• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Matured content உயிர் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
பிறப்புறுப்பின் உள்பாதை, பெண்ணுக்குப் பெண் வித்தியாசப்படும். சராசரியாக சாதாரண நிலையில் பெண்குறியின் உள்பாதையின் நீளம் மூன்றிலிருந்து ஐந்து அங்குலம் வரை இருக்கும். ஆனால், இயற்கையின் அற்புதம் பாருங்கள்... இந்த உள்பாதையை ரப்பர் பாண்ட் மாதிரி... தேவைக்கேற்ப நீளும் வசதிகொண்டதாக இயற்கை படைத்திருக்கிறது!

கர்ப்பப் பையின் சுவர்கள் மூன்று அடுக்கு களைக் கொண்டிருக்கும். உள்ளே இருக்கும் அடுக்குக்கு "எண்டோமெட்ரியம்" என்று பெயர். கரு உருவானதும் அது வளர்வதற்கு ஏதுவாக சற்று பருத்து, ஒரு குஷன் போல் பயன் தரும் இந்த அடுக்கு. ஒருவேளை கரு தரிக்க வில்லை என்றால் இறந்த கருமுட்டை, உப்ப லான எண்டோமெட்ரியத்தின் துகள்கள் எல்லாம் மாதவிடாய் சமயத்தில் ரத்தத்துடன் கலந்து வெளியேறி விடும். ஒவ்வொரு மாதமும் எண்டோமெட்ரியம் உப்பலாகும். கரு உருவாகவில்லை என்றால், கழிவுகள் மாதவிடாயின்போது வெளிவந்துவிடும். இது ஒரு சுழற்சியாகவே நிகழும். பெண் பருவமடைந்திருந்த நாளிலிருந்து மெனோபாஸ் வரை இது நடக்கும்.

அடுத்து, ஃபெலோப்பியன் டியூப். இது கர்ப்பப் பையின் மேல்புறம், இடது மற்றும் வலது பக்கத்தில் இரு குழாய்களாக இருக்கும். ஒவ்வொரு ஃபெலோப்பியன் குழாயும் 4 அங்குல நீளம், 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டது. இதனுள்ளே சிறுசிறு நூல் மாதிரி "சீலியா" என்பது அமைந்திருக்கும். கருமுட்டையைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கர்ப்பப் பைக்குக் கொண்டு வருதற்காக இந்த சீலியாக்கள் மரவட்டையின் கால்களைப் போல் அசைந்து கொண்டேயிருக்கும்.

இடையில் ஒரு செய்தியை சொல்லி விடுகிறேன். பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் (Tubectomy) செய்யப்படும் போது இந்த ஃபெலோப்பியன் டியூப் பைதான் வெட்டித் தைப்பார்கள்.

கரு முட்டைப் பையைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு கரு முட்டைப்பை கர்ப்பப் பைக்கு இடது புறமும், வலதுபுறமும் அமைந்திருக்கும். கிட்டத்தட்ட பாதாம் பருப்பு வடிவத்தில் இருக் கும். இவை ஒன்றரை அங்குல நீளம், ஒரு அங்குல அகலமும் உடையவை. ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, கரு முட்டைப்பை இருக்கும். அதில் பக்குவப் படாத சுமார் இரண்டு லட்சம் கருமுட்டைகள் இருக்கும். இந்த லட்சக் கணக்கான கருமுட் டையில் (பருவம் எய்திய நாளிலிருந்து மெனோபாஸ் வரைக்கும்) ஏறக்குறைய 300 முதல் 500 கருமுட்டைகளே பக்குவத்துக்கு வருகின் றன. மீதி உள்ளவற்றை உடம்பே ஜீரணித்து விடும். ஒவ்வொரு மாதமும் இடதுபுற அல்லது வலது புற கருமுட்டைப் பையிலிருந்து பக்குவமடைந்த ஒரு கருமுட்டை, பையிலிருந்து வெளிபட்டு சீலியாக்களால் நகர்த்தப்பட்டு கருப்பைக்குள் வரும். இப்படி ஒவ்வொரு மாதமும் கருமுட்டை வெளிப்படுவதற்கு "ஓவலேஷன்" (Ovulation) என்று பெயர்.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
லத்தீன் மொழியில் முட்டைக்கு "ஓவம்" (Ovum) என்று பெயர். இந்தக் கருமுட்டை வெளியேறு தல் ஒவ்வொரு பெண்ணுக்கும் பருவமடைந்த நாளிலிருந்து மெனோபாஸ் வரை 4 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ந்து நிகழும். கருமுட்டையைப் பக்குவமடைய வைப்பது, அதை நான்கு வாரத்துக்கு ஒரு முறை வெளிவர வைப்பது போன்றவற்றை ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பிரத்யேக பெண் ஹார்மோன் செய்யும். கருமுட்டை கருப்பைக்குள் போனதும் அந்த மாதமே அப்பெண் கருவாகிவிட்டால், அடுத்த மாதம் வெளிப்படும் முட்டை என்னவாகும் என இயல்பாக உங்களுக்குக் கேள்வி எழும். நம்மைவிட இயற்கை அதிபுத்திசாலி. அப்படி அப்பெண் முதல் முட்டையிலேயே கருதரித்துவிட்டால், அந்த முட்டை எங்கிருந்து வெளிப்பட்டதோ அங்கே "ப்ரஜஸ்டெரோன்" (progesterone) எனும் ஹார்மோன் உருவாகி, மேற்கொண்டு அடுத்த கருமுட்டை வெளிவராமல் பார்த்துக் கொள்ளும்.

