Anu Chandran
மண்டலாதிபதி
ஒருவாரம் இருவாரமாக மாறியிருக்க அன்று தாயகம் திரும்ப தயாராகிக்கொண்டிருந்தான் வினய்.
கடந்த இரண்டு வாரமும் தொலைபேசியிலேயே காதல் பரிமாறிக்கொண்டனர் வினயும் ரேஷ்மியும்.
தினமும் இரவு ரேஷ்மிக்கு அழைப்பவன் அவள் உறங்கும்வரை உரையாடுவான். அதுவரை நேரம் வினயின் அருகாமையின்றி உள்ளுக்குள் உருகுபவள் அவனது அழைப்பில் உயிர்பெற்று காதலாய் உருகி பேசியபடியே உறங்கிவிடுவாள். வினயும் அவள் உறங்கும் வரை உறையாடுபவன் அந்த புறம் அமைதியானதும் அழைப்பை துண்டித்து விடுவான்.
என்ன பேசினர் என்று கேட்டால் இருவரின் பதிலும் தெரியாது என்று ஒன்றாகவே இருக்கும்.
இவ்வாறு இருவாரமும் கடந்திருக்க ரேஷ்மியின் பேச்சில் காதல் கரைபுரண்டு வெளிப்படுவதை வினய் உணர்ந்தான்.
அன்று ஒருநாள் இரவு உரையாடும் போது வினய்
“ஷிமி நான் ஒன்னு கேட்பேன் நீ அதுக்கு உண்மையான பதில் சொல்லனும்....”
“சொல்லுங்க வினய்...”
“உனக்கு லவ்னா பிடிக்காதா???” என்று ரேஷ்மியின் குழப்பத்தை அறிவதற்காக அவ்வாறு கேட்டான் வினய். ரேஷ்மியோ அதற்கு பதில் கூறாமல் இருக்க வினயோ
“ரேஷ்மி நீ பேசுறது எனக்கு கேட்கலைமா... கொஞ்சம் சத்தமா பேசு..” என்று வினய் சொல்ல அதை உண்மை என்று நம்பிய ரேஷ்மி ஹலோ ஹலோ என்று கூற
“ஆ.. இப்போ கேட்குது மா... நீ என்ன சொன்ன?? மறுபடியும் சொல்லு..” என்று வினய் கேட்க அப்போது தான் அவன் தன்னுடன் விளையாடுகிறான் என்று புரிந்துகொண்டாள் ரேஷ்மி..
“டேய் திருடா... உனக்கு கொழுப்பு ரொம்ப அதிகமாயிருச்சு..”
“ஆம் ஷிமி.. என்ன பண்ணுறது??மூன்று நேரமும் பாஸ்தா,பர்கர் பிரட்னு சாப்பிட்டு கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு... அங்க வந்து கம்மி பண்ணிக்கிறேன்...” என்று வினய் சீரியசாக சொல்ல அவனது பதிலில் சிரித்துவிட்டாள் ரேஷ்மி..
“ஏன் வினய் நீங்க எப்பவும் இப்படியா?? இல்லை இப்ப தான் இப்படியா???”
“தெரியலையேமா...” என்று இழுக்க மீண்டும் சிரித்தாள் ரேஷ்மி...
“சரி... இப்போ சொல்லு... உனக்கு லவ் பிடிக்குமா பிடிக்காத???” என்று தன் கேள்வியை நியாபகப்படுத்த
“இவ்வளவு நாள் பிடிக்கலை... ஆனா..” என்று ரேஷ்மி இழுக்க
“ஆனா...” என்று வினய் எடுத்து கொடுக்க
“ஆனா..இப்போ ஒரு மாயவன் என்னை காதல் வசியம் பண்ணிட்டான்.அவன் பண்ண வசியத்துல காதல் கசக்குதய்யானு சொல்லிட்டு இருந்த பொண்ணு காதலே காதலே தனிப்பெருந்துணையேனு பாட்டு பாடிட்டு இருக்கு...” என்று சொல்ல இப்போது சிரிப்பது வினயின் முறையானது.
