திரு நாராயண ரெட்டி அவர்களின் உயிர் புத்தகம்
பொதுவில் விவாதிக்க தயங்கும் ஒரு விஷயத்தையும் செக்ஸ் என்ற வார்த்தையின் மீதான அபரிமிதமான குவியத்தையும் நிதானமாக கட்டுடைத்த புத்தகம். இணையத்தில் கிடைத்தவற்றை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன். யாருக்கேனும் மறுப்புகள் இருந்தால், தனியுரிமை கொள்கையை மீறுவதாக இருந்தால், இன்பாக்ஸில் தெரிவிக்கவும். உடனடியாக நீக்கி விடுகிறேன்.
பாலியல் கல்வியின் மீதான புரிதல் இன்மையை களையும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள தொடர். தொடர்ந்து படித்து உங்களது கருத்துக்களை பரிமாறி கொள்ளவும்.
^^^^^^^^^^^^^^^^^^
இது வித்தியாசமான (ப) சடிஃபிகேட் தொடர்!
பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை- இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.
இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்புசெலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். பெண் என்பவள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்' என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.
முடிவாக அவர்கள் சொன்ன நீதி... “இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!' நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, 'பாலுணர்வு' என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது டேக் இட் ஈஸி' கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.
இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணியத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் - தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.
இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.
அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.
தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்ள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்-ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணைபோடவில்லை' என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், “எங்களுக்கு ஜோடியே தேவையில்லை' என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.
வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் 'தேனிலவு சூட்' அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.
ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.
(இதில் போய் என்ன ஆஆராய்ச்சி!' என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள். இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது- ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்...
(இருண்ட கண்டம்' என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்துவிட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.
ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்-பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்?
அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால்- ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?
-இப்படி எத்தனையோ கேகள்விகள்.
'ஒரு பெண்ணின் அந்தரங்க பாகத்தில் மூன்று தனித்தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர் போக ஒரு துவாரம்... அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்... குழந்தை பெற்றுக்கொள்ள மூன்றாவது துவாரம்...
சரியாகக் கணிக்காமல் உறவின்போது துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவு கொள்ளும் ஆணுக்கு மர்மமான வியாதிகள் வரும்' என்றெல்லாம் கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு, கதைகள் எழுதிய அந்தக் கால டாக்டர்கள் உண்டு!
மருத்துவம் படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம். ஒன்று 'பிஸியாலஜி' . உடலில் எந்தெந்த பாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது! இரண்டாவது 'பேதாலஜி' (Pathalogy). நோய் வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது... செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறது என்பது குறித்த 'நோய் குண அறிவியல். இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களே டாக்டர்கள்.
செக்ஸ் தொடர்பான நோய்களில், சிக்கல் இந்த அடிப்படை விஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு கொள்ளும்போது அவற்றின் பங்கு... இவை பற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும். அடிப்படையே புரியாத பட்சத்தில்..?
பல டாக்டர்கள் இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்து வந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, “செக்ஸ் தொடர்பான எல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம்' என்று ஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்த அளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி!
மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ் பிரச்னைகளுக்கு மருத்துவரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்கு இது 'மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல் சாதனை.' அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று 'செக்ஸாலஜி' என்ற பெயரில் நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்போது பலரும் செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கி பிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், வாலிப, வயோதிக அன்பர்களைக் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய் சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வு தேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!
ஒரு காலத்தில் மலட்டுத் தன்மை பெண்ணிடம் மட்டும்தான் இருக்கிறது' என்று உலகம் முழுக்க எல்லா சமுதாயமும் உறுதியாக நம்பியது. விதையில் எப்போதும் பழுது இல்லை... நிலம்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனால் விதைத்த விதை பொய்த்துப் போகிறது' என்று இதை நாசூக்காக சொன்னார்கள்.
