• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே.. வெண்பனிமலரே_6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
அடுத்த நாள் காலை எழுந்து வரும் போதே சமையலறையில் நின்றிருந்தான் அபி..ஸாரி நேற்று செஞ்சதுக்கு பிராய்ச்சித்தமா... காலையில் என்னோட டிபன்... குறுமா ரெடி பண்ணிட்டேன் டேஸ்ட் பண்ணி பார்க்கறயா.. நேற்று பிசைஞ்ச மாவு பிரிஜ்ல இருந்து எடுத்துட்டேன்...கூறிய அபியை பார்த்தவளுக்கு நேற்றய கோபம் துளியும் இல்லை...இன்று அவனிடம் கொஞ்சமாய் வம்பிழுக்க தோன்றியது.

குட்மானிங் என ஆரம்பித்தவள் சாரை தான் உலக சுற்றுலா துறை அமைச்சரா பிரமோட் பண்ணி இருக்கறாங்களா...சாருக்கு ஊர் சுத்த பிடிக்குமோ... நம்ம பிரதமர் மாதிரி...

என்னடா காலையிலேயா என நினைத்தவன் இவளை திரும்பி பார்க்க... அவள் கண்களில் இருந்தது
முழுக்க முழுக்க கிண்டல் மட்டுமே..

கையில் கலக்கி கொண்டிருந்த காபியை இவளிடம் நீட்டியவன்... சிபிஐ மேடம் எதை கண்டு பிடிச்சிங்க..

பேஸ்புக்புல்லா உன்னோட ஊர் சுற்றின ப்ரோக்ராம் தான் இருக்கு அதுதான் கேட்டேன். நீ சரியான சோப்பு டப்பா போல..

நீ முழுசா படிக்கலையா.. ஊரோட பேர் மட்டும் இல்லை. அந்தந்த ஊர்ல என்ன ஸ்பெஷல் போக வர்ற ஆகிற செலவு எல்லாம் டிட்டெய்ல்லா கொடுத்து இருக்கிறேன். நிறைய பேருக்கு யூஸ் ஆகும் தெரியுமா.. ஆமாம் நீ ப்ரெண்ட் லிஸ்ட் இருக்கிறாயா என்ன... சொல்லவே இல்ல..

இருக்கிறேன் ஆனா என்ன பேர்ல இருக்கறேன்னு சொல்ல மாட்டேன். முடிஞ்சா கண்டு பிடி...

பேக் ஐடி.. தெளிவாத்தான் இருக்கற.. நான் கம்ப்யூட்டர் இன்ஜினியர்மா.. ரெட்டே செக்கன்ட் கண்டு பிடிச்சிடுவேன்.

பேசாத... டிரை பண்ணு... நேற்றைய கோபம் அவன் மேல் அவளுக்கு தற்சமயம் இல்லை . இருவருக்கும் நடுவே மெல்லிய நட்பு புதியதாய் உருவாகி இருந்தது .

தனது மொபைலை எடுத்தவன்... கொஞ்சம் கஷ்டம் தான் போல.. ஆயிரம் பேருக்கு மேல இருக்கறாங்க... இதோ பிடிச்சிட்டேன் என அவள் முகத்தை பார்த்தவன் ரொம்ப அறிவாளி மாதிரி தெரியலை. இது நீதான்... என்னது சன் பிளவரா...

இல்லை அது ஸ்னோ ப்ளவர்...

அவள் சொன்னதை கேட்டவர் சிரிக்க ஆரம்பித்தான். ஆனாலும் நீ அல்டிமேட் ஸ்னோ ப்ளவர்...

அபி வேண்டாம். ஓவரா சிரிக்காத...

ஒரு பேரை ஒழுங்கா வைக்க தெரியுதா....இத கண்டு வேற பிடிக்கணுமா...

கண்களும் சேர்ந்து அவன் சிரிப்பதை பார்த்தவளுக்கு அவனிடம் கோபமாக கூட பேச முடியவில்லை..அப்பா சொன்னது சரிதான் இவன் சிரிச்சா கண்ணும்கூடவே சிரிக்குது..சிரித்த முகம் அவளிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்கியது முகம் பார்க்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

எட்டு முப்பது மணிக்கு போன் வர பரபரப்பாக காணப்பட்டாள் மலர். இயல்பாக இல்லாமல் சற்றே பதட்டமாக அவளையே கவனித்தவன்..

என்ன ஆச்சு.. ஏன் இவ்வளவு பதட்டம்..ஏதாவது பிரச்சனையா .. மலரிடம் கேட்க ..

