• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உலகம் அழகாச்சே - Teaser 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
ஹி ஹி டீசரா போட்டு கொல்றேன்னு நினைக்காதீங்கோ....

கொஞ்சம் கொஞ்சமா டீசர் நிறைய நிறைய எபி தருவேன்....

இதைப் படிங்கோ....இப்போதைக்கு...

கதையில் வரும் இருவருமே நாயகர்கள் தான்...

*********


டீசர் 2 :

வலது கையில் ஆண்டாளின் இடது கையைப் பற்றி, வேக எட்டுக்கள் வைத்து மாமரத்தின் கிளையில் அமர்ந்து தன் சகாக்களுடன் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் பெரோஸை அடைந்தான் அருண் செல்வம்...

அவனது கைகளின் நடுக்கத்திலும் முகத்தில் தெரிந்த இறுக்கத்திலுமே அவனது கோப அளவு புரிய, அவனது பக்கத்தில் நின்ற ஆண்டாளை கூர்ந்து கவனிக்க , அவளது கவனம் அருணிடம் இருந்து தன்னை விடுவித்து கொள்வதிலே இருந்ததைத் தொடர்ந்து அருணை முறைத்தான் பெரோஸ் ஸ்டீபன்...

"பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு என்னையே முறைக்கியா நீ" ஆக்ரோஷமாய் கத்திய அருண் தன்னிடம் இருந்து விடுபட நினைக்கும் ஆண்டாளை பார்வையால் சுட்டெரிக்க..

இவ்வளவு நேரம் வாயைத் திறக்காமல் பார்த்திருந்த பெரோஸ், "இப்போ எதுக்கு அவளை முறைக்க...?" என்றான் அருணிடம்...

"ஹேய், நான் அவளை முறைப்பேன் கொஞ்சுவேன்...என்ன வேணும்னாலும் பண்ணுவேன் உனக்கென்ன...? " என்ற அருணின் கை உயர்ந்து ஆண்டாளின் கன்னம் தட்ட, அதில் வந்த கோபம் என்னவோ ஆண்டாளின் விருப்பமில்லா முகபாவனையில் அடங்கியது...

"நீ கொஞ்சு கெஞ்சு என்னமோ பண்ணித் தொலை... இப்போ என்னத்துக்கு என்கிட்ட இவளை இழுத்துட்டு வந்த...?" பெரோஸின் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்து அப்பட்டமாய் அனலை கக்கினாள் ஆண்டாள்...

அவளது கோபத்தை உள்வாங்கி கவனியாதது போல அருணிடம் பேசினான்...

"ஏன் டா அப்படி பண்ணுன...?" அவனது கேள்விக்கு மறுபடியும் மரத்தில் ஏறி வாகாய் அமர்ந்தவன்...

"அப்படி ஒண்ணும் பெருசா பண்ணலையே..?!... அபித்தகுஜாலாம்பாள் ச்சீ வாய் உலறிட்டு மாமி சொல்லுங்க நேத்து நான் உங்களை ஏதாச்சும் பண்ணுனேன்..."

அவளது விழி பார்த்து பேசியவன் அவர்கள் இருவரும் என்னவென உணரும் முன்பே ஆண்டாளின் முதுகில் மாட்டியிருந்த புத்தகப் பையை பிடித்திழுத்து அருணின் பிடியில் இருந்து தனித்து நிறுத்த

அவனது விரல் நுனி கூட தன்மீது படாமல் இவ்வளவு நேரம் தான் செய்ய போராடிக் கொண்டிருந்ததை செய்து முடித்த பெரோஸிடம் நன்றி கலந்த பார்வையை வீசினாள்...

அவனது செய்கையில் கோபத்தில் சிவந்த அருண், கையை எக்கி அவனது சட்டையை கொத்தாய் பிடித்திழுத்திருக்க, மற்றவன் தன்னை அடிக்க வருவதை பொருட்படுத்தாதவன், தனக்கு நன்றி பார்வை வீசும் ஆண்டாளை உற்று நோக்கி கண்ணைச் சிமிட்டினான் பெரோஸ் ஸ்டீபன்...

நன்றி

இப்படிக்கு உங்கள் குயந்தை புள்ள
மண்டைகாயுது யாருக்கு யாருன்னு??‍♀
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
குயந்த புள்ள அடுத்த பகுதி தர ஒரு மாசமா????
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
ferose stephan kalakkuringa....andala arun kitta kappathi arun veri parvaikkum kelvikkum ne avala pathu sirikkara semma stephan......superb teaser.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top