1
நள்ளிரவு நேரம்.
மணி பன்னிரண்டை நெருங்க இன்னும் ஒரு சில மணித்துளிகளே இருந்தன.
“ நீ மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா உன் பொண்டாட்டியை என் கூட அனுப்பி வைடா “ ரகுவரன் ஆத்திரத்தில் சவால்(!) விட்டான்.
“ நீ நெஞ்சுல முடி முளைச்ச ஆம்பளையா இருந்தா மொதல்ல நீ உன் பொண்டாட்டியை என் கூட அனுப்பி வைடா” பதிலுக்கு பதில் சவால் (!) வந்தது பாலாவிடமிருந்து.
இருவரும் ஒதுக்குப் புறமான அந்த சாலையில் ஒருவர் ஒருவர் கழுத்தை ஒருவர் நெறித்தபடி கீழே உருண்டு புரண்டு கொண்டு இருந்தனர்.
இந்த நிகழ்வுக்கு அருகில் யாருக்கோ டீ ஆற்றிக் கொண்டு இருந்தார் டீ கடைக்காரர் ஒருவர்.
இவர்கள் குறிப்பிடும் இரண்டு இளம் பெண்களும் அந்த டீ கடையில் பதட்டத்துடன் அமர்ந்து இருந்தனர்.
டீ கடைக்காரர் வேலையில் பிஸியாக இருந்ததால் இவர்கள் சண்டையை கவனித்த மாதிரி தெரியவில்லை.
“ உங்க மாமன் மச்சான் சண்டையை வீட்டுக்குள்ள வச்சுக்கங்கப்பா. “ என சத்தமாக சொன்னார் பெரியவர் ஒருவர்.
“தூக்கம் வராம டீ குடிக்க வந்தா இவனுங்க வேற! “ என முணுமுணுத்தார் அவர். அப்படியே, “டீ கேன்சல் பண்ணிருப்பா!” என்றும் உத்தரவிட்டு டீ கடைக்காரருக்கு கோபத்தை உண்டாக்கி அதையும் இந்த ‘ மாமன் மச்சான் ' புறம் வாகாகத் திருப்பி விட்டார்.
இவர்களின் இத்தனை நேர அட்டகாசங்களை இதுவரை பரபரப்பு படம் போலப் பார்த்துவிட்டு, ‘ இது தேறாத கேஸ்(!) ‘ என முடிவு செய்து , மெதுவே நடையைக் கட்டியவாறு போகிற போக்கில் சொல்லிச் சென்றார் அந்த வயசாளி.
பின்னே? அவர் ஆசைப்பட்டபடி இது கள்ளக்காதல் விவகாரம் இல்லை என்றால் அவரும் என்னதான் செய்வார்?
இன்னும் இருந்து கிளைமாக்ஸ் வரை பார்க்க ஆசைதான். ‘ ஒருவேளை இவர்கள் சண்டை எதிர்பாராத விதமாக கொலை, கிலை என்று முடிந்துவிட்டால் யார் போலீசில் அல்லாடுவது? 'என சலித்தவர், மனமே இல்லாமல் எழுந்து போய்விட்டார்.
இத்தனை நேரம் இப்படி ஒருவர் இங்கேயே இருந்ததையும், இவர்கள் அடித்துக் கொள்வதை வேடிக்கைப் பார்த்ததையும் கவனிக்காத இவர்கள் இருவரும் திடீரென உதித்த அவர் மற்றும் அவரின் ‘ மாமன், மச்சான் ‘ என்ற வார்த்தையில் திடுக்கிட்டார்கள்.
சொல்வதை சொல்லிவிட்டு அவர் போய் விட, இவர்கள் நிலை பரிதாபம் தான்.
ஒருகணம் இருவரும் அடுத்தவர் கழுத்தில் இருந்து தத்தம் கைகளை தளர்த்தியவர்களின் கண்கள் நேருக்கு நேர் எதிர் எதிராகச் சந்தித்துக் கொண்டன.
“ச்சை! எந்த ஜென்மத்தில் செஞ்ச பாவமோ, இதை எல்லாம் நான் கேட்கிற மாதிரி ஆகிருச்சு”, என்றபடி ரகுவரனைத் தள்ளிவிட்டுக் கொண்டு எழ முயன்றான் பாலா என்ற பாலாஜி.
