Barkkavi Murali
இணை அமைச்சர்
ஹாய் பிரெண்ட்ஸ்??? கதையோட இறுதிக்கு வந்தாச்சு...??? நேத்து போட்ட போஸ்ட்டுக்கு நீங்க பண்ண கமெண்ட் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...??? என்னோட முதல் கதைக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல...??? இப்போ ரொம்ப பேசாம எபிக்குள்ள போய்டுவோம்?? படிச்சுட்டு நேத்து மாதிரியே இன்னைக்கும் கமெண்ட் பண்ணுங்க???
நாங்கள் இருவரும் எங்களின் இந்த ஒரு வார பிரிவை ஈடு செய்வதைப் போல் நேரம் காலம் பார்க்காமல் அன்றைய இரவைப் பேசிக் கொண்டே கழிக்க, எங்களின் அலைப்பேசிகளோ பொறுமை இழந்து உயிர்விடும் நிலைக்கு வந்த பின்பே, நேரம் கடந்தததை உணர்ந்தோம்.
“ஹே பப்ளி… ரொம்ப நேரம் ஆச்சு… நீ போய் தூங்கு… அப்பறம் நாளைக்கு தூங்க நேரம் இருக்காது…???”
“ஏன் நேரம் இருக்காது…???” ஒரு உந்துதலில் கேட்ட பின்பே, அவன் கூறியதற்கு அர்த்தம் புரிந்து வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டேன்.
நான் கூறியதற்கு சிரித்த அவன், “??? இப்படி தலைல அடிச்சு அடிச்சு தான் உள்ள எதுவுமே இல்லையோ…???” என்று மீண்டும் என்னை கிண்டல் செய்ய…
“ஹலோ, என்ன எனக்கு மூளையே இல்லன்னு சொல்… ஹே உங்களுக்கு எப்படி நான் தலைல அடிச்சது தெரியும்…” என்று கூறியவாறே அவன் எங்கேயாவது தென்படுகிறானா என்று தேடிக் கொண்டிருந்தேன்.
அவன் வீட்டில், அவன் அறையின் ஜன்னல் திறந்திருந்தது. இருட்டாக இருந்தாலும் அங்கு தெரிந்த அசைவில், அவன் தான் என்பது உறுதியானது.
“என்ன பப்ளி… கண்டுபிடுச்சுட்ட போல…”
“ஹே அப்போ இவ்ளோ நேரம் அங்க இருந்து பார்த்துட்டே தான் பேசுனீங்களா...???”
“இன்னிக்கு மாட்டும் இல்ல… எப்போ எல்லாம் நீ பால்கனில நின்னுட்டு இருந்தையோ…அப்போ எல்லாம் உன்ன பார்த்துட்டு தான் இருந்தேன்…” என்றான் கிசுகிசுப்பாக…
இரவு நேர குளிரையும் தாண்டி என் உடல் சூடானது. எதுவும் பேசத் தோன்றாமல், அவனிருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்…. அவன் முழு உருவம் தெரியாவிட்டாலும், அவன் வரி வடிவம் காண்பதே போதும் என்று…
சிறிது நேரம் கழித்து அவன் இயல்பிற்கு மீண்டவாறு, “ஹே பப்ளி… என்ன ஃப்ரீஸ் ஆகிட்ட…” என்றான்…
நானோ அவன் கேட்டதற்கு சற்றும் சம்மந்தமில்லாமல், ஆனால் அவன் கேட்கத் துடிக்கும் ஒன்றைக் கூறினேன். “ஐ லவ் யூ ரணு…”
இப்போது அவன் அறையில் வெளிச்சம் பரவ, அவன் முகம் எனக்குத் தெளிவாக தெரிய, அம்முகத்திலோ உணர்ச்சிக் குவியல்கள்…
“ஹே நிது இப்போ என்ன சொன்ன… திரும்பி சொல்லு…” அவன் குரலில் அப்பட்டமான எதிர்பார்ப்பு…
அவனின் ‘நிது’வில் என்னை தொலைத்த நான், அவனிடம், “கோல்டன் வொர்ட்ஸ் ஆர் நாட் ரிப்பீடட்…???” என்று கூறிவிட்டு உடனே அலைப்பேசியை அணைத்து விட்டேன்.
என்ன தான் அலைப்பேசியை அணைத்து விட்டாலும், அங்கிருந்து நகர அவசரம் காட்டவில்லை நான். நின்று நிதானமாக அவனை ‘சைட்’டடித்து விட்டே என் அறைக்குச் சென்றேன்.
சற்று முன் நடந்தவைகளை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்து, அனுபவித்தேன்… அப்போது அவன் சொன்ன, ‘நாளைக்கு தூங்க நேரம் இருக்காது’ நியாபகம் வந்தது…
‘சீ ஹல்க்… பேட் பாய்…???’ என்று அவனை திட்டி(கொஞ்சி)யவாறே படுத்துறங்கினேன்.
திடீரென்று என்னை யாரோ உலுக்க, அடித்துப் பிடித்து எழுந்தேன். அங்கு அந்த மூவர் கூட்டணி முறைப்புடன் என்னைப் பார்க்க…
“ச்சே நீங்க தானா… ஏன் டி இப்படி பேய் மாதிரி மேக்-அப் போட்டுட்டு வந்து என்ன பயமுறுத்துறீங்க…” என்று கொட்டாவி விட்டவாறே கூறினேன்…
“அட எரும… இன்னைக்கு உனக்கு கல்யாணம் அது நியாபகம் இருக்கா…” – சாண்டி.
“ஆமா… அதுக்கு எதுக்கு டி நீங்க இப்படி மிட்-நைட்ல இருந்தே ரெடியாகிட்டு இருக்கீங்க… இதுல என்னையும் எழுப்பி விடுறீங்க.. உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு…??” (பாவம் நதிமா… அவ படுத்ததே அதிகாலை… இல்ல இல்ல… அவள பொருத்தவரைக்கும் அது மிட்-நைட் மூணு மணிக்கு தான்னு தெரியாம போச்சே???)
“லூஸி மணி அஞ்சாச்சு டி… இன்னும் ஒரு மணி நேரத்துல கோவில்ல இருக்கனும்…”
“என்னாது அஞ்சா…??? அடப்பாவிங்களா… எதுக்கு டி இவ்ளோ லேட்டா எழுப்புனீங்க… நீங்க மட்டும் மேக்-அப் போட்டுட்டு அழகா…இல்ல கொஞ்சம் சுமாரா இருக்கீங்க… கல்யாணப் பொண்ணு நான் மட்டும் இன்னும் குளிக்கமா இருக்கேன்…???” என்றேன் பாவமான குரலில்….
“அடியேய் ஓவரா பேசுன இப்படியே போட்டோ எடுத்து குரூப்ல போட்டுடுவேன்… ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் குளிச்சுட்டு வா…” என்றனர் அம்மூவரும்…
அவர்களை முறைத்து ஏதோ சொல்ல வந்த என்னைத் தடுத்த ஷீலா, “நதி இன்னும் குளிக்க போகலையா… அங்க அத்த நீ ரெடியாகிட்டியான்னு கேட்டுட்டு இருக்காங்க…” என்றாள்.
என் அம்மாவின் பெயரைக் கேட்டதும், இன்னும் நேரம் தாழ்த்துவது எனக்கே ஆபத்தாகிவிடும் ??? என்று தோன்ற, குளியறைக்குள் புகுந்துக் கொண்டேன்.
அதற்கு பின் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடக்க… அந்நால்வரின் கூட்டு முயற்சியால் ??? இதோ திருமண அலங்காரத்தில் நான்… என்னை நானே ஒருமுறை கண்ணாடியில் பார்த்து வியந்தேன்.
மயில் நீல நிற பட்டுச் சேலையும் அதற்கேற்ற மயில் பச்சை நிற பிளவுஸில் தங்க நகைகள் அணிந்து, கல்யாணப் பெண்ணிற்குரிய நாணத்தோடு, ஒருவித தனித்துவமான அழகோடு மிளிர்ந்தேன் நான்…. என்னவனைக் காதலித்துக் கரம் பிடிக்கப்போகும் மகிழ்ச்சி என் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அம்மூவரின் கேலிகள் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தன.
“நதி மா ரெடியா…” என்று கேட்டுக்கொண்டே வந்த என் அம்மா கூட ஒரு நொடி என்னைக் கண்டு ஆச்சரியத்தில் விழிவிரிக்க… மறு நொடி என் கன்னம் வழித்து, “அழகா இருக்க டி…” என்றார்.
