K
kavi sowmi
Guest
காலை எட்டு மணியை நெருங்கி கொண்டிருக்க விடாது ஒலித்த ஹாலிங்பெல் சத்தம் கேட்டு வேகமாக வந்து கதவை திறந்தாள் மலர். நேற்று பார்த்தவன் தான். இன்றும் அதே கோலத்தில் நின்றிருந்தான். முகத்தில் எந்த வித உணர்வும் காட்டாமல் கண்களில் நேற்றைய போல அதே ரீபேக் கண்ணாடி கவ்வியிருந்தது. யார் என்ன... ஏது எதுவும் கேட்க தோன்றாமல் ஒரு நிமிடம் நின்றவள்..
கேள்விகளை கேட்கும் முன்னமே அவன் பேசி இருந்தான்.
வீட்டுக்கு வந்தா வாங்கன்னு கேட்கிற பழக்கம் இல்லையா.. இப்படி முழிக்கற..வழிய மறிச்சிட்டு நின்னா எப்படி உள்ள வர்றது...நகரு... என்றபடி எளிதாக அவளின் தோள் தொட்டு நகர்த்தியவன் உள் நுழைய போக ..
ஏய்... நில்லு ....ப்ராடு நேற்று கண் தெரியாதவன் மாதிரி நடிச்சவன்தான நீ.. இங்கே எதுக்கு வந்திருக்கிற...
என்ன... யாரை பார்த்து ப்ராடுங்கற.. நானா வந்து உன்மேல மோதினேன். வாங்கின பாப்கார்னை பார்த்துட்டே வந்து நீ இடிச்ச.. நீயா கண்ணு தெரியாதுன்னு முடிவு பண்ணினா நான் எப்படி பொறுப்பாக முடியும். நீ எவ்வளவு தூரம் பேசுவன்னு பேசாமல் வேடிக்கை பார்த்தேன். உடனே முடிவு பண்ணிடுவயா. எங்கே என்ன பார்த்து சொல்லு... கண் தெரியாதுன்னு. கண்களில் மறைத்திருந்த கூலரை கலட்டியவன்
அவளது முகத்திற்கு அருகே கொண்டு சென்று இரண்டு கண்களையும் மாற்றி மாற்றி கண் சிமிட்டி காட்டினான்.
அப்பா... என வேகமாக கத்தினாள் பனிமலர். சத்தம் கேட்டு வேகமாய் தனது அறையில் இருந்து வெளிவந்தவர் இவனை பார்த்து அட... அபி வா.. வா என்றபடி இவனை நோக்கி வர...
ஒரு நிமிடத்தில் இவளை கடந்தவன் ஹாய் அங்கிள்... ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்றபடி பாதம் தொட்டு வணங்க... மும்பையில் இவன் பழகி இருந்தது வயதில் பெரியவர்கள் யாரை பார்த்தாலும் ஆசீர்வாதம் வாங்குவது மும்பையில் நண்பர்கள் பலர் இருக்க அவர்களின் பழக்கம் இவனை தொற்றிக் கொண்டு இருந்தது. நேற்று போலவே இன்றும் இயல்பாகவே அவனுக்கு வந்தது.
நல்லா இருப்பா... நல்லா இரு என்றபடி அப்பா நேற்று பேசினாங்க. பத்து நாள் தங்கறேன்னு சொன்னியாம் உன்னோட அப்பா எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கறான். ஏதோ என்னாலான சின்ன கைமாறு...
என்ன அங்கிள் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறிங்க...தோளோடு அணைத்து அழைத்து சென்றவரை பார்த்தவள்... மலர் பேபி வீட்ல என்ன நடக்குது. இந்த குரங்கு யார்ன்னு தெரியலை. ஓரே நிமிடத்தில் அப்பாவை இப்படி இம்பரஸ் பண்ணறான் தப்பாச்சே... என்றபடி அவர்களோடு இவளும் பின் தொடர்ந்தாள்.
இவனை அழைத்து சென்றவர் விருந்தினர் தங்குவதற்கு இருந்த அறையை திறந்து விட்டபடி...அபி நீ வர்றேன்னதும் இந்த ரூமை நானே ரெடி பண்ணினேன் நேற்று நைட்...
உனக்கு ஓகே தான ஏதாவது வேணும்னா சொல்லு நான் சரி பண்ணி தந்திடறேன்.
ஐயோ அங்கிள்... என்ன நீங்க. .. அதெல்லாம் வேண்டாம். பத்து நாளைக்கு இதுவே அதிகம்.. தேவைபட்டா சொல்லறேன் என்றபடி அவன் ரூம்பிற்குல் நுழைய பின்னோடு நுழைய போன தந்தையை இழுத்துக் கொண்டு அடுத்து இருந்த தந்தையின் அறைக்குள் அழைத்து சென்றாள்.
அப்பா உங்களுக்கு பைத்தியமாப்பா. வயசு பொண்ணு இருக்கற வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வந்து தங்க வைக்கறிங்க.. பார்க்கறவங்க என்ன சொல்வாங்க...
இதுல சொல்ல என்னடா இருக்கு. பத்து நாள் தங்கி ஊட்டி, கொடைக்கானல்,கேரளான்னு சுற்றி பார்க்கணுமாம் . ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு ஊரை சுற்றி பார்ப்பானாம்.இந்த தடவை இங்கே வந்து இருக்கறான் யாரோ மாதிரி வெளிய தங்கிக்கோன்னு விட முடியாதுல்ல..
ஆனா அவன் நல்லவன் இல்லைபா. நான் நேற்று அவன அந்த மால்ல பார்த்தேன்பா. கண்ணு தெரியாத மாதிரி நடிச்சான். ப்ராடுபா அவன் எப்படியாவது அவனை புரிய வைத்திட வேண்டும் என வேகமாக கூறிக்கொண்டு இருந்தாள்.
சிரிக்க வைக்காத பாப்பா. அவனுக்கு கண்ணு தெரியாதா. அவன் சிரிக்கும் போது அவனோட கண்ணும் சேர்ந்து சிரிக்குது அத நீ கவனிச்சயா. சுவிட்பாய்... அவன் கூட இருந்தா நேரம் போறதே தெரியாதுன்னு என்னோட ப்ரெண்டு சொல்லுவான் அது எவ்வளவு சரின்னு இந்த பத்து நாள்ல பார்க்க போறேன். சொல்லியவர் இவளை தாண்டி வெளியேறியபடி அபி.. அபி என அழைத்தபடி செலல...
சுத்தம் ...விட்டா இந்த அப்பா அவன் பேர்ல் ரசிகர்மன்றமே ஆரம்பிப்பார் போலவே...இனி இவரை நம்பி பிரயோஜனம் இல்ல நாமதான் ஏதாவது செய்யணும் மலர் இன்றையில் இருந்து உனக்கு இதுதான் வேலை அவனை வீட்டை விட்டு அணுப்பின பிறகுதான் தூங்கணும். யோசி யோசி ... ஏதாவது ஐடியா கிடைக்கும் என்ன... பண்ணலாம். அறையை அளந்தபடி
இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
நடந்து நடந்து கால்தான் வலிக்குது
எதுவும் தோணமாட்டேங்குது தந்தையின் கட்டிலில் அமர்ந்தவள் அன்றைக்கு மாப்பிள்ளை போட்டோன்னு ஒன்றை காட்டினாங்கலே... ஒரு வேளை இவன் அவனா இருப்பானோ.. தோன்றவும் வேகமாக தந்தையின் அறையில் தேட ஆரம்பித்தாள். டேபிளில்,கட்டில் அடி என தேட.. பாப்பா ஏதாவது வேண்டுமா...
கேள்விகளை கேட்கும் முன்னமே அவன் பேசி இருந்தான்.
வீட்டுக்கு வந்தா வாங்கன்னு கேட்கிற பழக்கம் இல்லையா.. இப்படி முழிக்கற..வழிய மறிச்சிட்டு நின்னா எப்படி உள்ள வர்றது...நகரு... என்றபடி எளிதாக அவளின் தோள் தொட்டு நகர்த்தியவன் உள் நுழைய போக ..
ஏய்... நில்லு ....ப்ராடு நேற்று கண் தெரியாதவன் மாதிரி நடிச்சவன்தான நீ.. இங்கே எதுக்கு வந்திருக்கிற...
என்ன... யாரை பார்த்து ப்ராடுங்கற.. நானா வந்து உன்மேல மோதினேன். வாங்கின பாப்கார்னை பார்த்துட்டே வந்து நீ இடிச்ச.. நீயா கண்ணு தெரியாதுன்னு முடிவு பண்ணினா நான் எப்படி பொறுப்பாக முடியும். நீ எவ்வளவு தூரம் பேசுவன்னு பேசாமல் வேடிக்கை பார்த்தேன். உடனே முடிவு பண்ணிடுவயா. எங்கே என்ன பார்த்து சொல்லு... கண் தெரியாதுன்னு. கண்களில் மறைத்திருந்த கூலரை கலட்டியவன்
அவளது முகத்திற்கு அருகே கொண்டு சென்று இரண்டு கண்களையும் மாற்றி மாற்றி கண் சிமிட்டி காட்டினான்.
அப்பா... என வேகமாக கத்தினாள் பனிமலர். சத்தம் கேட்டு வேகமாய் தனது அறையில் இருந்து வெளிவந்தவர் இவனை பார்த்து அட... அபி வா.. வா என்றபடி இவனை நோக்கி வர...
ஒரு நிமிடத்தில் இவளை கடந்தவன் ஹாய் அங்கிள்... ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்றபடி பாதம் தொட்டு வணங்க... மும்பையில் இவன் பழகி இருந்தது வயதில் பெரியவர்கள் யாரை பார்த்தாலும் ஆசீர்வாதம் வாங்குவது மும்பையில் நண்பர்கள் பலர் இருக்க அவர்களின் பழக்கம் இவனை தொற்றிக் கொண்டு இருந்தது. நேற்று போலவே இன்றும் இயல்பாகவே அவனுக்கு வந்தது.
நல்லா இருப்பா... நல்லா இரு என்றபடி அப்பா நேற்று பேசினாங்க. பத்து நாள் தங்கறேன்னு சொன்னியாம் உன்னோட அப்பா எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கறான். ஏதோ என்னாலான சின்ன கைமாறு...
என்ன அங்கிள் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறிங்க...தோளோடு அணைத்து அழைத்து சென்றவரை பார்த்தவள்... மலர் பேபி வீட்ல என்ன நடக்குது. இந்த குரங்கு யார்ன்னு தெரியலை. ஓரே நிமிடத்தில் அப்பாவை இப்படி இம்பரஸ் பண்ணறான் தப்பாச்சே... என்றபடி அவர்களோடு இவளும் பின் தொடர்ந்தாள்.
இவனை அழைத்து சென்றவர் விருந்தினர் தங்குவதற்கு இருந்த அறையை திறந்து விட்டபடி...அபி நீ வர்றேன்னதும் இந்த ரூமை நானே ரெடி பண்ணினேன் நேற்று நைட்...
உனக்கு ஓகே தான ஏதாவது வேணும்னா சொல்லு நான் சரி பண்ணி தந்திடறேன்.
ஐயோ அங்கிள்... என்ன நீங்க. .. அதெல்லாம் வேண்டாம். பத்து நாளைக்கு இதுவே அதிகம்.. தேவைபட்டா சொல்லறேன் என்றபடி அவன் ரூம்பிற்குல் நுழைய பின்னோடு நுழைய போன தந்தையை இழுத்துக் கொண்டு அடுத்து இருந்த தந்தையின் அறைக்குள் அழைத்து சென்றாள்.
அப்பா உங்களுக்கு பைத்தியமாப்பா. வயசு பொண்ணு இருக்கற வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வந்து தங்க வைக்கறிங்க.. பார்க்கறவங்க என்ன சொல்வாங்க...
இதுல சொல்ல என்னடா இருக்கு. பத்து நாள் தங்கி ஊட்டி, கொடைக்கானல்,கேரளான்னு சுற்றி பார்க்கணுமாம் . ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு ஊரை சுற்றி பார்ப்பானாம்.இந்த தடவை இங்கே வந்து இருக்கறான் யாரோ மாதிரி வெளிய தங்கிக்கோன்னு விட முடியாதுல்ல..
ஆனா அவன் நல்லவன் இல்லைபா. நான் நேற்று அவன அந்த மால்ல பார்த்தேன்பா. கண்ணு தெரியாத மாதிரி நடிச்சான். ப்ராடுபா அவன் எப்படியாவது அவனை புரிய வைத்திட வேண்டும் என வேகமாக கூறிக்கொண்டு இருந்தாள்.
சிரிக்க வைக்காத பாப்பா. அவனுக்கு கண்ணு தெரியாதா. அவன் சிரிக்கும் போது அவனோட கண்ணும் சேர்ந்து சிரிக்குது அத நீ கவனிச்சயா. சுவிட்பாய்... அவன் கூட இருந்தா நேரம் போறதே தெரியாதுன்னு என்னோட ப்ரெண்டு சொல்லுவான் அது எவ்வளவு சரின்னு இந்த பத்து நாள்ல பார்க்க போறேன். சொல்லியவர் இவளை தாண்டி வெளியேறியபடி அபி.. அபி என அழைத்தபடி செலல...
சுத்தம் ...விட்டா இந்த அப்பா அவன் பேர்ல் ரசிகர்மன்றமே ஆரம்பிப்பார் போலவே...இனி இவரை நம்பி பிரயோஜனம் இல்ல நாமதான் ஏதாவது செய்யணும் மலர் இன்றையில் இருந்து உனக்கு இதுதான் வேலை அவனை வீட்டை விட்டு அணுப்பின பிறகுதான் தூங்கணும். யோசி யோசி ... ஏதாவது ஐடியா கிடைக்கும் என்ன... பண்ணலாம். அறையை அளந்தபடி
இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
நடந்து நடந்து கால்தான் வலிக்குது
எதுவும் தோணமாட்டேங்குது தந்தையின் கட்டிலில் அமர்ந்தவள் அன்றைக்கு மாப்பிள்ளை போட்டோன்னு ஒன்றை காட்டினாங்கலே... ஒரு வேளை இவன் அவனா இருப்பானோ.. தோன்றவும் வேகமாக தந்தையின் அறையில் தேட ஆரம்பித்தாள். டேபிளில்,கட்டில் அடி என தேட.. பாப்பா ஏதாவது வேண்டுமா...