“கருமம் பிடிச்சவனே! நீ எந்த ஜென்மத்துலயோ பாவம் பண்ணிட்டு என்னையும் ஏண்டா இதெல்லாம் கேக்க வைக்கிற? என் கண்ணு முன்னாடி நிக்காம உன் தங்கச்சியை கூட்டிட்டு போய்த் தொலைடா பன்னாடை!” எரிந்து விழுந்து கொண்டே தள்ளாடியபடி எழுந்து நின்றான் ரகுவரன்.
“ இப்போ தான் அவ என் தங்கச்சின்னு உன் மண்டையில ஏறுச்சோ? இவ்ளோ நேரம் அவளை நீ தாலி கட்ன பொண்டாட்டி பொண்டாட்டின்னு எனக்கு ஆட்டம் காட்டும் போது ஏறலியோ?” மீண்டும் அவன் சட்டைக் காலரைப் பிடித்தான் பாலா.
“ நீ பெரிய ஒழுங்கு! நீயும்தானடா அப்டி குதிச்ச?” ரகுவரன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவன் கையைத் தள்ளிவிட முயன்றான்.
அடிதடியில் பாதி தள்ளாட்டம், மித மிஞ்சிய கோபத்தில் மீதி தள்ளாட்டம் எனத் தள்ளாடியதில் கைகள் தடுமாறினாலும், தங்கையின் கணவன் ஆகி விட்டவன் என்ற காரணத்தால் இருவரும் மொக்கை அடி அடித்துக் கொண்டு இருந்தனர்.
இவர்கள் ஆட்டத்தைப் பதட்டமாகப் பார்த்துக் கொண்டு நின்ற பெண்கள் இருவரும் இப்போது சுதாரித்துக் கொண்டனர்.
“அண்ணா நீ வாண்ணா! இவன்லாம் ஒரு ஆளுன்னு பேசிக்கிட்டு!” _ பாலாவுக்கு முட்டு கொடுத்தாள் அவன் அன்புத் தங்கை அலர்மேல் மங்கை .
இதுவரை அவளை ஏறெடுத்தும் பார்க்காத ரகுவரன் சரேலென்று திரும்பி அவளைப் பார்த்து முறைத்தான்.
“ என்னடி? 'ஆளு கீளு’ன்ற?. நீ பெரிய லாடு வீட்டு கொழாப் புட்டு! கிழக்கும் மேற்கும் தெரியாத உழக்கு மாதிரி இருந்துகிட்டு வாயப் பாரு! நான் மதிச்சு வாழ்க்கை குடுக்கலன்னா அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் இப்போ நாறி இருப்பீங்க!” வார்த்தையை விட்டான்.
“ யாரப் பாத்து உழக்குங்கறேங்க? சந்தனா, சொல்லி வை உன் அண்ணங்கிட்ட! ” அலர் அலப்பரையைக் கூட்டினாள்.
அவள் நெடுநாளைய தோழி சந்தன முல்லையின் நெட்டைகொக்கு அண்ணன் _ ரகுவரனை நினைத்தால் எப்போதும் ஏராளமாக எரிச்சல் வரும் அவளுக்கு. அப்படிப் பட்டவன் அவளுக்குக் கணவனா? அதுவே வயிறு எரிந்தது அவளுக்கு.
அதுமட்டும் அல்லாது தன் அண்ணன் பாலாஜி ஆனவன், ரகுவரனின் தங்கைக்கு _ அதாவது அவளின் உற்ற தோழி _ சந்தனமுல்லைக்கு தாலி கட்டியதில், இந்த நெடுமரம் அவர்கள் குடும்பத்துக்கு இன்னும் நெருங்கிய உறவினன் ஆகி விட்டான் என்பதில் நெஞ்சம் படபடத்தது.
எல்லாம் விதி!
இல்லை என்றால் தோழிகள் இருவரும் அந்த உருப்படாத ஹோட்டலுக்கு இன்று போயிருப்பார்களா?
அதனால் அல்லவா இத்தனை இன்னல்களும்?
