• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னால உலகம் அழகாச்சே10(Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
நான் கடைசி பதிவோட வந்துட்டேன் அமுலுஸ் ??... இவ்வளவு நாள் என்னுடைய கதைய படிச்ச...இல்ல கதைனு நினச்சு படிச்ச?? எல்லாருக்கும் பெரிய சாக்கி?? (தேங்க்ஸ்)..

போன எபிக்கு லைக் அண்ட் கமென்ட் பண்ண எல்லாருக்கும் பெரிய சாக்கி ??.. இந்த எபியும் படிச்சிட்டு மறக்காம உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க...


கருத்துக்களை எதிர்நோக்கி நான்??..

அப்புறம் கடைசில என்னமோ எழுதிருக்கேன்..ஆனா என்னாலே சிரிப்ப கன்ட்ரோல் பண்ண முடியல... நீங்க படிச்சுட்டு சொல்லுங்க??..







"என்ன பண்ணுற அனு.."


"என்ன பார்த்தா லூசு மாதிரி இருக்காடா…எதுக்கு உனக்கு பதில் சொல்லனும்னு சொல்லுற.."


"லூசு மாதிரிலாம் இல்ல…முதல்ல சட்டையில இருந்து கை எடு.."


"பதில் சொல்லு எடுக்குறேன்.."



"சொல்லி தொலையுரேன்…ஆனா அதுக்கு அப்புறம் என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாது.."


"முதல்ல நீ சொல்லு! டிஸ்டர்ப் பண்ணுறதா வேண்டாம்மானு…கடைசியா நா சொல்லுறேன்."




அத சொல்லுறதுக்கு முன்னாடி…இனி சும்மா கூட என்கிட்ட நீ பேச மாட்ட அனு…அண்ட் உன்ன மாதிரியே நானும் தான் ஐ லவ் யூ…பட் இது என்னிக்குமே நடக்க போறது இல்லனு மனசுக்குள்ள நினைச்சிகிட்டே…சொல்ல ஆரம்பிச்சான்…




ஒரு வருசத்துக்கு முன்னாடி நா பாரின் போயிருந்தேன்….அங்க ஒரு ஆக்ஸிடென்ட்… என்னால எப்பவுமே ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாது…அப்டினு சொல்லி அழுதுட்டே சுவர் பக்கமா திரும்பிட்டான்..



இதுக்கு தான் உன்ன அவாய்ட் பண்ணேன்…நீ ஸ்டேஜ்ல அழுதுட்டே பாடுனியே…அத பார்த்து தான் உன்ன ரொம்ப கஸ்டபடுத்துறேன்னு தோணுச்சு..அதான் ரிசைன் பண்ணிட்டேன்…ஆனா விதி வலியது போல என் ஆபிஸ்லே ஜாயின் பண்ணிருக்க நீ…என்ன மறந்துட்டு வேற எதாவது ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ…அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது…அப்டி சொன்னதுக்கு அப்புறமும் அனு கிட்ட இருந்து எந்த பதிலும் வராததால…அவ போயிட்டானு நினச்சு…ஐ லவ் ஸ்ரீ…அப்டினு அருள் சொன்னான்..




சில வினாடிகளுக்கு அப்புறமா திரும்புனா…அனு எங்க நின்னாலோ…அங்கேயே தான் இருந்தா…




"நீ இன்னும் போகலியா.."


"எங்க போயிருக்கனும்னு நினைக்கிற.."


"இல்ல இத கேட்டோன போயிருப்பேன்னு நினச்சேன்.."


"போயிருந்தா எப்டி நீ ஐ லவ் ஸ்ரீனு சொன்னத கேட்கிறது.."


"அது ஏதோ தெரியாம சொல்லிட்டேன்…உனக்கு இத விட பெட்டர் கம்பெனில வேல வாங்கி தரேன்…நீ உன் வாழ்க்கைய பார்த்துட்டு கிளம்பு.."


"என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…உடனே மனச மாதிட்டு…நீ சொல்லுற மாதிரி வேற பையன கல்யாணம் பண்ணிக்குவேனு தோணுதா.."


