Anu Chandran
மண்டலாதிபதி
ஹாய் மக்களே.....
இதோ அடுத்த பதிவு....
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க மக்களே...
சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட பண்ண அனைவருக்கும் நன்றிகள்
மறு நாள் காலை முதலில் துயில் கலைந்த ரேஷ்மி மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்க எதிரே ஏதோ இருப்பது போல் தெரிய அதை கை வைத்து பார்த்தவளுக்கு அப்போது தான் இரவு நடந்த சம்பவம் நினைவில் வந்தது..
அவள் வினயின் மார்பில் தலை வைத்து படுத்திருக்க வினயின் ஒரு கை அவளை அணைத்திருந்தது...
மெதுவாக அவனது தூக்கம் கலையாதவாறு கையை விலக்க அவனிடம் அசைவு தெரிந்தது...
எங்கே அவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மீண்டும் அவன் மார்பிலேயே படுத்துக்கொண்டாள்...
அவன் மூச்சு மீண்டும் சீராவதை உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் மெதுவாக எழும்பி அவன் காதருகே சென்றவள்
"டேய் திருடா..... நீ தூங்கலைனு தெரியும்.... கையை எடு... இல்லைனா கடிச்சி வச்சிருவேன்...” என்று அவள் கூறிய அடுத்த நொடி அவனது கை அவளை விடுவித்திருந்தது...
அவனது செயலில் சிரித்தவள் இரவு கொடுக்காத முத்தத்தை அவனது நெற்றியில் வைத்துவிட்டு எழுந்து குளியலறைக்குள் சென்றாள்....
அவள் சென்றதும் கண்விழித்தவன் இதழ்களில் புன்னகை ஒட்டிக்கொண்டது...
மனமோ
“ஷிமி இன்னும் கொஞ்ச நாள் தான்... அதுக்குள்ள உன் கூட்டில் இருந்து உன்னை முழுவதுமாக வெளிவர வைக்கின்றேன்... என்ன தான் நீ உன் காதலை என்கிட்ட சொன்னாலும் உன் கண்கள் அதை முழுதாக பிரதிபலிக்கவில்லை... ஏதோ ஒரு தயக்கம், ஒரு போராட்டம் உனக்குள் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.. அதை உன் வாயாலேயே வரவைத்து அந்த தயக்கத்தை உடைத்து எறிந்து என்னுடைய சரிபாதியாக உன்னை மாற்றிய பின் உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு...... ஆனா அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.... சீக்கிரம் உன்னை வழிக்கு கொண்டுவருகின்றேன் என் ஸ்வீட் பொண்டாட்டி....” என்று பேசிக்கொண்டவன் எழுந்து கட்டிலில் படுத்துக்கொண்டான்....
குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் வினயிற்கு காபி எடுத்துவருவதற்காக அறையில் இருந்து வெளியேறினாள்...
வெளியே வந்தவள் அங்கு சோபாவில் அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டிருந்த வீரலட்சுமி அருகில் சென்று அவரிடம் இன்று தன் பிறந்த நாள் என்று கூறியவள் அவர் காலில் விழுந்து வணங்கினாள்...
ரேஷ்மியை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தவர் தன் சேலையில் முடிந்திருந்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டை அவளுக்கு பரிசாக கொடுத்தார்....
பின் அனைவருக்கும் காபி கலக்க சமையலறை சென்றாள் ரேஷ்மி...
ரேஷ்மி அனைவருக்கும் சேர்த்து காபி கலந்து விட்டு தன் காபியை அருந்தியவள் ரியாவிற்கும் அபியிற்கும் ப்ளாஸ்கில் காபியினை எடுத்துவைத்துவிட்டு வினயிற்கு எடுத்துக்கொண்டவள் வீரலட்சுமிக்கும் கொடுக்க தவறவில்லை..
வினயிற்கு காபியை எடுத்து சென்றவள் அவனை எழுப்ப முயல அவனோ எழும்ப மறுக்க கப்பில் இருந்து காபியில் ஒரு மிடறு குடித்தவள்
“ வினய் நீங்க ரொம்ப பாவம்...” என்று கூற அதில் கண்முழித்தவன்
“ஆமா ரேஷ்மி நான் ரொம்ப பாவம்... அது உனக்கு இப்போ தான் தெரிஞ்சதா???” என்று ஒப்புகொண்டான் வினய்..
“வேற எப்போ தெரியனும்...??”
“அதை பிறகு சொல்றேன்.... இப்போ நீ எதுக்கு என்னை பாவம்னு சொல்லுற??”
“நீங்க தான் காபி குடிக்கலையே... அதான் பாவம்னு சொன்னேன்...”
“எப்பவும் குடிக்கிறது தானே....”
“ஆமா... ஆனா இன்னைக்கு ஸ்பெஷலா உங்களுக்குனே ஒரு காபி... வினய்...”
“ஏன் ஷிமி காபியில் உப்பு ஏதும் கலந்துட்டியா???” என்று சிரித்தவனை முறைத்த ரேஷ்மி
“இல்லை... ஒரு போத்தல் பினாயில் கலந்துருக்கேன்..”
“ஏன் ஷிமி உனக்கு இந்த கொலைவெறி... இப்படி என் உயிரோட விளையாடுறியேமா.... உன் ஆத்துக்காரர் பாவமில்லையா??” என்று பாவமாக வினவியவனை ரேஷ்மி முறைக்க வினயோ
“ஹலோ மேடம் இது நான் கொடுக்க வேண்டிய ரியாக்ஷன்... இதெல்லாம் அக்கிரமம்...” என்றவன் தொடர்ந்து புலம்ப கையில் இருந்த காபி கப்போடு அங்கிருந்து விலகிச்சென்றாள் ரேஷ்மி....