அரியணைக்கு வாரிசைப் பெற்றுத் தராத காரணத்துக்காக எத்தனையோ மகாராணிகள் அநியாயமாக ‘மலடி’ பட்டம் சுமந்து, மரண தண்டனையை பரிசாகப் பெற்று, வாள்முனைக்கு தங்கள் தலையைக் கொடுத்த பரிதாப சம்பவங்கள் அநேகமாக உலகின் எல்லா நாட்டு வரலாறுகளிலும் இருக்கின்றன! பிரச்னை மகாராஜாவிடம்தான் இருக்கிறது என்பது புரியாவிட்டாலும், அந்தப்புரத்துக்கு அடுத்தடுத்து வரும் மகாராணிகளில் யாரோ ஓருத்தி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, யாருடனாவது சேர்ந்து தப்பு செய்து இளவரசனைப் பெற்றெடுத்து விடுவாள். அரசனும் “இப்ப புரியுதா? நான் ஆம்பளை சிங்கம்தான்!' என்று மகிழ்ந்து விடுவான்.
ஆனால், சராசரி குடும்பங்களில் எத்தனையோ பிரச்னைகள். குழந் தைப்பேறு இல்லாததால் ஏராளமான மணமுறிவுகள். மிக சாதாரணமான ஒரு சிகிச்சை அவர்களுக்குத் தீர்வு தந்திருக்கும். அது அப்போது யாருக்கும் தெரியாது.
ஐம்பதாண்டுகளுக்கு முன் நடந்த 'படுக்கை அறை' ஆராய்ச்சிதான் அதுபோன்ற தீர்வுகளுக்கு திறவுகோலாக அமைந்தது. இன்றைக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான தம்பதிகள் விவாகரத்து மூலம் பிரிவதைத் தடுத்தது... பல பெண்கள் “மலடி' என்ற பட்டத்தைச் சுமந்து வாழ்க்கையை இழந்து அம்மா வீட்டில் காலம் முழுக்கக் கண்ணீரோடு கிடப்பதைத் தடுத்தது... என மகத்தான புண்ணியம் இந்த ஆராய்ச்சிக்கு உண்டு.
அந்தப் படுக்கை அறை இரண்டு தடுப்புகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஓர் அறையில் மிருதுவான படுக்கை. அதற்குள்தான் ஜோடிகள் நுழையும். அந்த அறையின் கண்ணாடிச் சுவர்கள் சன்-கன்ட்ரோல் ஃபிலிமால் மறைக்கப்பட்டு இருக்க, அதற்கு வெளியே இருந்த குட்டி அறையில் ஆராய்ச்சிக் குழு இருக்கும். உள்ளே இருக்கும் ஜோடிக்கு இந்தக் குழுவினர் தெளிவாகத் தெரிவார்கள்.
உள்ளே நுழையும் ஜோடி பரவசத்தை அனுபவிக்கும்போது அவர்களது உடலில் நிகழும் மாற்றங்களை அளவெடுக்க, எல்லா விதமான ஏற்பாடுகளும் இருந்தன. அவர்களது நாடித்துடிப்பை அளக்க ஒரு கருவி, ரத்த அழுத்தத்தை அளவிட ரத்த அழுத்தமானி, மூளையில் நிகழும் மாற்றங்களை அளக்க “எலெக்ட்ரோ என்ஸஃபைலோ கிராம்' எனப்படும் ஈ.ஈ.ஜி. கருவி, இதய மாற்றங்களை உணர்வதற்கு ஹோல்டர் மானிட் டர் என்ற கருவி, இது தவிர வியர்வை சுரப்பு, கண்ணில் நிகழும் மாற்றங்களை அளவிடும் கருவி... இப்படி பல கருவிகளின் இணைப்பு ஒயர்கள் அவர்கள் மீது பிணைக்கப்பட்டு இருந்தன. இவற்றை சுகமான சுமைகளாக' கருதியபடி அவர்கள் இயல்பாகத் தங்களுக்குள் கலந்தார்கள்.
மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை அளவிடுவது சுலபம். ஆனால், அந்த உறவுக்கு அத்தியாவசியமான செக்ஸ் உறுப்புகளை எப்படி கண்காணிப்பது?
ஆணுக்கு எல்லாமே உடலுக்கு வெளியில் இருந்தன. அதனால் அதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் நிகழும் மாற்றங்கள்?