“ஏன் ஷிமி உனக்கு வேற சிட்டுவேஷன் சாங்கே கிடைக்கலையா??” என்று கேட்க
“ஏன் அந்த பாட்டுக்கு குறைச்சல்??? அந்த பாட்டுல எவ்வளவு பீல் இருக்கு தெரியாமா???”
“லிரிக்ஸே இல்லாத பாட்டுல அப்படி என்ன ஷிமி பீல்..”
“சரி நான் சொல்லுற மாதிரி இப்போ செய்ங்க... உங்க லாப்டொப்பை ஆன் பண்ணி யூ டியூப்பில் அந்த சாங்கை சர்ச் பண்ணுங்க”
“ஹேய் இப்போ எதுக்கு??”
“சொன்னா கேளுங்க....”
“சரி கொஞ்சம் இரு...” என்று கூறியவன் அவனது லாப்டாப்பை ஆன் செய்து அவள் கூறியது போல் பாட்டை தேடியெடுத்தான்.
“எடுத்துட்டேன் ஷிமி...”
“சரி இப்போ உங்க ஹெட்செட்டை எடுத்து கணெக்ட் பண்ணி அந்த சாங்கை என்னை நினைச்சிட்டே கண்ணை மூடி கேளுங்க...”
“அது ஏன் ஷிமி உன்னை நினைச்சுட்டு கேட்கனும்???” என்று அவளை வேண்டுமென்றே வம்பிழுக்க
“சொன்னா மறுபேச்சு பேசாமல் அதை செய்யனும்...”
“சரிங்க மேடம்...கோவிச்சிக்காதீங்க..” என்று அவள் கூறியபடி செய்தான். ரேஷ்மியும் அந்த பாடலை கேட்கத்தொடங்கினாள்.
கொஞ்சும் பூரணமே வா
நீ கொஞ்சும் ஏழிசையே
பஞ்சவர்ணம் பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி
காதலே காதலே
தனிப்பெரும் துணையே
கூட வா கூட வா
போதும் போதும்
காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ ...
என்று பாடலை இருவரும் மெய்மறந்து ரசித்திருந்தனர். சின்மயினின் குரலும், கோவிந் வசந்தனின் இசையும் அவர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றது... பாடலின் வரிகளைவிட அந்த மெல்லிசையே அவர்கள் இருவரையும் கட்டிப்போட்டது...
பாடல் முடிந்ததும் வினயை அழைத்தாள் ரேஷ்மி... அவனுக்கோ அந்த பாடல் ரேஷ்மியின் அருகாமையை நினைவுபடுத்த அது தந்த மயக்கத்தில் தன்னிலை மறந்திருந்தான். இருமுறை வினயை அழைத்து பார்க்க அவனிடம் பதிலில்லை... அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் வினயிற்கு அழைத்தாள் ரேஷ்மி.
சில விநாடிகள் கடந்து அழைப்பு எடுக்கப்பட
“என்ன வினய் கண்ணை மூடி பாட்டை கேட்க சொன்னா கண்ணை மூடி தூங்கிட்டீங்க போல??” என்று கேலிக்குரலில் கேட்க எதிர்புறம் எந்தவித பதிலுமில்லை...
“வினய் லைன்ல இருக்கீங்களா??”
“ம்...”
“வினய் ஆர் யூ ஓல்ரைட்??”
“ஷிமி.... ஐயம் டெர்ரிப்லி மிஸ்ஸிங் யூ... உன்னை தனியா விட்டுட்டு வந்தது எவ்வளவு தப்புனு எனக்கு இங்கு வந்தப்பிறகு தான் புரிந்தது... நான் உன்னை எவ்வளவுக்கு லவ் பண்ணேன்னு இந்த பிரிவு எனக்கு உணர்த்திவிட்டது... இனிமே நீயா நினைத்தால் கூட உன்னை பிரிய விடமாட்டேன்... ப்ளீஸ் ஷிமி என்ன கோபமா இருந்தாலும் என்னை திட்டு சண்டைபோடு... ஆனா என்னை விட்டு போயிறாத.... நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சப்போ உன் மேல இப்படி பைத்தியமா இருப்பேனு நான் நினைச்சி கூட பார்க்கலை... ஆனா இப்போ இந்த நிமிஷம் நீ மட்டும் என்கூட இருக்கனும்னு தோனுது.... எப்பவும் என்கூடவே இருப்பியா ஷிமி...??” என்று வினய் கேட்க மறுபுறம் பதிலில்லை...