இதோ அடுத்த பதிவு....
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க மக்களே...
சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட பண்ண அனைவருக்கும் நன்றிகள்
மறு நாள் காலை முதலில் துயில் கலைந்த ரேஷ்மி மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்க எதிரே ஏதோ இருப்பது போல் தெரிய அதை கை வைத்து பார்த்தவளுக்கு அப்போது தான் இரவு நடந்த சம்பவம் நினைவில் வந்தது..
அவள் வினயின் மார்பில் தலை வைத்து படுத்திருக்க வினயின் ஒரு கை அவளை அணைத்திருந்தது...
மெதுவாக அவனது தூக்கம் கலையாதவாறு கையை விலக்க அவனிடம் அசைவு தெரிந்தது...
எங்கே அவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மீண்டும் அவன் மார்பிலேயே படுத்துக்கொண்டாள்...
அவன் மூச்சு மீண்டும் சீராவதை உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் மெதுவாக எழும்பி அவன் காதருகே சென்றவள்
"டேய் திருடா..... நீ தூங்கலைனு தெரியும்.... கையை எடு... இல்லைனா கடிச்சி வச்சிருவேன்...” என்று அவள் கூறிய அடுத்த நொடி அவனது கை அவளை விடுவித்திருந்தது...
அவனது செயலில் சிரித்தவள் இரவு கொடுக்காத முத்தத்தை அவனது நெற்றியில் வைத்துவிட்டு எழுந்து குளியலறைக்குள் சென்றாள்....
அவள் சென்றதும் கண்விழித்தவன் இதழ்களில் புன்னகை ஒட்டிக்கொண்டது...
மனமோ
“ஷிமி இன்னும் கொஞ்ச நாள் தான்... அதுக்குள்ள உன் கூட்டில் இருந்து உன்னை முழுவதுமாக வெளிவர வைக்கின்றேன்... என்ன தான் நீ உன் காதலை என்கிட்ட சொன்னாலும் உன் கண்கள் அதை முழுதாக பிரதிபலிக்கவில்லை... ஏதோ ஒரு தயக்கம், ஒரு போராட்டம் உனக்குள் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.. அதை உன் வாயாலேயே வரவைத்து அந்த தயக்கத்தை உடைத்து எறிந்து என்னுடைய சரிபாதியாக உன்னை மாற்றிய பின் உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு...... ஆனா அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.... சீக்கிரம் உன்னை வழிக்கு கொண்டுவருகின்றேன் என் ஸ்வீட் பொண்டாட்டி....” என்று பேசிக்கொண்டவன் எழுந்து கட்டிலில் படுத்துக்கொண்டான்....
குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் வினயிற்கு காபி எடுத்துவருவதற்காக அறையில் இருந்து வெளியேறினாள்...
வெளியே வந்தவள் அங்கு சோபாவில் அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டிருந்த வீரலட்சுமி அருகில் சென்று அவரிடம் இன்று தன் பிறந்த நாள் என்று கூறியவள் அவர் காலில் விழுந்து வணங்கினாள்...
ரேஷ்மியை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தவர் தன் சேலையில் முடிந்திருந்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டை அவளுக்கு பரிசாக கொடுத்தார்....
பின் அனைவருக்கும் காபி கலக்க சமையலறை சென்றாள் ரேஷ்மி...
ரேஷ்மி அனைவருக்கும் சேர்த்து காபி கலந்து விட்டு தன் காபியை அருந்தியவள் ரியாவிற்கும் அபியிற்கும் ப்ளாஸ்கில் காபியினை எடுத்துவைத்துவிட்டு வினயிற்கு எடுத்துக்கொண்டவள் வீரலட்சுமிக்கும் கொடுக்க தவறவில்லை..
வினயிற்கு காபியை எடுத்து சென்றவள் அவனை எழுப்ப முயல அவனோ எழும்ப மறுக்க கப்பில் இருந்து காபியில் ஒரு மிடறு குடித்தவள்
“ வினய் நீங்க ரொம்ப பாவம்...” என்று கூற அதில் கண்முழித்தவன்
“ஆமா ரேஷ்மி நான் ரொம்ப பாவம்... அது உனக்கு இப்போ தான் தெரிஞ்சதா???” என்று ஒப்புகொண்டான் வினய்..
“வேற எப்போ தெரியனும்...??”
“அதை பிறகு சொல்றேன்.... இப்போ நீ எதுக்கு என்னை பாவம்னு சொல்லுற??”
“நீங்க தான் காபி குடிக்கலையே... அதான் பாவம்னு சொன்னேன்...”
“எப்பவும் குடிக்கிறது தானே....”
“ஆமா... ஆனா இன்னைக்கு ஸ்பெஷலா உங்களுக்குனே ஒரு காபி... வினய்...”
“ஏன் ஷிமி காபியில் உப்பு ஏதும் கலந்துட்டியா???” என்று சிரித்தவனை முறைத்த ரேஷ்மி
“இல்லை... ஒரு போத்தல் பினாயில் கலந்துருக்கேன்..”
“ஏன் ஷிமி உனக்கு இந்த கொலைவெறி... இப்படி என் உயிரோட விளையாடுறியேமா.... உன் ஆத்துக்காரர் பாவமில்லையா??” என்று பாவமாக வினவியவனை ரேஷ்மி முறைக்க வினயோ
“ஹலோ மேடம் இது நான் கொடுக்க வேண்டிய ரியாக்ஷன்... இதெல்லாம் அக்கிரமம்...” என்றவன் தொடர்ந்து புலம்ப கையில் இருந்த காபி கப்போடு அங்கிருந்து விலகிச்சென்றாள் ரேஷ்மி....