இப்பதான் கூப்பிட்டு சொன்னாங்க..
இன்றைக்கு லைசென்சுக்கு ஆர்டிஓ
ஆபிஸ் வரச்சொல்லி இருக்கறாங்க...

அதுக்கென்ன இப்போ...பதட்டபட எதுவுமே இல்லையே...

நான் இன்னும் கார் ஓட்ட சரியா கத்துக்கல... அதுக்குல்ல கூப்பிடறாங்க.

பயமாக இருக்கா.. பயப்படாத .. தைரியமாக ஓட்டு அது ஈசி தான். கிடைச்சிடும். நான் வேணும்னா கூட வரவா ..

வேண்டாம் நானே பார்த்துக்கறேன்.கொஞ்சம் நம்பிக்கை வந்தவலாய்... தேங்க்யூ என்றபடி புறப்பட்டாள். அவள் புறப்படவும் மதுசூதனனோடு இவனும் குடோனுக்கு சென்றிருந்தான்.

நேற்று இரவே சமைக்கும் பெண்மணியை வரச்சொல்லி இருந்ததால் பத்து மணிக்கு இவர்களது வீட்டு சமையல் பொறுப்பை ஏற்றிருந்தார்.

மதியம் இரண்டு மணிக்கு சாப்பிட வர.. இவர்கள் பார்த்தது மலரின் அழுது வீங்கிய முகத்தை... ஹால் சோபாவில் படுத்தபடி அழுதுகொண்டிருந்தாள். மதுசூதனன் ஒரு என்ன ஆச்சுமா என பதற மறுபுறம் அபி தவித்து நின்றான்.

மலர் எழுந்திரு என ஒருபுறம் மதுசூதனன் எழுப்ப கையில் நீருடன் அபி நின்றிருந்தான். மலர் எழுந்திருச்சி முதல்ல தண்ணீர் குடி மத்தத பிறகு பேசிக்கலாம்.

சமையற்கார அம்மாவோ வந்து அரைமணி நேரம் ஆச்சு வந்த நேரத்தில் இருந்து பாப்பா அழுதிட்டேதான் இருக்கு. என்ன சொல்லியும் கேட்கலை..

மலர் என்னடா ஏன் அழற...

அப்பா... என ஆரம்பித்து லைசென்ஸ் கிடைக்கலபா...அவள் சொன்ன டோனை கேட்வனுக்கு சிரிக்கதான் தோன்றியது.

மலர் இதுக்கா அழற... இது சின்ன விஷயம் இந்த தடவை இல்லாட்டி அடுத்த தடவை வாங்கிகலாம். இதுக்காக அழுவாங்களா.. நானும் உன்னை என்னவோ பெருசா பில்டப் பண்ணி வச்சிருந்தா நீ இப்படி அழுது அசிங்கப்படுத்தற...

உனக்கு தெரியாது. நான் இது வரை எதிலேயும் தோற்றதே இல்ல. இது தான் பஸ்ட்.

இது பெரிய விஷயமே இல்லை. நான் பஸ்ட் டைம் போகும் போது பயத்துல ஓடி வந்துவிட்டேன் தெரியுமா நீ வேணும்னா தாரு கிட்ட கேட்டு பாரு நான் லைசென்ஸ் வாங்கினத கதை கதையா சொல்லுவா.. உன்னொட டிரைனி உனக்கு சரியா சொல்லி தரல.. அதனால உன்னால சரியா பர்பாம் பண்ண வரல. இது தான நிஜம். மறுபடியும் தான் பத்து நாளுக்குல்ல லைசென்ஸ் போடலாமே. அடுத்த தடவை வாங்கிடலாம்.
 




K

kavi sowmi

Guest
இல்ல இனி அந்த ஆளுகிட்ட கத்துக்க நான் போக மாட்டேன். ஒழுங்கா சொல்லியே தரல. முழுசா கால்மணி நேரம் கூட ஓட்ட விடறது இல்லை.

ஓகே போக வேண்டாம். அதுக்காக இப்படி தான் அழுவயா.. நான் வேணும்னா உனக்கு சொல்லி தரவா..

இப்பதான் பயந்து ஓடி வந்தேன்னு சொன்ன...அப்ப அது பொய்யா..

அது என்னுடைய பத்தொன்பதாவது வயசுல.. அப்ப நான் லைசென்ஸ் வாங்க போன இடத்துல எட்டு போடற ப்ளேஸ் ரொம்ப குறுகலா இருந்தது. பக்கத்தில் பெரிய மதில் சுவர் வேற.. முதல் ஆள் எட்டு போடறேன்னு மதில்ல போய் மோதினான் பாரு... அதுக்கப்புறம் தைரியம் வரும்ங்கற.. ஓடியே வந்துட்டைன் ஆனா..என்னோட சிஸ்டருக்கு கார் ஓட்ட நான் தான் கத்துக்கொடுத்தேன். டெல்லியில் எவ்வளவு அழகா வண்டி ஓட்டறா தெரியுமா.. என்ன என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா..நீ வேணா அவகிட்ட பேசறையா.

