உளுந்தங்கஞ்சியின் நன்மைகள்
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுக்கும் நல்ல தீர்வை தரும்..
கண்களுக்கு ஆரோக்கியம் தரும் ..
எலும்புகள் தேய்மானத்தை குறைக்கும்...
பெண்களின் கர்ப்பப்பை வலுபெறும்......
தேவையான பொருட்கள் :
வெள்ளை உளுந்து - அரை கிளாஸ் (சுமாரா ஒரு ஐம்பது கிராம் இருக்கும்).
வெல்லம் - இனிப்பு சுவைக்கேற்றது போல. (நான் ஒரு கைப்பிடி அளவு சேர்த்தேன்) (உங்களுக்கு என்ன விருப்பமோ அது சேர்த்துக்கோங்க, சர்க்கரை, கருப்பட்டி, பனைவெல்லம், அச்சுவெல்லம் இது மாதிரி)
ஏலக்காய் - ஐந்து
தேங்காய் - அரை மூடி
தண்ணீர் - மூன்று கிளாஸ்
செய்முறை :
உளுந்தை நன்றாக கழுவி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காயை துருவி வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு நைசாக அரைத்து எடுத்துக்கோங்க, கடைசில துருவிய தேங்காய்ல இருந்து ஒரு ரெண்டு ஸ்பூன் அளவு மட்டும் எடுத்து வச்சுட்டு மிச்சத்தை உளுந்து கூட சேர்த்து, ஏலக்காயும் சேர்த்து அறைச்சுடுங்க, இப்போ மட்டும் ஒரு அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து அரைச்சுடுங்க....
அடுத்ததா வெல்லத்தை நல்லா உடைச்சுவிட்டு ஒரு பாத்திரத்துல தண்ணீர் சேர்த்து அடுப்புல வச்சு நல்லா கரைய விடுங்க.
கரைஞ்சு வந்ததும் வடிகட்டி எடுத்து வேற ஒரு ஆதி கனமான வாணலில மாத்திட்டு இது கூட நாம அரைச்சு வச்சிருக்கிற உளுந்து கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி நல்லா கொதிக்க விடுங்க, இது கூட முந்திரியை உடைச்சு போட்டுக்கோங்க... அடுப்பை மிதமான தீயில வச்சுக்கோங்க... தண்ணிய இருந்த பரவாயில்லை கொதிச்சு வரும்போது கெட்டியாகிரும்.....
(நீங்க சர்க்கரை சேர்க்கிற மாதிரி இருந்தா அரைச்ச உளுந்து கலவையை வாணலில சேர்த்துட்டு கொதிக்க வைக்கும் போது சர்க்கரை சேர்த்தா போதும்..)
அதுக்காக ரொம்ப அதிகமா சேர்த்துடாதீங்க. ஒரு அரை லிட்டர் அளவுக்கு வேணும்னா சேர்க்கலாம்.. இதுவே தாராளமா ஆறு பேர் குடிக்கலாம்...
நல்ல கொதிக்க விடுங்க, அப்போதான் உளுந்தோட பச்சை வாசனை போகும்...
நல்லா கொதிச்சதும், இருக்குறதுக்கு முன்னாடி மிச்சம் வச்சிருக்கிற தேங்காயை சேர்த்து கிளறி இறக்கிடுங்க...
கொஞ்சம் ஆறினதும் (ஓரளவு சூடா குடிச்சா நல்லா இருக்கும். கிளாஸ்ல ஊத்தி மேல ஒரு ரெண்டு முந்திரியை உடைச்சு போட்டு குடிக்கலாம்.
அவ்ளோதாங்க...... சுவையான சத்தான உளுந்தங்கஞ்சி தயார்..
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுக்கும் நல்ல தீர்வை தரும்..
கண்களுக்கு ஆரோக்கியம் தரும் ..
எலும்புகள் தேய்மானத்தை குறைக்கும்...
பெண்களின் கர்ப்பப்பை வலுபெறும்......
தேவையான பொருட்கள் :
வெள்ளை உளுந்து - அரை கிளாஸ் (சுமாரா ஒரு ஐம்பது கிராம் இருக்கும்).
வெல்லம் - இனிப்பு சுவைக்கேற்றது போல. (நான் ஒரு கைப்பிடி அளவு சேர்த்தேன்) (உங்களுக்கு என்ன விருப்பமோ அது சேர்த்துக்கோங்க, சர்க்கரை, கருப்பட்டி, பனைவெல்லம், அச்சுவெல்லம் இது மாதிரி)
ஏலக்காய் - ஐந்து
தேங்காய் - அரை மூடி
தண்ணீர் - மூன்று கிளாஸ்
செய்முறை :
உளுந்தை நன்றாக கழுவி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காயை துருவி வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு நைசாக அரைத்து எடுத்துக்கோங்க, கடைசில துருவிய தேங்காய்ல இருந்து ஒரு ரெண்டு ஸ்பூன் அளவு மட்டும் எடுத்து வச்சுட்டு மிச்சத்தை உளுந்து கூட சேர்த்து, ஏலக்காயும் சேர்த்து அறைச்சுடுங்க, இப்போ மட்டும் ஒரு அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து அரைச்சுடுங்க....
அடுத்ததா வெல்லத்தை நல்லா உடைச்சுவிட்டு ஒரு பாத்திரத்துல தண்ணீர் சேர்த்து அடுப்புல வச்சு நல்லா கரைய விடுங்க.
கரைஞ்சு வந்ததும் வடிகட்டி எடுத்து வேற ஒரு ஆதி கனமான வாணலில மாத்திட்டு இது கூட நாம அரைச்சு வச்சிருக்கிற உளுந்து கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி நல்லா கொதிக்க விடுங்க, இது கூட முந்திரியை உடைச்சு போட்டுக்கோங்க... அடுப்பை மிதமான தீயில வச்சுக்கோங்க... தண்ணிய இருந்த பரவாயில்லை கொதிச்சு வரும்போது கெட்டியாகிரும்.....
(நீங்க சர்க்கரை சேர்க்கிற மாதிரி இருந்தா அரைச்ச உளுந்து கலவையை வாணலில சேர்த்துட்டு கொதிக்க வைக்கும் போது சர்க்கரை சேர்த்தா போதும்..)
அதுக்காக ரொம்ப அதிகமா சேர்த்துடாதீங்க. ஒரு அரை லிட்டர் அளவுக்கு வேணும்னா சேர்க்கலாம்.. இதுவே தாராளமா ஆறு பேர் குடிக்கலாம்...
நல்ல கொதிக்க விடுங்க, அப்போதான் உளுந்தோட பச்சை வாசனை போகும்...
நல்லா கொதிச்சதும், இருக்குறதுக்கு முன்னாடி மிச்சம் வச்சிருக்கிற தேங்காயை சேர்த்து கிளறி இறக்கிடுங்க...
கொஞ்சம் ஆறினதும் (ஓரளவு சூடா குடிச்சா நல்லா இருக்கும். கிளாஸ்ல ஊத்தி மேல ஒரு ரெண்டு முந்திரியை உடைச்சு போட்டு குடிக்கலாம்.
அவ்ளோதாங்க...... சுவையான சத்தான உளுந்தங்கஞ்சி தயார்..
Last edited: