K
kavi sowmi
Guest
கோவிலில் தரிசனம் முடித்து திரும்பி வருகையில் மூவருமே அவ்வளவு நிம்மதியாக உணர்ந்தனர். மலர் இன்றைக்கு போதும் இனி நான் வண்டி ஓட்டறேன் ஜஸ்ட் கவனிக்க மட்டும் செய்... சரியா என்றபடி வண்டி ஓட்ட அருகில் இருந்தவளுக்கு அவள் செய்த சிறு சிறு தவறுகளை சுட்டிகாட்டியபடி வந்து சேர்ந்தனர்.
வீட்டின் உள் வரவும் அபிக்கு போன் வந்தது அவனது தந்தையிடம் இருந்து..
அபி பாட்டி பேசணும்ன்னு சொல்லறாங்கடா பேசறயா...
பாட்டி... என்றதும் பாட்டியின் பாச குரல் செல்பேசி வழியே வந்தது.
அபி இந்த பாட்டிய எப்படா பார்க்க வரப்போற ...
வேதா பாட்டி எல்லாம் உன்னாலதான் எப்ப பாரு கல்யாணம் கல்யாணம் சொல்லியே அந்த பக்கம் வர விடலை. நான் இப்போதைக்கு அங்கே வர்ற ஐடியா இல்லை. கூப்பிடாதிங்க...
டேய் தெரியும்டா தெரியும். என் பேத்தி எல்லாத்தையும் போன்ல சொல்லிட்டா. எப்ப கூப்பிட்டு வர்ற..நானும் கண்ண மூடறதுக்குல்ல உன்னோடு குழந்தையையும் பார்த்துட்டா நிம்மதியா போவேன்ல..
கல்யாணத்துக்கே பொண்ண காணோம்மாம் நீ கொள்ளு பேரன், பேத்திக்கு போயிட்ட போனை வை வேதா...
டேய் எப்ப பாரு பேரை சொல்லற.. உன்னோட தாத்தா ஒரு நாள் கூட பேர் சொல்லி கூப்பிட்டது இல்லை. நீ எப்ப பாரு பேர் வச்சவனாட்டம் கூப்பிடற...
வேதா வயசானகாலத்துல ஒழுங்கா இருக்காம காலை உடைச்சிகிட்டு என்ன வேற டார்ச்சர் பண்ணற கல்யாணம் பண்ணிக்கோ... கடைசி ஆசையின்னு... அதுக்கெல்லாம் நான் தலைகீழாக நின்றால் கூட இங்கே நடக்காது போல இருக்கு.
ஏன் பேராண்டி அப்படி சொல்லற.. நீ ராஜாடா உனக்கென்ன குறை உன்னை பிடிக்காம கூட போகுமா நான் எதுவுமே உன்னை கேட்கல ஒரு தடவை வந்து பார்த்துட்டு போடா..
வேதா இப்படி பேசிதான் ஆளை கவுக்கற... இந்த வாரம் வரேன் சரியா... ஒரு நாளு தான். அதுக்குமேல தங்க சொல்ல கூடாது.
சரிடா.. சரிடா உன் அம்மா என்னுடைய முகத்தையே பார்க்கறா... அவள்கிட்டேயும் ரெண்டு வார்த்தை பேசிடு..
குடுங்க பாட்டியின் என்றவன் அவரோடு பேச ஆரம்பிக்க
மேலும் பத்து நிமிடங்கள் கழித்து கட் செய்ய அருகில் மதுசூதனன் நிற்பதை பார்த்தவன் சொல்லுங்க அங்கிள்... என்ன விஷயம்...
எனக்கொரு ஐடியா தோனிச்சு... உங்க பாட்டி மாதிரி நானும் கீழ விழுந்து காலை உடைச்சிகிட்டு..
என்னோட கடைசி ஆசைன்னு சொன்னா..
