• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
வழமைக்கு மாறாக நேரம் தாழ்த்தி வீட்டிற்கு வந்தான் வினய்... வந்தவன் நேரே தங்கள் அறைக்கு செல்ல அங்கு கட்டிலில் உறங்கிகொண்டிருந்தாள் ரேஷ்மி. குளியலறைக்கு சென்று பிரஸ் ஆகி வந்தவன் கட்டிலருகே சென்று முழந்தாளிட்டு ரேஷ்மியின் முன்னுச்சியை தொட்டு பார்த்தான்...
அது சில்லிட்டு இருக்க கன்னத்தில் கை வைத்து பார்க்க அதுவும் அவ்வாறே இருந்தது... அது அவனுக்கு வேண்டிய பதிலை தந்துவிட அங்கிருந்து எழுந்தவன் ஹாலிற்கு செல்ல ரியாவும் அபியும் அனுவுடன் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தனர்.

வினய் அவர்களருகே சென்று அமர அனு தன் தந்தை மடியிலிருந்து இறங்கி வினயிடம் சென்று அவனை கட்டிக்கொண்டாள்.

கட்டிக்கொண்ட குழந்தையை அள்ளி அணைத்தவன் குழந்தையை கொஞ்சத்தொடங்கினான்..

அவர்கள் இருவரும் கொஞ்சுவதை ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்த அபியும் ரியாவும் அர்த்தமாக ஒரு பார்வையை பரிமாறிக்கொண்டனர். பின் ரியா அங்கிருந்து எழுந்து சென்று அனைவரையும் சாப்பிட அழைத்தாள்...

குழந்தை ஏற்கனவே சாப்பிட்டுவிட்டதால் டிவி பார்ப்பதாக சொல்லி ஹாலிலேயே இருந்துவிட வினயும் அபியும் உணவருந்த சென்றனர்.
ரியா உணவு பரிமாறத்தொடங்க அவளிடம் வினய்
“அண்ணி அம்மா சாப்பிட்டாங்களா??”
“அத்தை சாப்பாட்டு அப்போவே படுத்துட்டாங்க”
“அண்ணி ரேஷ்மி சாப்டாளா???” என்று கேட்க ரியா
“இல்லை கவின்.. அவ சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டா... நான் தான் மெடிசன் குடிக்கனும்னு சொல்லி வற்புறுத்தி ஒரு கிளாஸ் பால் குடிக்க வைத்தேன்.. அதை குடிச்சிட்டு படுத்துட்டா....”
“நல்ல வேலை செய்தீங்க அண்ணி.. இல்லைனா வெறும் வயிற்றோடு படுத்திருப்பா.... சாப்பிடுறதுக்கு மட்டும் சின்ன பிள்ளைகள் மாதிரி அடம்பிடிப்பா...” என்று வினய் சிரித்தவாறு கூற அபியோ

“அதுவும் நல்லது தான்டா.. ஒபசிட் டிரெக்ஷன் அட்ராக்ஸ் மோ...” என்று தத்துவம் பேசிய அபியை முறைத்து பார்த்தான் வினய்...

அவனது முறைப்பின் அர்த்தம் புரிந்த அபி சிரிக்க இவர்களது சம்பாஷனைக்கு அர்த்தம் புரியாத ரியா அபியிடம்

“அபி நீங்க சொல்லுறது எனக்கு புரியலை??” என்று ரியா அபியிடம் கேட்க அதற்கு பதிலளித்தான் வினய்...

“அதை நான் சொல்லுறேன் அண்ணி.... ஷிமி கம்மியா தான் சாப்பிடுவா... ஆனா நான் மூனு ஆள் சாப்பாட்டை தனியாளாக சாப்பிடுவேன்... அதோடு எல்லா வெரைட்டியையும் ரவுண்டு கட்டி அடிப்பேன்... அத தான் அண்ணா அப்படி சொல்றான்... அதாவது நான் சாப்பாட்டு ராமன் அவ சாப்பிடாத சீதை...”

