K
kavi sowmi
Guest
மதுசூதனன் ஹாலில் அமர்ந்தபடி நேரம் பார்க்க மாலை நான்கு மணியை தாண்டி இருந்தது. பார்த்து விட்டு வருவதாக சொன்ன அபிநந்தனும் எந்த தகவலும் தரவில்லை. மலரும் வீட்டிற்கு வருவதாக இல்லை . இத்தனை நாள் இல்லாமல் இப்போது தன் மேலேயே கோபமாய் வந்தது. தெரிந்தவர்களுக்கு
விஷயம் தெரிந்தால் என்ன சொல்வார்கள்... பொண்ணு பார்க்க வரும் போதே பார்க்க மாட்டேன் என வெளிய கிளம்பி போயிட்டா. இந்த பொண்ண கல்யாணம் பண்ணினா பையனோட வாழ்க்கை அவ்வளவுதான்.. ஒருவர் துவங்கி வைத்தால் போதுமே ஊரே பேசுவதற்கு... நாம் என்ன ஆட்கள் இல்லாத ஊரிலா குடி இருக்கிறோம்.
என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது என்ன நினைப்பதற்கு...
எதற்காகவும் இது வரை மகளின் மேல் கோபபடாதவர் தான். முதல் முதலாக
கோபம் வந்தது. என்ன பொண்ணு...
இப்படி செய்யாறா...அதிகமாக செல்லம் கொடுத்து விட்டோமோ!!!
சரியாக வளர்ப்பதில் தவறிவிட்டோமோ!!! பல வாராக மனதில் மகளை பற்றிய நினைவே ஓடிக்கொண்டு இருந்தது.பனிமலரின் தாயார் இறந்த போது அவளிற்கு
பன்னிரெண்டு வயது தான். ஒருவார காய்ச்சல் இவர்களது குடும்பத்தை உரு தெரியாமல் சிதைத்து போய் இருந்தது. இறக்கும் தருவாயில் இவனது கைகளை பற்றியபடி நம்ம பொண்ண பத்திரமாக பாத்துக்கங்க அவளை விட்டுடாதிங்க... என்றது தான் கடைசியாக பேசியது. அன்றிலிருந்து இன்றுவரை அவளுக்கு தாய் தந்தை இரண்டுமே இவரே ஆகி போனார்.
பனிமலரும் புத்திசாலி குழந்தை.. நடந்ததை புரிந்து கொண்டவள் எதற்காகவும் அடம்பிடித்து அழுதது இல்லை. இவருக்கு சிரமமாக இருந்தது அப்போது அவளது இடுப்பிற்கு கீழாய் வளர்ந்து இருந்த அவளது நீள கூந்தல் தான். தலைவாரி பிண்ண சிரமமாக இருக்க குதிரைவால் போடும் அளவிற்கு வெட்டியது தான் . மற்றபடி இன்று வரை எந்த சிரமமும் இல்லாமல் நாட்கள் சென்றிருந்தது.
கோவை கணபதியில் ஆரம்ப நாட்களிலேயே இந்த வீட்டை கட்டி இருந்தார். கிட்டத்தட்ட ஏழு சென்ட்டில் ஹால்,கிச்சன்,இரண்டு பெட்ரூம் சற்று பெரியதாய் இவர்களுக்கும் விருந்தினர் வந்தால் தங்குவதற்கு சிறியதாக இன்னொரு அறை என...அழகாய் அப்போதே வடிவமைத்து இருந்தார். வீட்டிற்கு பின் புறத்தில் சிறியதாய் ஒரு தோட்டம் அவரை பொறுத்தவரை நிறைவாய் வீட்டை கட்டி இருந்தார்.
உறவினர்கள் பலரும் இவரை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் எதையும் கேளாமல் மகளே உலகம் என
மாற்றிக்கொண்டவர். மணல்,ஜல்லி,செங்கல் மொத்த வியாபாரம் இவருடையது. பெரும்பாலும் அனைத்துமே போனிலேயே வியாபாரம் முடிந்து விடும். ஏற்றி அணுப்பும் போது குடோனில் இவர் இருந்தால் போதும்.
நல்ல வருமானம். அதுவே அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பலர் வற்புறுத்தும்படி இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அதுவும் குறைந்து ஒரு கட்டத்தில் கேட்பதையே நிறுத்தி இருந்தனர்.
தன் மேல் அவள் வைத்திருந்த பாசம்
அவளை இப்படி நடந்து கொள்ள செய்திருந்தது. முக்கியமாக தனது நண்பனிடம் எப்படி கூறுவது இதுவே தற்போது கவலை தந்து கொண்டு இருந்தது. இவரும் அபிநந்தனின் தகப்பனாரும் பள்ளியில் படித்த காலத்திலேயே நல்ல நண்பர்கள். அந்த உறவு இன்றும் தொடர்ந்து கொண்டிருந்தது. இவரை முழுவதும் தெரிந்ததால் அவரே தனது மகனுக்கு மலரை கேட்டிருந்தார்.
அவர் கேட்டபோது இருந்த அன்றைய
சந்தோஷம் மொத்தமாய் வடிந்திருந்தது தற்போது. அடிக்கின்ற போனின் சத்தத்தில் பழைய நினைவில் இருந்து மீண்டவர் யார் என பார்க்க அபிநந்தன் அழைத்திருந்தான்.
அங்கிள் உங்கள் பொண்ண பார்த்துட்டேன். முன்ன சொன்னது தான் எனக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு.. என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை. நான் அப்பாகிட்ட பேசிட்டு மறுபடியும் உங்க வீட்டிற்கு வரேன். உங்க பொண்ணுக்கு கொஞ்சம் பிடிவாதம் மத்தபடி ரொம்ப பாசகாரின்னு நினைக்கிறேன். வொரி பண்ணிக்காதிங்க அங்கிள்
அபி அவ வேண்டாம்ன்னு சொன்னா என்ன செய்ய...
அங்கிள் அவளோட சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது. அவளே உங்க கிட்ட ஒரு நாள் சொல்லுவா அபிய எனக்கு கட்டி வைங்கன்னு..
ஆனாலும் உனக்கு நிறைய நம்பிக்கைபா....
வாழறதே நம்பிக்கையால தான... சொன்னவன் சிரித்தபடி கால்ஸை கட் செய்ய இப்போது தான் அவருக்கு ஒரு வித அசுவாசம், நிம்மதி தோன்றியது.
அடுத்த சில நிமிடத்தில் அபிநந்தனின் தகப்பனார் செல்வம் அழைத்திருந்தார் .
மது... இப்ப சந்தோஷமா... என்னவோ பயந்திட்டு இருந்தே... இப்பதான் என் பையன் கூப்பிட்டு பேசினான். எனக்கு
ரொம்ப சந்தோஷமா இருக்கு. எவ்வளவு நாளா டிமிக்கி கொடுத்துவிட்டு இருந்த பய இப்ப இப்படி சொன்னது நிம்மதியாக இருக்கு.. மறந்திடாத... முன்பு நீயும் நானும் பேசினதுதான். கல்யாணம் முடிஞ்சதும் நீயும் நானும் ஊர் ஊரா லாங்டூர் போகணும். அப்புறம் பேச்சு மாறக்கூடாது.
சரிடா.. சரிடா சொல்லும் போதே இதோ இப்போதே திருமணம் நடத்திய உணர்வில் லயித்திருந்தார். கொஞ்சமாய் நிம்மதி தோன்றி இருந்தாலும் இம்முறை
விஷயம் தெரிந்தால் என்ன சொல்வார்கள்... பொண்ணு பார்க்க வரும் போதே பார்க்க மாட்டேன் என வெளிய கிளம்பி போயிட்டா. இந்த பொண்ண கல்யாணம் பண்ணினா பையனோட வாழ்க்கை அவ்வளவுதான்.. ஒருவர் துவங்கி வைத்தால் போதுமே ஊரே பேசுவதற்கு... நாம் என்ன ஆட்கள் இல்லாத ஊரிலா குடி இருக்கிறோம்.
என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது என்ன நினைப்பதற்கு...
எதற்காகவும் இது வரை மகளின் மேல் கோபபடாதவர் தான். முதல் முதலாக
கோபம் வந்தது. என்ன பொண்ணு...
இப்படி செய்யாறா...அதிகமாக செல்லம் கொடுத்து விட்டோமோ!!!
சரியாக வளர்ப்பதில் தவறிவிட்டோமோ!!! பல வாராக மனதில் மகளை பற்றிய நினைவே ஓடிக்கொண்டு இருந்தது.பனிமலரின் தாயார் இறந்த போது அவளிற்கு
பன்னிரெண்டு வயது தான். ஒருவார காய்ச்சல் இவர்களது குடும்பத்தை உரு தெரியாமல் சிதைத்து போய் இருந்தது. இறக்கும் தருவாயில் இவனது கைகளை பற்றியபடி நம்ம பொண்ண பத்திரமாக பாத்துக்கங்க அவளை விட்டுடாதிங்க... என்றது தான் கடைசியாக பேசியது. அன்றிலிருந்து இன்றுவரை அவளுக்கு தாய் தந்தை இரண்டுமே இவரே ஆகி போனார்.
பனிமலரும் புத்திசாலி குழந்தை.. நடந்ததை புரிந்து கொண்டவள் எதற்காகவும் அடம்பிடித்து அழுதது இல்லை. இவருக்கு சிரமமாக இருந்தது அப்போது அவளது இடுப்பிற்கு கீழாய் வளர்ந்து இருந்த அவளது நீள கூந்தல் தான். தலைவாரி பிண்ண சிரமமாக இருக்க குதிரைவால் போடும் அளவிற்கு வெட்டியது தான் . மற்றபடி இன்று வரை எந்த சிரமமும் இல்லாமல் நாட்கள் சென்றிருந்தது.
