• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே வெண்பனி மலரே_7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
கோவிலில் தரிசனம் முடித்து திரும்பி வருகையில் மூவருமே அவ்வளவு நிம்மதியாக உணர்ந்தனர். மலர் இன்றைக்கு போதும் இனி நான் வண்டி ஓட்டறேன் ஜஸ்ட் கவனிக்க மட்டும் செய்... சரியா என்றபடி வண்டி ஓட்ட அருகில் இருந்தவளுக்கு அவள் செய்த சிறு சிறு தவறுகளை சுட்டிகாட்டியபடி வந்து சேர்ந்தனர்.

வீட்டின் உள் வரவும் அபிக்கு போன் வந்தது அவனது தந்தையிடம் இருந்து..
அபி பாட்டி பேசணும்ன்னு சொல்லறாங்கடா பேசறயா...

பாட்டி... என்றதும் பாட்டியின் பாச குரல் செல்பேசி வழியே வந்தது.
அபி இந்த பாட்டிய எப்படா பார்க்க வரப்போற ...

வேதா பாட்டி எல்லாம் உன்னாலதான் எப்ப பாரு கல்யாணம் கல்யாணம் சொல்லியே அந்த பக்கம் வர விடலை. நான் இப்போதைக்கு அங்கே வர்ற ஐடியா இல்லை. கூப்பிடாதிங்க...

டேய் தெரியும்டா தெரியும். என் பேத்தி எல்லாத்தையும் போன்ல சொல்லிட்டா. எப்ப கூப்பிட்டு வர்ற..நானும் கண்ண மூடறதுக்குல்ல உன்னோடு குழந்தையையும் பார்த்துட்டா நிம்மதியா போவேன்ல..

கல்யாணத்துக்கே பொண்ண காணோம்மாம் நீ கொள்ளு பேரன், பேத்திக்கு போயிட்ட போனை வை வேதா...

டேய் எப்ப பாரு பேரை சொல்லற.. உன்னோட தாத்தா ஒரு நாள் கூட பேர் சொல்லி கூப்பிட்டது இல்லை. நீ எப்ப பாரு பேர் வச்சவனாட்டம் கூப்பிடற...

வேதா வயசானகாலத்துல ஒழுங்கா இருக்காம காலை உடைச்சிகிட்டு என்ன வேற டார்ச்சர் பண்ணற கல்யாணம் பண்ணிக்கோ... கடைசி ஆசையின்னு... அதுக்கெல்லாம் நான் தலைகீழாக நின்றால் கூட இங்கே நடக்காது போல இருக்கு.

ஏன் பேராண்டி அப்படி சொல்லற.. நீ ராஜாடா உனக்கென்ன குறை உன்னை பிடிக்காம கூட போகுமா நான் எதுவுமே உன்னை கேட்கல ஒரு தடவை வந்து பார்த்துட்டு போடா..

வேதா இப்படி பேசிதான் ஆளை கவுக்கற... இந்த வாரம் வரேன் சரியா... ஒரு நாளு தான். அதுக்குமேல தங்க சொல்ல கூடாது.

சரிடா.. சரிடா உன் அம்மா என்னுடைய முகத்தையே பார்க்கறா... அவள்கிட்டேயும் ரெண்டு வார்த்தை பேசிடு..

குடுங்க பாட்டியின் என்றவன் அவரோடு பேச ஆரம்பிக்க
மேலும் பத்து நிமிடங்கள் கழித்து கட் செய்ய அருகில் மதுசூதனன் நிற்பதை பார்த்தவன் சொல்லுங்க அங்கிள்... என்ன விஷயம்...

எனக்கொரு ஐடியா தோனிச்சு... உங்க பாட்டி மாதிரி நானும் கீழ விழுந்து காலை உடைச்சிகிட்டு..
என்னோட கடைசி ஆசைன்னு சொன்னா..