“இப்போ புரியிது அத்தை ஏன் சமைக்கும் போது கவினிற்குனு தனியா ஒரு கிலோ கறி சமைக்கிறாங்கனு....” என்று ரியாவும் தன் பங்கிற்கு வாரினாள்.

“என்ன அண்ணி பண்ணுறது?? எங்க அம்மா கண்ணே மணியேனு இரண்டை பெத்து போட்டுட்டாங்க...அதுல ஒன்னு டயட்டு பாடி பிட்னு வாழ்க்கையை ஓட்டிரிச்சி... சரி இரண்டாவதாக பிறந்ததாவது நல்லா சாப்பிடட்டும்னு தாராளமா சமைச்சு போட ஆரம்பிச்சிட்டாங்க...அதுவும் இது தான் சான்ஸ்னு பூந்து விளையாட ஆரம்பிச்சி இப்போ அது பழக்கமாகவே போயிரிச்சி...” என்று வரலாறு கூறியவன் தன் வேலையில் கவனமாக இருந்தான்.(அதாங்க சாப்பிடுறது??)

இவ்வாறு கலகலத்தவாறு உணவருந்திக்கொண்டிருக்கும் வேளையில் அபி வினயிடம்
“கவின் எப்போ ஹனிமூன் போகலாம்னு பிளான் பண்ணியிருக்க??” என்று கேட்க
பேச்சு ஸ்வாரஸ்யத்தில் அபி கூறியதை சரியாக கவனிக்காதவன்

“யார் கூட அபி??” என்று கேட்டுவிட
“என்கூட தான்.. வர்றீயா சேர்ந்து போகலாம்???”என்று கடுப்பில் அபி வினவ

அப்போதும் புரியாது வினய்
“அப்போ அண்ணி அனுவெல்லாம்???” என்று கேட்க ரியா வினயின் கேள்வியில் சிரிக்க அபி வினயை முடிந்தமட்டும் முறைத்தான்..

ரியாவின் சிரிப்பில் ஏதோ குழறுபடி நடந்துவிட்டது என்று புரிந்து கொண்டவன் சமாளிக்கும் முகமாக ஈயென்று இளித்தான்.

“என்ன அபி கேட்ட???நான் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் நீ சொன்னதை சரியாக கவனிக்கலை..” என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு வினய் கேட்க

“ஆ... நீ எப்போ புள்ள குட்டினு செட்டில் ஆகப்போறேனு கேட்டேன்...” என்று அபி பதிலளித்தான்.

வினயோ கூலாக “அதுக்கு என்னடா அவசரம்?? அதெல்லாம் ஆர அமர பெத்துக்கலாம்...” என்று வினயின் பதிலில் கடுப்பான அபி

“எப்போடா நீ கிழவனான பிறகா??”
“சீ.. சீ.. அவ்வளவு லேட்லாம் பண்ண மாட்டேன்...இன்னும் ஒரு த்ரீ இயர்ஸ்...”

“அது என்னடா த்ரீ இயஸ் கணக்கு??”
“த்ரீ இயஸ் ரொமென்ஸ் பீரியட்... அதாவது பி.பி பீரியட். அதுக்கு பிறகு வில்லன் பீரியட்... அதாவது ஆ.பி... அது ஸ்டார்ட் ஆகுனா ரொமேன்சிற்கு பஞ்சமாகிரும்... அதான் பி.பி பீரியட்டை த்ரீ இயர்ஸா எக்டென்ட் பண்ணிட்டேன்...” என்று வினய் கூற

“டேய் புரியிற மாதிரி சொல்லுடா???”