“தூங்கிட்டாளோ....?? அப்போ இவ்வளவு நேரம் பேசுனது எல்லாம் வேஸ்டா..???” என்று தனக்குள் கேட்பதாய் போனில் கேட்க ரேஷ்மியின் சிரிப்பு சத்தம் கேட்டது...
“அடிப்பாவி...அப்போ இவ்வளவு நேரம் நான் பேசுறதை எல்லாம் கேட்டுட்டு அமைதியா தான் இருந்தியோ??? நானும் நம்ம பொண்டாட்டி அசதில தூங்கிட்டா போலனு நினைச்சு ஒரு நிமிஷம் பீல் பண்ணிட்டேன்..” என்று வினய் கூற மீண்டும் ரேஷ்மியின் சிரிப்பு சத்தம்.
“சிரிச்சு சிரிச்சியே ஆள கொல்லுறடி... சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...” என்று வினய் கேட்க
“ம்ஹூம் சொல்லமாட்டேனே.... என்ன பண்ணுவீங்க??”
“நச்சுனு ஒரு இச்சு குடுப்பேனே..”
“ஹாஹா...நான் தான் உங்க பக்கத்துல இல்லையே.... எப்படி கொடுப்பீங்க??”
“ஆ... இப்படி தான்....” என்று ஒரு நீண்ட முத்தத்தை அழைப்பிலேயே கொடுத்தான்...
“ஹாஹா.... இது ஸ்ரோங் பத்தாது... சோ இதை அக்செப்ட் பண்ண முடியாது...” என்று ரேஷ்மி கூற வினயோ
“நான் பக்கத்துல இல்லைங்கிற தைரியத்தில தானே பேசுற... இரு வந்து வச்சிக்கிறேன்...” என்று செல்லமாக கடிந்து கொள்ள
“வாங்க... வந்து வச்சிக்கோங்க... கொஞ்சிக்கோங்க...ஐயம் வெயிட்டிங்..” என்று ரேஷ்மி சிரித்துக்கொண்டு கூற அவளுடன் சேர்ந்து சிரித்தான் வினய்.
இவ்வாறு தினமும் காதல் பரிமாறிக்கொண்ட இரு ஜோடிகளும் தாம் பரிமாறிய வேண்டிய சில முக்கிய விடயங்களை பரிமாறிக்கொள்ளவில்லை...அதை பரிமாற முயன்ற வேளைகளில் அவர்களது கேலியும் காதல் வார்த்தைகளும் அவர்களை உரையாடலை திசை திருப்பி வேறு பாதைக்கு அழைத்து சென்றுவிடும்.. இது தொடரவே இருவராலும் தாம் கூறவருவதை கூறாமலே உரையாடலை முடித்து கொண்டனர்.
அன்று தாயகம் திரும்ப தயாராகிக்கொண்டிருந்த வினயிற்கு ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கம்.... அவனது மனதை காரணமில்லாமல் ஏதோவொரு பயம் ஆக்கிரமித்திருந்தது.. அது எதனால் என்று புரியாதவன் தனக்குள் குழம்பியபடி இருக்க அந்நேரம் சரியாக அழைத்தாள் ரேஷ்மி...
“ஹேய் ஷிமி நீ இன்னும் தூங்கலையா??? இப்போ அங்க மணி ஒன்னா இருக்குமே??? இன்னும் தூங்காம என்ன பண்ணுற???” என்று மனைவியின் நலனில் அக்கறை கொண்ட கணவனாய் அவளை கடிந்து கொண்டான் வினய்...