இங்கு இன்னொரு விஷயம் சொல்கிறேன். கர்ப்பத் தடை மாத்திரைகள் கர்ப்பம் அடையாமல் பார்த்துக்கொள்வது எப்படி தெரியுமா? அந்த மாத்திரைகளில் இருக்கும் ஹார் மோன் மருந்துகள், வாய்வழி உள்ளே சென்று ப்ரஜஸ்டெ ரோனை உருவாக்கி, முட்டை வெளியேறாமல் பார்த்துக் கொள்ளும்.
ஒரு பெண்ணுக்கு 45 வயதிலிருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது நின்று விடுவதால்தான் அந்த வயதில் மாதவிடாய் நின்று விடுகிறது.

கருமுட்டையைப் பற்றியும் பார்த்துவிடுவோம். ஆணின் உயிரணுவில் இருப்பது போலவே பெண்ணின் கருமுட்டையிலும் 23 குரோமோ சோம்கள் இருக்கும். பரம்பரை குணங்கள், நிறம், பரம்பரை நோய்க் கூறுகள் எல்லாம் இதில்தான் பொதிந்திருக்கும். கருமுட்டையின் குறுக்களவு ஒரு மில்லிமீட்டர். குண்டூசி தலை அளவுதான் இருக்கும். பையிலிருந்து முட்டை வெளியாகி ஏறக்குறைய 24 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும்.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
ஒருமுறை உடல் உறவு கொள்ளும்போது 380 முதல் 480 மில்லியன் உயிரணு பெண்ணுறுப்புக்குள் செல்லும். இந்த உயிரணுக்கள் பெண்குறி பாதை, கர்ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும். இதனால், 480 மில்லியன் உயிரணுவில் சுமார் 3000 உயிரணுக்கள் மட்டுமே டியூப்புக்குள் செல்லும். இவற்றிலும் பல, அசைந்து கொண்டேயிருக்கும் சீலியாக்களை எதிர்கொள்ள முடியாமல், இறந்துபோய் சில நூறு உயிரணுக்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போய் நிற்கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும். ஒரு உயிரணு வந்தவு டன் கருமுட்டை மூடிக்கொள்ளும். இன் னொரு உயிரணு உள்ளே வராமலிருக் கத்தான் இந்த ஏற்பாடு!
கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும், உயிரணுவில் இருக்கும் 23 குரோமோசோம்களும் சேர்ந்து (23 ஜோடி) 46 குரோமோசோம்களாகி உயிர் உருவாகும்.

இயற்கைக்கு ஈடு இணை ஏதுமே இல்லை என்று திரும்பத் திரும்ப... பலரும் சொல்வதற்கு என்ன காரணம் என்பது புரிகிறதா மனிதர்களே..!

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ஒரே ஒரு உயிரணு மட்டும் கருமுட்டையை அடைந்து உயிர் உருவாகிறது எனும்போது... ஏன் இயற்கை லட்சக்கணக்கான உயிரணுக்களை விந்தில் உருவாக்குகிறது? நியாயமான கேள்விதான்.

மராத்தான் ஓட்டம் பார்த்திருக்கிறீர்களா?

அதில் ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கும்போது சில நூறு பேர்கள் இருப்பார்கள். கடைசியில் பல மைல்களை கடந்து, இறுதியில் ஜெயிப்பது ஒரே ஒருவர் மட்டுமே. மராத்தான் ஓட்டத்தில் பல மைல்களைத் தொய்வின்றி, எந்தவிதமான தங்குதடையின்றி ஓடிச்சென்று கடக்க பலம் வேண்டும். அப்படிப்பட்ட சக்தியுடையவர்களை வெகு சிலரிலிருந்து கண்டுபிடிக்க முடியாது... இருக்க மாட்டார்கள். அதனால்தான் மராத்தானில் பலர் ஓடுகிறார்கள். அதுபோல உயிரணுவும் உள்ளே நீந்தி செல்ல மிகுந்த பலம் தேவை. இது வெகு சில உயிரணுவால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் பல லட்ச உயிரணுக்களை இயற்கை படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உயிரணு உள்ளே செல்கிறது என்றோமல்லவா... அப்போது, உயிரணுவின் உடல் பகுதி, வால் பகுதி ஆகியவை உள்ளே போகாது. கருமுட்டையை உயிரணு துளைக்கும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் இருக்கும் 23 குரோமோசோம்களை மட்டும் (நியூக்ளியஸ்) கருமுட்டைக்குள் செலுத்திவிட்டு, உயிரணுவில் வாலும் உடலும் இறந்துபோய் திரும்பி விடும்.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
உயிரணு கருமுட்டையை மோதும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் "அக்ரோசின்" எனும் ரசாயனம் வெளிப்பட்டு கருமுட்டையின் சுவரை அரித்து சிறிய துளையை ஏற்படுத்தும். ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கத் தேவையான அளவில் உயிரணுக்கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் "தனது விந்து கெட்டியாக இருக்கிறது என்றோ, நீர்த்துள்ளது என்றோ..." நினைத்துகொண்டு சிலர் போலி டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்வார்கள். அவர்களும், இதை சாக்காக வைத்துப் பணதைக் கறந்துவிடுவார்கள். விந்து கெட்டியாக இருப்பதற்கும், நீர்த்து இருப்பதற்கும் நாம் சாப்பிடும் உணவு, நம் உடலில் உள்ள நீர்சத்து, உடல் ஆரோக்கியம் போன்றவைதான் காரணம். ஆகவே விந்து கெட்டியாக அல்லது நீர்த்துப் போயிருப்பது ஒரு குறைபாடு அல்ல. ஆரோக்கியமான உயிரணு அதில் உள்ளதா என்பதே முக்கியமானது. சரி, உயிர் எப்படி வளர்கிறது? உயிர் எப்படி வளர்கிறது...

கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம்பத்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடும். அடுத்தடுத்து, அவை பன்மடங்காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மாதிரி ஆகிவிடும். இந்தப் பந்துக்கு மாருலா (Morula) என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப் பையில் உப்பிக்கொண்டிருக்கும் உள்சுவரான "எண்டோமெட்ரிய"த்தில் இந்த மாருலா அமர்ந்துவிடும். அங்கே படிப்படியாகப் பத்தாவது மாதம் வரை வளரும். அதன்பிறகு ஒரு புதிய ஜீவன் பூமிக்கு வந்து வெளிச்சத்தைத் தரிசிக்கும். இது இயற்கையாக, இயல்பாக எல்லோருக்கும் நடைபெறும் கருத்தரித்தலாகும்.

ஆனால், வெகு சில பெண்களுக்கு நான்காவது நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகராமல் அதற்குள்ளேயே கருவாக வளரும். இதற்கு "எக்டோபிக் பிரகனன்சி" (Ectopic pregnancy) என்று பெயர். இது தாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் கர்ப்பம். ஏனெனில், கர்ப்பப்பைக்கு இருக்கிற விரிந்துகொடுக்கிற தன்மை, ஃபெலோப்பியன் டியூப்புக்கு இல்லை என்பதால்தான் இந்த ஆபத்து.

சரி, கரு எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது?

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம்களின் வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க்கூறு போன்றவற்றை நிர்ணயிப்பது. எஞ்சியுள்ள ஒரு ஜோடி, அதாவது 23வது ஜோடிதான் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம் (Sex chromosomes). ஆணின் உயிரணுவில் உள்ள 23 குரோமோசோமில் 50 சதவிகிதம் "எக்ஸ்" குரோமோசோம்களாகவும், 50 சதவிகிதம் "ஒய்" குரோமோசோம்களாகவும் இருக்கும். பெண்ணின் கருமுட்டையில் உள்ள 23 குரோமோசோமில் 100 சதவிகிதமும் "எக்ஸ்" குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயிரணுவில் உள்ள "ஒய்" குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள "எக்ஸ்" குரோமோசோமுடன் சேர்ந்தால் "எக்ஸ்ஒய்" ஆகி, ஆண் குழந்தை உருவாகும். உயிரணுவில் உள்ள "எக்ஸ்" குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள "எக்ஸ்" குரோமோசோமுடன் சேர்ந்தால் "எக்ஸ்எக்ஸ்" ஆகி பெண் குழந்தை உருவாகும். இப்போது ஒரு உண்மை புரிகிறதா?

ஒரு பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உருவாகக் காரணமாக இருப்பது ஆணின் உயிரணு என்பது தெரியாத பலர், "****** புள்ளைய பெத்துருக்கியே, உன்னை மாதிரியே" என்று பெண்ணைத் திட்டுவார்கள். முழுக்க முழுக்க பெண், ஆண் என்பதைத் தீர்மானிப்பது ஆணின் உயிரணுதானே தவிர, பெண் அல்ல!
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
சரி... ஏன் ஒரு சிலருக்குக் குழந்தை பிறக்காமல் போகிறது... குழந்தை பிறக்காமை அல்லது குழந்தை உருவாக்க இயலாமை ஏன் ஏற்படுகிறது?

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணமான பத்தாவது மாதமே அவர்கள் மடியில் ஒரு மழலை தவழ வேண்டும் என்கிற ஆசை வரும். "திருமணம் ஆன அடுத்தகட்டம் உடனடியாகக் கர்ப்பம்" என்கிற நிலையிலேயே சமூகமும் புதுத் தம்பதிகளைப் பார்க்கிறது. இதனைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், "இப்போதைக்குக் குழந்தை வேண்டாமே" என்று ஒரு புதுமண ஜோடி தற்காலிகமாக இருவரின் விருப்பத்துடன் முடிவெடுக்க விடாமல் நிர்ப்பந்திப்பதுதான் தவறு என்கிறேன்.

திருமணமான ஒரு தம்பதிக்குப் பத்து மாதத்தில் குழந்தை பிறக்கவில்லை என்றால், அந்த ஜோடியைவிட அவர்களைப் பெற்றவர்கள்தான் அதிக கவலைப்படுகிறார்கள். "உங்க பொண்ணுக்கு ஏதாச்சும் விசேஷம் உண்டா?" என்று மற்றவர்கள் விசாரிக்கும்போது, அந்தப் பெற்றோர் தங்கள் மகளை அல்லது மகனை உசுப்பேற்றுவது வாடிக்கையாக இருக்கிறது. பல வீடுகளில் பெரியவர்கள் வீட்டுக்கு வந்த மருமகளிடம் அல்லது திருமணமாகிப் போன தனது மகளிடம், "இந்த மாசம் நீ தலை குளிச்சியா?" என்று வாஞ்சையோடு விசாரிப்பதன் அர்த்தம் இதுதான்.

ஆம்... இதெல்லாம் திருமணமான தம்பதிகளுக்கு சமூகமும் பெற்றோரும் உற்றோரும் தரும் நெருக்கடி. இதனால் அந்தப் புதுமணத் தம்பதிகளுக்கு ஒருவித மனஅழுத்தம் உண்டாகும் என்பதை எவரும் அறிவதில்லை.

