அது என்னவோ தெரியவில்லை ஸீனா, உன்னோட எழுத்துக்களை வாசிக்கும் போது என் முகத்தில் புன்னகை மட்டும் குறைவதே இல்லை தோழி...
கற்பகம் அம்மா கதாபாத்திரம் அப்படியே நெஞ்சை அள்ளுது ஸீனா...அம்மான்னா இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் கதாபாத்திரம்.
டாக்டருக்கு வெட்கப்புன்னகை முகத்தில் வந்தாலும் அதையும் தாண்டி வேண்டாம் இது சரிவராதுன்னு சொல்லுறாரே...
சரி...மகள் அருணின் கையால் வாங்கிக் கட்டிக்கொண்டது தெரிந்தால் செழியனின் அப்பா இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாரோ?
அப்பாவிற்கு தெரியாமல் விஷயத்தை மறைக்க முடியுமா இவர்களால்...
ரொம்பவே எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் பதிவு ஸீனா...