K
kavi sowmi
Guest
அடுத்த நாள் காலை எழுந்து வரும் போதே சமையலறையில் நின்றிருந்தான் அபி..ஸாரி நேற்று செஞ்சதுக்கு பிராய்ச்சித்தமா... காலையில் என்னோட டிபன்... குறுமா ரெடி பண்ணிட்டேன் டேஸ்ட் பண்ணி பார்க்கறயா.. நேற்று பிசைஞ்ச மாவு பிரிஜ்ல இருந்து எடுத்துட்டேன்...கூறிய அபியை பார்த்தவளுக்கு நேற்றய கோபம் துளியும் இல்லை...இன்று அவனிடம் கொஞ்சமாய் வம்பிழுக்க தோன்றியது.
குட்மானிங் என ஆரம்பித்தவள் சாரை தான் உலக சுற்றுலா துறை அமைச்சரா பிரமோட் பண்ணி இருக்கறாங்களா...சாருக்கு ஊர் சுத்த பிடிக்குமோ... நம்ம பிரதமர் மாதிரி...
என்னடா காலையிலேயா என நினைத்தவன் இவளை திரும்பி பார்க்க... அவள் கண்களில் இருந்தது
முழுக்க முழுக்க கிண்டல் மட்டுமே..
கையில் கலக்கி கொண்டிருந்த காபியை இவளிடம் நீட்டியவன்... சிபிஐ மேடம் எதை கண்டு பிடிச்சிங்க..
பேஸ்புக்புல்லா உன்னோட ஊர் சுற்றின ப்ரோக்ராம் தான் இருக்கு அதுதான் கேட்டேன். நீ சரியான சோப்பு டப்பா போல..
நீ முழுசா படிக்கலையா.. ஊரோட பேர் மட்டும் இல்லை. அந்தந்த ஊர்ல என்ன ஸ்பெஷல் போக வர்ற ஆகிற செலவு எல்லாம் டிட்டெய்ல்லா கொடுத்து இருக்கிறேன். நிறைய பேருக்கு யூஸ் ஆகும் தெரியுமா.. ஆமாம் நீ ப்ரெண்ட் லிஸ்ட் இருக்கிறாயா என்ன... சொல்லவே இல்ல..
இருக்கிறேன் ஆனா என்ன பேர்ல இருக்கறேன்னு சொல்ல மாட்டேன். முடிஞ்சா கண்டு பிடி...
பேக் ஐடி.. தெளிவாத்தான் இருக்கற.. நான் கம்ப்யூட்டர் இன்ஜினியர்மா.. ரெட்டே செக்கன்ட் கண்டு பிடிச்சிடுவேன்.
பேசாத... டிரை பண்ணு... நேற்றைய கோபம் அவன் மேல் அவளுக்கு தற்சமயம் இல்லை . இருவருக்கும் நடுவே மெல்லிய நட்பு புதியதாய் உருவாகி இருந்தது .
தனது மொபைலை எடுத்தவன்... கொஞ்சம் கஷ்டம் தான் போல.. ஆயிரம் பேருக்கு மேல இருக்கறாங்க... இதோ பிடிச்சிட்டேன் என அவள் முகத்தை பார்த்தவன் ரொம்ப அறிவாளி மாதிரி தெரியலை. இது நீதான்... என்னது சன் பிளவரா...
இல்லை அது ஸ்னோ ப்ளவர்...
அவள் சொன்னதை கேட்டவர் சிரிக்க ஆரம்பித்தான். ஆனாலும் நீ அல்டிமேட் ஸ்னோ ப்ளவர்...
அபி வேண்டாம். ஓவரா சிரிக்காத...
ஒரு பேரை ஒழுங்கா வைக்க தெரியுதா....இத கண்டு வேற பிடிக்கணுமா...
