான், அருகில் உணர்ந்த அரவத்தில் சிந்தை கலைந்து திரும்பிய போது, அங்கு அவன்… என்னவன்… தன் மென்மையான புன்னகை முகத்துடன்… என் அருகில் வந்து, ஒரு காலை மடித்து கீழே அமர்ந்தான்.

அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிந்து மிதமான அதிர்ச்சியில் இருந்தேன் நான்…. இதோ அவன் காதலை என்னிடம் சொல்லப் போகிறான்… இதுவரை உணர மட்டுமே வைத்த அவன் காதலை என்னிடம் பகிரப் போகிறான்… இந்த காலை நேரத்தில், இப்படியொரு அழகான இடத்தில் அவன் என்னிடம் மனம் திறக்கப் போவதை என் மனம் சந்தோஷமாக வரவேற்கத் தயாராக இருந்தது…

‘அச்சோ இன்னைக்கா ப்ரொபோஸ் பண்ண போறான்…??? இன்னைக்குன்னு பார்த்து நான் அழகாவே கிளம்பி வரலையே…??? மூஞ்சி தூக்கக் கலக்கத்துல டையர்டடா வேற இருக்கே… ச்சே நேத்தே ஒரு ஹிண்ட் கொடுத்துருந்தா அழகா கிளம்பி வந்துருப்பேன்…???’ என்று அந்த நேரத்திலும் சலித்துக் கொள்ள…

‘அடியேய்… உனக்கெல்லாம் யாராவது ப்ரொபோஸ் பண்றதே பெரிய விஷயம்… இதுல முன்னாடியே சொல்லலன்னு எதுக்கு இந்த வெட்டி அலப்பறை… ஒழுங்கா மைண்ட் வாய்ஸ்ல பேசுறத நிறுத்திட்டு நடக்குறத கவனி…’ என்று என் மனச்சாட்சி என் மைண்ட் வாய்ஸிற்கு எண்டு-கார்டு போட… அது சொல்வதிலும் சில உண்மைகள் (!!!) இருப்பதால் அமைதியானேன்…

இவையனைத்தும் அவன் தன் ஒற்றைக்காலில் அமர்ந்த நொடி என் மனதிற்குள் தோன்றியவை… அதிலிருந்து விடுபட்டு அவனைக் கண்டேன்… அவனும் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நொடி அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்த சிறிய பெட்டியைத் திறந்து, “பப்ளி, வில் யூ மேரி மீ அண்ட் பீ மை பெட்டர்-ஹாஃப் போர் தி ரெஸ்ட் ஆஃப் மை லைஃப்…” என்று கேட்டான்.

அவன் உருகி அழைத்த ‘பப்ளி’யிலேயே என் வசம் நான் இல்லை… சிறகே இல்லாமல் வானத்தில் பறந்துக் கொண்டிருந்தேன். அவன் அப்போது கூட தன் காதலை சொல்லாமல் என்னை மணக்கக் கேட்டது எனக்குள் சொல்லவியலாத உணர்வுகளை ஏற்படுத்தியது…

மகிழ்ச்சியில் பேச்சிழந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க… அவனோ, “பப்ளி, எவ்ளோ நேரம் தான் இப்படியே இருக்குறது… சீக்கிறமா ‘யெஸ்’ சொல்லு…???” என்றான்…

‘ஓ… அவ்ளோ கான்ஃபிடேன்ஸா நான் யெஸ் தான் சொல்வேனு… கொஞ்ச நாள் இவன அலையவிட்டா என்ன…???’ என்று என் மனம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், என் சம்மதமே இல்லாமல் என் தலை ‘ஆம்’ என்பதைப் போல் அசைந்தது.

‘ச்சே இது என்ன நான் ஒன்னு நினைக்க, நானே வேறெதோ செய்றேன்…??? ஹ்ம்ம் என் ஒவ்வொரு பார்ட்டும் அவனுக்கு ‘அடிக்ட்’டாகிட்டு இருக்கு..???’

“என்ன பப்ளி, மனசில ஏதோ நெனச்சுட்டு வெளிய வேறெதோ செய்ற மாதிரி இருக்கு???”

‘அச்சோ கண்டுபிடிச்சுட்டானே…???’

இயல்பிற்கு மீண்ட நான், “அதெல்லாம் இல்லையே…” என்று சமாளித்தேன்.

