Anu Chandran
மண்டலாதிபதி
அதிகாலையில் கண்விழித்த ரேஷ்மி வினயை தேட அருகில் வினய் இல்லை. நேரத்தை பார்க்க அது ஆறு முப்பது என்று காட்டியது. கட்டிலில் இருந்து எழும்ப முயன்றவளுக்கு உடலின் அயற்சி நேற்று இரவு நடந்த கூடலை நினைவு படுத்தியது. அந்நினைவுகள் பெண்ணிற்கே உரிய வெட்கத்தை உண்டுபண்ண தனக்குள் சிரித்துக்கொண்டாள் ரேஷ்மி. வெட்கத்திற்கு காரணமானவனோ தன்னுடைய காரில் அலுவலகம் நோக்கி பயணித்து கொண்டிருந்தான். இரவு முழுதும் உறங்காமல் யோசனையில் உழன்றவன் ரேஷ்மி விழிப்பதற்கு முன் தன் அன்னையிடம் சொல்லிக்கொண்டு ஆபிஸிற்கு கிளம்பிவிட்டான்.
இங்கு கட்டிலிலிருந்தவாறு நேற்றைய இரவின் இனிமைகளில் மூழ்கியிருந்தவள் தன்னிலை அடைந்ததும் வினயை தேட அவனோ அவளது கண்களுக்கு அகப்படவில்லை. இந்நேரத்தில் எப்போதும் அசந்து உறங்குபவன் இன்று எங்கு சென்றுவிட்டான் என்று தெரியாது குழம்பியவள் முதலில் சென்று குளித்துவிட்டு வரலாம் என்று தீர்மானித்து மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.
வினயோ ஆபிஸ் செல்லும் வழியில் சாய்பாபா கோவிலை கண்டவன் காரை பார்க் செய்துவிட்டு கோவிலுக்குள் சென்றான். எப்போதெல்லாம் மனக்குழப்பத்தில் இருக்கின்றானோ அப்போதெல்லாம் சீரடி சாய்பாபா எழுந்தருளியிருக்கும் அவரது திருக்கோயிலுக்கு சென்று அவரை தரிசித்துவிட்டு அங்கு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வருவது வினயின் வழமை. ரேஷ்மியின் தாய் தந்தையின் மரணத்தின் பின் பாபாவை தரிக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தவன் இன்று தான் பாபாவை தரிசிக்க வந்திருந்தான். வாசலில் ஒரு பால் பக்கெட்டும் மல்லிகைப்பூமாலையையும் வாங்கியவன் பாபாவின் சன்னிதியை அடைந்தான். அப்போதுதான் காலை நேர பூஜை ஆரம்பித்திருக்க அதில் கலந்துகொண்டவனுக்கு ஒருவித அமைதி கிட்டியது.... பூஜையை தொடர்ந்து பாபாவின் பளிங்கு சிலையிற்கு பக்தர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பாலபிஷேகம் செய்யத்தொடங்கினர்.பாபாவை மனதில் நினைத்து ஓம் சாய்ராம் என்று துதித்தபடி பாலபிஷேகம் செய்து முடித்தவன் முகத்தில் புன்னகையோடு பக்தர்களை ஆசிர்வாசிக்கும் வகையில் பட்டாடடை போர்த்தப்பட்டு சம்மனமிட்டு அமர்ந்திருந்த ஆறடிக்கும் உயரமான அந்த வெண்பளிங்கு பாபா சிலையின் முன் சென்று வணங்கியவன் தான் வாங்கி வந்திருந்த மல்லிகைப்பூமாலையை பாபாவின் காலடியில் வைத்துவிட்டு சில நிமிடங்கள் கண்மூடி தியானித்தான். அந்த சில நிமிடங்கள் அவனது மனக்குழப்பத்தை நீக்கி மனதை இலேசாக்குவதாய் உணர்ந்தான்.