கண்களும் சேர்ந்து அவன் சிரிப்பதை பார்த்தவளுக்கு அவனிடம் கோபமாக கூட பேச முடியவில்லை..அப்பா சொன்னது சரிதான் இவன் சிரிச்சா கண்ணும்கூடவே சிரிக்குது..சிரித்த முகம் அவளிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்கியது முகம் பார்க்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
எட்டு முப்பது மணிக்கு போன் வர பரபரப்பாக காணப்பட்டாள் மலர். இயல்பாக இல்லாமல் சற்றே பதட்டமாக அவளையே கவனித்தவன்..
என்ன ஆச்சு.. ஏன் இவ்வளவு பதட்டம்..ஏதாவது பிரச்சனையா .. மலரிடம் கேட்க ..
இப்பதான் கூப்பிட்டு சொன்னாங்க..
இன்றைக்கு லைசென்சுக்கு ஆர்டிஓ
ஆபிஸ் வரச்சொல்லி இருக்கறாங்க...
அதுக்கென்ன இப்போ...பதட்டபட எதுவுமே இல்லையே...
நான் இன்னும் கார் ஓட்ட சரியா கத்துக்கல... அதுக்குல்ல கூப்பிடறாங்க.
பயமாக இருக்கா.. பயப்படாத .. தைரியமாக ஓட்டு அது ஈசி தான். கிடைச்சிடும். நான் வேணும்னா கூட வரவா ..
வேண்டாம் நானே பார்த்துக்கறேன்.கொஞ்சம் நம்பிக்கை வந்தவலாய்... தேங்க்யூ என்றபடி புறப்பட்டாள். அவள் புறப்படவும் மதுசூதனனோடு இவனும் குடோனுக்கு சென்றிருந்தான்.
நேற்று இரவே சமைக்கும் பெண்மணியை வரச்சொல்லி இருந்ததால் பத்து மணிக்கு இவர்களது வீட்டு சமையல் பொறுப்பை ஏற்றிருந்தார்.
மதியம் இரண்டு மணிக்கு சாப்பிட வர.. இவர்கள் பார்த்தது மலரின் அழுது வீங்கிய முகத்தை... ஹால் சோபாவில் படுத்தபடி அழுதுகொண்டிருந்தாள். மதுசூதனன் ஒரு என்ன ஆச்சுமா என பதற மறுபுறம் அபி தவித்து நின்றான்.
மலர் எழுந்திரு என ஒருபுறம் மதுசூதனன் எழுப்ப கையில் நீருடன் அபி நின்றிருந்தான். மலர் எழுந்திருச்சி முதல்ல தண்ணீர் குடி மத்தத பிறகு பேசிக்கலாம்.
சமையற்கார அம்மாவோ வந்து அரைமணி நேரம் ஆச்சு வந்த நேரத்தில் இருந்து பாப்பா அழுதிட்டேதான் இருக்கு. என்ன சொல்லியும் கேட்கலை..
மலர் என்னடா ஏன் அழற...
அப்பா... என ஆரம்பித்து லைசென்ஸ் கிடைக்கலபா...அவள் சொன்ன டோனை கேட்வனுக்கு சிரிக்கதான் தோன்றியது.
மலர் இதுக்கா அழற... இது சின்ன விஷயம் இந்த தடவை இல்லாட்டி அடுத்த தடவை வாங்கிகலாம். இதுக்காக அழுவாங்களா.. நானும் உன்னை என்னவோ பெருசா பில்டப் பண்ணி வச்சிருந்தா நீ இப்படி அழுது அசிங்கப்படுத்தற...
உனக்கு தெரியாது. நான் இது வரை எதிலேயும் தோற்றதே இல்ல. இது தான் பஸ்ட்.
