• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
வணக்கம் மக்காஸ்..??
இதோ அடுத்த யூடி....
படிச்சுட்டு கருத்து சொல்லுங்கோ மக்களே???
சென்ற பதிவுக்கு லைக் என்ட் கமென்ட் பண்ண அனைத்தும் உள்ளத்துக்கும் நன்றி??
images (33).jpeg
8

மறுநாள் காலையில் துயில் கலைந்த வினய் கட்டிலில் கைதடவி தன் மனையாளை தேட அவளோ அங்கு இருக்கவில்லை...

அருகிலிருந்த மேஜையில் இருந்த தன் மொபைலை எடுத்தவன் அதில் நேரத்தை பார்க்க அது காலை ஆறு மணி என்று காட்டியது....

கட்டிலிலிருந்து எழுச்சென்றவன் ஏதோ தோன்ற மீண்டும் படுத்துக்கொண்டு உரத்த குரலில் ரேஷ்மியை அழைத்தான்...

அப்போது தான் குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் ரேஷ்மி....

ஏதோ நினைவில் உடைகளுக்கு பதில் அவளது இளஞ்சிவப்பு நிற ஆப்டர் ஷவர் ரோப் இனை மட்டும் எடுத்து சென்றிருந்தாள்....

குளித்து முடிந்ததும் தன் உடையை தேடியவளுக்கு அப்போது தான் மாற்றுடை எடுத்து வராதது நியாபகம் வந்தது....

வினய் தூங்கிக்கொண்டிருந்ததால் அவன் எழுவதுற்கு முன் சென்று உடையை மாற்றிக்கொள்ளளலாம் என்று வெளியே வர அந்தோ பரிதாபம் அவன் அவளது பெயரை ஏலம் போட்டுக்கொண்டிருந்தான்...

வெளியே வந்தவளுக்கு மாற்றுவழியேதும் இல்லாது போனது. அவர்களது வாட்ரோப்பும் கட்டிலிற்கு எதிர்ப்புறமாக இருக்க கட்டிலை தாண்டி செல்ல வேண்டிய இக்கட்டுக்கு ஆளானாள்...
கணவனை சமாளித்துக்கொள்ளளலாம் என்று ரேஷ்மி கீழே குனிந்தவாறு கட்டிலருகே செல்ல அவ்வளவு நேரம் அவளது பெயரை ஏலம் போட்ட வினயின் குரல் சட்டென்று நின்றுவிட்டது...

ஏதோ தோன்ற நிமிர்ந்து பார்த்த ரேஷ்மி அவனது பார்வையில் வெட்கிச் சிவந்தாள்...
அவனது பார்வை சென்ற இடத்தை பார்த்தவளை வெட்கம் பிடிங்கித் தின்ன மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்...

அதுவரை நேரம் ரேஷ்மியை அணுவணுவாக ரசித்துக்கொண்டிருந்தான் வினய்..
அந்த பாத் ரோப் அவளது உடலோடு ஒட்டியிருக்க அது முழங்காலுக்கு சற்று மேல் வரை நீண்டிருந்தது... அதன் உயரம் ஒருவித வனப்பை சேர்க்க அவளது தலைமுடியினை சுற்றி மேல்புறமாக முடிச்சிடப்பட்டிருந்த அந்த வெள்ளை நிற டவல் வேறொரு விதத்தில் அவளை அழகாக்க இடையிடையே தொங்கிய அந்த கருங்கூந்தல் கற்றைகளில் ஈரம் சொட்ட அதிலிருந்து வெளியேறியிருந்த நீர்த்துளிகள் அப்போது தான் உலர்த்தப்பட்டிருந்த அங்க லட்சணங்கள் அனைத்தும் பொருந்திய அந்த வதனத்தை ஈரப்படுத்தியிருக்க அதனை மேலும் அழகாக்கும் விதமாக அவளது இடப்புற நாசியில் வீற்றிருந்த மூக்குத்து இடையிடையே மின்னி தன் இருப்பை உணர்த்தியது...

அந்த நீர்த்துளிகள் எமக்கு எல்லைகள் இல்லை என்று காட்டும் முகமாக அவளது நெற்றியிருந்து இறங்கி என்னை ருசிக்க உனக்கு வாய்ப்பு வேண்டுமா என்று பார்ப்பவரை கிறங்கடிக்கும் அந்த ஒட்டி உலர்ந்த செவ்விதழ்களில் நிருத்தியம் ஆட அதற்கு இடையூறு செய்யும் விதமாக துடிக்கும் இதயம் போல் அடிக்கடி மடிந்து விரியும் அந்த செவ்விதழ்கள் தன் நெளிவு சுளிவுகளால் தன் இருப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியது..

இந்த அழகை அணுவணுவாய் ரசித்து கவி வடிக்க முயன்றவனில் கவனத்தை கலைக்கும் விதமாக அவளது உடையை இறுக்கியிருந்த அந்த பாத் ரோப்பிலிருந்த நாடா தன் இறுக்கத்தை படிப்படியாக தளர்த்த திரையின் பின் இருக்கும் சித்திரம் போல் திரையை விலக்கி அதன் கலைநயத்தை அவனிடம் காட்டி பரிசு பெற தொடங்கிய வேளையில் மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள் ரேஷ்மி....

புள்ளியிட்டு வரையத்தொடங்கிய கோலம் பாதியில் அழிக்கப்படுவது போல் அவனது உணர்வுகள் சிக்கித்தவித்து அதற்கான விடையை அறியும் நிலைக்கு வந்ததும் இல்லை என்ற ஏமாற்றத்தை பெற அதில் உணர்வுகள் அறுபட தன்னிலை அடைந்தவன் அப்போது தான் தன்னிலையை உணர்ந்தான்...