சொன்னா...சொல்லுங்க அங்கிள்... குழந்தை போல குதுகலமாய் கூறியவரை சிரித்தபடி பார்த்தவன்... என்ன பிளான் அதையும் நீங்களே சொல்லுங்க அவனுடைய முகத்தை பார்க்க அதில் தெரிந்த குறுஞ்சிரிப்பை பார்த்தபடியே... அபி
நான் வேணும்னா மாடியில் இருந்து குதிக்கட்டா..
கால் உடையாது அங்கிள் ஒரேடியா போயிடுவிங்க பரவாயில்லையா...
ஐயோ... அப்ப இந்த படிக்கட்டு...
அங்கிள் நான் ஒன்று சொல்லவா உங்க பொண்ணுகிட்ட நான் தான் நீங்க பார்த்து வச்சிருக்க பையன்னு மட்டும் சொல்லுங்கள். அந்த நிமிஷம் என்னோட பெட்டி படுக்கையை ரோட்டில் தூக்கி போட்டுடுவா.. அப்புறம் இந்த ஐடியா உங்க பொண்ணுக்கு செட் ஆகாது. இப்பவே இப்படி சொல்லறவ உங்களுக்கு முடியலைன்னா அதுவே அவளுக்கு காரணமாயிடும். அப்பாவை நான் தான் பார்ப்பேன்னு... அதுக்கப்புறம் நீங்களே ஆசைபட்டாலும் உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்காது.
அதனால இந்த மாதிரி யோசிக்காதிங்க. நான் தான் சொன்னேன்ல.. சரி பண்ணிடலாம்.
மலர் எங்கே. ..அங்கிள்
அவளுக்கு போன் வந்ததுபா.. தோட்டம் பக்கம் போனா வந்திடுவா..
அங்கே மலரின் தோழி நிஷாவோடு பேசிக்கொண்டு இருந்தாள் அவளோ அவளை பார்ட்டிக்கு அழைத்து கொண்டிருந்தாள். அன்றைக்கு பேசினோமே பார்ட்டி தர்றேன்னு ஹோட்டல் பாப்பீஸ்ல ..இன்றைக்கு அரேன்ஜ் பண்ணி இருக்கு நீ கிளம்பி வா..
தீடின்னு சொன்னா எப்படி நிஷா அப்பாகிட்ட முன்னமே சொல்லவே இல்லையே இப்படி சொன்னா எப்படி..
மலர் எல்லோர்கிட்டேயும் சொல்லிவிட்டேன் நீதான் பாக்கி காலையில் இருந்து எத்தனை தடவை கூப்பிட்டு இருக்கிறேன்னு பாரு. நீதான் அட்டென் பண்ணல..
புரியுது நிஷா...ஆனா...
மலர் நீ இருந்தால்தான் நல்லா இருக்கும். இல்லாட்டி அந்த பார்ட்டியே போர் தான் ப்ளீஸ் வந்திடு...
ஓகே நிஷா அப்பாகிட்ட கேட்கிறேன்.டைம் என்ன..
ஏழு டூ ஒன்பது அன்றைக்கு சொன்னேன்ல. எப்படியும் முடிய பத்து மணி ஆகிவிடும் நான் அங்கே போனதும் கூப்பிடறேன்.
சரிடி என கட் செய்து விட்டு வந்தவள் தந்தையிடம் அணுமதி கேட்க வந்து நின்றாள். அடுத்து தொடக்க இருக்கும் பூகம்பத்தை உணராமல்...சாதாரணமாக அப்பாவின் அருகில் ஷோபாவில் அமர்ந்தவள் அப்பா.. நிஷாவுக்கு மேரேஜ்பிக்ஸ் ஆகி இருக்கு அவ காலேஜ் ப்ரெண்டுங்க எல்லோருக்கும் பார்ட்டி தர்றா.. என்னையும் கூப்பிடறா நான் போயிட்டு ஒன்பது மணிக்குல்ல திரும்பி வந்திடறேன் என்னப்பா சொல்லறிங்க என ஆரம்பிக்க...