நான் எதுவும் கூறாமல் சிரிப்புடனே அவரின் வாழ்த்தை ஏற்றேன். ஆம்… எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை… அந்த நிமிடங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன்… ஒவ்வொரு நொடிகளையும் அவசரமே இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில், எல்லாரும் கோவிலுக்கு கிளம்ப, ஒருவித சுழலில் சிக்கிக் கொண்ட அவஸ்தையான உணர்வு எனக்குள் தோன்றியது.
இந்த வீட்டில் என் அப்பா – அம்மாவிற்கு மகளாக, என் அண்ணனின் தங்கையாக உரிமையுடன் வளைய வந்த நான், இனி இந்த வீட்டிற்குள் நுழையும்போது ராகுலின் மனைவியாகிருப்பேன் என்ற எண்ணும்போது மகிழ்ச்சி மற்றும் கவலை என்ற இரு உணர்வுகளும் சரிவிகிதமாக எனக்குள் தோன்றி என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
எல்லா பெண்களும் இந்த தருணத்தைக் கடந்து தான் வந்திருப்பார்கள் என்று என் மூளைக்குத் தெரிந்தாலும், என் மனது அதை அவ்வளவு எளிதாக ஏற்கவில்லை… இவ்வாறு குழப்பத்தின் பிடியில் நான் சிக்கியிருக்க, அந்த நொடி க்ரிஷின் ஆறுதலுக்காக என் மனம் ஏங்கியது….
அடுத்த ஐந்தாவது நொடி, என் அலைப்பேசியில் அவனிற்காக நான் செட் செய்த பாடல் ஒலித்தது…
சஹாயனே சஹாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சஹாயனே சஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்
அந்த நொடி எனக்குள் ஏற்பட்ட குழப்பம் சிறிது மட்டுப்படுவதாய் தோன்ற, மெல்லிய சிரிப்புடன் அதை உயிர்ப்பித்தேன்.
எடுத்ததும், “ஹே பப்ளி உன் ஃபேஸ் ஏன் வாடியிருக்கு… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பிரைட்டா தான இருந்துச்சு… அதுக்குள்ள என்ன குழப்பம் உனக்கு…” என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்க…
என் குழப்பம் முற்றிலும் மறைந்தது… அவன் என்னிடம் காட்டும் அக்கறையிலும், எனக்கான அவனின் தவிப்பும்… என் குழப்பத்தை விரட்டின… ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற வேண்டும்… ஆனால் இங்கோ நான் இழக்கப் போவது எதுவுமில்லையே…
ஒரு பக்கம் என் அப்பா – அம்மாவிற்கு செல்ல மகளாக, என் அண்ணனிற்கு அன்புத் தங்கையாக… மறுபக்கம் என் அத்தைக்கு சுட்டி மருமகளாக… இவையெல்லாம் தாண்டி என்னவனிற்கு எல்லாமுமாக… இப்படி அனைத்து பக்கமும் என்னைக் கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்க, அந்த குழப்பமே தேவையற்றது என்று தோன்றியது.
என் பதிலிற்காக அவன் காத்திருப்பதை அறிந்த நான், “சார் எப்பவும் உங்க ஜன்னல் கதவு மூடாதா…???” என்று அவனைக் கிண்டலடித்தேன்.
“என்ன நிது மா… பேக் டு ஃபார்ம்மா…”
“ஹே நேத்தே கேக்கனும்னு நெனச்சேன்… அது என்ன நிது…”
“நீ மட்டும் என் பேர விதவிதமா சுருக்கி கூப்பிடுறேல… அதான் நானும் ட்ரை பண்ண போறேன்…”
“ஹலோ, என் பேரு என்ன உங்க பேரு மாதிரி நீ…ளமாவா இருக்கு…” என்று நான் கதையடிக்க, ஹாலில் என் அம்மாவின் சத்தம் எனக்கு இங்குவரை கேட்டது, “நதி… உள்ள என்ன பண்ணிட்டு இருக்க… சீக்கிரம் வெளிய வா…”
“ஹ்ம்ம் உங்க அத்த என் பேர ஏலம் போட ஆரம்பிச்சுட்டாங்க… அப்பறம் பார்ப்போம் பை…”
“ஹே நிது… ஒரே ஒரு தடவ…” அவன் ஒரு மாதிரி இழுக்க...
‘ஏதோ வில்லங்கமா கேட்கப் போறான்….’ என்று நினைத்துக் கொண்டே…
“ஒரு தடவ…”
“ஒரு தடவ…. ‘ஐ லவ் யூ’ சொல்லேன்…”
ஒரு நீண்ட பெருமூச்சு என்னிடம்…
“என்ன பப்ளி… வேற ஏதாவது கேட்பேன்னு எதிர்பார்த்தியோ…??”