இப்படியே பேச முடியாது. குரல் தெரிஞ்சிடும் அழுதிருக்கறேன்னு..
வேண்டாம் நான் அப்புறம் பேசறேன் இன்னும் அழுகை மிச்சம் இருந்தது.

சரி முகம் கழுகிட்டு வா முதல்ல... அப்புறம் கார் ஓட்ட எப்ப சொல்லி தர... இப்ப சாப்பிடதும் கிளம்பலாமா..

இப்பவா...கேட்டவளுக்கே சந்தேகம் தான் இவன் நிஜமாகவே சொல்லி தருவானா...

ஆமாம் உனக்கு எந்த அளவுக்கு தெரியும்ங்கறத பார்த்தா தானே அதுக்கேத்தமாதிரி சொல்லி தர முடியும். அங்கிள் நீங்களும் வாங்க... சும்மா கொஞ்ச தூரம் சின்ன டிரைவ்..

ஆமாம்டா.. வா நானும் வரேன்.மூன்று மணிக்கு மூவரும் கிளம்பி இருந்தனர். வாசலில் வண்டியை நிறுத்தியவன் இவளிடம் வா... டிரைவிங் சீட்ல உட்காரு ... எங்கே வண்டியை ஸ்டார்ட் பண்ணு பார்க்கலாம். வண்டியை ஸ்டார்ட் செய்தவள் கிளச்சை விட வண்டியை குழுங்கி நின்றிருந்தது.

ஸ்டாடிங் டிரபில்...

ஆமாம் அங்கேயும் இப்படி தான் ஆச்சு. அந்த ஆள் சரியான சிடுமூஞ்சி எதுவுமே சொல்லாமல் இறக்கி விட்டுட்டான். இறங்கும் போது டிரைனிங் பத்தாது அப்படின்னு சொல்லிட்டான். அசிங்கமான போச்சு தெரியுமா..

பார்த்தேன்.. ஒரு மணி நேரம் லேட்டா வீட்டுக்கு வந்திருந்தால் வீடு கண்ணீர்ல முழ்கி இருக்கும். நல்ல வேளை சீக்கிரம் வந்து வீட்டை காப்பாத்திட்டேன். அங்கிள் நிஜம் தானே..

என்ன கிண்டல் பண்ணறத விட்டுட்டு
ஒழுங்கா சொல்லி தா...

ஆப் கிளச்ச கரைக்டா பிடி... அவ்வளவுதான் மூவ் பண்ணு...
எஸ்.. இப்போ கியரை சேன்ஜ் பண்ணு... பதட்டபடாத... அக்ஸிலேட்டர வேகமா கொடுக்காத.. மிடியம் ஸ்பீடு போதும். ஸ்டேயரிங்க கரெக்டா பிடி... இங்க அங்கே திருப்பாத .. அவனுடைய சொல்வதை ஒவ்வொன்றையும் கேட்டு அதன் படி செய்து கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் எந்த பயமும் இன்றி வண்டி ஓட்டியவள் ஓரமாக நிறுத்தியபட...
இவன் புறம் திரும்பி வீட்டுக்கு போகலாமா என கேட்க... நேரம் பார்த்தவன் நான்கை நெருங்கிக் கொண்டு இருந்தது.

மலர் இங்கேயிருந்து மருதமலை கோவில் பக்கம்தான் போகலாமா என கேட்க... இவள் இவளது தந்தையின் முகம் பார்த்தாள்.

போறதுன்னா போகலாம்டா. நாம கோவிலுக்கு போயும் ரொம்ப நாள் ஆச்சே...

வண்டியை மறுபடியும் ஸ்டாட் செய்தவள் மருதமலையின் பாதையில் வண்டியை செல்லுத்தினாள். சின்ன சின்ன திருத்தங்களை சொல்லியபடி வந்தவன் அடிவாரம் வருகையில் வண்டியை நிறுத்தியவளை பார்த்து...

என்ன நிப்பாட்டியாச்சு.. இவ்வளவு தூரம் ஓட்டினமாதிரி தான் வண்டியை மேல விடு பயப்படாத.. நான் கூடதானே இருக்கிறேன்.