அருகில் இருந்த அபியோ
பார்ட்டிக்கா அதுவும் நைட்டா பாதுகாப்பு இருக்காது அங்கிள் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க என கூறியது தான் தெரியும்...
வீட்டின் உள் வரவும் அபிக்கு போன் வந்தது அவனது தந்தையிடம் இருந்து..
அபி பாட்டி பேசணும்ன்னு சொல்லறாங்கடா பேசறயா...
பாட்டி... என்றதும் பாட்டியின் பாச குரல் செல்பேசி வழியே வந்தது.
அபி இந்த பாட்டிய எப்படா பார்க்க வரப்போற ...
வேதா பாட்டி எல்லாம் உன்னாலதான் எப்ப பாரு கல்யாணம் கல்யாணம் சொல்லியே அந்த பக்கம் வர விடலை. நான் இப்போதைக்கு அங்கே வர்ற ஐடியா இல்லை. கூப்பிடாதிங்க...
டேய் தெரியும்டா தெரியும். என் பேத்தி எல்லாத்தையும் போன்ல சொல்லிட்டா. எப்ப கூப்பிட்டு வர்ற..நானும் கண்ண மூடறதுக்குல்ல உன்னோடு குழந்தையையும் பார்த்துட்டா நிம்மதியா போவேன்ல..
கல்யாணத்துக்கே பொண்ண காணோம்மாம் நீ கொள்ளு பேரன், பேத்திக்கு போயிட்ட போனை வை வேதா...
டேய் எப்ப பாரு பேரை சொல்லற.. உன்னோட தாத்தா ஒரு நாள் கூட பேர் சொல்லி கூப்பிட்டது இல்லை. நீ எப்ப பாரு பேர் வச்சவனாட்டம் கூப்பிடற...
வேதா வயசானகாலத்துல ஒழுங்கா இருக்காம காலை உடைச்சிகிட்டு என்ன வேற டார்ச்சர் பண்ணற கல்யாணம் பண்ணிக்கோ... கடைசி ஆசையின்னு... அதுக்கெல்லாம் நான் தலைகீழாக நின்றால் கூட இங்கே நடக்காது போல இருக்கு.
ஏன் பேராண்டி அப்படி சொல்லற.. நீ ராஜாடா உனக்கென்ன குறை உன்னை பிடிக்காம கூட போகுமா நான் எதுவுமே உன்னை கேட்கல ஒரு தடவை வந்து பார்த்துட்டு போடா..
வேதா இப்படி பேசிதான் ஆளை கவுக்கற... இந்த வாரம் வரேன் சரியா... ஒரு நாளு தான். அதுக்குமேல தங்க சொல்ல கூடாது.
சரிடா.. சரிடா உன் அம்மா என்னுடைய முகத்தையே பார்க்கறா... அவள்கிட்டேயும் ரெண்டு வார்த்தை பேசிடு..
குடுங்க பாட்டியின் என்றவன் அவரோடு பேச ஆரம்பிக்க
மேலும் பத்து நிமிடங்கள் கழித்து கட் செய்ய அருகில் மதுசூதனன் நிற்பதை பார்த்தவன் சொல்லுங்க அங்கிள்... என்ன விஷயம்...
எனக்கொரு ஐடியா தோனிச்சு... உங்க பாட்டி மாதிரி நானும் கீழ விழுந்து காலை உடைச்சிகிட்டு..
என்னோட கடைசி ஆசைன்னு சொன்னா..
சொன்னா...சொல்லுங்க அங்கிள்... குழந்தை போல குதுகலமாய் கூறியவரை சிரித்தபடி பார்த்தவன்... என்ன பிளான் அதையும் நீங்களே சொல்லுங்க அவனுடைய முகத்தை பார்க்க அதில் தெரிந்த குறுஞ்சிரிப்பை பார்த்தபடியே... அபி
நான் வேணும்னா மாடியில் இருந்து குதிக்கட்டா..