பாபாவை தொழுதுவிட்டு அங்கிருந்த தியான மண்டபத்திற்கு வந்தவன் சம்மனமிட்டு அமர்ந்து மனதை ஒருநிலை படுத்த முயன்றான். அவனது முயற்சி அவனுக்கு கைகொடுக்க குழப்பத்திற்கு தீர்வு கிடைக்காத போதிலும் மனம் சிறிது சமனப்பட்டதாக வினய் உணர்ந்தான். இப்போதைக்கு இதுவே போதும் என்றி தோன்றிட அங்கிருந்து வெளியேறியவன் மீண்டும் பாபாவை தொழுதுவிட்டு ஆபிஸிற்கு கிளம்பினான்.
கடவுளை நாடினால் துன்பம் விலகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அந்த துன்பத்திலிருந்து மீண்டுவர இறைபக்தி ஒரு வழியே... துன்பம் நிகழும் போது மனம் சமநிலை இழக்கும். அதன் விளைவால் மனம் சரியான முடிவை எடுக்க தவறிவிடும். அதிலிருந்து காப்பதே இறைபக்தி... இறைவனாய் வந்து எந்தவொரு துன்பத்திற்கும் தீர்வு கொடுப்பதில்லை... தீர்விற்கான வழியை தேட மனதை தூண்டுவதே இறைபக்தி.... இதை பலர் புரிந்துகொள்ளாது கடவுளை வசைபாடுகின்றனர். மானிடர்களின் அனைத்து செயல்களுக்கும் மானிடர்களே பொறுப்பாகும் பட்சத்தில் கடவுளின் வருகை அவசியம் என்று கூறுவது என்பது எந்த விதத்தில் நியாயம்???
இந்த நியதியை சரியாக புரிந்து கொண்ட வினய் பாபாவை சரணடைந்தான்..சரணடைந்தவனுக்கு மன அமைதி கிட்டியது... அது அவனது குழப்பங்களுக்கு தீர்வை யோசிக்க சந்தர்ப்பம் அமைக்கும் என்று வினய் நம்பினான்.
குளித்து முடித்துவிட்டு வந்த ரேஷ்மி வினயை தேடி அறையிலிருந்து வெளியே சென்றாள்.
அப்போது பூஜையறையில் தீபம் காட்டியபடி இருந்த வீரலட்சுமியை பார்த்த ரேஷ்மி அவரருகே சென்று நின்றுகொண்டவள் அவர் நீட்டிய தீபத்தை கண்களில் ஒற்றிவிட்டு கண்மூடி பிரார்த்தித்தாள்.
கண்களை திறந்ததும் ரேஷ்மியின் நெற்றியில் விபூதியை வைத்துவிட்டார் வீரலட்சுமி. வீரலட்சுமி நெற்றியில் விபூதியை வைத்ததும் அவர் காலில் விழுந்து வணங்கிய ரேஷ்மியிடம் குங்குமத்தை எடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னார் வீரலட்சுமி. அவர் சொல்படி செய்தவள் மீண்டும் இறைவனை தொழுதுவிட்டு வீரலட்சுமியோடு வெளியே வந்தவள் வினயை தேட
“ரேஷ்மி வினய் ஆபிஸில் ஏதோ முக்கியமான வேலை இருக்குனு அப்பவே கிளம்பிட்டான். நீ அசந்து தூங்கிட்டு இருந்ததால என்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டான்...”
“ஓ.. சரி அத்தை.. நான் உங்களுக்கு காபி கலந்து எடுத்துட்டு வரட்டுமா???”
“ஆமா ரேஷ்மி.. இரண்டு பேருக்கும் கலந்து எடுத்துட்டு தோட்டத்துக்கு வா...” என்று கூறியவர் வீட்டிற்கு பின்புறமிருந்த தோட்டத்திற்கு சென்றார்.
ரேஷ்மியும் காபி கலந்துகொண்டு தோட்டத்திற்கு செல்ல அங்கு வீரலட்சுமி பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.
ரேஷ்மியை கண்டதும் கையிலிருந்து ஹோஸ் பைப்பை கீழே போட்டவர் நீரை அடைத்துவிட்டு ரேஷ்மியின் அருகே வந்தவர் அவள் கையிருந்த தன் காபி கோப்பையை வாங்கியபடி ஓரமாக போடப்பட்டிருந்து சிமெண்டு பெஞ்சில் அருகே ரேஷ்மியை அழைத்து சென்றார்.