அவளைக் கேட்காமல் இதயம் பின்னோக்கிச் சென்றது. மற்ற மூவரின் இதயங்களும் சும்மா இல்லாமல் அவையும் அவள் சிந்தனைக்கு எசப் பாட்டு பாடின.
சந்தனமுல்லையும் அலர்மேல் மங்கையும் ஒரு பெரிய தனியார் கல்லூரியில் முதுகலை கணிதம் இரண்டாம் வருடம் படித்து வருகிறார்கள். இளங்கலை கணிதம் இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்து இருந்தனர்.
இதோ, இந்தக் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. கல்லூரியில் சேர்ந்தது முதல் இருவரும் தோழிகள்
இங்கே சேர்ந்த புதிதில் இவர்கள் இருவரும் தனித்தனியாக தங்கள் சந்தேகத்தைக் கேட்க நினைத்துப் பேராசிரியர்களுக்குப் பொதுவான ஸ்டாப் ரூம் போவதை விடுத்து அலுவலக அறைக்குச் சென்று இருந்தனர்.
அந்த அலுவலகத்தில் இருந்த அலுவலர்களோ கருமமே கண்ணாக வேலை செய்ய, புதிதாக கல்லூரியில் சேர்ந்திருந்த இவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.
இருவருக்கும் தங்கள் பாடவேளைகள் குறித்து சந்தேகம் இருந்தது. இவர்கள் இருவரும் தங்களுக்குத் தேவையான தகவலைக் கேட்டபோது கணினியில் இருந்து யாரும் தலையை உயர்த்தவில்லை.
இதெல்லாம் வேறு ஒரு அலுவலரின் வேலை என்று யாரும் இவர்களை சட்டை செய்யவில்லை. ஆனால் அது தங்கள் வேலை அல்ல என்பதையாவது சொல்லி இருக்கலாம் அல்லவா?
இதில் எரிச்சலடைந்த சந்தனா, “ எக்ஸ்கியூஸ் மீ! வாட் இஸ் த பிரசியூஜர் டூ சேன்ஜ் த காலேஜ்?” என்று சத்தமாகக் கேட்டாள்.
அலுவலகத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத இந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் நகைச்சுவையில் சட்டென அனைவரும் முகம் உயர்த்தினர்.
அப்போதுதான் அலர் அவளைப் பார்த்தாள்.
இருவரும் கண்களால் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.
அதன்பின் அவர்களுக்குத் தேவையான விபரங்களை அங்கிருந்தவர்களிடமே பெற்று வெற்றி வாகை சூடி ஒருவருக்கு ஒருவர் புன்னகைத்துக் கொண்டே திரும்பிச் சென்றனர்.
இவர்கள் இருவருக்கும் வாய் சற்று அதிகம் என்பதாலும் இருவருக்குமே யாருக்கும் அடங்கிப் போவது பிடிக்காது என்பதாலும் தன்னைப் போல இருந்த மற்றவரோடு விரைவில் ஜிகிரி தோஸ்த் ஆகிவிட்டார்கள்.
என்னதான் இவர்கள் இருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்தாலும் ஒருவரின் அண்ணனை மற்றவருக்குப் பிடிப்பதே இல்லை.
அலருக்கு ரகுவரனைப் பிடிக்காமல் போக மிக முக்கிய காரணம் அவன் பெயர். அடுத்து அவன் உயரம். அலர் ஐந்தேகால் அடி இருப்பாள். ரகுவரன் ஆறு அடிக்கும் அதிகம். எப்போதும் திருட்டுத் தனமாக எட்டிப் பார்ப்பதை போல எட்டிப் பார்த்து தான் அவனிடம் பேச வேண்டும்.
அந்தக் கருமம் நமக்கு எதுக்கு? என்று எப்போதாவது பார்க்கும் போது கூட அவனிடம் பேசுவதை தவிர்த்து விடுவாள்.
ஒரு ஜாடையில் நடிகர் ரகுவரன் போல, அவரின் இளவயது தோற்றத்தில் இருப்பதாக அவளுக்குத் தோன்றும்.
தன் தங்கை சந்தனாவை இவர்கள் கல்லூரியில் இருந்து அழைத்து செல்ல ரகுவரன்தான் வருவான். கல்லூரிக்குள் வர அனுமதி இல்லை, ஆகவே சந்தனாவுக்கு ஃபோன் செய்து வந்ததைச் சொல்லிவிட்டு சும்மா வெளியே பராக்கு பார்த்துக் கொண்டு இருப்பான்.