“ப்ச்… போடா …” என்றவாறு அலைப்பேசியை அணைத்தேன்.
ஈர்ப்பு 45.2
நாங்கள் இருவரும் எங்களின் இந்த ஒரு வார பிரிவை ஈடு செய்வதைப் போல் நேரம் காலம் பார்க்காமல் அன்றைய இரவைப் பேசிக் கொண்டே கழிக்க, எங்களின் அலைப்பேசிகளோ பொறுமை இழந்து உயிர்விடும் நிலைக்கு வந்த பின்பே, நேரம் கடந்தததை உணர்ந்தோம்.
“ஹே பப்ளி… ரொம்ப நேரம் ஆச்சு… நீ போய் தூங்கு… அப்பறம் நாளைக்கு தூங்க நேரம் இருக்காது…???”
“ஏன் நேரம் இருக்காது…???” ஒரு உந்துதலில் கேட்ட பின்பே, அவன் கூறியதற்கு அர்த்தம் புரிந்து வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டேன்.
நான் கூறியதற்கு சிரித்த அவன், “??? இப்படி தலைல அடிச்சு அடிச்சு தான் உள்ள எதுவுமே இல்லையோ…???” என்று மீண்டும் என்னை கிண்டல் செய்ய…
“ஹலோ, என்ன எனக்கு மூளையே இல்லன்னு சொல்… ஹே உங்களுக்கு எப்படி நான் தலைல அடிச்சது தெரியும்…” என்று கூறியவாறே அவன் எங்கேயாவது தென்படுகிறானா என்று தேடிக் கொண்டிருந்தேன்.
அவன் வீட்டில், அவன் அறையின் ஜன்னல் திறந்திருந்தது. இருட்டாக இருந்தாலும் அங்கு தெரிந்த அசைவில், அவன் தான் என்பது உறுதியானது.
“என்ன பப்ளி… கண்டுபிடுச்சுட்ட போல…”
“ஹே அப்போ இவ்ளோ நேரம் அங்க இருந்து பார்த்துட்டே தான் பேசுனீங்களா...???”
“இன்னிக்கு மாட்டும் இல்ல… எப்போ எல்லாம் நீ பால்கனில நின்னுட்டு இருந்தையோ…அப்போ எல்லாம் உன்ன பார்த்துட்டு தான் இருந்தேன்…” என்றான் கிசுகிசுப்பாக…
இரவு நேர குளிரையும் தாண்டி என் உடல் சூடானது. எதுவும் பேசத் தோன்றாமல், அவனிருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்…. அவன் முழு உருவம் தெரியாவிட்டாலும், அவன் வரி வடிவம் காண்பதே போதும் என்று…
சிறிது நேரம் கழித்து அவன் இயல்பிற்கு மீண்டவாறு, “ஹே பப்ளி… என்ன ஃப்ரீஸ் ஆகிட்ட…” என்றான்…
நானோ அவன் கேட்டதற்கு சற்றும் சம்மந்தமில்லாமல், ஆனால் அவன் கேட்கத் துடிக்கும் ஒன்றைக் கூறினேன். “ஐ லவ் யூ ரணு…”
இப்போது அவன் அறையில் வெளிச்சம் பரவ, அவன் முகம் எனக்குத் தெளிவாக தெரிய, அம்முகத்திலோ உணர்ச்சிக் குவியல்கள்…
“ஹே நிது இப்போ என்ன சொன்ன… திரும்பி சொல்லு…” அவன் குரலில் அப்பட்டமான எதிர்பார்ப்பு…
அவனின் ‘நிது’வில் என்னை தொலைத்த நான், அவனிடம், “கோல்டன் வொர்ட்ஸ் ஆர் நாட் ரிப்பீடட்…???” என்று கூறிவிட்டு உடனே அலைப்பேசியை அணைத்து விட்டேன்.
என்ன தான் அலைப்பேசியை அணைத்து விட்டாலும், அங்கிருந்து நகர அவசரம் காட்டவில்லை நான். நின்று நிதானமாக அவனை ‘சைட்’டடித்து விட்டே என் அறைக்குச் சென்றேன்.