இருவரும் சிமெண்டு பெஞ்சில் அமர்ந்ததும் தோட்டத்தை வேடிக்கை பார்த்தவாறு ரேஷ்மியிடம் உரையாடத்தொடங்கினார் வீரலட்சுமி.
“ ரேஷ்மி உன்கிட்ட ஒன்னு கேட்கனும்...”
“சொல்லுங்க அத்தை..”
“உனக்கு வினயை பிடிச்சிருக்கா??” என்று வீரலட்சுமியை கேட்க இப்படியொரு கேள்வியை வீரலட்சுமியிடம் இருந்து எதிர்பார்க்காதவள்
“அத்தை எதுக்கு இப்போ..” என்று தொடங்க வீரலட்சுமியோ
“ஹா.. சும்மா சொல்லுமா.. எதுக்கு தயங்குற???”
“ஆமா அத்தை...” என்று பதிலளித்தவளின் முகத்தில் ஆயிரம் செம்மை.
“ என் மகனுக்கு உன்னை பிடிச்சிருக்கா???” என்று வீரலட்சுமி தன் அடுத்த கேள்விக்கனையை தொடுத்தாள். அதற்கு வெட்கத்தில் தலை குனிந்து ஆமென்று பதில் சொன்னவளுக்கு நேற்றையை இரவு நினைவுகள் நினைவில் அதில் மங்கையவளின் கன்னத்தில் செம்மையை அள்ளி பூசியது...
“உனக்கு எப்படி அது தெரியும்???” என்று கேட்க
“அவங்க சொன்னாங்க...”
“அவனுக்கு நீ விரும்புறது தெரியுமா??” என்று வீரலட்சுமி தன் அடுத்த கேள்வியை தொடுக்க என்ன பதில் கூறுவதென்று ரேஷ்மிக்கு தெரியவில்லை. அவனது காதலை வார்த்தைகளாலும் செயலாலும் அவன் உணர்த்தியதை உணர்ந்தவளுக்கு தான் தன் காதலை உணர்த்தினோமா என்று தெரியவில்லை... அதனால் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“என்ன ரேஷ்மி பதிலில்லையா?? உன்னால மட்டும் இல்லை... என்னால் கூட இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது... இது பல பெண்களுக்கு விடை தெரியாத கேள்வி.. இந்த கேள்விக்கு விடை தெரியாமல் தான் என்னோட வாழ்வை தொலைத்தேன்.” என்றவரது பதிலில் அதிர்ந்தாள் ரேஷ்மி.
இங்கு கட்டிலிலிருந்தவாறு நேற்றைய இரவின் இனிமைகளில் மூழ்கியிருந்தவள் தன்னிலை அடைந்ததும் வினயை தேட அவனோ அவளது கண்களுக்கு அகப்படவில்லை. இந்நேரத்தில் எப்போதும் அசந்து உறங்குபவன் இன்று எங்கு சென்றுவிட்டான் என்று தெரியாது குழம்பியவள் முதலில் சென்று குளித்துவிட்டு வரலாம் என்று தீர்மானித்து மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.