அவன் அந்த பெட்டியில் இருந்த மோதிரத்தை எடுத்தான். அது ‘என்’என்ற ஆங்கில எழுத்தின் முடிவில் அதனோடு இணைந்தவாறு ‘ஆர்’என்ற எழுத்து வருமாறு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் அழகைப் பார்த்து ஒரு நொடி வியந்த நான், அவன் அதை எனக்கு அணிவிக்க வரும்போது தயங்கினேன்.

அவன் ‘ஏன்’ என்பது போல் பார்க்க, நானோ இறைஞ்சும் பார்வையோடு, “இது இப்போ போட வேணாமே…” என்றேன். அவன் எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அது வந்து… இது நீங்க எனக்கு கொடுக்குற ஃபர்ஸ்ட் கிஃப்ட்… அத யாருக்கிட்டயும் காட்டாம மறைச்சு வச்சு போட எனக்கு பிடிக்கல… அதே மாதிரி இத ஒன்ஸ் நீங்க என் விரல்ல மாட்டினா அத நான் எப்பவுமே கழட்டக் கூடாதுன்னு நினைக்கிறேன்...” என்று அவன் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்புடன் கூறி முடித்தேன்.

அவனோ அதை எளிதாக எடுத்துக் கொண்டு, “ஓகே மேடம்… நம்ம எங்கேஜ்மெண்ட்ல இத நான் உனக்கு போட்டுவிடுறேன்…. அப்போ போட்டுவிட்டா மேடம்க்கு ஓகேவா…???” என்று கேட்டான்.

நானும் வெட்கச் சிரிப்புடன் தலையசைத்தேன். அப்போது என் வெட்கத்தைக் கலைத்தது என் அலைப்பேசி. அதில் தெரிந்த என் அம்மாவின் பெயரில், என் முகமோ வெளிறி, ஏதோ தவறு செய்ததைப் போல எனக்கு வியர்க்கத் துவங்கியது.

அதை உணர்ந்த அவன் ஆறுதலாக என் கைகளைப் பற்றிக் கொண்டு எடுத்து பேசுமாறு தலையசைத்தான்.

என் அலைப்பேசியை உயிர்ப்பித்ததும் அங்கிருந்த என் அம்மா போட்ட சத்தம், அலைப்பேசி வாயிலாக அல்லாமல் நேரடியாகவே என் காதுகளில் சேர்ந்தது போல் இருந்தது.

“எங்க டி இருக்க… மணி பார்த்தியா என்ன ஆச்சுன்னு… எப்பவும் 8 மணிக்கு முன்னாடி எழுந்துக்காத நீ… இந்த ஒரு வாரமா ஒரு மார்க்கமா தான் டி இருக்க…” என்று என் அம்மா புலம்ப ஆரம்பிக்க, நானோ என் அருகில் இருப்பவனுக்கு இவையெல்லாம் கேட்கக்கூடாது என்ற வேண்டுதலில் இருந்தேன்.

ஆனால் அவன் சிரிப்பே அனைத்தையும் அவன் கேட்டுவிட்டான் என்பதைக் கூறியது. என் விதியை நொந்துக் கொண்டு என் அம்மாவிடம், “ஸ்ஸ்ஸ் ம்மா இப்போ எதுக்கு புலம்பிட்டே இருக்கீங்க… நான் வந்துட்டே இருக்கேன்…” என்று அவர் அடுத்து பேசும்முன் இணைப்பைத் துண்டித்தேன்.

‘உஃப்’ என்ற பெரு மூச்சுடன் நான் திரும்புகையில், அவன் இன்னும் நகைத்துக் கொண்டிருக்க, நான் அவனை முறைத்தேன்.

“ஓகே ஓகே வா போலாம்…”

செல்லும் வழி முழுக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காதபோது பார்த்து ரசித்துக் கொண்டே சென்றோம். வீடு வந்ததும் அவனைப் பார்த்து தலையசைத்து உள்ளே செல்ல முற்பட்டேன்.

அப்போது அவன் ‘பப்ளி’ என்று விளிக்க, திரும்பி அவனைப் பார்த்தேன். அவனோ ‘ஐ லவ் யூ…’ என்று உதட்டை அசைத்து கண்ணடித்து அவன் வீட்டிற்குள் சென்று விட்டான்.