பருவ வயது ஆண்களும் பெண்களும் அவர்களின் துள்ளலும் அவனுக்கு அவனது கல்லூரிக் காலத்தை நினைவுப்படுத்த அந்த நினைவுகளில் மெல்ல முகம் மலர்ந்திருப்பான்.
கொஞ்சம் பழக்கப்பட்ட மாணவமணிகளும் இவனைப் பார்த்தால் ‘அண்ணா அண்ணா ' என்று உருகுவார்கள். அல்லது மரியாதையாக தலையசைத்து செல்வார்கள். ‘ நெட்டையா இருந்தா பெரிய பிஸ்தாவா? இதுங்க ஏன் தான் இவனைக் கண்டு பம்முதுங்களோ? ஆண்டவா! ‘ என எரிச்சலில் கதறுவாள் அலர்.
ஆனால் ரகுவரன் ஆரம்பத்திலேயே அப்படி பழக்கிவிட்டு விட்டான். இந்தக் கூட்டத்தில் யாரையும் சைட் கூட அடிப்பதில்லை அவன். அந்தப் பெண்களும் அவன் தங்கை போலத்தான் அவனுக்கு, ஒருத்தியை தவிர! அந்த ஒருத்தி அவன் தங்கையின் நெருங்கிய தோழி வேறு! அவளை நினைத்தால்தான் இரத்த அழுத்தம் ஏறுகிறது அவனுக்கு.
பெயரைப் பார், பெயரை! அலர்மேல் மங்கை! பேசாமல் ‘ அடுப்பு மேல் அண்டா ‘ என்று வைத்திருக்க வேண்டியதுதானே? எனக் குமுறுவான்.
அலர் அவனை முதலில் பார்த்தபோது ஏதோ ஒரு இளங்கலை முதலாமாண்டு மாணவியுடன் புன்னகை முகமாகப் பேசிக் கொண்டு இருந்தான் அவன்.
அவன் உயரத்தை 'ஆ 'வெனப் பார்த்தபோதும், கனிவும் அலட்சியமும் கலந்து கட்டி இருந்த அவன் முகம் அவளை ஈர்க்கத்தான் செய்தது.
கனிவு சரிதான். ஆனால் அலட்சியம் ஏன்? அது பிறரை அவனிடம் இருந்து தள்ளி நிறுத்த அவன் பயன்படுத்துவது என்பது அப்போது அலருக்கு தெரியாதாகையால் ‘ ரொம்பத்தான் சீனு ‘ என முணுமுணுத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
சந்தனா இவளை இழுத்துக் கொண்டு போய் தன் அண்ணன் முன் நிறுத்தி, “ அண்ணா, இவங்க என் ஃப்ரெண்ட், பேரு அலர்மேல் மங்கை. இவங்களும் என்னைப் போல இங்கே புதுசா சேர்ந்து இருக்காங்க. “ என்றவள், இவள்புறம் திரும்பி, “ இவங்க என் அண்ணா, பேரு ரகுவரன், லாயரா இருக்காங்க “ என மரியாதையாக அறிமுகம் செய்து வைத்தாள்.
ஆனால் ரகுவரன் இவளை வினோத ஜந்துவைப் பார்ப்பதுபோல கேவலமாகப் பார்த்துவிட்டு சிரிப்பு என்ற பெயரில் ஏதோ உதட்டை இழுத்துக் காட்டிவிட்டு “ போலாமா சந்தனா?” என்று அவனின் ஹீரோ ஸ்பெளன்டர் பிளாசை கிளப்ப சந்தனாவும் இவளிடம் விடைபெற்றுக் கிளம்பி விட்டாள்.
தோழிக்கு பல்லைக் காட்டியபடி சிரிப்பது என்றும், அவள் அண்ணனுக்கு - பல்லைக் கடித்தாலும், சிரித்த மாதிரி மூஞ்சை வைப்பது என்றும் மல்டி டாஸ்க் ஆகிப் போனது அலர்மேல் மங்கைக்கு.