கோவை கணபதியில் ஆரம்ப நாட்களிலேயே இந்த வீட்டை கட்டி இருந்தார். கிட்டத்தட்ட ஏழு சென்ட்டில் ஹால்,கிச்சன்,இரண்டு பெட்ரூம் சற்று பெரியதாய் இவர்களுக்கும் விருந்தினர் வந்தால் தங்குவதற்கு சிறியதாக இன்னொரு அறை என...அழகாய் அப்போதே வடிவமைத்து இருந்தார். வீட்டிற்கு பின் புறத்தில் சிறியதாய் ஒரு தோட்டம் அவரை பொறுத்தவரை நிறைவாய் வீட்டை கட்டி இருந்தார்.
உறவினர்கள் பலரும் இவரை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் எதையும் கேளாமல் மகளே உலகம் என
மாற்றிக்கொண்டவர். மணல்,ஜல்லி,செங்கல் மொத்த வியாபாரம் இவருடையது. பெரும்பாலும் அனைத்துமே போனிலேயே வியாபாரம் முடிந்து விடும். ஏற்றி அணுப்பும் போது குடோனில் இவர் இருந்தால் போதும்.
நல்ல வருமானம். அதுவே அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பலர் வற்புறுத்தும்படி இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அதுவும் குறைந்து ஒரு கட்டத்தில் கேட்பதையே நிறுத்தி இருந்தனர்.
தன் மேல் அவள் வைத்திருந்த பாசம்
அவளை இப்படி நடந்து கொள்ள செய்திருந்தது. முக்கியமாக தனது நண்பனிடம் எப்படி கூறுவது இதுவே தற்போது கவலை தந்து கொண்டு இருந்தது. இவரும் அபிநந்தனின் தகப்பனாரும் பள்ளியில் படித்த காலத்திலேயே நல்ல நண்பர்கள். அந்த உறவு இன்றும் தொடர்ந்து கொண்டிருந்தது. இவரை முழுவதும் தெரிந்ததால் அவரே தனது மகனுக்கு மலரை கேட்டிருந்தார்.
அவர் கேட்டபோது இருந்த அன்றைய
சந்தோஷம் மொத்தமாய் வடிந்திருந்தது தற்போது. அடிக்கின்ற போனின் சத்தத்தில் பழைய நினைவில் இருந்து மீண்டவர் யார் என பார்க்க அபிநந்தன் அழைத்திருந்தான்.
அங்கிள் உங்கள் பொண்ண பார்த்துட்டேன். முன்ன சொன்னது தான் எனக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு.. என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை. நான் அப்பாகிட்ட பேசிட்டு மறுபடியும் உங்க வீட்டிற்கு வரேன். உங்க பொண்ணுக்கு கொஞ்சம் பிடிவாதம் மத்தபடி ரொம்ப பாசகாரின்னு நினைக்கிறேன். வொரி பண்ணிக்காதிங்க அங்கிள்
அபி அவ வேண்டாம்ன்னு சொன்னா என்ன செய்ய...
அங்கிள் அவளோட சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது. அவளே உங்க கிட்ட ஒரு நாள் சொல்லுவா அபிய எனக்கு கட்டி வைங்கன்னு..
ஆனாலும் உனக்கு நிறைய நம்பிக்கைபா....
வாழறதே நம்பிக்கையால தான... சொன்னவன் சிரித்தபடி கால்ஸை கட் செய்ய இப்போது தான் அவருக்கு ஒரு வித அசுவாசம், நிம்மதி தோன்றியது.
அடுத்த சில நிமிடத்தில் அபிநந்தனின் தகப்பனார் செல்வம் அழைத்திருந்தார் .
மது... இப்ப சந்தோஷமா... என்னவோ பயந்திட்டு இருந்தே... இப்பதான் என் பையன் கூப்பிட்டு பேசினான். எனக்கு
ரொம்ப சந்தோஷமா இருக்கு. எவ்வளவு நாளா டிமிக்கி கொடுத்துவிட்டு இருந்த பய இப்ப இப்படி சொன்னது நிம்மதியாக இருக்கு.. மறந்திடாத... முன்பு நீயும் நானும் பேசினதுதான். கல்யாணம் முடிஞ்சதும் நீயும் நானும் ஊர் ஊரா லாங்டூர் போகணும். அப்புறம் பேச்சு மாறக்கூடாது.
சரிடா.. சரிடா சொல்லும் போதே இதோ இப்போதே திருமணம் நடத்திய உணர்வில் லயித்திருந்தார். கொஞ்சமாய் நிம்மதி தோன்றி இருந்தாலும் இம்முறை