"இல்ல என்னால…"





“நிப்பாட்டுங்க”இப்ப என்ன உங்கனால அப்பா ஆக முடியாது…அதுனால என்ன…செக்ஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது…அத தாண்டியும் நிறைய இருக்கு…ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க அன்பு போதும் நாம மொத்த வாழ்க்கையும் வாழுறதுக்கு.. இப்பவும் சொல்லுறேன்..காதல்ங்கிறது அன்பு தான்…ஒரு தாய் தன்னுடைய கருவில இருக்க குழந்தை எப்டி இருக்கும்னு தெரியாம…ஒரு அன்பு வச்சிருப்பாங்கல…அது மாதிரி தூய்மையான அன்பு தான்,நா உங்க மேல வச்சிருக்கிறதும்..இப்ப கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு இந்த மாதிரி ஆகியிருந்தா…நா என்ன உங்கள விட்டா போயிடுப்பேன்…கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…



நமக்கு குழந்தை இல்லைனா என்ன…இங்க எத்தனையோ குழந்தைங்க,அம்மா அப்பா இல்லாம இருப்பாங்க…அவுங்களுக்கு நாம அப்பா, அம்மாவா இருப்போம்…அப்புறம் ஒரு குழந்தைய தத்து எடுத்துகிட்டா அந்த புள்ளைக்கு மட்டும் தான் அப்பா அம்மாவா இருக்க முடியும்…அதுனால ஒரு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கலாம்…அங்க வர எல்லா குழந்தைக்கும் நாம நல்ல பெற்றோர்ரா இருப்போம்.. என்ன சொல்லுறிங்க..



"இதுலாம் நடக்கும்னு தோணுதா…நீ வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.."



"யோவ்!என்ன கொழுப்பா..நா என்ன சொல்லிட்டு இருக்கேன்..நீ லூசு மாதிரி வேற பையன கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லுற.."


“இல்ல..நா”



"நிப்பாட்டு…நா கேட்கிறதுக்கு முதல்ல பதில் சொல்லு…ஆனா அந்த பதில் உண்மையா மட்டும் தான் இருக்கனும்.."


"கேளு.."


"டூ யூ லவ் மீ"…உங்க அம்மா மேல சத்தியமா உண்மையான பதில் தான் சொல்லணும்..


"யேஸ்.."


"ஹப்பாடி…உன்கிட்ட இருந்து இந்த பதில்ல வாங்கிறதுக்கு எவ்வளவு கஸ்டப்பட வேண்டியதா இருக்கு…இனி நாம லவ்வர்ஸ்…கைய குடு…கங்ராஸ்லேசன்…"


"ஹே!நா என்ன சொல்லிட்டு இருக்கேன்…நீ என்ன சொல்லிட்டு இருக்க.."



"யோவ்!திருப்பி ஆரம்பிக்காத…என்னால முடியல..அழுதுடுவேன்னு வடிவேல் ஸ்டைல சொல்லி லைட்டா சிரிக்க வச்சிட்டா.."





இப்டியே…அருள் வேண்டாம்னு சொல்லுறதும் அனு சம்மதிக்க வைக்கிறதுலையும் ஒரு மாதம் ஓடிருச்சு…”கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” அப்படி சொல்லுற மாதிரி பேசி பேசியே ஓகே சொல்ல வச்சிட்டா..





மூன்று மாதங்கள் கழித்து:

அந்த V.G மஹால்லே கூட்டத்தால நிரம்பி வழிஞ்சது…ஆமா இன்னிக்கு அனுவுக்கும் அருளுக்கும் கல்யாணம்..



பட்டு வேஷ்டி கட்டி மிக கம்பிரமா மேடையில உட்கார்ந்திருந்தான் அருள்…இந்த பக்கம் தேவ மங்கை தான் வந்துடுச்சோனு நினைக்கிற மாதிரி அவ்வளவு அழகோட அனு.


எல்லார் முகத்துலையும் அவ்வளவு சந்தோஷம்…அவ்வளவு நிறைவு…இவுங்க இரண்டு பேரோட பொருத்தத்த பார்த்து…



அன்று இரவு:

அருள் ரூம்ல இருக்க…அனு கல்யாண அலங்காரத்த கலச்சிட்டு மிதமான ஒப்பனையோட பச்சை காட்டன் சில்க் சேரி கட்டி…ஏற்கனவே சிகப்பான கன்னங்கள்…உறவு பொண்ணுங்களோட கேலியால இன்னும் சிகப்பாகி…வெட்கப்பட்டு கொண்டே அந்த அறைக்குள்ள நுழைந்தாள்.