“இல்லபா... மனசு ரொம்ப ஹாப்பியா இருக்கு... அதான் தூக்கமே வரலை.. அதான் உங்ககூட பேசலாம்னு கால் பண்ணேன்.... அதுசரி நீங்க பாக்கிங் எல்லாம் முடிச்சிட்டீங்களா?? எத்தனை மணிக்கு ஏர்போர்ட் கிளம்பனும்...??”
“முடிச்சிட்டேன் மா... நீ லிஸ்டு போட்ட எல்லாத்தையும் முட்டை கட்டி முடிக்கிறதுகுள்ள எனக்கு பெண்டு கழண்டுருச்சி...”
“ஹலோ... நானா கேட்டேன்... நீங்க தான் என்ன வேணும்னு சொல்லு ஷிமினு கெஞ்சினீங்க..பாவம் நம்ம வீட்டுக்காரர் ஆசைப்படுறானேனு சொன்னேன்... இப்போ என்னவோ நானே லிஸ்டு போட்டு உங்களை சுமந்துட்டு வர சொன்ன மாதிரி சொல்லுறீங்க???”
“ஹாஹா... நான் சுமக்குறதுனா உன்கிட்ட கேட்டுருக்கவே மாட்டேன்... பிளேன் தானே சுமக்குதுனு தான் நீ சொன்னதெல்லாம் வாங்கி மூட்டை கட்டுனேன்..” என்று ரேஷ்மியை மீண்டும் வம்பிழுக்க
“அப்போ நீங்க நான் சொன்னா எதையும் சுமக்கமாட்டீங்க???”
“இல்லையே???”
“நீ இங்க வா என்னை தூக்கிட்டு சுமக்க வைக்கிறேன்.அப்படி நான் செய்யல என் பேரு ரேஷ்மி இல்லை...”
“இந்த டீலுக்கு நான் ஓகேமா... ஒரு நாள் இல்லை... வாழ்நாள் முழுசும் உன்னை தூக்கிட்டு சுத்த ஐயா ரெடி....”
“அப்படீங்களா சார்.... சரி நீங்க வாங்களே...உங்களை நான் கவனிச்சிக்கிறேன்.”
“எப்படி கவனிச்சிக்கிருவ ஷிமி??? நான் யூ.எஸ் கிளம்புறதுக்கு முதல்நாள் என்னை கவனிச்சியே அப்படியா??” என்று வினய் கேட்க அந்தப்புறம் அமைதியானது...
“ஷிமி என்ன சைலண்டாகிட்ட??? என்னை அன்னைக்கு மாதிரியே கவனிச்சிக்குவியா?? இல்லை ஸ்பெஷல் கவனிப்பு ஏதும் இருக்கா??” என்று வினய் கேட்க
“சீ... போடா... திருடா... உனக்கு எப்பவும் இதே பேச்சுதான்..”
“ஆஹான்...”
“நான் வைக்கிறேன்...கவனமா வந்து சேருடா... என் ஸ்வீட் புருஷா... உம்மா...” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள் ரேஷ்மி...
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் இவ்வளவு நேரம் அடங்கியிருந்த கலக்கம் மீண்டும் வினயின் மனதில் தலைதூக்கத்தொடங்கியது...
அதுவும் இப்போது கலக்கத்துடன் சேர்ந்து கண்களும் கலங்கத்தொடங்க வினயிற்கு எதனால் இப்படி உணர்கிறேன் என்று தெரியவில்லை... அவனது மனமோ பயத்தில் பதறியபடியிருக்க அதை சமனப்படுத்த தெரியாதவன் குளியலறைக்குள் புகுந்து ஷவரின் கீழ் நின்றான்.
ஷவரில் இருந்து வடிந்த நீரின் குளுமை அவனது மனதை சற்று சமாதானப்படுத்தியபோதும் மனதில் இருந்த இனம்புரியாத கலக்கத்தை நீக்கவில்லை..
நேரமாவதை உணர்ந்து தயாராகி வந்தவன் ஏர்போர்டிற்கு கிளம்பினான்.