நள்ளிரவு நேரம்.
மணி பன்னிரண்டை நெருங்க இன்னும் ஒரு சில மணித்துளிகளே இருந்தன.
“ நீ மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா உன் பொண்டாட்டியை என் கூட அனுப்பி வைடா “ ரகுவரன் ஆத்திரத்தில் சவால்(!) விட்டான்.
“ நீ நெஞ்சுல முடி முளைச்ச ஆம்பளையா இருந்தா மொதல்ல நீ உன் பொண்டாட்டியை என் கூட அனுப்பி வைடா” பதிலுக்கு பதில் சவால் (!) வந்தது பாலாவிடமிருந்து.
இருவரும் ஒதுக்குப் புறமான அந்த சாலையில் ஒருவர் ஒருவர் கழுத்தை ஒருவர் நெறித்தபடி கீழே உருண்டு புரண்டு கொண்டு இருந்தனர்.
இந்த நிகழ்வுக்கு அருகில் யாருக்கோ டீ ஆற்றிக் கொண்டு இருந்தார் டீ கடைக்காரர் ஒருவர்.
இவர்கள் குறிப்பிடும் இரண்டு இளம் பெண்களும் அந்த டீ கடையில் பதட்டத்துடன் அமர்ந்து இருந்தனர்.
டீ கடைக்காரர் வேலையில் பிஸியாக இருந்ததால் இவர்கள் சண்டையை கவனித்த மாதிரி தெரியவில்லை.
“ உங்க மாமன் மச்சான் சண்டையை வீட்டுக்குள்ள வச்சுக்கங்கப்பா. “ என சத்தமாக சொன்னார் பெரியவர் ஒருவர்.
“தூக்கம் வராம டீ குடிக்க வந்தா இவனுங்க வேற! “ என முணுமுணுத்தார் அவர். அப்படியே, “டீ கேன்சல் பண்ணிருப்பா!” என்றும் உத்தரவிட்டு டீ கடைக்காரருக்கு கோபத்தை உண்டாக்கி அதையும் இந்த ‘ மாமன் மச்சான் ' புறம் வாகாகத் திருப்பி விட்டார்.
இவர்களின் இத்தனை நேர அட்டகாசங்களை இதுவரை பரபரப்பு படம் போலப் பார்த்துவிட்டு, ‘ இது தேறாத கேஸ்(!) ‘ என முடிவு செய்து , மெதுவே நடையைக் கட்டியவாறு போகிற போக்கில் சொல்லிச் சென்றார் அந்த வயசாளி.
பின்னே? அவர் ஆசைப்பட்டபடி இது கள்ளக்காதல் விவகாரம் இல்லை என்றால் அவரும் என்னதான் செய்வார்?
இன்னும் இருந்து கிளைமாக்ஸ் வரை பார்க்க ஆசைதான். ‘ ஒருவேளை இவர்கள் சண்டை எதிர்பாராத விதமாக கொலை, கிலை என்று முடிந்துவிட்டால் யார் போலீசில் அல்லாடுவது? 'என சலித்தவர், மனமே இல்லாமல் எழுந்து போய்விட்டார்.
இத்தனை நேரம் இப்படி ஒருவர் இங்கேயே இருந்ததையும், இவர்கள் அடித்துக் கொள்வதை வேடிக்கைப் பார்த்ததையும் கவனிக்காத இவர்கள் இருவரும் திடீரென உதித்த அவர் மற்றும் அவரின் ‘ மாமன், மச்சான் ‘ என்ற வார்த்தையில் திடுக்கிட்டார்கள்.
சொல்வதை சொல்லிவிட்டு அவர் போய் விட, இவர்கள் நிலை பரிதாபம் தான்.
ஒருகணம் இருவரும் அடுத்தவர் கழுத்தில் இருந்து தத்தம் கைகளை தளர்த்தியவர்களின் கண்கள் நேருக்கு நேர் எதிர் எதிராகச் சந்தித்துக் கொண்டன.
“ச்சை! எந்த ஜென்மத்தில் செஞ்ச பாவமோ, இதை எல்லாம் நான் கேட்கிற மாதிரி ஆகிருச்சு”, என்றபடி ரகுவரனைத் தள்ளிவிட்டுக் கொண்டு எழ முயன்றான் பாலா என்ற பாலாஜி.