வினயோ ஆபிஸ் செல்லும் வழியில் சாய்பாபா கோவிலை கண்டவன் காரை பார்க் செய்துவிட்டு கோவிலுக்குள் சென்றான். எப்போதெல்லாம் மனக்குழப்பத்தில் இருக்கின்றானோ அப்போதெல்லாம் சீரடி சாய்பாபா எழுந்தருளியிருக்கும் அவரது திருக்கோயிலுக்கு சென்று அவரை தரிசித்துவிட்டு அங்கு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வருவது வினயின் வழமை. ரேஷ்மியின் தாய் தந்தையின் மரணத்தின் பின் பாபாவை தரிக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தவன் இன்று தான் பாபாவை தரிசிக்க வந்திருந்தான். வாசலில் ஒரு பால் பக்கெட்டும் மல்லிகைப்பூமாலையையும் வாங்கியவன் பாபாவின் சன்னிதியை அடைந்தான். அப்போதுதான் காலை நேர பூஜை ஆரம்பித்திருக்க அதில் கலந்துகொண்டவனுக்கு ஒருவித அமைதி கிட்டியது.... பூஜையை தொடர்ந்து பாபாவின் பளிங்கு சிலையிற்கு பக்தர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பாலபிஷேகம் செய்யத்தொடங்கினர்.பாபாவை மனதில் நினைத்து ஓம் சாய்ராம் என்று துதித்தபடி பாலபிஷேகம் செய்து முடித்தவன் முகத்தில் புன்னகையோடு பக்தர்களை ஆசிர்வாசிக்கும் வகையில் பட்டாடடை போர்த்தப்பட்டு சம்மனமிட்டு அமர்ந்திருந்த ஆறடிக்கும் உயரமான அந்த வெண்பளிங்கு பாபா சிலையின் முன் சென்று வணங்கியவன் தான் வாங்கி வந்திருந்த மல்லிகைப்பூமாலையை பாபாவின் காலடியில் வைத்துவிட்டு சில நிமிடங்கள் கண்மூடி தியானித்தான். அந்த சில நிமிடங்கள் அவனது மனக்குழப்பத்தை நீக்கி மனதை இலேசாக்குவதாய் உணர்ந்தான்.
பாபாவை தொழுதுவிட்டு அங்கிருந்த தியான மண்டபத்திற்கு வந்தவன் சம்மனமிட்டு அமர்ந்து மனதை ஒருநிலை படுத்த முயன்றான். அவனது முயற்சி அவனுக்கு கைகொடுக்க குழப்பத்திற்கு தீர்வு கிடைக்காத போதிலும் மனம் சிறிது சமனப்பட்டதாக வினய் உணர்ந்தான். இப்போதைக்கு இதுவே போதும் என்றி தோன்றிட அங்கிருந்து வெளியேறியவன் மீண்டும் பாபாவை தொழுதுவிட்டு ஆபிஸிற்கு கிளம்பினான்.
கடவுளை நாடினால் துன்பம் விலகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அந்த துன்பத்திலிருந்து மீண்டுவர இறைபக்தி ஒரு வழியே... துன்பம் நிகழும் போது மனம் சமநிலை இழக்கும். அதன் விளைவால் மனம் சரியான முடிவை எடுக்க தவறிவிடும். அதிலிருந்து காப்பதே இறைபக்தி... இறைவனாய் வந்து எந்தவொரு துன்பத்திற்கும் தீர்வு கொடுப்பதில்லை... தீர்விற்கான வழியை தேட மனதை தூண்டுவதே இறைபக்தி.... இதை பலர் புரிந்துகொள்ளாது கடவுளை வசைபாடுகின்றனர். மானிடர்களின் அனைத்து செயல்களுக்கும் மானிடர்களே பொறுப்பாகும் பட்சத்தில் கடவுளின் வருகை அவசியம் என்று கூறுவது என்பது எந்த விதத்தில் நியாயம்???
இந்த நியதியை சரியாக புரிந்து கொண்ட வினய் பாபாவை சரணடைந்தான்..சரணடைந்தவனுக்கு மன அமைதி கிட்டியது... அது அவனது குழப்பங்களுக்கு தீர்வை யோசிக்க சந்தர்ப்பம் அமைக்கும் என்று வினய் நம்பினான்.
குளித்து முடித்துவிட்டு வந்த ரேஷ்மி வினயை தேடி அறையிலிருந்து வெளியே சென்றாள்.
அப்போது பூஜையறையில் தீபம் காட்டியபடி இருந்த வீரலட்சுமியை பார்த்த ரேஷ்மி அவரருகே சென்று நின்றுகொண்டவள் அவர் நீட்டிய தீபத்தை கண்களில் ஒற்றிவிட்டு கண்மூடி பிரார்த்தித்தாள்.