அகைக் கண்காணிக்கவும் ஒரு ஸ்பெஷல் கருவி தயாரானது. ஆணுறுப்பு போல நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒன்றை செயற்கையாக பிளாஸ்டிக்கில் தயாரித்தனர். ஒளி ஊடுருவும் வகை பிளாஸ்டிக்கால் ஆன அதன் உள்பக்கத்தில் மைக்ரோ கேமரா வைக்கப்பட்டது. அந்த செயற்கை உறுப்பை வைத்து சில பெண்கள் சுய இன்பம் அனுபவிக்க, அதற்குள் இருந்த காமிரா ஸ்டில் போட்டோக்களாகவும், வீடியோ படமாகவும் பெண் உறுப்பில் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்தது.
மிகச் சாதாரணமான ஆராய்ச்சிகளுக்கே எதிர்ப்புக் குரல்கள் எழும்போது இதை விட்டு வைத்திருப்பார்களா? “அறிவியல் போர்வையில் நடக்கும் விபசாரம்” என பலர் கூக்குரல் எழுப்ப, மத அமைப்புகளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்தன. கொஞ்சம் தடம் புரண்டாலும் ஒட்டுமொத்த ஆராய்ச்சியே கேள்விக்குறி ஆகும் நிலை உண்டானது.
ஆனாலும் ஊசிமுனையில் தவம் செய்வது போன்ற ரிஸ்க்கான இந்த ஆராய்ச்சியை வெற்றியோடு செய்து முடித்தார், வில்லியம் ஹோவெல் மாஸ்டர்ஸ்.
சரி... எப்படி இத்தனை பேர் அவரிடம் படுக்கை அறை ஆராய்ச்சிப் பொருட்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள்?
***
இந்தியாவின் செக்ஸ் குரு!
டாக்டர் நாராயண ரெட்டிக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த 23 ஆண்டுகளாக சென்னையில் பிராக்டீஸ் செய்துவரும் செக்ஸாலஜி நிபுணர். தென்னிந்தியாவின் முதல் செக்ஸாலஜி டாக்டரான இவர், இப்போது “இந்தியாவின் செக்ஸ் குருவாக மதிக்கப்படுகிறார். அமெரிக்காவின் செக்ஸ் நிபுணர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்கள் இந்தியாவில் இரண்டு பேர். அதில் ரெட்டியும் ஒருவர். மருத்துவம் சார்ந்த செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஆசியாவிலேயே முதலில் பி.ஹெச்டி. பட்டம் பெற்றவர் இவர்தான். சென்னையில் இவர் நடத்திவரும் சிகிச்சை மையமான “டேகா இன்ஸ்டிடியூட்' நூற்றுக்கணக்கான தம்பதிகளை மணவாழ்க்கை முறிவிலிருந்து தடுத்திருக்கிறது.
“இப்போது தமிழகம் மாறிவிட்டது. ஆனால், நான் க்ளினிக் திறந்த புதிதில், 'செக்ஸாலஜி' என்ற வார்த்தையைக் கேட்டால் டாக்டர்களே ஓடுவார்கள். மருத்துவம் தொடர்பான கருத்தரங்குகளில் 'செக்ஸ் பிரச்னைகள் தொடர்பாகப் பேசுகிறேன்' என்று நேரம் கேட்டால், என்னை ஏளனமாக ஒதுக்குவார்கள். பிரபல மருத்துவமனை ஒன்றில்தான் முதன்முதலாக, நோயாளிகளைப் பார்க்க எனக்கு அறை ஒதுக்கித் தந்தார்கள். ஆனால், நிபந்தனை என்ன தெரியுமா? “செக்ஸாலஜிஸ்ட் என்று போர்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. ரீபுரொடக்ஷன் பையாலஜிஸ்ட் என்றுதான் போர்டு தொங்க வேண்டும்.' - இதற்கு என்ன அர்த்தம் என்று டாக்டர்களுக்கும் புரியவில்லை... நோயாளிகளுக்கும் புரியவில்லை. இவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது” என்று சொல்லிச் சிரிக்கும் நாராயண ரெட்டி... இப்போது சிகிச்சை, கருத்தரங்குகள், ஆலோசனைகள் என எந்த நேரமும் பிஸி! பல கல்வி நிலையங்களில் கெளரவப் பேராசிரியராக சென்று உரை நிகழ்த்துகிறார்.