சொன்னா...சொல்லுங்க அங்கிள்... குழந்தை போல குதுகலமாய் கூறியவரை சிரித்தபடி பார்த்தவன்... என்ன பிளான் அதையும் நீங்களே சொல்லுங்க அவனுடைய முகத்தை பார்க்க அதில் தெரிந்த குறுஞ்சிரிப்பை பார்த்தபடியே... அபி
நான் வேணும்னா மாடியில் இருந்து குதிக்கட்டா..

கால் உடையாது அங்கிள் ஒரேடியா போயிடுவிங்க பரவாயில்லையா...

ஐயோ... அப்ப இந்த படிக்கட்டு...

அங்கிள் நான் ஒன்று சொல்லவா உங்க பொண்ணுகிட்ட நான் தான் நீங்க பார்த்து வச்சிருக்க பையன்னு மட்டும் சொல்லுங்கள். அந்த நிமிஷம் என்னோட பெட்டி படுக்கையை ரோட்டில் தூக்கி போட்டுடுவா.. அப்புறம் இந்த ஐடியா உங்க பொண்ணுக்கு செட் ஆகாது. இப்பவே இப்படி சொல்லறவ உங்களுக்கு முடியலைன்னா அதுவே அவளுக்கு காரணமாயிடும். அப்பாவை நான் தான் பார்ப்பேன்னு... அதுக்கப்புறம் நீங்களே ஆசைபட்டாலும் உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்காது.
அதனால இந்த மாதிரி யோசிக்காதிங்க. நான் தான் சொன்னேன்ல.. சரி பண்ணிடலாம்.

மலர் எங்கே. ..அங்கிள்

அவளுக்கு போன் வந்ததுபா.. தோட்டம் பக்கம் போனா வந்திடுவா..

அங்கே மலரின் தோழி நிஷாவோடு பேசிக்கொண்டு இருந்தாள் அவளோ அவளை பார்ட்டிக்கு அழைத்து கொண்டிருந்தாள். அன்றைக்கு பேசினோமே பார்ட்டி தர்றேன்னு ஹோட்டல் பாப்பீஸ்ல ..இன்றைக்கு அரேன்ஜ் பண்ணி இருக்கு நீ கிளம்பி வா..

தீடின்னு சொன்னா எப்படி நிஷா அப்பாகிட்ட முன்னமே சொல்லவே இல்லையே இப்படி சொன்னா எப்படி..

மலர் எல்லோர்கிட்டேயும் சொல்லிவிட்டேன் நீதான் பாக்கி காலையில் இருந்து எத்தனை தடவை கூப்பிட்டு இருக்கிறேன்னு பாரு. நீதான் அட்டென் பண்ணல..

புரியுது நிஷா...ஆனா...

மலர் நீ இருந்தால்தான் நல்லா இருக்கும். இல்லாட்டி அந்த பார்ட்டியே போர் தான் ப்ளீஸ் வந்திடு...

ஓகே நிஷா அப்பாகிட்ட கேட்கிறேன்.டைம் என்ன..

ஏழு டூ ஒன்பது அன்றைக்கு சொன்னேன்ல. எப்படியும் முடிய பத்து மணி ஆகிவிடும் நான் அங்கே போனதும் கூப்பிடறேன்.

சரிடி என கட் செய்து விட்டு வந்தவள் தந்தையிடம் அணுமதி கேட்க வந்து நின்றாள். அடுத்து தொடக்க இருக்கும் பூகம்பத்தை உணராமல்...சாதாரணமாக அப்பாவின் அருகில் ஷோபாவில் அமர்ந்தவள் அப்பா.. நிஷாவுக்கு மேரேஜ்பிக்ஸ் ஆகி இருக்கு அவ காலேஜ் ப்ரெண்டுங்க எல்லோருக்கும் பார்ட்டி தர்றா.. என்னையும் கூப்பிடறா நான் போயிட்டு ஒன்பது மணிக்குல்ல திரும்பி வந்திடறேன் என்னப்பா சொல்லறிங்க என ஆரம்பிக்க...