கண்களை திறந்ததும் ரேஷ்மியின் நெற்றியில் விபூதியை வைத்துவிட்டார் வீரலட்சுமி. வீரலட்சுமி நெற்றியில் விபூதியை வைத்ததும் அவர் காலில் விழுந்து வணங்கிய ரேஷ்மியிடம் குங்குமத்தை எடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னார் வீரலட்சுமி. அவர் சொல்படி செய்தவள் மீண்டும் இறைவனை தொழுதுவிட்டு வீரலட்சுமியோடு வெளியே வந்தவள் வினயை தேட
“ரேஷ்மி வினய் ஆபிஸில் ஏதோ முக்கியமான வேலை இருக்குனு அப்பவே கிளம்பிட்டான். நீ அசந்து தூங்கிட்டு இருந்ததால என்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டான்...”
“ஓ.. சரி அத்தை.. நான் உங்களுக்கு காபி கலந்து எடுத்துட்டு வரட்டுமா???”
“ஆமா ரேஷ்மி.. இரண்டு பேருக்கும் கலந்து எடுத்துட்டு தோட்டத்துக்கு வா...” என்று கூறியவர் வீட்டிற்கு பின்புறமிருந்த தோட்டத்திற்கு சென்றார்.
ரேஷ்மியும் காபி கலந்துகொண்டு தோட்டத்திற்கு செல்ல அங்கு வீரலட்சுமி பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.
ரேஷ்மியை கண்டதும் கையிலிருந்து ஹோஸ் பைப்பை கீழே போட்டவர் நீரை அடைத்துவிட்டு ரேஷ்மியின் அருகே வந்தவர் அவள் கையிருந்த தன் காபி கோப்பையை வாங்கியபடி ஓரமாக போடப்பட்டிருந்து சிமெண்டு பெஞ்சில் அருகே ரேஷ்மியை அழைத்து சென்றார்.
இருவரும் சிமெண்டு பெஞ்சில் அமர்ந்ததும் தோட்டத்தை வேடிக்கை பார்த்தவாறு ரேஷ்மியிடம் உரையாடத்தொடங்கினார் வீரலட்சுமி.
“ ரேஷ்மி உன்கிட்ட ஒன்னு கேட்கனும்...”
“சொல்லுங்க அத்தை..”
“உனக்கு வினயை பிடிச்சிருக்கா??” என்று வீரலட்சுமியை கேட்க இப்படியொரு கேள்வியை வீரலட்சுமியிடம் இருந்து எதிர்பார்க்காதவள்
“அத்தை எதுக்கு இப்போ..” என்று தொடங்க வீரலட்சுமியோ
“ஹா.. சும்மா சொல்லுமா.. எதுக்கு தயங்குற???”
“ஆமா அத்தை...” என்று பதிலளித்தவளின் முகத்தில் ஆயிரம் செம்மை.
“ என் மகனுக்கு உன்னை பிடிச்சிருக்கா???” என்று வீரலட்சுமி தன் அடுத்த கேள்விக்கனையை தொடுத்தாள். அதற்கு வெட்கத்தில் தலை குனிந்து ஆமென்று பதில் சொன்னவளுக்கு நேற்றையை இரவு நினைவுகள் நினைவில் அதில் மங்கையவளின் கன்னத்தில் செம்மையை அள்ளி பூசியது...
“உனக்கு எப்படி அது தெரியும்???” என்று கேட்க
“அவங்க சொன்னாங்க...”
“அவனுக்கு நீ விரும்புறது தெரியுமா??” என்று வீரலட்சுமி தன் அடுத்த கேள்வியை தொடுக்க என்ன பதில் கூறுவதென்று ரேஷ்மிக்கு தெரியவில்லை. அவனது காதலை வார்த்தைகளாலும் செயலாலும் அவன் உணர்த்தியதை உணர்ந்தவளுக்கு தான் தன் காதலை உணர்த்தினோமா என்று தெரியவில்லை... அதனால் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“என்ன ரேஷ்மி பதிலில்லையா?? உன்னால மட்டும் இல்லை... என்னால் கூட இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது... இது பல பெண்களுக்கு விடை தெரியாத கேள்வி.. இந்த கேள்விக்கு விடை தெரியாமல் தான் என்னோட வாழ்வை தொலைத்தேன்.” என்றவரது பதிலில் அதிர்ந்தாள் ரேஷ்மி.