வெளியிலிருந்து வருகிற நெருக்கடி யும், நிர்ப்பந்தமும் புதுமணத் தம்பதிகளின் சந்தோஷத்தைப் பறிப்பது டன் அர்த்தமற்ற கவலைகளை உருவாக்கிவிடும். ஆயிரமாயிரம் வண்ணக் கனவுகளுடன் இல்லறச் சோலையில் அடி எடுத்து வைக்கும் அவர்கள், குழந்தைக்காக ஏங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இயல்பான சந்தோஷம் சிறகிழந்து விடுகிறது. இதனால்தான் திருமணமான ஓரிரு மாதங்களிலேயே சினிமா, பூங்கா, கோயில், நண்பர்கள் வீடு, ஊர் சுற்றல்... என்று வலம்வர வேண்டியவர்கள் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக ஏறி இறங்க வேண்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

குழந்தையில்லாத தம்பதிகளில் சிலர் பத்திரிகை யில், தொலைக்காட்சிகளில் செய்தியாகக் காட்டப்படும் குழந்தை உருவாக்கும் புதிய மருத்துவ முறைகளை அறிந்து, அந்த முறையில் குழந்தை உருவாக்கிக் கொள்ள ஓடுவதும், பணத்தை நிறைய செலவு செய்வதும், பின்பு அந்த முறையில் குழந்தை உருவாக்க முடியாமல் போய் மனம் கலங்குவதையும் பார்க்க முடிகிறது. தங்களுக்கு, இந்த முறையில் கரு உருவாக்க முடியுமா? என்கிற அறிவின்மையே இதுபோன்ற வீண் அல்லாட்டத்துக்குக் காரணமாகிறது.

குழந்தை இல்லை என்கிற குறையின் காரணமாகப் பல குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிணக்கு, குடும்பத்துக்குள் சச்சரவு என்று ஏகப்பட்ட களேபரங்கள் நடப்பதையும் நாம் அறிவோம். இவர்கள் எல்லாம் சொர்க்கமாக இருக்கவேண்டிய தங்கள் வாழ்வை நரகமாக்கிக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
இவ்வளவு களேபரங்களுக்கு எல்லாம் என்ன காரணம்? திருமணம் ஆனதும் குழந்தை பிறந்துவிட்டால் கணவன், "தன்னை ஆண்மையுள்ளவன்" என்றும், மனைவி தன்னை "பெண்மை நிரம்பியவள்" என்றும் சமூகத்தின் முன்பாக நிரூபிக்கிறார்கள் என்கிற சமூக நம்பிக்கைதான் காரணமாகும். மொத்த சமுதாயமும் குழந்தை பெற்றெடுத்த தம்பதியைதான் நல்ல ஜோடியாகக் கருதுகிறது. இதுவொரு அவலமான நிலை.

ஒரு குழந்தை பெற்றெடுத்ததை வைத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் "ஆண்மை", "பெண்மை" முத்திரை குத்துவதே தவறு. ஏனெனில், குழந்தையை உருவாக்கும் திறன் பெற்ற ஒரு ஆண், செக்ஸில் குறைபாடு உள்ளவனாகக்கூட இருக்கலாம். இதுபோலவே, செக்ஸ் நடவடிக்கையில் எந்த குறைபாடும் இல்லாத ஒரு ஆணால், ஒரு குழந்தையை உருவாக்க இயலாமலும் போகலாம். இது பெண்களுக்கும் பொருந்தும்.

எனவே திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் என்னுடைய அறிவுரை இதுதான்: "சமுதாயம் கேட்கும் கேள்விகளை, எள்ளல் பார்வைகளை மனசில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நம்மீது உண்மையான அக்கறை கொண்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி உள்ள எல்லோரும் சம்பிரதாயத்துக்கு நலம் விசாரிப்பவர்கள் மட்டும்தான்.

வாழ்வின் நோக்கமே சந்தோஷம்தான். குழந்தை இருந்தால், அந்த சந்தோஷம் இரட்டிப்பாகும் என்பது நிஜமே. அதேசமயம் குழந்தை இல்லாவிட்டால் வாழ்வில் சந்தோஷமே இல்லை என்று கருதுவதும் தவறு.