அருகில் இருந்த அபியோ
பார்ட்டிக்கா அதுவும் நைட்டா பாதுகாப்பு இருக்காது அங்கிள் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க என கூறியது தான் தெரியும்...
 




K

kavi sowmi

Guest
மொத்த எரிமலையும் வெடித்திருந்தது மலரின் வாயிலிருந்து...என்ன பாதுகாப்பு இருக்காது.. என்ன தெரியும் உங்களுக்கு என்ன பற்றி.. அங்கே என்ன டிரிங்க்ஸ் பார்ட்டியா நடக்குது இப்படி பயப்பட... உங்க மும்பை மாதிரி நினைச்சிங்களா..உங்களுக்கு வேணும்னா அது பழக்கமா இருக்கலாம் இங்கே அதுமாதிரி கிடையாது. என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லோரும் பக்கா ஜென்டில் ஓகே..

முதல்ல அடுத்தவங்க பர்சனல்ல தலையிடாதிங்க சரியா..

பாப்பா என்ன இது.. இப்படி பேசாத பாப்பா..

நீங்க சும்மா இருங்கபா... ஏதோ பத்து நாள் தானேன்னு நினைச்சா சார் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்களா..
எனக்கு தெரியாதுபா. நான் இன்றைக்கு அங்கே கட்டாயம் போவேன் யாரும் தடுக்க கூடாது.

ஷப்பா... பேசி முடிச்சாச்சா பாதுகாப்பு இருக்காதுன்னு சொன்னேன் டிரிங்க்ஸ் பார்ட்டிதான்
நடக்குதுன்னு சொன்னேனா.. அதென்ன மும்பை மாதிரின்னா இதுக்கு என்ன அர்த்தம் யார் எங்கே இருந்தாலும் அவங்க அவங்க எல்லை அவங்களுக்கு தெரியும். எப்படி நீ என்ன அப்படி நினைக்கலாம் உனக்கு மட்டும் யார் பர்மிஷன் கொடுத்தது.

இத பாரு டாபிக்க மாத்தாத... சரியா. இப்போ நான் கிளம்ப தான் போறேன்
ரெண்டு பேரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்க மதுசூதனனுக்கு யாருக்காக பேசுவது என்ன புரியாமல் தவித்து நின்றார்.

ஓகே இதுதான் முடிவுன்னா கிளம்பு நானும் கூட வர்றேன்.

வாட் நீயும் வர்றயா...என்ன ஜோக் அடிக்கறயா.. என்னோட ப்ரெண்ட் அவங்க கிட்ட உன்ன என்னன்னு இன்டடியூஸ் பண்ணுவேன்.

ஹாங்... உன்னோட பாய் ப்ரெண்டுன்னு... நீயூஸ் ரெகுலரா பார்க்கிற தானே..,இல்ல பேப்பர் படிக்கறதில்லையா... இங்கே யாரையும் நம்ப முடியாது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை... பதினோருமணி ஆனாலும் ஓகே தான். உன்னோட அப்பாவுக்கு அவ்வளவு நேரம் காத்து இருக்க முடியாது. சோ அதனால நானும் வரேன் சொன்னவன் முடிந்தது என்பது போல தனது அறைக்குள் செல்ல..

மதுசூதனனோ பாப்பா அபி சொல்லறதும் சரிதானே உனக்கு பாதுகாப்புக்கு வரேன்ங்கறான் கூப்பிட்டுட்டு போ..இதுவரைக்கும் நைட் வெளியே போனதில்லையே...தனியா எப்படி விட முடியும். இப்படி சட்டின்னு எடுத்தெருச்சி யாரையும் பேசாத பாப்பா. கேட்கறவங்களுக்கு கஷ்டமான இருக்கும்ல...

ம்...ம் என்றபடி விலகி தனது அறைக்குள் நகர்ந்தாள். கோபத்தில் அவனிடம் கத்தியதை யோசித்தவளுக்கு தான் பேசியது தவறு என நன்றாக தெரிந்தது. கோபம் வந்தா ஓவரா பேசற மலரு. ..
அப்ப கூடாது அவனுக்கு உன் மேலும் கோபமே வரல.. உனக்கு புரிய வைக்க தான் டிரை பண்ணினான்.