இல்லை அபி. இந்த மலையை பார்த்தாலே பயமா இருக்கு. நீங்க பக்கத்தில் இருந்ததால தான் இவ்வளவு தூரம் ஓட்டினேன். போதும் நீங்க வந்து ஓட்டுங்க..நான் இன்னோரு நாள் வேணும்னா ஓட்டி காட்டறேன் .

டிரைவிங்னா எல்லாம் தானே ஓட்டணும். இன்னோரு நாள் இத மாதிரி அமையுமா... நீ வண்டியை எடு.

ஆமாம்டா வண்டியை மேல விடு. அபி பக்கத்தில் தானே இருக்கிறான். எம் பொண்ணு தைரியசாலி.. ஓட்டுவா...

அப்பா என்றவள் யோசிக்காது மறுபடியும் வண்டியை ஓட்டினாள். கொஞ்சம் படபடப்பு, பயம் மொத்த கலவையாய் மனம் பிரதிபளிக்க
சரியாக வண்டியை அதனது பார்ங்கில் நிறுத்தினாள்.

சூப்பர்... மலர். அவ்வளவுதான்...

எங்கே அவ்வளவுதான் கையெல்லாம் நடுங்குது பாருங்க என கையை நீட்ட உண்மையிலேயே கை நடுங்கிக் கொண்டு இருந்தது.

அவளது கைகளை தனது ஒரு கையில் வைத்தபடி மறுகையால் பற்றியவன் ரிலாக்ஸ் மலர்... என கூற அவனது கதகதப்பான கை அந்த நிமிடம் நானிருக்கிறேன் உனக்கு என கூறுவது போல் தோன்ற... பயம் விலக பாதுகாப்பு உணர்வோடு நிம்மதி தோன்றியது.

இவளோடு மதுசூதனனும் இறங்க படி ஏற ஆரம்பித்தனர். மாலை நேரத்தில் இதமான காற்று கூடவே கோவிலிலும் கூட்டம் அதிகமில்லாத மாலை வேளை... நிம்மதியான தெய்வ தரிசனம் மூவருக்கும் கிடைத்தது.

அர்ச்சனை பொருட்களை பெற்று கொண்டவர்கள் கோவிலை மெதுவாக வலம்வர ... அடுத்ததாக பாம்பாட்டி சித்தர் கோவிலுக்கு செல்ல படிகளில் இறங்கினர். முன்பாக மவர் வேகமாக நடக்க இவளுக்கு சற்று தொலைவில்
 




K

kavi sowmi

Guest
மதுசூதனனும் அபியும் பேசியபடி வந்து கொண்டிருந்தனர். அது மழைக்காலம் ஆதலால் சிறு ஓடை உற்பத்தி ஆகி பாம்பாட்டிசித்தர் கோவிலுக்கு செல்லும் வழியில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
பெறும்பாலும் வரண்டிருக்க... அதிக மழை பொழியும் நாட்களில் தண்ணீர் வரத்து ஒரளவுக்கு இருக்கும்.

இதை பார்த்தவன் அருகில் சென்று பார்க்க நினைக்க.. மலரோ சற்று தூரமாய் சென்றிருந்தாள். மலர்..மலர் என அழைத்தான்.. அவளோ சற்றே தூரமாய் சென்றிருக்க இவன் அழைத்தது கேட்க வில்லை.
அருகில் சென்று கொண்டிருந்த வயதான பெண்மணியை
அழைத்தவன் இவளை சுட்டி காட்டி இங்கு வரச் சொல்லி விட்டு போகும் படி உறைத்தவன் அந்த இடத்தில் நின்றபடி மதுசூதனனோடு பேசிக்கொண்டு இருந்தான்.

இவளது அருகில் சென்ற அந்த பெண்மணியோ... ஏனுங்கம்மணி...
உன்ற ஊட்டுக்காரரு அங்கே கூப்பிடறாரு பாரு. என்னன்னு கேட்டுட்டு வா அம்மணி என்றபடி விலகி நடக்க திகைத்தபடி திரும்பி பார்த்தாள்.

அங்கே சற்று தொலைவில் இவளது தந்தையின் கைகளை பற்றியபடி சிரித்தபடி பேசிக்கொண்டு இருந்தான். அவரது தந்தையின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது. இவள் திரும்பி பார்ப்பதை உணர்ந்தவன் இங்கே வா என்பது போல கைகளை ஆட்டியவன் மறுபடியும் அவர் புறம் திரும்பி பேசிக்கொண்டு இருந்தான் திகைத்த இவளது மனநிலை புரியாமல்..

பனிமலரே உருகாதே!!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
Me Second,
சௌமி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவி சௌமி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top