அவனது மனதின் கலக்கத்திற்கான காரணத்தை அறிய நேரும் சந்தர்ப்பத்தில் வினயின் நிலை என்ன???
கடந்த இரண்டு வாரமும் தொலைபேசியிலேயே காதல் பரிமாறிக்கொண்டனர் வினயும் ரேஷ்மியும்.
தினமும் இரவு ரேஷ்மிக்கு அழைப்பவன் அவள் உறங்கும்வரை உரையாடுவான். அதுவரை நேரம் வினயின் அருகாமையின்றி உள்ளுக்குள் உருகுபவள் அவனது அழைப்பில் உயிர்பெற்று காதலாய் உருகி பேசியபடியே உறங்கிவிடுவாள். வினயும் அவள் உறங்கும் வரை உறையாடுபவன் அந்த புறம் அமைதியானதும் அழைப்பை துண்டித்து விடுவான்.
என்ன பேசினர் என்று கேட்டால் இருவரின் பதிலும் தெரியாது என்று ஒன்றாகவே இருக்கும்.
இவ்வாறு இருவாரமும் கடந்திருக்க ரேஷ்மியின் பேச்சில் காதல் கரைபுரண்டு வெளிப்படுவதை வினய் உணர்ந்தான்.
அன்று ஒருநாள் இரவு உரையாடும் போது வினய்
“ஷிமி நான் ஒன்னு கேட்பேன் நீ அதுக்கு உண்மையான பதில் சொல்லனும்....”
“சொல்லுங்க வினய்...”
“உனக்கு லவ்னா பிடிக்காதா???” என்று ரேஷ்மியின் குழப்பத்தை அறிவதற்காக அவ்வாறு கேட்டான் வினய். ரேஷ்மியோ அதற்கு பதில் கூறாமல் இருக்க வினயோ
“ரேஷ்மி நீ பேசுறது எனக்கு கேட்கலைமா... கொஞ்சம் சத்தமா பேசு..” என்று வினய் சொல்ல அதை உண்மை என்று நம்பிய ரேஷ்மி ஹலோ ஹலோ என்று கூற
“ஆ.. இப்போ கேட்குது மா... நீ என்ன சொன்ன?? மறுபடியும் சொல்லு..” என்று வினய் கேட்க அப்போது தான் அவன் தன்னுடன் விளையாடுகிறான் என்று புரிந்துகொண்டாள் ரேஷ்மி..
“டேய் திருடா... உனக்கு கொழுப்பு ரொம்ப அதிகமாயிருச்சு..”
“ஆம் ஷிமி.. என்ன பண்ணுறது??மூன்று நேரமும் பாஸ்தா,பர்கர் பிரட்னு சாப்பிட்டு கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு... அங்க வந்து கம்மி பண்ணிக்கிறேன்...” என்று வினய் சீரியசாக சொல்ல அவனது பதிலில் சிரித்துவிட்டாள் ரேஷ்மி..
“ஏன் வினய் நீங்க எப்பவும் இப்படியா?? இல்லை இப்ப தான் இப்படியா???”
“தெரியலையேமா...” என்று இழுக்க மீண்டும் சிரித்தாள் ரேஷ்மி...
“சரி... இப்போ சொல்லு... உனக்கு லவ் பிடிக்குமா பிடிக்காத???” என்று தன் கேள்வியை நியாபகப்படுத்த
“இவ்வளவு நாள் பிடிக்கலை... ஆனா..” என்று ரேஷ்மி இழுக்க
“ஆனா...” என்று வினய் எடுத்து கொடுக்க
“ஆனா..இப்போ ஒரு மாயவன் என்னை காதல் வசியம் பண்ணிட்டான்.அவன் பண்ண வசியத்துல காதல் கசக்குதய்யானு சொல்லிட்டு இருந்த பொண்ணு காதலே காதலே தனிப்பெருந்துணையேனு பாட்டு பாடிட்டு இருக்கு...” என்று சொல்ல இப்போது சிரிப்பது வினயின் முறையானது.