ஒரு மனசாட்சி இப்படி கூற அடுத்ததோ பேசலாம் மலர் அப்ப தான் அடுத்த தடவை உன் விஷயத்தில் தலையிடனும்னா கொஞ்சம் யோசிப்பான்.

அதேநேரம் அடுத்த அறையில் இருந்தவனுக்கு இவள் கத்தியதை பார்த்து செல்லமாக கொஞ்ச தான் தோன்றியது. அப்பா படபட பட்டாசுதான் என்னா வாய் ப்யூச்சர்ல நம்மல பேசவே விட மாட்டா போல இருக்கே!!!எப்படி இருந்த அபி... இப்படி மாறிட்டே இந்த பொண்ணுகிட்ட அப்படி என்ன இருக்கு. உன் ஆபீஸ்ல நீ பார்க்காத பொண்ணா... எத்தனை பேர் உன்கிட்ட வந்து வழிச்சிட்டு நின்று இருக்கறாங்க.. நீ கடைசியில் இந்த பொண்ணு கிட்ட வந்து மாட்டிகிட்ட.. உனக்கு பெட்ரமாஸ் லைட்டே தான் வேண்டுமா...ஒரு மனம் அவனை கிண்டல் செய்ய அடுத்த மனமோ அவளேதான் வேணும் என்றபடி புறப்பட்டான்.

ஏழு மணியை தாண்டி இருக்க இரு முறை நிஷா அழைத்திருந்தாள். மலர் எல்லோரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. வர்றதானே என.. புறப்பட்டாள் தந்தையிடம் வந்து அப்பா அந்த வளர்ந்து கெட்டவன் எங்கே? வரச்சொல்லுங்க..

பாப்பா...

சரி...அபி எங்கே...

அவன் ரூம்ல இருக்கிறான் கூப்பிட்டுகோ..

சரி.. அபி வெளியே வா டைம் ஆச்சு போகலாம் கதவைத் திறக்க ஒரு நிமிடம் திகைத்து போனாள். அணிந்திருந்தது என்னவோ பேன்ட் முழுக்கை டீசர் ஒன்று தான் அதுவே அவனை அழகாய் காட்டியது..

கார் எடுக்கவா மலர்...

வேண்டாம்.. நான் டூவிலர்ல தான் போகப்போறேன். என் கூட வண்டியில் வர்றதில உனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லையே...

நான் பொண்ணுங்களுக்கு ஈக்குவல் ரைட்ஸ் கொடுக்கறவன்மா. நோ ப்ராபளம் போகலாமா...

தனது டூவிலரை எடுத்தவள் தந்தையிடம் வரேன் என்ன சொல்லியபடி வண்டியை எடுக்க அடுத்த சோதனை ஆரம்பித்தது. இவள் ஓட்டும் வேகத்திற்கு வண்டி தூக்கி போட விழ இருத்தவன் அவளது தோளை அழுத்தமாக பற்றி இருந்தான்.தனது கைகளால் அவனது கையை எடுத்து விட்டவள் வண்டியில ஒழுங்கா உட்காரு... மேல கை பட்டுச்சு பிச்சுடுவேன்...

பார்த்து ஓட்டுமா.. என்னை கீழே தள்ளனும்ன்னு முடிவோட தான் வண்டியை எடுத்தயா..

இது தமிழ்நாட்டு ரோடு இப்படி தான் இருக்கும். சைட்ல கம்மியபிடி அடுத்த குழியில் வண்டியை இறக்க மொத்தமாக அவள் மேல் வந்து விழுந்தான்.

அபி...

மலர் நீ வண்டியை நிப்பாட்டு . நீ வேணும்னே குழியில் வண்டியை விடற . உனக்கு நிஜமாகவே கண்ணு தெரியுது தான..
 




K

kavi sowmi

Guest
இல்ல.. இனி பாத்து ஓட்டறேன். வண்டியில் ஏறும் போது கோபத்தோடு வண்டியை ஓட்ட... வேண்டும் என்றே பள்ளத்தில் இறக்கி ஏற்றிக் கொண்டு இருந்தாள். இப்போது கொஞ்சம் குறைந்திருக்க நிதானமாக வண்டியை ஓட்டினாள்.

அவர்கள் பார்ட்டி தரும் ஹோட்டலை நெருக்கியவள்.. இங்கே பாரு அங்கே வந்து எதுவும் யார் கிட்டேயும் பேசக் கூடாது.

என்ன.. என்னன்னு இன்டடியூஸ் பண்ணுவே..

எதையாவது சொல்லுவேன் அது என்னோட பிரச்சனை சரியா..ஏன் இவ்வளவு ஆர்வம் உனக்கு...

உன்னோடு ப்ரெண்டுங்கல தெரிஞ்சு வச்சிக்கிட்டா எதிர் காலத்துக்கு நல்லது தானே..

எப்படி..

யாருக்கு தெரியும் இந்த கூட்டத்தில என்னோட எதிர் கால ஓய்ப் இருந்தாலும் இருக்கலாம்ல.. ஏதாவது பொண்ண கூட எனக்கு பிடிக்கலாம். இல்லைனா அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கலாம்..மலரு...

என்ன.. கோபத்தோடு வந்து விழுந்தது.

அவன் அப்படி சொன்னது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவள் முகம் பார்த்தே உணர்ந்தவன் அவளை மேலும் கடுப்பேத்த நினைத்தபடி...

என்னுடைய போன் நம்பர் உன்னோட ப்ரெண்டுங்க யார் கேட்டாலும் கொடுத்துடு சரியா...

அபி பேசாம வந்திடு. அங்கே யார் கிட்டேயாவது பேசின என்ன பண்ணுவேன்னு தெரியாது.
பார்ட்டிஹாலில் நுழைந்தது தான் தெரியும் அங்கிருந்தவர்களோடு மொத்தமாக சில நிமிடத்திலேயே ஒன்றி போனான் அபி . மலர் தான் நிஷாவோடு பேசியபடி திரும்பி பார்க்க.. இவள் பார்ப்பதை பார்த்த நிஷா... மலர் உன்மைய சொல்லு யார் இந்த ஹேன்சம் பாய்.. உங்க அப்பா பார்த்து மாப்பிள்ளை இவன் தானே...

இல்லைடி. நீ வேற அது ஒரு இம்சை.. அப்பாவோட ப்ரெண்டு பையன் ஊர் சுற்றி பார்க்க வந்து இருக்கிறான்.
அப்பாதான் தனியா விட யோசிச்சாங்க. அதனால தான்.

ஓகே.. இங்கே அழைச்சிட்டு வா.. கிஷோர் கிட்ட அறிமுகப்படுத்தலாம்.

இவள் இங்கிருந்தபடி அவனை பார்க்க அடுத்த நொடி அவள் அருகில் வந்திருந்தான். அறிமுக படுத்திய சில நொடிகளிலேயே கிஷோரோடு நெருங்கி இருந்தான். இருவரும் சிரித்துக்கொண்டிருக்க இப்போது நிஷாவும் அவர்களோடு இணைந்திருந்தாள். மலருக்கு தான் ஏதோ அவனுடைய நண்பர்கள் பார்ட்டிக்கு இவளை அழைத்து வந்தது போல் இருந்தது. இது போதாது என்று இவளது தோழிகள் இருவர் இவளிடம் வந்து அவனது போன் நம்பர் கேட்க மொத்தமாக நொந்து போனாள்.

ஓன்பது மணியை நெருங்கும் போது மதுசூதனனிடம் இருந்து போன் வர அபி முகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது. இவனது முகம் பார்த்தவள் அருகில் வர.. அவளது கையை பற்றியபடி வேகமாக புறப்பட்டான்.

உருகிடுவாளா... பணிமலர்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவி சௌமி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top