உணர்ந்தவன் சட்டென்று எழும்பி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்....

கதவடைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் அங்கு வினய் இல்லாததை அறிந்து கொண்டு சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்....
அத்தனை நேரம் உணர்ந்த அந்த புதுவித உணர்வு அவளுள் ஒரு படபடப்பை ஏற்படுத்தியிருக்க அது அவளது இதயத்துடிப்பை அதிகப்படுத்தியிருந்தது..... அது அவளுள் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்த வினயின் பார்வை மீண்டும் அவள் கண்முன் நிழலாடியது....
அந்த பார்வை... எதிரே நிற்பவரை கிறங்கடித்து வந்து விடு என்று கட்டளையிடுவதாய் பாயும் அந்த பார்வை அவளை முற்றிலுமாய் கயிறில்லாமல் கட்டிப்போட்டிருந்தது... அதில் சித்தம் தடுமாற நின்றவளை அவனது ஊரும் பார்வை தொடாமலேயே கிச்சி மூட்டியது....

அதில் நெளிந்தவளை மேலும் வதைக்கும் விதமாக அவளது ஆடை சதி செய்ய அதில் தேனுண்ட வண்டாய் அவனது பார்வை மாற்றமடைய அதில் விழித்துக்கொண்ட பெண் மனம் தன்னை மறைக்க வேண்டி அவளை திரும்பி நிற்கச் செய்தது...

இதை நினைத்தவளின் இதழ்களில் கள்ளப் புன்னகை தவழ ஒரு வித மோனநிலை அவளை ஆட்கொண்டது...

நேரமாவதை உணர்ந்த கடிகாரமோ ஓசையை எழுப்ப அதில் கலைந்தவள் விரைந்து தன் உடைகளை மாற்றிவிட்டு தலையை துவட்டத் தொடங்கினாள்....

அவ்வேளையில் குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் டிரசிங் டேபிளில் இருந்த ஆளுயர கண்ணாடியின் முன் அமர்ந்து அந்த வெண்ணிற துவாயினால் தன் கூந்தலை துடைத்தபடி இருந்தவளை கண்டான்....

அவனது வருகையை அந்த கண்ணாடி எடுத்துரைத்த போதும் அதை பார்த்தும் பாராது போல் தன் வேலையை தொடர்ந்தவளை வம்பிழுக்கும் முகமாக

“ஷிமி உனக்கு ஸ்ராபெரி பிடிக்குமா??”

“ஆமா..”

“ஆனா எனக்கு பிடிக்காது.. பட் நேற்று ஈவினிங்கிற்கு பிறகு எனக்கு ஸ்ரோபரியை ரொம்ப பிடித்து போனது....” என்ற வினய் கூற அவனை கேள்வியாய் பார்த்த ரேஷ்மியிடம்

“எப்படினு கேட்குறியா??? நேற்று காரில் இருக்கும் போது அதை ருசிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.... ஆஹா என்ன ஒரு சுவை.... என்னவொரு தித்திப்பு... கடவுள் எனக்கென்றே அந்த ஸ்ராபரியை படைத்திருக்காரு போல... ஆனா இதோட ஸ்பெஷாலிட்டி என்னனு தெரியுமா??? அட்சய பாத்திரம் மாதிரி வேணும் போது எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்... ஆனா என்ன அதுக்கு கொஞ்சம் கஷ்டப்படனும்.... ஆனா அது எனக்கு மட்டுமே சொந்தமானது...” என்று ரேஷ்மியை பார்த்து வினய் கண்ணடிக்க அதில் தலை குனிந்தாள்ஹ.. அவளை சீண்டும் விதமாக கவி பாடினான் வினய்...

ஸ்ரோபரி
பெயருக்கேற்றாற் போல்
தித்திப்பை அள்ளியிறைக்க
அதனை ருசி கண்ட கள்வனாய்
கடித்து மென்று
ருசிக்கும் வரம்
மீண்டும்
என்று கிட்டும்..
இந்த கிறுக்கனுக்கு....??

என்று கவிபாடுயவனுக்கு பரிசாய் கிடைத்தது அந்தவானமாய் சிவந்து கள்ளச்சிரிப்பை தாங்கி நின்ற ரேஷ்மியின் வெட்கம்....
அந்த கணத்தை சுகமாய் அனுபவித்தவன் அதை மேலும் நீடிக்க எண்ணி

“ரேஷ்மி எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா??” என்று கேட்க அப்போது தான் அவன் இன்னும் காபி குடிக்கவில்லை என்று உணர்ந்தவள் எழுந்து அங்கிருந்து செல்ல முயன்ற ரேஷ்மியை கை பிடித்து தடுத்தான் வினய்..

அவள் என்ன வென்று பார்க்க அவளை அழைத்து சென்று மீண்டும் டிரசிங் டேபிளின் முன் அமர்த்தியவன் அங்கிருந்த குங்குமச்சிமிழை திறந்து குங்குமத்தை இருவிரல்களில் எடுத்தவன் என்றும் திலகத்தால் நிறைந்திருக்கும் ஆனால் இன்று வெற்றிடமாய் விரிந்திருந்த அந்த வகிட்டில் தன் கையில் வைத்திருந்த அந்த குங்குமத்தை பதித்தவன் எதிரே இருந்த கண்ணாடியில் பார்க்க அவளோ அவனை வைத்து கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்....

அது ஒரு மோனநிலையை அவர்களுள் ஏற்படுத்த ஒருவரை ஒருவர் ரசித்த வண்ணமிருந்தனர்.


தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ
விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது
விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது
நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ
ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ
உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க
கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ
உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்
பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்
பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top