பொதுவில் விவாதிக்க தயங்கும் ஒரு விஷயத்தையும் செக்ஸ் என்ற வார்த்தையின் மீதான அபரிமிதமான குவியத்தையும் நிதானமாக கட்டுடைத்த புத்தகம். இணையத்தில் கிடைத்தவற்றை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன். யாருக்கேனும் மறுப்புகள் இருந்தால், தனியுரிமை கொள்கையை மீறுவதாக இருந்தால், இன்பாக்ஸில் தெரிவிக்கவும். உடனடியாக நீக்கி விடுகிறேன்.
பாலியல் கல்வியின் மீதான புரிதல் இன்மையை களையும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள தொடர். தொடர்ந்து படித்து உங்களது கருத்துக்களை பரிமாறி கொள்ளவும்.
^^^^^^^^^^^^^^^^^^
இது வித்தியாசமான (ப) சடிஃபிகேட் தொடர்!
பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை- இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.
இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்புசெலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். பெண் என்பவள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்' என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.
முடிவாக அவர்கள் சொன்ன நீதி... “இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!' நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, 'பாலுணர்வு' என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது டேக் இட் ஈஸி' கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.
இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணியத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் - தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.
இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.
அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.
தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்ள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்-ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணைபோடவில்லை' என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், “எங்களுக்கு ஜோடியே தேவையில்லை' என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.
வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் 'தேனிலவு சூட்' அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.
ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.
(இதில் போய் என்ன ஆஆராய்ச்சி!' என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள். இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது- ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்...
(இருண்ட கண்டம்' என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்துவிட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.
ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்-பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்?
அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால்- ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?
-இப்படி எத்தனையோ கேகள்விகள்.
'ஒரு பெண்ணின் அந்தரங்க பாகத்தில் மூன்று தனித்தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர் போக ஒரு துவாரம்... அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்... குழந்தை பெற்றுக்கொள்ள மூன்றாவது துவாரம்...
சரியாகக் கணிக்காமல் உறவின்போது துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவு கொள்ளும் ஆணுக்கு மர்மமான வியாதிகள் வரும்' என்றெல்லாம் கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு, கதைகள் எழுதிய அந்தக் கால டாக்டர்கள் உண்டு!
மருத்துவம் படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம். ஒன்று 'பிஸியாலஜி' . உடலில் எந்தெந்த பாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது! இரண்டாவது 'பேதாலஜி' (Pathalogy). நோய் வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது... செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறது என்பது குறித்த 'நோய் குண அறிவியல். இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களே டாக்டர்கள்.
செக்ஸ் தொடர்பான நோய்களில், சிக்கல் இந்த அடிப்படை விஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு கொள்ளும்போது அவற்றின் பங்கு... இவை பற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும். அடிப்படையே புரியாத பட்சத்தில்..?
பல டாக்டர்கள் இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்து வந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, “செக்ஸ் தொடர்பான எல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம்' என்று ஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்த அளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி!
மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ் பிரச்னைகளுக்கு மருத்துவரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்கு இது 'மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல் சாதனை.' அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று 'செக்ஸாலஜி' என்ற பெயரில் நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்போது பலரும் செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கி பிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், வாலிப, வயோதிக அன்பர்களைக் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய் சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வு தேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!
ஒரு காலத்தில் மலட்டுத் தன்மை பெண்ணிடம் மட்டும்தான் இருக்கிறது' என்று உலகம் முழுக்க எல்லா சமுதாயமும் உறுதியாக நம்பியது. விதையில் எப்போதும் பழுது இல்லை... நிலம்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனால் விதைத்த விதை பொய்த்துப் போகிறது' என்று இதை நாசூக்காக சொன்னார்கள்.