சற்று முன் நடந்தவைகளை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்து, அனுபவித்தேன்… அப்போது அவன் சொன்ன, ‘நாளைக்கு தூங்க நேரம் இருக்காது’ நியாபகம் வந்தது…
‘சீ ஹல்க்… பேட் பாய்…???’ என்று அவனை திட்டி(கொஞ்சி)யவாறே படுத்துறங்கினேன்.
திடீரென்று என்னை யாரோ உலுக்க, அடித்துப் பிடித்து எழுந்தேன். அங்கு அந்த மூவர் கூட்டணி முறைப்புடன் என்னைப் பார்க்க…
“ச்சே நீங்க தானா… ஏன் டி இப்படி பேய் மாதிரி மேக்-அப் போட்டுட்டு வந்து என்ன பயமுறுத்துறீங்க…” என்று கொட்டாவி விட்டவாறே கூறினேன்…
“அட எரும… இன்னைக்கு உனக்கு கல்யாணம் அது நியாபகம் இருக்கா…” – சாண்டி.
“ஆமா… அதுக்கு எதுக்கு டி நீங்க இப்படி மிட்-நைட்ல இருந்தே ரெடியாகிட்டு இருக்கீங்க… இதுல என்னையும் எழுப்பி விடுறீங்க.. உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு…??” (பாவம் நதிமா… அவ படுத்ததே அதிகாலை… இல்ல இல்ல… அவள பொருத்தவரைக்கும் அது மிட்-நைட் மூணு மணிக்கு தான்னு தெரியாம போச்சே???)
“லூஸி மணி அஞ்சாச்சு டி… இன்னும் ஒரு மணி நேரத்துல கோவில்ல இருக்கனும்…”
“என்னாது அஞ்சா…??? அடப்பாவிங்களா… எதுக்கு டி இவ்ளோ லேட்டா எழுப்புனீங்க… நீங்க மட்டும் மேக்-அப் போட்டுட்டு அழகா…இல்ல கொஞ்சம் சுமாரா இருக்கீங்க… கல்யாணப் பொண்ணு நான் மட்டும் இன்னும் குளிக்கமா இருக்கேன்…???” என்றேன் பாவமான குரலில்….
“அடியேய் ஓவரா பேசுன இப்படியே போட்டோ எடுத்து குரூப்ல போட்டுடுவேன்… ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் குளிச்சுட்டு வா…” என்றனர் அம்மூவரும்…
அவர்களை முறைத்து ஏதோ சொல்ல வந்த என்னைத் தடுத்த ஷீலா, “நதி இன்னும் குளிக்க போகலையா… அங்க அத்த நீ ரெடியாகிட்டியான்னு கேட்டுட்டு இருக்காங்க…” என்றாள்.
என் அம்மாவின் பெயரைக் கேட்டதும், இன்னும் நேரம் தாழ்த்துவது எனக்கே ஆபத்தாகிவிடும் ??? என்று தோன்ற, குளியறைக்குள் புகுந்துக் கொண்டேன்.
அதற்கு பின் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடக்க… அந்நால்வரின் கூட்டு முயற்சியால் ??? இதோ திருமண அலங்காரத்தில் நான்… என்னை நானே ஒருமுறை கண்ணாடியில் பார்த்து வியந்தேன்.
மயில் நீல நிற பட்டுச் சேலையும் அதற்கேற்ற மயில் பச்சை நிற பிளவுஸில் தங்க நகைகள் அணிந்து, கல்யாணப் பெண்ணிற்குரிய நாணத்தோடு, ஒருவித தனித்துவமான அழகோடு மிளிர்ந்தேன் நான்…. என்னவனைக் காதலித்துக் கரம் பிடிக்கப்போகும் மகிழ்ச்சி என் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அம்மூவரின் கேலிகள் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தன.
“நதி மா ரெடியா…” என்று கேட்டுக்கொண்டே வந்த என் அம்மா கூட ஒரு நொடி என்னைக் கண்டு ஆச்சரியத்தில் விழிவிரிக்க… மறு நொடி என் கன்னம் வழித்து, “அழகா இருக்க டி…” என்றார்.
நான் எதுவும் கூறாமல் சிரிப்புடனே அவரின் வாழ்த்தை ஏற்றேன். ஆம்… எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை… அந்த நிமிடங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன்… ஒவ்வொரு நொடிகளையும் அவசரமே இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில், எல்லாரும் கோவிலுக்கு கிளம்ப, ஒருவித சுழலில் சிக்கிக் கொண்ட அவஸ்தையான உணர்வு எனக்குள் தோன்றியது.