“இரு உனக்கு புரியிற மாதிரி சொல்லுறேன்....மேரேஜ் லைப்பை இரண்டு ஸ்டேஜா பிரிக்கலாம். பி.பி அப்புறம் ஆ.பி.
பி.பி னா பிபோ பேபி... அதாவது குழந்தை குட்டி இல்லாத பீரியட்.... அதாவது நம்ம ஸ்லேங்ல சொல்லுறதுனா ரொமான்ஸ் பீரியட்... அதாவது நான் இப்போ இருக்க பீரியட்...
ஆ.பி னா ஆப்டர் பேபி... அதாவது குழந்தை குட்டினு ஆன பிறகு உள்ள பீரியட்.. நம்ம ரொமான்சுக்கு குழந்தை ரூபத்தில் வில்லன் வருகிற பீரியட்...
இப்போ நீ இருக்கது ஆ.பி பீரியட்... உனக்கு அதில் அனுபவம் ஜாஸ்தியாச்சே.. நான் சொல்லனும்னு இல்லை..” என்று வரைவிலக்கணம் கூறியவனை வாய்பிளந்து பார்த்திருந்தனர் அபியும் ரியாவும்.

அபியோ “எப்படிடா நீ மட்டும் இப்படி யோசிக்கிற??”
“உன்னை பார்த்த பிறகு இதை கூட யோசிக்கலைனா எப்படி??” என்று என்று தன் காலரை தூக்கிவிட அபியும் ரியாவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டனர்...

“இதுல எல்லாம் வெவரமா இரு... மத்த விஷயத்துல கோட்டை விட்டுரு...”

“கோட்டை விட்டத கப்பலேறி போய் புடிச்சிடுவேன்டா.. கவலைபடாத..” என்று மறைமுகமாக அபியிற்கும் ரியாவிற்கும் தன் வாழ்வை தான் சரிபடுத்துவதாக தெரிவித்தான் வினய்.
அவனது பதிலேயே அவனது எண்ணத்தை புரிந்து கொண்ட அபி ஏதோ கேட்க வந்த ரியாவை கண்களால் தடுத்தான்...
உணவை முடித்துக்கொண்ட எழுந்த வினய் ரேஷ்மிக்கென்று ஒரு பிளாஸ்கில் பாலும் பிஸ்கட் பெக்கட்டையும் ரியாவிடம் கேட்டு வாங்கியவன் அனைவருக்கும் இரவு வணக்கத்தை கூறிவிட்டு தனது அறைக்கு சென்றான்...

அறைக்கு சென்றவன் தன் கையோடு கொண்டுவந்த பொருட்களை அருகிலிருந்த மேசையில் வைத்தவன் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த ரேஷ்மியின் அருகில் சென்றான்..

எப்போதும் போல் அன்றும் குழந்தையாய் உறங்கிகொண்டிருந்த ரேஷ்மியின் முன்னுச்சில் தன் இதழ் பதித்தவன் மறுபுறம் சென்று கட்டிலில் படுக்க முயன்ற போது முதல்நாள் இரவு சம்பவங்கள் நியாபகத்தில் வர கட்டிலில் இருந்து எழுந்தான்.

கட்டிலில் இருந்த விரிப்பை எடுத்து கீழே விரித்தவன் விளக்கை அணைத்துவிட்டு உறங்கிவிட்டான்.

அதிகாலை மூன்று மணியளவில் கண் விழித்த ரேஷ்மி மொபைலில் நேரத்தை பார்க்க அது மணி மூன்று என்று காட்டியது...
கட்டிலில் இருந்து எழுந்தவள் நைட் பல்பை ஆன் செய்துவிட்டு வினயை தேட அவனோ கீழே படுத்துறங்கிக்கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் ரேஷ்மியின் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது...
ஒரு கையை தலைக்கு கொடுத்து மறுகையை பனியனால் மறைக்கப்பட்டிருந்த அவனது மார்பில் வைத்து கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான்..
அவன் மூச்சுவிடுகையில் மேலே எழும்பி கீழே வரும் அவனது மார்பின் சந்த அசைவை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த ரேஷ்மிக்கு அதில் தலை சாய்த்து உறங்கும் அவா எழுந்தது...
கட்டிலிலிருந்து எழுந்தவள் பூனை நடை நடந்து வினயருகே சென்று அவனது உறக்கம் கலையாதவாறு அவனருகே படுத்துக்கொண்டாள்.
அவள் நெருங்கி படுத்த மறு நொடி வினய் மறுபுறம் திரும்பி படுத்துக்கொள்ள ரேஷ்மிக்கு சப்பென்றாகிவிட்டது..