அரியணைக்கு வாரிசைப் பெற்றுத் தராத காரணத்துக்காக எத்தனையோ மகாராணிகள் அநியாயமாக ‘மலடி’ பட்டம் சுமந்து, மரண தண்டனையை பரிசாகப் பெற்று, வாள்முனைக்கு தங்கள் தலையைக் கொடுத்த பரிதாப சம்பவங்கள் அநேகமாக உலகின் எல்லா நாட்டு வரலாறுகளிலும் இருக்கின்றன! பிரச்னை மகாராஜாவிடம்தான் இருக்கிறது என்பது புரியாவிட்டாலும், அந்தப்புரத்துக்கு அடுத்தடுத்து வரும் மகாராணிகளில் யாரோ ஓருத்தி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, யாருடனாவது சேர்ந்து தப்பு செய்து இளவரசனைப் பெற்றெடுத்து விடுவாள். அரசனும் “இப்ப புரியுதா? நான் ஆம்பளை சிங்கம்தான்!' என்று மகிழ்ந்து விடுவான்.
ஆனால், சராசரி குடும்பங்களில் எத்தனையோ பிரச்னைகள். குழந் தைப்பேறு இல்லாததால் ஏராளமான மணமுறிவுகள். மிக சாதாரணமான ஒரு சிகிச்சை அவர்களுக்குத் தீர்வு தந்திருக்கும். அது அப்போது யாருக்கும் தெரியாது.
ஐம்பதாண்டுகளுக்கு முன் நடந்த 'படுக்கை அறை' ஆராய்ச்சிதான் அதுபோன்ற தீர்வுகளுக்கு திறவுகோலாக அமைந்தது. இன்றைக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான தம்பதிகள் விவாகரத்து மூலம் பிரிவதைத் தடுத்தது... பல பெண்கள் “மலடி' என்ற பட்டத்தைச் சுமந்து வாழ்க்கையை இழந்து அம்மா வீட்டில் காலம் முழுக்கக் கண்ணீரோடு கிடப்பதைத் தடுத்தது... என மகத்தான புண்ணியம் இந்த ஆராய்ச்சிக்கு உண்டு.
அந்தப் படுக்கை அறை இரண்டு தடுப்புகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஓர் அறையில் மிருதுவான படுக்கை. அதற்குள்தான் ஜோடிகள் நுழையும். அந்த அறையின் கண்ணாடிச் சுவர்கள் சன்-கன்ட்ரோல் ஃபிலிமால் மறைக்கப்பட்டு இருக்க, அதற்கு வெளியே இருந்த குட்டி அறையில் ஆராய்ச்சிக் குழு இருக்கும். உள்ளே இருக்கும் ஜோடிக்கு இந்தக் குழுவினர் தெளிவாகத் தெரிவார்கள்.
உள்ளே நுழையும் ஜோடி பரவசத்தை அனுபவிக்கும்போது அவர்களது உடலில் நிகழும் மாற்றங்களை அளவெடுக்க, எல்லா விதமான ஏற்பாடுகளும் இருந்தன. அவர்களது நாடித்துடிப்பை அளக்க ஒரு கருவி, ரத்த அழுத்தத்தை அளவிட ரத்த அழுத்தமானி, மூளையில் நிகழும் மாற்றங்களை அளக்க “எலெக்ட்ரோ என்ஸஃபைலோ கிராம்' எனப்படும் ஈ.ஈ.ஜி. கருவி, இதய மாற்றங்களை உணர்வதற்கு ஹோல்டர் மானிட் டர் என்ற கருவி, இது தவிர வியர்வை சுரப்பு, கண்ணில் நிகழும் மாற்றங்களை அளவிடும் கருவி... இப்படி பல கருவிகளின் இணைப்பு ஒயர்கள் அவர்கள் மீது பிணைக்கப்பட்டு இருந்தன. இவற்றை சுகமான சுமைகளாக' கருதியபடி அவர்கள் இயல்பாகத் தங்களுக்குள் கலந்தார்கள்.
மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை அளவிடுவது சுலபம். ஆனால், அந்த உறவுக்கு அத்தியாவசியமான செக்ஸ் உறுப்புகளை எப்படி கண்காணிப்பது?
ஆணுக்கு எல்லாமே உடலுக்கு வெளியில் இருந்தன. அதனால் அதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் நிகழும் மாற்றங்கள்?