“ஏன் ஷிமி உனக்கு வேற சிட்டுவேஷன் சாங்கே கிடைக்கலையா??” என்று கேட்க
“ஏன் அந்த பாட்டுக்கு குறைச்சல்??? அந்த பாட்டுல எவ்வளவு பீல் இருக்கு தெரியாமா???”
“லிரிக்ஸே இல்லாத பாட்டுல அப்படி என்ன ஷிமி பீல்..”
“சரி நான் சொல்லுற மாதிரி இப்போ செய்ங்க... உங்க லாப்டொப்பை ஆன் பண்ணி யூ டியூப்பில் அந்த சாங்கை சர்ச் பண்ணுங்க”
“ஹேய் இப்போ எதுக்கு??”
“சொன்னா கேளுங்க....”
“சரி கொஞ்சம் இரு...” என்று கூறியவன் அவனது லாப்டாப்பை ஆன் செய்து அவள் கூறியது போல் பாட்டை தேடியெடுத்தான்.
“எடுத்துட்டேன் ஷிமி...”
“சரி இப்போ உங்க ஹெட்செட்டை எடுத்து கணெக்ட் பண்ணி அந்த சாங்கை என்னை நினைச்சிட்டே கண்ணை மூடி கேளுங்க...”
“அது ஏன் ஷிமி உன்னை நினைச்சுட்டு கேட்கனும்???” என்று அவளை வேண்டுமென்றே வம்பிழுக்க
“சொன்னா மறுபேச்சு பேசாமல் அதை செய்யனும்...”
“சரிங்க மேடம்...கோவிச்சிக்காதீங்க..” என்று அவள் கூறியபடி செய்தான். ரேஷ்மியும் அந்த பாடலை கேட்கத்தொடங்கினாள்.
கொஞ்சும் பூரணமே வா
நீ கொஞ்சும் ஏழிசையே
பஞ்சவர்ணம் பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி
காதலே காதலே
தனிப்பெரும் துணையே
கூட வா கூட வா
போதும் போதும்
காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ ...
என்று பாடலை இருவரும் மெய்மறந்து ரசித்திருந்தனர். சின்மயினின் குரலும், கோவிந் வசந்தனின் இசையும் அவர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றது... பாடலின் வரிகளைவிட அந்த மெல்லிசையே அவர்கள் இருவரையும் கட்டிப்போட்டது...
பாடல் முடிந்ததும் வினயை அழைத்தாள் ரேஷ்மி... அவனுக்கோ அந்த பாடல் ரேஷ்மியின் அருகாமையை நினைவுபடுத்த அது தந்த மயக்கத்தில் தன்னிலை மறந்திருந்தான். இருமுறை வினயை அழைத்து பார்க்க அவனிடம் பதிலில்லை... அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் வினயிற்கு அழைத்தாள் ரேஷ்மி.
சில விநாடிகள் கடந்து அழைப்பு எடுக்கப்பட
“என்ன வினய் கண்ணை மூடி பாட்டை கேட்க சொன்னா கண்ணை மூடி தூங்கிட்டீங்க போல??” என்று கேலிக்குரலில் கேட்க எதிர்புறம் எந்தவித பதிலுமில்லை...
“வினய் லைன்ல இருக்கீங்களா??”
“ம்...”
“வினய் ஆர் யூ ஓல்ரைட்??”
“ஷிமி.... ஐயம் டெர்ரிப்லி மிஸ்ஸிங் யூ... உன்னை தனியா விட்டுட்டு வந்தது எவ்வளவு தப்புனு எனக்கு இங்கு வந்தப்பிறகு தான் புரிந்தது... நான் உன்னை எவ்வளவுக்கு லவ் பண்ணேன்னு இந்த பிரிவு எனக்கு உணர்த்திவிட்டது... இனிமே நீயா நினைத்தால் கூட உன்னை பிரிய விடமாட்டேன்... ப்ளீஸ் ஷிமி என்ன கோபமா இருந்தாலும் என்னை திட்டு சண்டைபோடு... ஆனா என்னை விட்டு போயிறாத.... நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சப்போ உன் மேல இப்படி பைத்தியமா இருப்பேனு நான் நினைச்சி கூட பார்க்கலை... ஆனா இப்போ இந்த நிமிஷம் நீ மட்டும் என்கூட இருக்கனும்னு தோனுது.... எப்பவும் என்கூடவே இருப்பியா ஷிமி...??” என்று வினய் கேட்க மறுபுறம் பதிலில்லை...