இந்த வீட்டில் என் அப்பா – அம்மாவிற்கு மகளாக, என் அண்ணனின் தங்கையாக உரிமையுடன் வளைய வந்த நான், இனி இந்த வீட்டிற்குள் நுழையும்போது ராகுலின் மனைவியாகிருப்பேன் என்ற எண்ணும்போது மகிழ்ச்சி மற்றும் கவலை என்ற இரு உணர்வுகளும் சரிவிகிதமாக எனக்குள் தோன்றி என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
எல்லா பெண்களும் இந்த தருணத்தைக் கடந்து தான் வந்திருப்பார்கள் என்று என் மூளைக்குத் தெரிந்தாலும், என் மனது அதை அவ்வளவு எளிதாக ஏற்கவில்லை… இவ்வாறு குழப்பத்தின் பிடியில் நான் சிக்கியிருக்க, அந்த நொடி க்ரிஷின் ஆறுதலுக்காக என் மனம் ஏங்கியது….
அடுத்த ஐந்தாவது நொடி, என் அலைப்பேசியில் அவனிற்காக நான் செட் செய்த பாடல் ஒலித்தது…
சஹாயனே சஹாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சஹாயனே சஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்
அந்த நொடி எனக்குள் ஏற்பட்ட குழப்பம் சிறிது மட்டுப்படுவதாய் தோன்ற, மெல்லிய சிரிப்புடன் அதை உயிர்ப்பித்தேன்.
எடுத்ததும், “ஹே பப்ளி உன் ஃபேஸ் ஏன் வாடியிருக்கு… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பிரைட்டா தான இருந்துச்சு… அதுக்குள்ள என்ன குழப்பம் உனக்கு…” என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்க…
என் குழப்பம் முற்றிலும் மறைந்தது… அவன் என்னிடம் காட்டும் அக்கறையிலும், எனக்கான அவனின் தவிப்பும்… என் குழப்பத்தை விரட்டின… ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற வேண்டும்… ஆனால் இங்கோ நான் இழக்கப் போவது எதுவுமில்லையே…
ஒரு பக்கம் என் அப்பா – அம்மாவிற்கு செல்ல மகளாக, என் அண்ணனிற்கு அன்புத் தங்கையாக… மறுபக்கம் என் அத்தைக்கு சுட்டி மருமகளாக… இவையெல்லாம் தாண்டி என்னவனிற்கு எல்லாமுமாக… இப்படி அனைத்து பக்கமும் என்னைக் கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்க, அந்த குழப்பமே தேவையற்றது என்று தோன்றியது.
என் பதிலிற்காக அவன் காத்திருப்பதை அறிந்த நான், “சார் எப்பவும் உங்க ஜன்னல் கதவு மூடாதா…???” என்று அவனைக் கிண்டலடித்தேன்.
“என்ன நிது மா… பேக் டு ஃபார்ம்மா…”
“ஹே நேத்தே கேக்கனும்னு நெனச்சேன்… அது என்ன நிது…”
“நீ மட்டும் என் பேர விதவிதமா சுருக்கி கூப்பிடுறேல… அதான் நானும் ட்ரை பண்ண போறேன்…”
“ஹலோ, என் பேரு என்ன உங்க பேரு மாதிரி நீ…ளமாவா இருக்கு…” என்று நான் கதையடிக்க, ஹாலில் என் அம்மாவின் சத்தம் எனக்கு இங்குவரை கேட்டது, “நதி… உள்ள என்ன பண்ணிட்டு இருக்க… சீக்கிரம் வெளிய வா…”
“ஹ்ம்ம் உங்க அத்த என் பேர ஏலம் போட ஆரம்பிச்சுட்டாங்க… அப்பறம் பார்ப்போம் பை…”
“ஹே நிது… ஒரே ஒரு தடவ…” அவன் ஒரு மாதிரி இழுக்க...
‘ஏதோ வில்லங்கமா கேட்கப் போறான்….’ என்று நினைத்துக் கொண்டே…
“ஒரு தடவ…”
“ஒரு தடவ…. ‘ஐ லவ் யூ’ சொல்லேன்…”
ஒரு நீண்ட பெருமூச்சு என்னிடம்…
“என்ன பப்ளி… வேற ஏதாவது கேட்பேன்னு எதிர்பார்த்தியோ…??”
“ப்ச்… போடா …” என்றவாறு அலைப்பேசியை அணைத்தேன்.