"கல்யாணம் ஆன தம்பதிகள் செக்ஸ் வைத்துக் கொண்ட உடனேயே குழந்தை உண்டாகிவிடும்" என்று மிகமிக எளிமையாக சொல்லிவிடுவார்கள். சொல்லுதல் யாருக்கும் எளிதல்லவா? ஆனால், புள்ளிவிவரம் ஒன்று "திருமணமானவுடன் 25 சதவிகித தம்பதிகளுக்குக் குழந்தை உண்டாவதில் சிக்கல் இருக்கிறது என்றும், இந்த 25 சதவிகிதத்தில் 10 சதவிகித தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவே பிறக்காது என்கிற நிலையும், மீதம் உள்ள 15 சதவிகித தம்பதிகளுக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையில் குழந்தை பிறக்காது" என்றும் குறிப்பிடுகிறது.

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமைக்கான காரணங்கள் தற்காலிகமாக இருந்தால் அதற்கு பெயர் "இன்பெர்டிலிட்டி" (Infertility). அதுவே நிரந்தரமானவையாக இருந்தால் அதற்கு "ஸ்டெரிலிட்டி" (Sterility) என்று பெயர். ஒருவேளை, குழந்தை பிறக்காமைக்குக் காரணங்கள் நிரந்தரமானவையாக இருக்குமானால், அந்தத் தம்பதிகள் கவலைப்படவே தேவையில்லை. இதற்கு இன்றைய நவீன மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. உதாரணமாக, ஆணுக்குத் தீர்க்கமுடியாத குறைகள் இருந்தால் "டோனர் இன்செமினேஷன்"... பெண்ணுக்கு "சரோகேட் மதர்" எனும் சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தில் இருக்கிறது. இதன்மூலம் இவர்களும் மழலைச் செல்வத்தை மடியில் ஏந்தலாம்.

பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக வேண்டும் என்றால், கருமுட்டை வெளியாகும் தருணத்தில் உடல் உறவில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பெண்ணின் ஜனன உறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆணின் உயிரணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக உருவான கரு தங்கி வளருவதற்கு ஏற்றாற்போல கர்ப்பப் பையும் ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் உடலும் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சார்ந்த காரணங்கள் அல்லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமான காரணங்கள் உண்டு. குழந்தையின்மைக்கு ஆண் சார்ந்த காரணங்கள் 40லிருந்து 45 சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரணங்கள் 50லிருந்து 55 சதவிகிதம் இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரையும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.

முதலில் ஆண் சார்ந்த காரணங்களைப் பார்க்கலாம்:

அ.
சம்பந்தப்பட்ட ஆணுக்குத் தரமான உயிரணு உற்பத்தியாவதில் பிரச்னை இருப்பது:

ஒரு ஆண் செக்ஸில் ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பாக 2 மில்லி லிட்டர் விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தையை உருவாக்க முடியும். இப்படி வெளிவரும் விந்தில், ஒரு மி.லிக்கு 20 மில்லியன் உயிரணுவாவது இருக்க வேண்டும். இதில், 30 சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சதவிகிதம் நல்ல நீந்தும் திறனைப் (மொடிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன் உயிரணுவில், 25 சதவிகிதமாவது மிகமிக வேகமாக நீந்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

மேற்சொன்ன அளவுகள் குறைந்தபட்ச அளவுகள்தான். இது உலக சுகாதார நிறுவனம் 1992ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வந்த தகவல். இப்போதும் நம் நாட்டில் சில சோதனைக் கூடங்களில், பழைய அளவுகளை வைத்துக்கொண்டு குழந்தை இல்லாத தம்பதிகளைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், இந்த லேப்களை நடத்துபவர்களுக்கு நிகழ்கால அறிவு இல்லாததுதான்.

ஆண் உறுப்பில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருந் தாலோ, தொற்று நோய் ஏற்பட்டிருந்தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ தரமான உயிரணு உற்பத்தி யாவதில் பிரச்னை ஏற்படும்.