நானோ அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். அவன் சற்று நேரத்திற்கு முன் என்னை மணக்க கேட்டபோது கூட இவ்வளவு அதிரவில்லை நான். அவனின் அந்த ‘ஐ லவ் யூ’ என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்க, கன்னத்தில் தோன்றும் வெட்கச் சிவப்பை மறைக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தேன்.

அப்போது என் முதுகில் விழுந்த அடியில் திடுக்கிட்டு திரும்பினேன். அங்கோ என் அம்மா ‘புசுபுசு’வென மூச்சுக்காற்று அனல் காற்றாய் மாறி என்னை பொசுக்கிடத் துடிக்கும் கோபத்துடன் நின்றுக் கொண்டிருந்தார்.

“என்ன பண்ண இவ்ளோ நேரம்…”

‘அச்சோ ஒரு வேல இங்க நடந்தத பார்த்திருப்பாங்களோ..??’ என்ற பயத்துடனே, “வா..வாக்…க்கும்…வாக்கிங் போயிட்டு வந்தேன்…” என்றேன்.

“இங்க வந்து எவ்ளோ நேரமாச்சு… நானும் இவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டே இருக்கேன்… நீ வேற எங்கேயோ வெறிச்சு பார்த்துட்டு இருக்க…”

‘ஹப்பா நல்ல வேல... அம்மாக்கு எதுவும் தெரியல …’ என்று பெருமூச்சு விட்டு… “அது ம்மா… ‘பொடிக்’க்கு ஒரு ஐடியா தோணுச்சா அதான் யோசிச்சிட்டு இருந்தேன்…???” என்று ஒருவாறு அவரை சமாளித்துவிட்டு உள்ளே சென்றேன்… அங்கு என் அப்பாவும் இதை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியாமல்….
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
அன்று ‘பொடிக்’கிற்கு சென்றபோது தான் ‘க்ரிஷ்’ஷைப் பற்றி நினைவே வந்தது. ‘அச்சோ அவன வேற கண்டுபிடிக்கனுமே… நாளைக்கு மட்டும் தான இருக்கு…’ என்று யோசித்துக் கொண்டிருக்க….

அங்கு வந்த சாண்டி, “என்ன டி இன்னைக்கு உன் முகம் பளபளன்னு இருக்கு… என்ன டி நடந்துச்சு…???”

நான் ஒன்றும் கூறாமல் வெட்கத்துடன் அமர்ந்திருக்க… “ஹே என்ன டி வெட்கமெல்லாம் படுற…??? எனக்கே ஷாக்கா இருக்கு டி…என்னன்னு சொல்லு டி எரும…???” என்றாள்.

“அது… அவங்க… ப்ரொபோஸ் பண்ணாங்க… ???” என்றேன்

“வாட்… ப்ரொபோசலா… அத இவ்ளோ லேட்டா சொல்ற… நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன்… சோ ஹாப்பி ஃபார் யூ டி…???” என்று என்னை கட்டிப்பிடித்தாள்.

இப்படி என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிகழ்விற்கு தானும் சந்தோஷப்படும் நட்பை பெற்றது எனக்கு பெருமையாகவே இருந்தது.

ஒருவாறு நானே இயல்பாகிக் கொண்டு அவளிடம், “என் லவ் சக்ஸஸ் ஆனது இருக்கட்டும்… உன் மேட்டர் என்னாச்சு…” என்றதும் அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவள் தன் சிரிப்பைத் தொலைத்தாள். அதிலிருந்தே அவள் மனநிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

“ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கோம்… நான் உள்ள போய் வேலைய பாக்குறேன்…” என்று கூறி சென்று விட்டாள்.

‘ப்ரோ நீங்க ரொம்ப பாவம்.. ‘ என்று நினைத்துக் கொண்டு அன்றைய வேலையைத் துவங்கினேன்.

வேலை ஒருபுறம் நடந்தாலும், என் மனதிற்குள் ‘எவ்வாறு க்ரிஷ்ஷை கண்டுபிடிப்பது’ என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

அப்போது கேட்ட, “ஹாய் சிஸ்…” என்ற குரலில் என் யோசனையிலிருந்து மீண்டேன்.

“ஹாய் ப்ரோ… இப்போ தான் உங்கள பத்தி நெனச்சேன்… அதுக்குள்ள வந்துட்டீங்க…” என்றேன்.

“என்னது என்ன பத்தியா. . நல்லதா தான நெனச்சீங்க…”

“??? ப்ரோ நீங்க ரொம்ப பாவம்ன்னு நெனச்சேன்…???”