“கருமம் பிடிச்சவனே! நீ எந்த ஜென்மத்துலயோ பாவம் பண்ணிட்டு என்னையும் ஏண்டா இதெல்லாம் கேக்க வைக்கிற? என் கண்ணு முன்னாடி நிக்காம உன் தங்கச்சியை கூட்டிட்டு போய்த் தொலைடா பன்னாடை!” எரிந்து விழுந்து கொண்டே தள்ளாடியபடி எழுந்து நின்றான் ரகுவரன்.
“ இப்போ தான் அவ என் தங்கச்சின்னு உன் மண்டையில ஏறுச்சோ? இவ்ளோ நேரம் அவளை நீ தாலி கட்ன பொண்டாட்டி பொண்டாட்டின்னு எனக்கு ஆட்டம் காட்டும் போது ஏறலியோ?” மீண்டும் அவன் சட்டைக் காலரைப் பிடித்தான் பாலா.
“ நீ பெரிய ஒழுங்கு! நீயும்தானடா அப்டி குதிச்ச?” ரகுவரன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவன் கையைத் தள்ளிவிட முயன்றான்.
அடிதடியில் பாதி தள்ளாட்டம், மித மிஞ்சிய கோபத்தில் மீதி தள்ளாட்டம் எனத் தள்ளாடியதில் கைகள் தடுமாறினாலும், தங்கையின் கணவன் ஆகி விட்டவன் என்ற காரணத்தால் இருவரும் மொக்கை அடி அடித்துக் கொண்டு இருந்தனர்.
இவர்கள் ஆட்டத்தைப் பதட்டமாகப் பார்த்துக் கொண்டு நின்ற பெண்கள் இருவரும் இப்போது சுதாரித்துக் கொண்டனர்.
“அண்ணா நீ வாண்ணா! இவன்லாம் ஒரு ஆளுன்னு பேசிக்கிட்டு!” _ பாலாவுக்கு முட்டு கொடுத்தாள் அவன் அன்புத் தங்கை அலர்மேல் மங்கை .
இதுவரை அவளை ஏறெடுத்தும் பார்க்காத ரகுவரன் சரேலென்று திரும்பி அவளைப் பார்த்து முறைத்தான்.
“ என்னடி? 'ஆளு கீளு’ன்ற?. நீ பெரிய லாடு வீட்டு கொழாப் புட்டு! கிழக்கும் மேற்கும் தெரியாத உழக்கு மாதிரி இருந்துகிட்டு வாயப் பாரு! நான் மதிச்சு வாழ்க்கை குடுக்கலன்னா அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் இப்போ நாறி இருப்பீங்க!” வார்த்தையை விட்டான்.
“ யாரப் பாத்து உழக்குங்கறேங்க? சந்தனா, சொல்லி வை உன் அண்ணங்கிட்ட! ” அலர் அலப்பரையைக் கூட்டினாள்.
அவள் நெடுநாளைய தோழி சந்தன முல்லையின் நெட்டைகொக்கு அண்ணன் _ ரகுவரனை நினைத்தால் எப்போதும் ஏராளமாக எரிச்சல் வரும் அவளுக்கு. அப்படிப் பட்டவன் அவளுக்குக் கணவனா? அதுவே வயிறு எரிந்தது அவளுக்கு.
அதுமட்டும் அல்லாது தன் அண்ணன் பாலாஜி ஆனவன், ரகுவரனின் தங்கைக்கு _ அதாவது அவளின் உற்ற தோழி _ சந்தனமுல்லைக்கு தாலி கட்டியதில், இந்த நெடுமரம் அவர்கள் குடும்பத்துக்கு இன்னும் நெருங்கிய உறவினன் ஆகி விட்டான் என்பதில் நெஞ்சம் படபடத்தது.
எல்லாம் விதி!
இல்லை என்றால் தோழிகள் இருவரும் அந்த உருப்படாத ஹோட்டலுக்கு இன்று போயிருப்பார்களா?
அதனால் அல்லவா இத்தனை இன்னல்களும்?