"வா!அனு…இங்க உட்காரு.."


"ஏன் இப்டி வேர்குது உங்களுக்கு…"


"இது தான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்…எக்ஸ்பீரியன்ஸ் இல்ல…அதுனால தான்…"



"எனக்கு மட்டும் டேய்லி டேய்லி எக்ஸ்பீரியன்ஸ்ஸா…லூசு மாதிரி பேசாதயா…"


"சரி பேசல…ஆனா உன்கிட்ட ரெண்டு கேள்வி மட்டும் கேட்கனும்.."


"கேளுங்க.."


"நீ ஏன் எனக்கு இப்டி ஒரு பிரச்சினை இருக்குனு எங்க அம்மாகிட்டையும்..உங்க வீட்டுலயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்ட.."


"திருப்பி சொல்லுறேன்…இது ஒரு பிரச்சினையே கிடையாது…அப்புறம் இது உங்க அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும்னு சொன்னிங்க…சோ இத எல்லாருக்கும் சொல்லி பெரிய இஸ்யூவா ஆக்க வேண்டாம்னு நினச்சேன்…அவுங்க நம்ம கிட்ட எதுவும் கேட்கலினாலும்…கண்டிப்பா அவுங்களுக்கு கஸ்டமா இருக்கும்…அதுனால இது என்னிக்குமே யாருக்கும் தெரிய கூடாது…இது என் மேல பிராமிஸ்…யாருகிட்டையும் நீங்களும் சொல்ல கூடாதுனு அனு சொல்லி முடிச்ச நிமிசம் அருள்ளோட அணைப்பில இருந்தா…"


அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறுகி…தன் இதழால் அவளது இதழில் கவி படைக்க ஆரம்பித்தான்…


மூச்சுக்கு கஸ்ட படுவாளேனு இவன் விட நினைக்க…எப்போழுது இதழ் முத்தத்தை…யுத்தமாக அனு மாற்றினால் என்பது தெரியவில்லை…மிக நீளமான முத்தத்திற்கு பிறகே இருவரும் பிரிந்தனர்.


"அடியே ராட்சசி…!மெதுவா டி…உதட்டுலயிருந்து இரத்தமே வந்துடுச்சு…"


"கலகலனு சிரிச்ச அனு…சரி சாரி செல்லம்…நெக்ஸ்ட் கேள்வி என்ன..



"நீ ஏன் அப்போ அப்போ வாங்க போங்கனு சொல்லுற…சில நேரம் வாயா போயா சொல்லுற.."


"நல்ல கேள்வி…பர்ஸ்ட் நைட் அன்னிக்கு கேட்க வேண்டிய கேள்வி தான்.."


"ரொம்ப பண்ணாத பதில் சொல்லு.."


"சரி சொல்லுறேன்"

"கேட்டுக்கோங்க…நல்ல மூட்ல இருந்தேனா மரியாதையா கூப்பிடுவேன்….கோவமா இருந்தேன்னா…என்ன அறியாமையே வாயாபோயா வந்துடும்…"


"அப்படியே வாடா போடாவும் வரும்…சொல்ல விட்டுட்ட…"


"ஆமா…"


அப்படி சொல்லும் உதடுகளுக்கு தண்டனை குடுக்குறதுக்கு முன்னாடி…அனுவோட கண்ணங்கள தன்னுடைய கைகளால தாங்கி…தேங்க்ஸ் அனு…தேங்யூ சோ மச்…நீ இல்லனா…நா என்ன ஆகிடுப்பேன்னு தெரியல…உன்னால மட்டும் தான் என்னுடைய உலகம் இவ்வளவு அழகாச்சுனு…தன்னுடன் இறுக்கி கொண்டான்..





ஒரு வழியா இவுங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்ச கியூபிட்…அடுத்த ரெண்டு பேர ஜோடி சேர்க்க கிளம்பிடுச்சு…

_____________
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top