THAZHAI KANI
அமைச்சர்
“ஓர் நாளில்
ஊர் கூடி
கும்மாளமிட
இறைவன் திருவடியை
எல்லோரும் கூடி
பணிந்து
இதயம் முழுதும்
நிறைந்திருக்க
சில ஓரப்பார்வைகள்
ராட்டினத்தில்
அமர்ந்து
ரகசியப்பார்வைகள்
கூட்டாஞ்சோறு மகிழ்ச்சிகள்
பொருட்காட்சியில்
நிரம்பி வழியும்
கடைகளில்
எதை வாங்குவது
எதைவிடுவது
விழி பிதுங்கி நின்றிடும்
பொழுதுகள்
முறைமாமனின்
கண்ஜாடைகள்
உறவுகளின் வருகை
உள்ளத்தில் இனிமை
ஊர்த்திருவிழா போல்
வந்திடுமோ
எதுவும்
நம் வாழ்வில்
அழகிய
வானவில்லாய்”
Attachments
-
91.2 KB Views: 0