இது பெரிய விஷயமே இல்லை. நான் பஸ்ட் டைம் போகும் போது பயத்துல ஓடி வந்துவிட்டேன் தெரியுமா நீ வேணும்னா தாரு கிட்ட கேட்டு பாரு நான் லைசென்ஸ் வாங்கினத கதை கதையா சொல்லுவா.. உன்னொட டிரைனி உனக்கு சரியா சொல்லி தரல.. அதனால உன்னால சரியா பர்பாம் பண்ண வரல. இது தான நிஜம். மறுபடியும் தான் பத்து நாளுக்குல்ல லைசென்ஸ் போடலாமே. அடுத்த தடவை வாங்கிடலாம்.
குட்மானிங் என ஆரம்பித்தவள் சாரை தான் உலக சுற்றுலா துறை அமைச்சரா பிரமோட் பண்ணி இருக்கறாங்களா...சாருக்கு ஊர் சுத்த பிடிக்குமோ... நம்ம பிரதமர் மாதிரி...
என்னடா காலையிலேயா என நினைத்தவன் இவளை திரும்பி பார்க்க... அவள் கண்களில் இருந்தது
முழுக்க முழுக்க கிண்டல் மட்டுமே..
கையில் கலக்கி கொண்டிருந்த காபியை இவளிடம் நீட்டியவன்... சிபிஐ மேடம் எதை கண்டு பிடிச்சிங்க..
பேஸ்புக்புல்லா உன்னோட ஊர் சுற்றின ப்ரோக்ராம் தான் இருக்கு அதுதான் கேட்டேன். நீ சரியான சோப்பு டப்பா போல..
நீ முழுசா படிக்கலையா.. ஊரோட பேர் மட்டும் இல்லை. அந்தந்த ஊர்ல என்ன ஸ்பெஷல் போக வர்ற ஆகிற செலவு எல்லாம் டிட்டெய்ல்லா கொடுத்து இருக்கிறேன். நிறைய பேருக்கு யூஸ் ஆகும் தெரியுமா.. ஆமாம் நீ ப்ரெண்ட் லிஸ்ட் இருக்கிறாயா என்ன... சொல்லவே இல்ல..
இருக்கிறேன் ஆனா என்ன பேர்ல இருக்கறேன்னு சொல்ல மாட்டேன். முடிஞ்சா கண்டு பிடி...
பேக் ஐடி.. தெளிவாத்தான் இருக்கற.. நான் கம்ப்யூட்டர் இன்ஜினியர்மா.. ரெட்டே செக்கன்ட் கண்டு பிடிச்சிடுவேன்.
பேசாத... டிரை பண்ணு... நேற்றைய கோபம் அவன் மேல் அவளுக்கு தற்சமயம் இல்லை . இருவருக்கும் நடுவே மெல்லிய நட்பு புதியதாய் உருவாகி இருந்தது .
தனது மொபைலை எடுத்தவன்... கொஞ்சம் கஷ்டம் தான் போல.. ஆயிரம் பேருக்கு மேல இருக்கறாங்க... இதோ பிடிச்சிட்டேன் என அவள் முகத்தை பார்த்தவன் ரொம்ப அறிவாளி மாதிரி தெரியலை. இது நீதான்... என்னது சன் பிளவரா...
இல்லை அது ஸ்னோ ப்ளவர்...
அவள் சொன்னதை கேட்டவர் சிரிக்க ஆரம்பித்தான். ஆனாலும் நீ அல்டிமேட் ஸ்னோ ப்ளவர்...
அபி வேண்டாம். ஓவரா சிரிக்காத...
ஒரு பேரை ஒழுங்கா வைக்க தெரியுதா....இத கண்டு வேற பிடிக்கணுமா...
கண்களும் சேர்ந்து அவன் சிரிப்பதை பார்த்தவளுக்கு அவனிடம் கோபமாக கூட பேச முடியவில்லை..அப்பா சொன்னது சரிதான் இவன் சிரிச்சா கண்ணும்கூடவே சிரிக்குது..சிரித்த முகம் அவளிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்கியது முகம் பார்க்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
எட்டு முப்பது மணிக்கு போன் வர பரபரப்பாக காணப்பட்டாள் மலர். இயல்பாக இல்லாமல் சற்றே பதட்டமாக அவளையே கவனித்தவன்..