இருந்தும் தன் முயற்சியை கைவிட விரும்பாதவள் வினயை அவன் உறக்கம் கலையாது எவ்வாறு தன்புறம் திருப்புவது என்று யோசிக்கத்தொடங்கினாள்...

சில நிமிட சிந்தனைக்கு பிறகு ஒரு யோசனை தோன்றிட அதை செயல்படுத்த முயன்றாள் ரேஷ்மி..
படுக்கையிலிருந்து எழுந்தவள் வினயின் பாதத்தருகே சென்று அவனது பாதத்தை கிச்சி மூட்டும் விதமாக மெதுவாக வருடினாள்...
இம்முறை அவனது முயற்சி பலனளித்தது... ரேஷ்மியின் மெல்லிய வருடல் தந்த கூச்சத்தில் தூக்கத்தில் புரண்டு படுத்தான் வினய்..
தன் முயற்சி வெற்றியடைந்த மகிழ்ச்சியில் வினயருகே விரைந்தவள் தவறுதலாக வினயின் பெருவிரலை லேசாக மிதித்து விட்டாள்..
அதில் தூக்கம் கலைந்த வினய் மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்க எதிரே ரேஷ்மி திருதிருவென முழித்துக்கொண்டிருந்தாள்..
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தவனுக்கு காண்பது கனவா நினைவா என்றுகூட தெரியவில்லை...
கனவு என்று எண்ணியவன்
“என்ன ஷிமி கல்யாணத்துக்கு முதல்ல தான் கனவுல வந்து டிஸ்டப் பண்ணுவ.. இப்போ என்ன ரொம்ப நாள் கழிச்சி கனவுல வர்ற?? என்கிட்ட ஏதாவது சொல்லனுமா??” என்று வினய் கேட்க ரேஷ்மி வினயின் பேச்சில் இன்னும் விழித்தொடங்கினாள்..

“என்ன ஷிமி இப்பவும் பேசமாட்டியா?? ஒவ்வொரு முறையும் நான் உன்னை நினைக்கும் போது கனவில் வருவ.. நான் ஏதும் கேட்டா இப்படி முழிச்சிட்டு காணாமல் போயிரு.... இந்த முறை நான் கூப்பிடாமல் நீயா தான் வந்திருக்க... அதுனால விஷயத்தை சொல்லு...” என்று வினய் கண்களை மூடியவாறே உளறினான்.
அவன் தூக்கத்தில் இருந்து இன்னும் தெளியவில்லை என்று தெரிந்து கொண்ட ஷிமி அவனுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று எண்ணியவள் எதுவும் பேசாது
அவனருகே சென்று அவன் மார்பில் தலை சாய்த்து படுத்துக்கொண்டவள் அவனது கையை எடுத்து தன் இடையின் மீது போட்டுக்கொண்டாள்...
வினயோ “ கனவுல எல்லாம் நல்லாதான் பண்ணுற... நிஜத்துல தான் பிரபோஸ் பண்ணா அடி பின்னிர்ற..” என்றவன் மீண்டும் உறக்கத்திற்கு சென்றுவிட்டான்..
ரேஷ்மியோ அவனது மார்பில் தலை வைக்க அது அசைந்த சந்தம் குழந்தையை தாலாட்டும் தொட்டிலாய் மாறி அவளை தாலாட்ட அதில் மீண்டும் கண்ணயர்ந்தாள் ரேஷ்மி...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top