பேபி முதலில் மனமார்ந்த நன்றி மா...உங்க பிஸி schedule நடுவே எனக்காக டைம் ஸ்பென்ட் செய்யறதுக்கு.அதுக்கு கமெண்ட் எதிர்பாராத ஒன்று.ஹாய்ய் சீனியர்...
இரண்டு பகுதியையும் நான் படித்தேன்...
ஒரு பெண் குழந்தைக்கு சிறு வயது முதலே தோழன் என்றால் அது தந்தை தான். அது நம்ம நாயகிக்கு கிடைக்காமல் போனது வருத்தம் என்றாலும். தந்தைக்கு ஈடாக நாயகன் அன்பு செலுத்துவான் என்பதில் ஐயம் இல்லை...
ஆனால் நாயகன் யார் என்று தான் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை..
தேஜ்
ஈஸ்வர்
இதில் யாரோ என நான் தலைமுடியை பிய்த்துகொள்ளாத குறை மட்டுமே. ஏன்னென்றால் எனக்கு முடி அளவு குறைவு அதனால் என் அன்னையின் முடியை பிய்த்துகொண்டு இருக்கிறேன்..
“யாரும்மா, நாயகன்” என்ற கேள்வியில்...
அடுத்த பகுதிக்காக நான் காத்திருக்கேன் சீனியர்..
"ஆனால் நாயகன் யார் என்று தான் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.." கவலையே படாதீங்க கதை முடியறதுக்குள் ஹீரோ யாருன்னு தெரிஞ்சுடும்...கதை எப்போ முடியும் என்று கேக்கறீங்களா அது எனக்கே தெரியாது.
ஹீரோ, வில்லன் எல்லாம் ஜாரி ஜாரியாய் இறங்குவாங்க...சுயவம்வரம் நடத்த வேண்டி வரலாம்...நீங்க இதில் யார் army என்று முடிவு செய்துகோங்கோ மா.
"அதனால் என் அன்னையின் முடியை பிய்த்துகொண்டு இருக்கிறேன்..யாரும்மா, நாயகன்” என்ற கேள்வியில்..."அப்போ உங்க வீட்டில் உருட்டுக்கட்டை எனக்கு தயாராய் காத்து இருக்குன்னு சொல்றீங்க...
அம்மா...என் மகள் உன் கதை படிச்சு இப்படி ஆகிட்டாளே என்று அப்புறம் என்னை குறை சொல்ல கூடாது... என் கதை படித்த பாதிக்கப்பட்டோர்க்கு என்று ட்ரீட்மென்ட் செய்ய ஹோச்பிடல்கள் இருக்கு...நாலு வருடமாய் உள்ளே போனவங்க இன்னும் திரும்பலை...
மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி மா