என்ன ஆச்சு.. ஏன் இவ்வளவு பதட்டம்..ஏதாவது பிரச்சனையா .. மலரிடம் கேட்க ..
இப்பதான் கூப்பிட்டு சொன்னாங்க..
இன்றைக்கு லைசென்சுக்கு ஆர்டிஓ
ஆபிஸ் வரச்சொல்லி இருக்கறாங்க...
அதுக்கென்ன இப்போ...பதட்டபட எதுவுமே இல்லையே...
நான் இன்னும் கார் ஓட்ட சரியா கத்துக்கல... அதுக்குல்ல கூப்பிடறாங்க.
பயமாக இருக்கா.. பயப்படாத .. தைரியமாக ஓட்டு அது ஈசி தான். கிடைச்சிடும். நான் வேணும்னா கூட வரவா ..
வேண்டாம் நானே பார்த்துக்கறேன்.கொஞ்சம் நம்பிக்கை வந்தவலாய்... தேங்க்யூ என்றபடி புறப்பட்டாள். அவள் புறப்படவும் மதுசூதனனோடு இவனும் குடோனுக்கு சென்றிருந்தான்.
நேற்று இரவே சமைக்கும் பெண்மணியை வரச்சொல்லி இருந்ததால் பத்து மணிக்கு இவர்களது வீட்டு சமையல் பொறுப்பை ஏற்றிருந்தார்.
மதியம் இரண்டு மணிக்கு சாப்பிட வர.. இவர்கள் பார்த்தது மலரின் அழுது வீங்கிய முகத்தை... ஹால் சோபாவில் படுத்தபடி அழுதுகொண்டிருந்தாள். மதுசூதனன் ஒரு என்ன ஆச்சுமா என பதற மறுபுறம் அபி தவித்து நின்றான்.
மலர் எழுந்திரு என ஒருபுறம் மதுசூதனன் எழுப்ப கையில் நீருடன் அபி நின்றிருந்தான். மலர் எழுந்திருச்சி முதல்ல தண்ணீர் குடி மத்தத பிறகு பேசிக்கலாம்.
சமையற்கார அம்மாவோ வந்து அரைமணி நேரம் ஆச்சு வந்த நேரத்தில் இருந்து பாப்பா அழுதிட்டேதான் இருக்கு. என்ன சொல்லியும் கேட்கலை..
மலர் என்னடா ஏன் அழற...
அப்பா... என ஆரம்பித்து லைசென்ஸ் கிடைக்கலபா...அவள் சொன்ன டோனை கேட்வனுக்கு சிரிக்கதான் தோன்றியது.
மலர் இதுக்கா அழற... இது சின்ன விஷயம் இந்த தடவை இல்லாட்டி அடுத்த தடவை வாங்கிகலாம். இதுக்காக அழுவாங்களா.. நானும் உன்னை என்னவோ பெருசா பில்டப் பண்ணி வச்சிருந்தா நீ இப்படி அழுது அசிங்கப்படுத்தற...
உனக்கு தெரியாது. நான் இது வரை எதிலேயும் தோற்றதே இல்ல. இது தான் பஸ்ட்.
இது பெரிய விஷயமே இல்லை. நான் பஸ்ட் டைம் போகும் போது பயத்துல ஓடி வந்துவிட்டேன் தெரியுமா நீ வேணும்னா தாரு கிட்ட கேட்டு பாரு நான் லைசென்ஸ் வாங்கினத கதை கதையா சொல்லுவா.. உன்னொட டிரைனி உனக்கு சரியா சொல்லி தரல.. அதனால உன்னால சரியா பர்பாம் பண்ண வரல. இது தான நிஜம். மறுபடியும் தான் பத்து நாளுக்குல்ல லைசென்ஸ் போடலாமே. அடுத்த தடவை வாங்கிடலாம்.