சத்தான உணவு, உடற்பயிற்சி, சரியான ஓய்வு இவற்றுடன் புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதிருக்கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவதில் பொதுவாகத் தடையேதும் இருப்பதில்லை.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
சந்ததி உருவாக்குதல், இன்பம் அடைதல், உறவு களின் கட்டமைப்பு என செக்ஸுக்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன்மையான, முக்கியமான நோக்கம் சந்ததியை உருவாக்குவதுதான். இனப்பெருக்கம் ஒன்றுக்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதான் இது. வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதால், போனஸாக ஒருவிதமான இன்பத்தையும் செக்ஸுக் குள் இணைத்து வைத்துள்ளது இயற்கை! செக்ஸ் இன்பத் துக்காக இணைசேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது. சில தம்பதிகளில், கண வனின் உயிரணு மனைவியின் உறுப்பில் டெபாஸிட் ஆகாத சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம். இப்படியரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன.

ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப் பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள் நுழைந்தும் விந்து வெளியேறாமல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் டெபாஸிட் ஆகாமல் போகலாம்.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
ஒரே நாளில் எத்தனை தடவை உடலுறவு கொள்ள வேண்டும்? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ள வேண்டும்? எத்தனை முறை ஈடுபட் டால் குழந்தை உண்டாகும்? குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இதுபோன்ற கேள்விகள் எழுந்து அவர்களைப் பாடாய் படுத்தக்கூடும்.

என்னிடம் பிரச்னைகளுக்காக வருபவர்களில் சிலர், "சார்... நான் டெய்லி ரெண்டு மூணு தடவை செக்ஸ் வெச்சுக்கறேன். ஆனாலும் புள்ளை பொறக்க மாட்டேங்குதே!" என்பார்கள். ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும்போதே போதுமான அளவில் விந்தும் அதில் போதுமான அளவு உயிரணுவும் இருக்கும். அதே நாளில் அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளும்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவில் உயிரணுவும் இருக்காது.

இன்னும் சிலர், "சார்... டெய்லி செக்ஸுல ஈடுபடாம கருமுட்டை வெளிவரும் நாள்லதான் (மாதவிடாய்க்கு முன்பு) ஈடுபடுவேன். அப்படியும் குழந்தை பாக்கியம் இல்லையே!" என்று வருத்தப்படுவார்கள். இதுவும் தவறான அபிப்பிராயம். நிறைய இடைவெளிவிட்டு உறவு கொள்வதால், உயிரணுவின் மூவ்மென்ட் பாதிக்கப்பட்டு, நீந்தும் திறன் குறைந்துவிடும். அதுமட்டுமல்ல, உயிருடன் இருக்கும் உயிரணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். பணிச்சூழல் காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரில் சிலருக்கு, ஊர்சுற்றுவதையே தொழிலாகக் கொண்ட மனிதர்களில் சிலருக்குக் குழந்தை பிறக்காமல் போக இதுதான் காரணம்.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
ஒரு சங்கீத கச்சேரியாக இருந்தால், அதில் ஆலாபனைகள் அவசியம். சுதி சுத்தமாக இருந்தால்தான் பாட்டில் இனிமை ததும்பும். அதுபோலத்தான், இனிமையான செக்ஸ் இன்பத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்வதில் "ஃபோர் ப்ளே" எனப்படும் முன்விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. மீட்டினால், இதயம் நனைக்கும் இசையைப் பொழியும் வீணையின் தந்திகளை முடுக்கித் தயார்ப்படுத்துவது மாதிரிதான் "முன்விளையாட்டும்". ஆனால் பல ஆண்களுக்குப் பொறுமை இருப்பதில்லை. மனிதர்களில் பலர் "பார்த்தேன்... ரசித்தேன்" ரகமல்ல; "எடுத்தேன்... கவிழ்த்தேன்" ரகம்தான்!

முன்விளையாட்டில் ஈடுபட்டுப் பெண்ணைத் தயார்நிலைக்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும்போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். செக்ஸ் விளையாட்டுகள் மூலம் இயற்கையாக ஈரப்பதம் உண்டாக்குவதற்குப் பதில் விளக்கெண்ணெய், வாஸலின், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகித்து செயல்படுவார்கள். உண்மையில் இவை, உயிரணுவைக் கர்ப்பப் பைக்குள் போகவிடாமல் தடுக்கவே செய்கின்றன. மேலும், இவை கர்ப்பப்பை, ஃபெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற்றையும் உண்டாக்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்திவிடும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top