அகைக் கண்காணிக்கவும் ஒரு ஸ்பெஷல் கருவி தயாரானது. ஆணுறுப்பு போல நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒன்றை செயற்கையாக பிளாஸ்டிக்கில் தயாரித்தனர். ஒளி ஊடுருவும் வகை பிளாஸ்டிக்கால் ஆன அதன் உள்பக்கத்தில் மைக்ரோ கேமரா வைக்கப்பட்டது. அந்த செயற்கை உறுப்பை வைத்து சில பெண்கள் சுய இன்பம் அனுபவிக்க, அதற்குள் இருந்த காமிரா ஸ்டில் போட்டோக்களாகவும், வீடியோ படமாகவும் பெண் உறுப்பில் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்தது.
மிகச் சாதாரணமான ஆராய்ச்சிகளுக்கே எதிர்ப்புக் குரல்கள் எழும்போது இதை விட்டு வைத்திருப்பார்களா? “அறிவியல் போர்வையில் நடக்கும் விபசாரம்” என பலர் கூக்குரல் எழுப்ப, மத அமைப்புகளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்தன. கொஞ்சம் தடம் புரண்டாலும் ஒட்டுமொத்த ஆராய்ச்சியே கேள்விக்குறி ஆகும் நிலை உண்டானது.
ஆனாலும் ஊசிமுனையில் தவம் செய்வது போன்ற ரிஸ்க்கான இந்த ஆராய்ச்சியை வெற்றியோடு செய்து முடித்தார், வில்லியம் ஹோவெல் மாஸ்டர்ஸ்.
சரி... எப்படி இத்தனை பேர் அவரிடம் படுக்கை அறை ஆராய்ச்சிப் பொருட்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள்?
***
இந்தியாவின் செக்ஸ் குரு!
டாக்டர் நாராயண ரெட்டிக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த 23 ஆண்டுகளாக சென்னையில் பிராக்டீஸ் செய்துவரும் செக்ஸாலஜி நிபுணர். தென்னிந்தியாவின் முதல் செக்ஸாலஜி டாக்டரான இவர், இப்போது “இந்தியாவின் செக்ஸ் குருவாக மதிக்கப்படுகிறார். அமெரிக்காவின் செக்ஸ் நிபுணர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்கள் இந்தியாவில் இரண்டு பேர். அதில் ரெட்டியும் ஒருவர். மருத்துவம் சார்ந்த செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஆசியாவிலேயே முதலில் பி.ஹெச்டி. பட்டம் பெற்றவர் இவர்தான். சென்னையில் இவர் நடத்திவரும் சிகிச்சை மையமான “டேகா இன்ஸ்டிடியூட்' நூற்றுக்கணக்கான தம்பதிகளை மணவாழ்க்கை முறிவிலிருந்து தடுத்திருக்கிறது.
“இப்போது தமிழகம் மாறிவிட்டது. ஆனால், நான் க்ளினிக் திறந்த புதிதில், 'செக்ஸாலஜி' என்ற வார்த்தையைக் கேட்டால் டாக்டர்களே ஓடுவார்கள். மருத்துவம் தொடர்பான கருத்தரங்குகளில் 'செக்ஸ் பிரச்னைகள் தொடர்பாகப் பேசுகிறேன்' என்று நேரம் கேட்டால், என்னை ஏளனமாக ஒதுக்குவார்கள். பிரபல மருத்துவமனை ஒன்றில்தான் முதன்முதலாக, நோயாளிகளைப் பார்க்க எனக்கு அறை ஒதுக்கித் தந்தார்கள். ஆனால், நிபந்தனை என்ன தெரியுமா? “செக்ஸாலஜிஸ்ட் என்று போர்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. ரீபுரொடக்ஷன் பையாலஜிஸ்ட் என்றுதான் போர்டு தொங்க வேண்டும்.' - இதற்கு என்ன அர்த்தம் என்று டாக்டர்களுக்கும் புரியவில்லை... நோயாளிகளுக்கும் புரியவில்லை. இவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது” என்று சொல்லிச் சிரிக்கும் நாராயண ரெட்டி... இப்போது சிகிச்சை, கருத்தரங்குகள், ஆலோசனைகள் என எந்த நேரமும் பிஸி! பல கல்வி நிலையங்களில் கெளரவப் பேராசிரியராக சென்று உரை நிகழ்த்துகிறார்.