“??? தியா எங்க…”

“தியாவா அப்படி யாரும் இங்க இல்லையே…???”

“ஸ்ஸ்ஸ்… சந்தியா… சாண்டி எங்கன்னு கேட்டேன்…”

“பாரு டா அதுக்குள்ள செல்ல பேரா… கலக்குங்க ப்ரோ…??? உங்க ஆளு உள்ள தான் இருக்கா… போய் பாருங்க…”

அவன் கையில் உள்ள ஃபைல்லை அங்கே விட்டு சென்றான். அவனை அழைத்த நான், “ப்ரோ…. உங்க ஆள பார்க்க போறேங்கிற ஆர்வத்துல இந்த ஃபைல இங்கயே விட்டுட்டு போறீங்க…” என்றேன்.

“??? சிஸ் அது ராகுல் கிட்ட ஒரு கேஸ் விஷயமா சைன் வாங்கிட்டு வந்தேன்… அப்பறம் சிஸ் காங்கிரட்ஸ்…???” என்றான்.


“தேங்க்ஸ் ப்ரோ…??? ஆனா நீங்க கூட என்கிட்டயிருந்து மறைச்சுட்டீங்கள… ???”

“??? சிஸ் எல்லாம் உங்க ஆளோட ஆர்டர்… எதுவா இருந்தாலும் அவன்கிட்ட கேட்டுக்கோங்க…???”

ராகுல் பெயரைக் கூறியவுடன் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.

“என்ன சிஸ் இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தீங்க… திடிர்னு சைலண்ட் ஆகிட்டீங்க….???”

“ப்ரோ உங்க ஆள பார்க்க நேரம் ஆகலையா…???”

“??? சிஸ் அந்த ஃபைல் உங்க கிட்டயே இருக்கட்டும்… உங்க பிரெண்ட பார்த்துட்டு வந்து எடுத்துக்குறேன்…” என்று கூறியவாறு சென்றுவிட்டான்.

அவன் உள்ளே சென்றவுடன் அந்த ஃபைலை பார்த்ததும், ‘ம்ம்ம் நம்ம ஆளு சைன் பண்ணது… எடுத்து பார்ப்போமா…’ என்று யோசித்தவாறு யாரவது பார்க்கிறார்களா என்று சுற்றி பார்த்தேன்.

யாரும் இல்லை என்ற தைரியத்தில் அதை எடுத்து பார்த்தேன். அது ஏதோ கேஸ் பற்றிய ஃபைல். எனக்கு எதுவும் புரியவில்லை. ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பிய நான் கடைசி பக்கத்தில் இருந்த பெயரையும் அதற்கு மேலிருந்த கையெழுத்தையும் பார்த்து அதிர்ந்தேன். நேற்றிலிருந்து இது மூன்றாவது அதிர்ச்சி எனக்கு… ???

அதில் இருந்ததோ, ‘ராகுல் கிருஷ்ணா’ என்ற பெயரும் அவனின் கையெழுத்தும் தான்.

‘என்னாது இவன் பேரும் கிருஷ்ணாவா…???’

அப்போது ஏதோ நியாபகம் வர, மெசஞ்சரில் அவன் அனுப்பிய செய்திகளை வேகவேகமாக ‘ஸ்க்ரால்’ செய்தேன் நான் தேடுவது கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு. அவன் முன்பு அனுப்பிய போட்டோவை பார்த்து தலையிலடித்துக் கொண்டேன்.

‘ச்சே இத ஏன் முன்னாடியே பார்க்கல…’

அது ராகுலின் வீட்டில் இருந்த அதே பீச் போட்டோ தான்…

‘நதி மா இவ்ளோ ட்யூப்-லைட்டா நீ… கைலேயே வெண்ணைய வச்சுக்கிட்டு நெய்க்கு அலஞ்சிருக்க...’

‘அடப்பாவி இப்போ யார நீ வெண்ணெய்ன்னு சொன்ன…’

‘ஸ்ஸ்ஸ் இப்போ அதுவா முக்கியம்… சரியான ஃப்ராட் பையன்… இவ்ளோ நாள் என்ன ஏமாத்திருக்கான்…??? இன்னைக்கு இருக்கு அவனுக்கு… இவ்ளோ நாள் செஞ்சதுக்கு மொத்தமா அனுபவிக்கப் போறான்…???’

ஈர்ப்பான்(ள்)…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top