அவளைக் கேட்காமல் இதயம் பின்னோக்கிச் சென்றது. மற்ற மூவரின் இதயங்களும் சும்மா இல்லாமல் அவையும் அவள் சிந்தனைக்கு எசப் பாட்டு பாடின.
சந்தனமுல்லையும் அலர்மேல் மங்கையும் ஒரு பெரிய தனியார் கல்லூரியில் முதுகலை கணிதம் இரண்டாம் வருடம் படித்து வருகிறார்கள். இளங்கலை கணிதம் இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்து இருந்தனர்.
இதோ, இந்தக் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. கல்லூரியில் சேர்ந்தது முதல் இருவரும் தோழிகள்
இங்கே சேர்ந்த புதிதில் இவர்கள் இருவரும் தனித்தனியாக தங்கள் சந்தேகத்தைக் கேட்க நினைத்துப் பேராசிரியர்களுக்குப் பொதுவான ஸ்டாப் ரூம் போவதை விடுத்து அலுவலக அறைக்குச் சென்று இருந்தனர்.
அந்த அலுவலகத்தில் இருந்த அலுவலர்களோ கருமமே கண்ணாக வேலை செய்ய, புதிதாக கல்லூரியில் சேர்ந்திருந்த இவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.
இருவருக்கும் தங்கள் பாடவேளைகள் குறித்து சந்தேகம் இருந்தது. இவர்கள் இருவரும் தங்களுக்குத் தேவையான தகவலைக் கேட்டபோது கணினியில் இருந்து யாரும் தலையை உயர்த்தவில்லை.
இதெல்லாம் வேறு ஒரு அலுவலரின் வேலை என்று யாரும் இவர்களை சட்டை செய்யவில்லை. ஆனால் அது தங்கள் வேலை அல்ல என்பதையாவது சொல்லி இருக்கலாம் அல்லவா?
இதில் எரிச்சலடைந்த சந்தனா, “ எக்ஸ்கியூஸ் மீ! வாட் இஸ் த பிரசியூஜர் டூ சேன்ஜ் த காலேஜ்?” என்று சத்தமாகக் கேட்டாள்.
அலுவலகத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத இந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் நகைச்சுவையில் சட்டென அனைவரும் முகம் உயர்த்தினர்.
அப்போதுதான் அலர் அவளைப் பார்த்தாள்.
இருவரும் கண்களால் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.
அதன்பின் அவர்களுக்குத் தேவையான விபரங்களை அங்கிருந்தவர்களிடமே பெற்று வெற்றி வாகை சூடி ஒருவருக்கு ஒருவர் புன்னகைத்துக் கொண்டே திரும்பிச் சென்றனர்.
இவர்கள் இருவருக்கும் வாய் சற்று அதிகம் என்பதாலும் இருவருக்குமே யாருக்கும் அடங்கிப் போவது பிடிக்காது என்பதாலும் தன்னைப் போல இருந்த மற்றவரோடு விரைவில் ஜிகிரி தோஸ்த் ஆகிவிட்டார்கள்.
என்னதான் இவர்கள் இருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்தாலும் ஒருவரின் அண்ணனை மற்றவருக்குப் பிடிப்பதே இல்லை.
அலருக்கு ரகுவரனைப் பிடிக்காமல் போக மிக முக்கிய காரணம் அவன் பெயர். அடுத்து அவன் உயரம். அலர் ஐந்தேகால் அடி இருப்பாள். ரகுவரன் ஆறு அடிக்கும் அதிகம். எப்போதும் திருட்டுத் தனமாக எட்டிப் பார்ப்பதை போல எட்டிப் பார்த்து தான் அவனிடம் பேச வேண்டும்.
அந்தக் கருமம் நமக்கு எதுக்கு? என்று எப்போதாவது பார்க்கும் போது கூட அவனிடம் பேசுவதை தவிர்த்து விடுவாள்.
ஒரு ஜாடையில் நடிகர் ரகுவரன் போல, அவரின் இளவயது தோற்றத்தில் இருப்பதாக அவளுக்குத் தோன்றும்.
தன் தங்கை சந்தனாவை இவர்கள் கல்லூரியில் இருந்து அழைத்து செல்ல ரகுவரன்தான் வருவான். கல்லூரிக்குள் வர அனுமதி இல்லை, ஆகவே சந்தனாவுக்கு ஃபோன் செய்து வந்ததைச் சொல்லிவிட்டு சும்மா வெளியே பராக்கு பார்த்துக் கொண்டு இருப்பான்.