“தூங்கிட்டாளோ....?? அப்போ இவ்வளவு நேரம் பேசுனது எல்லாம் வேஸ்டா..???” என்று தனக்குள் கேட்பதாய் போனில் கேட்க ரேஷ்மியின் சிரிப்பு சத்தம் கேட்டது...
“அடிப்பாவி...அப்போ இவ்வளவு நேரம் நான் பேசுறதை எல்லாம் கேட்டுட்டு அமைதியா தான் இருந்தியோ??? நானும் நம்ம பொண்டாட்டி அசதில தூங்கிட்டா போலனு நினைச்சு ஒரு நிமிஷம் பீல் பண்ணிட்டேன்..” என்று வினய் கூற மீண்டும் ரேஷ்மியின் சிரிப்பு சத்தம்.
“சிரிச்சு சிரிச்சியே ஆள கொல்லுறடி... சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...” என்று வினய் கேட்க
“ம்ஹூம் சொல்லமாட்டேனே.... என்ன பண்ணுவீங்க??”
“நச்சுனு ஒரு இச்சு குடுப்பேனே..”
“ஹாஹா...நான் தான் உங்க பக்கத்துல இல்லையே.... எப்படி கொடுப்பீங்க??”
“ஆ... இப்படி தான்....” என்று ஒரு நீண்ட முத்தத்தை அழைப்பிலேயே கொடுத்தான்...
“ஹாஹா.... இது ஸ்ரோங் பத்தாது... சோ இதை அக்செப்ட் பண்ண முடியாது...” என்று ரேஷ்மி கூற வினயோ
“நான் பக்கத்துல இல்லைங்கிற தைரியத்தில தானே பேசுற... இரு வந்து வச்சிக்கிறேன்...” என்று செல்லமாக கடிந்து கொள்ள
“வாங்க... வந்து வச்சிக்கோங்க... கொஞ்சிக்கோங்க...ஐயம் வெயிட்டிங்..” என்று ரேஷ்மி சிரித்துக்கொண்டு கூற அவளுடன் சேர்ந்து சிரித்தான் வினய்.
இவ்வாறு தினமும் காதல் பரிமாறிக்கொண்ட இரு ஜோடிகளும் தாம் பரிமாறிய வேண்டிய சில முக்கிய விடயங்களை பரிமாறிக்கொள்ளவில்லை...அதை பரிமாற முயன்ற வேளைகளில் அவர்களது கேலியும் காதல் வார்த்தைகளும் அவர்களை உரையாடலை திசை திருப்பி வேறு பாதைக்கு அழைத்து சென்றுவிடும்.. இது தொடரவே இருவராலும் தாம் கூறவருவதை கூறாமலே உரையாடலை முடித்து கொண்டனர்.
அன்று தாயகம் திரும்ப தயாராகிக்கொண்டிருந்த வினயிற்கு ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கம்.... அவனது மனதை காரணமில்லாமல் ஏதோவொரு பயம் ஆக்கிரமித்திருந்தது.. அது எதனால் என்று புரியாதவன் தனக்குள் குழம்பியபடி இருக்க அந்நேரம் சரியாக அழைத்தாள் ரேஷ்மி...
“ஹேய் ஷிமி நீ இன்னும் தூங்கலையா??? இப்போ அங்க மணி ஒன்னா இருக்குமே??? இன்னும் தூங்காம என்ன பண்ணுற???” என்று மனைவியின் நலனில் அக்கறை கொண்ட கணவனாய் அவளை கடிந்து கொண்டான் வினய்...
“இல்லபா... மனசு ரொம்ப ஹாப்பியா இருக்கு... அதான் தூக்கமே வரலை.. அதான் உங்ககூட பேசலாம்னு கால் பண்ணேன்.... அதுசரி நீங்க பாக்கிங் எல்லாம் முடிச்சிட்டீங்களா?? எத்தனை மணிக்கு ஏர்போர்ட் கிளம்பனும்...??”
“முடிச்சிட்டேன் மா... நீ லிஸ்டு போட்ட எல்லாத்தையும் முட்டை கட்டி முடிக்கிறதுகுள்ள எனக்கு பெண்டு கழண்டுருச்சி...”
“ஹலோ... நானா கேட்டேன்... நீங்க தான் என்ன வேணும்னு சொல்லு ஷிமினு கெஞ்சினீங்க..பாவம் நம்ம வீட்டுக்காரர் ஆசைப்படுறானேனு சொன்னேன்... இப்போ என்னவோ நானே லிஸ்டு போட்டு உங்களை சுமந்துட்டு வர சொன்ன மாதிரி சொல்லுறீங்க???”
“ஹாஹா... நான் சுமக்குறதுனா உன்கிட்ட கேட்டுருக்கவே மாட்டேன்... பிளேன் தானே சுமக்குதுனு தான் நீ சொன்னதெல்லாம் வாங்கி மூட்டை கட்டுனேன்..” என்று ரேஷ்மியை மீண்டும் வம்பிழுக்க
“அப்போ நீங்க நான் சொன்னா எதையும் சுமக்கமாட்டீங்க???”
“இல்லையே???”
“நீ இங்க வா என்னை தூக்கிட்டு சுமக்க வைக்கிறேன்.அப்படி நான் செய்யல என் பேரு ரேஷ்மி இல்லை...”
“இந்த டீலுக்கு நான் ஓகேமா... ஒரு நாள் இல்லை... வாழ்நாள் முழுசும் உன்னை தூக்கிட்டு சுத்த ஐயா ரெடி....”
“அப்படீங்களா சார்.... சரி நீங்க வாங்களே...உங்களை நான் கவனிச்சிக்கிறேன்.”
“எப்படி கவனிச்சிக்கிருவ ஷிமி??? நான் யூ.எஸ் கிளம்புறதுக்கு முதல்நாள் என்னை கவனிச்சியே அப்படியா??” என்று வினய் கேட்க அந்தப்புறம் அமைதியானது...
“ஷிமி என்ன சைலண்டாகிட்ட??? என்னை அன்னைக்கு மாதிரியே கவனிச்சிக்குவியா?? இல்லை ஸ்பெஷல் கவனிப்பு ஏதும் இருக்கா??” என்று வினய் கேட்க
“சீ... போடா... திருடா... உனக்கு எப்பவும் இதே பேச்சுதான்..”
“ஆஹான்...”
“நான் வைக்கிறேன்...கவனமா வந்து சேருடா... என் ஸ்வீட் புருஷா... உம்மா...” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள் ரேஷ்மி...
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் இவ்வளவு நேரம் அடங்கியிருந்த கலக்கம் மீண்டும் வினயின் மனதில் தலைதூக்கத்தொடங்கியது...
அதுவும் இப்போது கலக்கத்துடன் சேர்ந்து கண்களும் கலங்கத்தொடங்க வினயிற்கு எதனால் இப்படி உணர்கிறேன் என்று தெரியவில்லை... அவனது மனமோ பயத்தில் பதறியபடியிருக்க அதை சமனப்படுத்த தெரியாதவன் குளியலறைக்குள் புகுந்து ஷவரின் கீழ் நின்றான்.
ஷவரில் இருந்து வடிந்த நீரின் குளுமை அவனது மனதை சற்று சமாதானப்படுத்தியபோதும் மனதில் இருந்த இனம்புரியாத கலக்கத்தை நீக்கவில்லை..
நேரமாவதை உணர்ந்து தயாராகி வந்தவன் ஏர்போர்டிற்கு கிளம்பினான்.
அவனது மனதின் கலக்கத்திற்கான காரணத்தை அறிய நேரும் சந்தர்ப்பத்தில் வினயின் நிலை என்ன???