கால் உடையாது அங்கிள் ஒரேடியா போயிடுவிங்க பரவாயில்லையா...
ஐயோ... அப்ப இந்த படிக்கட்டு...
அங்கிள் நான் ஒன்று சொல்லவா உங்க பொண்ணுகிட்ட நான் தான் நீங்க பார்த்து வச்சிருக்க பையன்னு மட்டும் சொல்லுங்கள். அந்த நிமிஷம் என்னோட பெட்டி படுக்கையை ரோட்டில் தூக்கி போட்டுடுவா.. அப்புறம் இந்த ஐடியா உங்க பொண்ணுக்கு செட் ஆகாது. இப்பவே இப்படி சொல்லறவ உங்களுக்கு முடியலைன்னா அதுவே அவளுக்கு காரணமாயிடும். அப்பாவை நான் தான் பார்ப்பேன்னு... அதுக்கப்புறம் நீங்களே ஆசைபட்டாலும் உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்காது.
அதனால இந்த மாதிரி யோசிக்காதிங்க. நான் தான் சொன்னேன்ல.. சரி பண்ணிடலாம்.
மலர் எங்கே. ..அங்கிள்
அவளுக்கு போன் வந்ததுபா.. தோட்டம் பக்கம் போனா வந்திடுவா..
அங்கே மலரின் தோழி நிஷாவோடு பேசிக்கொண்டு இருந்தாள் அவளோ அவளை பார்ட்டிக்கு அழைத்து கொண்டிருந்தாள். அன்றைக்கு பேசினோமே பார்ட்டி தர்றேன்னு ஹோட்டல் பாப்பீஸ்ல ..இன்றைக்கு அரேன்ஜ் பண்ணி இருக்கு நீ கிளம்பி வா..
தீடின்னு சொன்னா எப்படி நிஷா அப்பாகிட்ட முன்னமே சொல்லவே இல்லையே இப்படி சொன்னா எப்படி..
மலர் எல்லோர்கிட்டேயும் சொல்லிவிட்டேன் நீதான் பாக்கி காலையில் இருந்து எத்தனை தடவை கூப்பிட்டு இருக்கிறேன்னு பாரு. நீதான் அட்டென் பண்ணல..
புரியுது நிஷா...ஆனா...
மலர் நீ இருந்தால்தான் நல்லா இருக்கும். இல்லாட்டி அந்த பார்ட்டியே போர் தான் ப்ளீஸ் வந்திடு...
ஓகே நிஷா அப்பாகிட்ட கேட்கிறேன்.டைம் என்ன..
ஏழு டூ ஒன்பது அன்றைக்கு சொன்னேன்ல. எப்படியும் முடிய பத்து மணி ஆகிவிடும் நான் அங்கே போனதும் கூப்பிடறேன்.
சரிடி என கட் செய்து விட்டு வந்தவள் தந்தையிடம் அணுமதி கேட்க வந்து நின்றாள். அடுத்து தொடக்க இருக்கும் பூகம்பத்தை உணராமல்...சாதாரணமாக அப்பாவின் அருகில் ஷோபாவில் அமர்ந்தவள் அப்பா.. நிஷாவுக்கு மேரேஜ்பிக்ஸ் ஆகி இருக்கு அவ காலேஜ் ப்ரெண்டுங்க எல்லோருக்கும் பார்ட்டி தர்றா.. என்னையும் கூப்பிடறா நான் போயிட்டு ஒன்பது மணிக்குல்ல திரும்பி வந்திடறேன் என்னப்பா சொல்லறிங்க என ஆரம்பிக்க...
அருகில் இருந்த அபியோ
பார்ட்டிக்கா அதுவும் நைட்டா பாதுகாப்பு இருக்காது அங்கிள் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க என கூறியது தான் தெரியும்...