பருவ வயது ஆண்களும் பெண்களும் அவர்களின் துள்ளலும் அவனுக்கு அவனது கல்லூரிக் காலத்தை நினைவுப்படுத்த அந்த நினைவுகளில் மெல்ல முகம் மலர்ந்திருப்பான்.
கொஞ்சம் பழக்கப்பட்ட மாணவமணிகளும் இவனைப் பார்த்தால் ‘அண்ணா அண்ணா ' என்று உருகுவார்கள். அல்லது மரியாதையாக தலையசைத்து செல்வார்கள். ‘ நெட்டையா இருந்தா பெரிய பிஸ்தாவா? இதுங்க ஏன் தான் இவனைக் கண்டு பம்முதுங்களோ? ஆண்டவா! ‘ என எரிச்சலில் கதறுவாள் அலர்.
ஆனால் ரகுவரன் ஆரம்பத்திலேயே அப்படி பழக்கிவிட்டு விட்டான். இந்தக் கூட்டத்தில் யாரையும் சைட் கூட அடிப்பதில்லை அவன். அந்தப் பெண்களும் அவன் தங்கை போலத்தான் அவனுக்கு, ஒருத்தியை தவிர! அந்த ஒருத்தி அவன் தங்கையின் நெருங்கிய தோழி வேறு! அவளை நினைத்தால்தான் இரத்த அழுத்தம் ஏறுகிறது அவனுக்கு.
பெயரைப் பார், பெயரை! அலர்மேல் மங்கை! பேசாமல் ‘ அடுப்பு மேல் அண்டா ‘ என்று வைத்திருக்க வேண்டியதுதானே? எனக் குமுறுவான்.
அலர் அவனை முதலில் பார்த்தபோது ஏதோ ஒரு இளங்கலை முதலாமாண்டு மாணவியுடன் புன்னகை முகமாகப் பேசிக் கொண்டு இருந்தான் அவன்.
அவன் உயரத்தை 'ஆ 'வெனப் பார்த்தபோதும், கனிவும் அலட்சியமும் கலந்து கட்டி இருந்த அவன் முகம் அவளை ஈர்க்கத்தான் செய்தது.
கனிவு சரிதான். ஆனால் அலட்சியம் ஏன்? அது பிறரை அவனிடம் இருந்து தள்ளி நிறுத்த அவன் பயன்படுத்துவது என்பது அப்போது அலருக்கு தெரியாதாகையால் ‘ ரொம்பத்தான் சீனு ‘ என முணுமுணுத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
சந்தனா இவளை இழுத்துக் கொண்டு போய் தன் அண்ணன் முன் நிறுத்தி, “ அண்ணா, இவங்க என் ஃப்ரெண்ட், பேரு அலர்மேல் மங்கை. இவங்களும் என்னைப் போல இங்கே புதுசா சேர்ந்து இருக்காங்க. “ என்றவள், இவள்புறம் திரும்பி, “ இவங்க என் அண்ணா, பேரு ரகுவரன், லாயரா இருக்காங்க “ என மரியாதையாக அறிமுகம் செய்து வைத்தாள்.
ஆனால் ரகுவரன் இவளை வினோத ஜந்துவைப் பார்ப்பதுபோல கேவலமாகப் பார்த்துவிட்டு சிரிப்பு என்ற பெயரில் ஏதோ உதட்டை இழுத்துக் காட்டிவிட்டு “ போலாமா சந்தனா?” என்று அவனின் ஹீரோ ஸ்பெளன்டர் பிளாசை கிளப்ப சந்தனாவும் இவளிடம் விடைபெற்றுக் கிளம்பி விட்டாள்.
தோழிக்கு பல்லைக் காட்டியபடி சிரிப்பது என்றும், அவள் அண்ணனுக்கு - பல்லைக் கடித்தாலும், சிரித்த மாதிரி மூஞ்சை வைப்பது என்றும் மல்டி டாஸ்க் ஆகிப் போனது அலர்மேல் மங்கைக்கு.
Last edited: