பகிர்வு பதிவு
அரண்மனையில் ஆள்நடமாட்டமே இல்லாததுபோல, கனத்த அமைதி சூழ்ந்திருந்தது. அவர்கள் இருந்திருந்தால் இப்படியா இருக்கும் இந்த இடம்?
ஜலஜலக்கும் சதங்கைஒலி...
கலகலக்கும் சிரிப்பொலி...
சதா அரண்மனையின் இண்டு இடுக்கிலெல்லாம் எதிரொலித்துக் கொண்டல்லவா இருக்கும்!
"அந்தப்புரத்தில்தான் பெண்கள் இருக்க வேண்டும். ஆடவர் முன் வருவதைத் தவிர்க்க வேண்டும். அடக்கவொடுக்கம் அவசியம்..." போன்ற எல்லை மீறிய கட்டுப்பாடுகளால் கட்டிப்போட்டு வைக்காமல், தனது பெண்களுக்கு முழுசுதந்திரம் அளித்திருந்தார் ஜனகர்.
ஆனாலும், ஜனகரின் மனைவி சுனைநா, குழந்தைகள் விஷயத்தில், அன்போடு கலந்து கொஞ்சம் கண்டிப்பையும் வைத்திருந்தாள்.
அவ்வப்போது, சீதையையும், ஊர்மிளையையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டு நீதிக்கதைகளையும், நல்ல போதனைகளையும் உபதேசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
பெற்றோர் இருவரின் வழிநடத்துதலால், ஸ்வபாவமாகவே, குழந்தைகள் இருவரிடமும், தைரியம், தன்னம்பிக்கை இவற்றோடு, விவேகமும் ஞானமும் அபரிமிதமாக இருந்தது.
பெரும்பாலும் ஸத்விசாரங்களிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் ஜனகமகாராஜா...
இதைத் தவிரவும், அவருக்கு ஒருவிஷயத்தில் விருப்பம் இருந்தது என்று சொன்னால், அது தனது மகள்கள் இருவரையும் விழிமூடாது பார்த்துக் கொண்டிருப்பதுதான்!
இப்பொழுது அவர்களின்றி வெறிச்சோடியிருந்த அரண்மனை, அவருக்கு வித்யாசமாக இருந்தது. மெல்ல நந்தவனத்தை நோக்கி நடந்தார்.
"இருங்கோ... நானும் வரேன்..."
ஜனகரின் மனைவி, சுனைநா பின்தொடர்ந்தாள். பேச்சு குழந்தைகளைச் சுற்றியே வட்டமிட்டது.
"சுனைநா... என் பொண்ணுகள் இல்லாம, அரண்மனையே வெறிச்சுன்னு இருக்கு... கவனிச்சயா?"
சுனைநா "களுக்" என்றுசிரித்தாள்.
"ஏன் சிரிக்கறே சுனைநா? நான் சொன்னதிலே என்ன தப்பு? ஒனக்கு அப்டித் தோணலையா?"
"எல்லாம் சரிதான்... ஆனா, அவா ரெண்டுபேரும் ஒருத்தன் வீட்டுக்கு, என்னிக்கு இருந்தாலும், போக வேண்டியவாதானே... அத நெனச்சுப்பாத்தேளா?" மௌனமானார் ஜனகர்...
சாதாரணமாகச் சட்டென்று உணர்ச்சிவசப் படக்கூடியவர் அல்லர் அவர்... ரொம்பவும் விவேக ஞானம் உள்ளவர். லோகாயதமான ஆசைகள் அற்றவர்தான்!
ஆயிரம் இருந்தும், தன்பெண்கள் விஷயத்தில் மட்டும் அவரால், தனது ஞானத்தை ப்ரயோகிக்க முடியவில்லை.அவர்கள் அன்புக்குத் தோற்றுப் போகின்ற சராசரித் தந்தையாகவே இருந்தார்.
"என்ன, பேச்சயே காணோம்? நா ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?"
சுனைநாவின் குரலில், ஜனகர் மீண்டார்...
"இல்ல சுனைநா... நீ சரியாத்தான் சொல்றே... நான்தான் மாறணும்..."
பேசிக்கொண்டே வந்தவரின் செவிகளில், வெளியேயிருந்து மிதந்து வந்த "ஷெனாய்" இசை விழுந்தது.
அது ப்ரத்யேகமாக, திருமண ஊர்வலம் என்று சொல்லப்படுகின்ற "பாராத்"தில் மட்டுமே வாசிக்கப்படுகின்ற ஒருசங்கதி. ஜனகரை அது அசைத்தது.
"என்பொண்கள்கூட, திருமண வயச நெருங்கிட்டாளே... இன்னும் எத்தனை நாளைக்கு இவா ரெண்டு பேரையும் என்கிட்டயே வெச்சுக்க முடியும்?" யோசனை மேலிட மனைவியிடம் பேசினார்.
"சுனைநா... நம்ம ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ண வேண்டிய வயசு ஆயிடுத்தேமா... ஒரு நல்லநாளா பாத்து, அவா கல்யாண விஷயத்துக்கு உண்டான முயற்சிய ஆரம்பிக்கணும்மா..."
"நானே ஒங்ககிட்டே அதபத்தி பேசணும்னுதான் நெனச்சுண்டிருந்தேன்...
எதுக்கும் நம்ம குலகுருகிட்ட அவா ரெண்டுபேரோட ஜாதகத்தையும் காட்டி, அவரோடு அபிப்ராயத்த வாங்கிண்டு அதுக்கு மேல ஆரம்பியுங்கோ..."
ஜனகருக்கும் அதுவே சரி என்று பட்டது. எல்லா விஷயத்திலும், தன் குலகுரு அஷ்டவக்கிரரைக் கலந்து ஆலோசிக்காமல், அவர் எதுவுமே செய்ததில்லை! குருவின்மேல் அவ்வளவு நம்பிக்கை ஜனகருக்கு!
அஷ்டவக்கிரரும் ஒருசிறந்த "தீர்க்கதரிசி" மிகுந்த மதிநுட்பமும், ஆச்சர்யமான ஞானமும் உடையவர். அவர்சொல், ஜனகரைப்பொருத்தவரையிலும், "வேதஸத்தியம்"
"அதுவும் சரிதான் சுனைநா... நாளைக்கே நம்ம குலகுருகிட்ட ரெண்டு குழந்தைகளோட ஜாதகத்தையும் காட்டி, அவரோட சம்மதத்தை வாங்கிக்கறேன்..."
அஷ்டவக்கிரரின் திருவாக்கு, எவ்வளவு தூரம் தம்மை நிலைகுலைய வைக்கப் போகிறது என்பதை அறியாதவராய், அரண்மனையை நோக்கி நடந்தார் ஜனகர்....
**************************************
தன்னைத் தேடி தன் ஆஸ்ரமம் வரை, இவ்வளவு விடிகாலையில் வந்த ஜனகரைப் பார்த்து ஆச்சரியமடைந்தார் அஷ்டவக்கிர முனிவர்.
தாள் வணங்கிய சிஷ்யனைக் குளிர நோக்கினார்.
"சொல் ஜனகா! என்ன விஷயமா இவ்ளோ தூரம் வந்திருக்க?"
"குருநாதா... தங்களுக்குத் தெரியாதது ஒன்னுமில்ல... என் ரெண்டு பொண்ணுக்கும் கல்யாண வயசாயிடுத்து... சீக்ரம் அவாளுக்கு விவாகம் பண்ணலாம்னு தோணிடுத்து... ஒங்க உத்தரவு வேணும்..."
"ரொம்ப நல்ல விஷயமாச்சே இது! "சுபஸ்ய சீக்ரம்"னு சொல்வாளே... நடத்திடேன்..."
"அதுக்கில்ல குருநாதா... கொழந்தைகளோட ஜாதகத்தைக் கையோட கொண்டு வந்திருக்கேன்... ஒருக்ஷணம் நீங்க அத பாத்துட்டேள்னா, மேற்கொண்டு ஆரம்பிச்சிடுவேன்..."
"அதுக்கென்ன... கொடுப்பா... பாத்துட்டாபோச்சு... ஈஸ்வரசித்தம் ஒன் விஷயத்தில நன்னாதான்பா இருக்கும்..."
பவ்யமாக ஜாதக ஓலையை, அஷ்டவக்கிரரிடம் அளித்தார் ஜனகர்.
சீதையின் ஜாதகத்தை, மேலெழுந்த வாரியாகப் பார்த்த முனிவர், சட்டென்று அதை தமது சிரசில் வைத்துக்கொண்டு, பின்கண்களில் ஒற்றிஎடுத்தார்...
வியப்புமேலிட, ஜனகர் அவரை நோக்கினார்...
"அடடா... இது இறையம்ஸம் உள்ள ஜாதகம்... சாக்ஷாத் மஹாலக்ஷ்மியோட அம்சமாவே வந்திருக்கா ஒன்பொண்ணு..."
ஜனகரின் முகம் மலர்ந்தது... நேரம் மெல்லமெல்லக் கரைந்து கொண்டிருந்தது.
இத்தனை நேரமும் வாய் மூடி இருந்த முனிவர், இப்பொழுது,
"ஒன்னோட கனிஷ்ட குமாரத்தியோட(இளையமகள்) ஜாதகத்தை கொடு..." என்று வாய் திறந்தார்...
ஜனகர் அதையும் சிரத்தையோடு, குருவிடம் சமர்ப்பித்தார். வெகு நேரத்திற்கு அமைதி நீடித்தது.
கண்களை மூடிய வண்ணம் இருந்த குருநாதர் முன்கைகட்டி அமர்ந்திருந்தார் ஜனகர்.
முனிவர் விழிமலர்ந்த போது, ஜனகர் தம்மையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.
"ஜனகராஜனே... நீ ஒன் கொழந்தைகளுக்கு விவாஹத்துக்கு உண்டான ஏற்பாடெல்லாம் ஆரம்பி... பாக்கலாம்..."
"க்ஷமிக்கணும்... குருநாதா... அவாளோட எதிர்காலம் நன்னா இருக்குமோன்னோ?"
ஒரு தகப்பனுக்குரிய ஆதங்கத்துடன் முனிவரிடம் வினவினார் ஜனகர்.
"அவசியம் தெரிஞ்சுக்கணும்னு நெனச்சா சொல்றேன்..."
"குருநாதா... அடியேன்கிட்ட சொல்லலாம்னு ஒங்க மனசுக்குப் பட்டுதுன்னா சொல்லுங்கோ..." சிஷ்யனுக்குரிய சகல லக்ஷணங்களுடன் பதிலளித்த ஜனகரை ஏறிட்டார் அஷ்டவக்கிரர். மெல்ல அந்த ரகசியத்தை, ஜனகரிடம் பகிர்ந்தார்.
"அரசபோகம் உண்டு; அனுபவிக்கும் யோகம்இல்லை!.."
"கரம்பிடிக்கும் கணவன் உண்டு;கல்யாண சுகம்தான் இல்லை!."
"தரமான சுற்றம் உண்டு; தாங்க ஓர்சொந்தம் இல்லை!.."
"வரம் போலும் வாழ்வு உண்டு; வாழத்தான் விதி இல்லை!.."
முனிவரிடமிருந்து வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், ஜனகரைத் தீயாய்ச் சுட்டது.
******************************
"கு..ரு...நா...தா..." அதற்குமேல்பேசஇயலாமல்தடுமாறினார்.
அவரையும் மீறி கண்களில் நீர் வழிந்தது.
"வேந்தனே... என்னஇது? என்சிஷ்யன் ஒரு சிறந்த ஞானி என்று எண்ணியிருந்தேனே... இறுதியில் நீயும் ஒரு சராசரி மானிடனாய் ஆனாயோ?"
சுதாரித்தார் ஜனகர்...
"க்ஷமிக்கணும் குருநாதா... குருதியில் பந்தபாசம் இன்னமும் கொஞ்சம் ஒட்டியிருப்பதால், அடியேன் உறுதி சற்றே சரிகிறது.
தமது சிஷ்யன் என்று சொல்லிக்கொண்டு தம்மையே அவமானப்படுத்துவதாக உணர்கிறேன் குருநாதா..." தன்னிரக்கத்தோடு தலைகவிழ்ந்தார்..
மனக் கொந்தளிப்போடு இருக்கின்ற ஜனகரை, சமாதானப்படுத்தும் விதமாய், அஷ்டவக்கிரர் பேசஆரம்பித்தார்.
"வேந்தே, எத்தனை முறை ஸத்விஷயம் பேசியிருப்போம்! எத்தனைமுறை இந்த அழிகின்ற உடலைப் பற்றியும், அழியாத ஆன்ம ஸ்வரூபத்தைப் பற்றிய விளக்கங்களையும் கண்டிருப்போம்? எல்லாம் மறந்தாயோ? நீ ராஜாவாக இருந்தாலும், தன்னை அறிந்தவனாய் இருப்பதால்தானே, உனக்கு, "ராஜரிஷி" என்று பட்டமே சூட்டினேன்! இந்த அஷ்டவக்கிரனின் கணிப்பும் பொய்யானதோ?" குற்ற உணர்வோடு, முனிவரை ஏறிட்டார் ஜனகர்.
"ஜனகனே...
சாதகமாக இருக்கும்போது சிலிர்த்து எழுவதும், பாதகமாய் இருக்கும்போது பதறிவிழுவதும், சாதாரண மனித ஸ்வபாவம்! ஆனால், நீ பற்றுகளை எல்லாம் விட்டொழித்தவன் என்பதை, நானே ஆராய்ந்து அறிந்திருக்கிறேன்!
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
ஒரு சமயம், நீயும் எனது மற்ற சீடர்களும் அமர்ந்து என்னிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அப்பொழுது உன் வேலையாள் ஒருவன் ஓடிவந்து, உன் அரண்மனை தீப்பற்றி எரிவதாகவும், பொருள் சேதம் அதிகமாக ஆகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தான். அன்று அவன்மேல் உனக்கு மகாகோபம் வந்தது!
"அதனாலென்ன? எரிந்து விட்டுப் போகட்டுமே.. ஸத்விஷயங்களை அறிந்து கொண்டிருக்கும் என்னிடம் இதுபற்றி இந்நேரம் பேசவேண்டிய அவசியம் என்ன?" என்று அவனைக் கடிந்து கொண்ட உன்னைப் பார்த்து, அன்று நான் உண்மையிலேயே பூரித்துப்போனேன்! அப்படிப்பட்டவனா, இன்று ஆசாபாசவலையில் அகப்பட்டாய்?"
"தவறுதான் குருநாதா... எங்கோ மனம் உரிமை கொண்டாடுகிறது...
"நான், என்னுடையது..." இவையெல்லாம் அடியேனை விட்டு இன்னமும் மொத்தமாய் நீங்கவில்லை என்றே தோன்றுகிறது.
எந்தப் பரிகாரம் செய்தால், என் குழந்தைகள் இந்தச் சிக்கலில் இருந்து மீள்வார்கள் என்றறியவே, என்னுள்ளம் இப்போது விழைகிறது.
ஞானம் இருந்த இடத்தை, பாசம் வந்து மூடிக்கொண்டது குருநாதா..."
அஷ்டவக்கிரர் பலமாய்ச் சிரித்தார்...
"பலகாலம் சேர்த்த வினைக்கு, பரிகாரமும் ஏது?
விதி வழியே உன்வாழ்க்கை! மதி வெல்லுமோ உன்வழக்கை?"
"குருநாதா... இருவர் வாழ்க்கையுமா அப்படி அமைந்திருக்கிறது?" ஆதங்கத்தோடு வினவினார் ஜனகர்.
"இருவேறு விதமாய்
இவ்விருவரின் பாதை...
இருந்தாலும் ஊர்பேசும்
இவர்களது காதை!"
குருநாதர் கூறுவதன் உட்பொருளை அறிய முயன்று தோற்றார் ஜனகர்.
மீண்டும் அஷ்டவக்கிரர் பேசினார்...
"ஒருத்திக்கு வனவாசம்...
ஒருத்திக்கு வெறும் ஸ்வாஸம்...
மறுமார்க்கம் இல்லையாம்!
திருமார்பன் எண்ணமாம்!"
கடைசியாக முனிவர் பேசிய வார்த்தைகளில், ஜனகரின் விவேகம் மெல்லத் தலைதூக்கியது.
"அவன் தீர்மானத்தை இவன் திருத்திவிட முடியுமா என்ன? எவ்வளவு அறிவீனனாய் ஆனேன்! அடியேனைப் பொறுத்தருளுங்கள் குருநாதா.."
கண்ணீரோடு விண்ணப்பித்த ஜனகரை, கைதூக்கி ஆசீர்வதித்தார் முனிவர்...
*****************************
ஊர்மிளையின் உன்னதம்
குழந்தைகள் சீதையும், ஊர்மிளையும் அவர்களின் சிறிய தந்தையும், ஜனகரின் சகோதரருமான குசத்வஜன் க்ருஹத்திற்குச் சென்றிருந்தனர்.
அரண்மனையில் ஆள்நடமாட்டமே இல்லாததுபோல, கனத்த அமைதி சூழ்ந்திருந்தது. அவர்கள் இருந்திருந்தால் இப்படியா இருக்கும் இந்த இடம்?
ஜலஜலக்கும் சதங்கைஒலி...
கலகலக்கும் சிரிப்பொலி...
சதா அரண்மனையின் இண்டு இடுக்கிலெல்லாம் எதிரொலித்துக் கொண்டல்லவா இருக்கும்!
"அந்தப்புரத்தில்தான் பெண்கள் இருக்க வேண்டும். ஆடவர் முன் வருவதைத் தவிர்க்க வேண்டும். அடக்கவொடுக்கம் அவசியம்..." போன்ற எல்லை மீறிய கட்டுப்பாடுகளால் கட்டிப்போட்டு வைக்காமல், தனது பெண்களுக்கு முழுசுதந்திரம் அளித்திருந்தார் ஜனகர்.
ஆனாலும், ஜனகரின் மனைவி சுனைநா, குழந்தைகள் விஷயத்தில், அன்போடு கலந்து கொஞ்சம் கண்டிப்பையும் வைத்திருந்தாள்.
அவ்வப்போது, சீதையையும், ஊர்மிளையையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டு நீதிக்கதைகளையும், நல்ல போதனைகளையும் உபதேசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
பெற்றோர் இருவரின் வழிநடத்துதலால், ஸ்வபாவமாகவே, குழந்தைகள் இருவரிடமும், தைரியம், தன்னம்பிக்கை இவற்றோடு, விவேகமும் ஞானமும் அபரிமிதமாக இருந்தது.
பெரும்பாலும் ஸத்விசாரங்களிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் ஜனகமகாராஜா...
இதைத் தவிரவும், அவருக்கு ஒருவிஷயத்தில் விருப்பம் இருந்தது என்று சொன்னால், அது தனது மகள்கள் இருவரையும் விழிமூடாது பார்த்துக் கொண்டிருப்பதுதான்!
இப்பொழுது அவர்களின்றி வெறிச்சோடியிருந்த அரண்மனை, அவருக்கு வித்யாசமாக இருந்தது. மெல்ல நந்தவனத்தை நோக்கி நடந்தார்.
"இருங்கோ... நானும் வரேன்..."
ஜனகரின் மனைவி, சுனைநா பின்தொடர்ந்தாள். பேச்சு குழந்தைகளைச் சுற்றியே வட்டமிட்டது.
"சுனைநா... என் பொண்ணுகள் இல்லாம, அரண்மனையே வெறிச்சுன்னு இருக்கு... கவனிச்சயா?"
சுனைநா "களுக்" என்றுசிரித்தாள்.
"ஏன் சிரிக்கறே சுனைநா? நான் சொன்னதிலே என்ன தப்பு? ஒனக்கு அப்டித் தோணலையா?"
"எல்லாம் சரிதான்... ஆனா, அவா ரெண்டுபேரும் ஒருத்தன் வீட்டுக்கு, என்னிக்கு இருந்தாலும், போக வேண்டியவாதானே... அத நெனச்சுப்பாத்தேளா?" மௌனமானார் ஜனகர்...
சாதாரணமாகச் சட்டென்று உணர்ச்சிவசப் படக்கூடியவர் அல்லர் அவர்... ரொம்பவும் விவேக ஞானம் உள்ளவர். லோகாயதமான ஆசைகள் அற்றவர்தான்!
ஆயிரம் இருந்தும், தன்பெண்கள் விஷயத்தில் மட்டும் அவரால், தனது ஞானத்தை ப்ரயோகிக்க முடியவில்லை.அவர்கள் அன்புக்குத் தோற்றுப் போகின்ற சராசரித் தந்தையாகவே இருந்தார்.
"என்ன, பேச்சயே காணோம்? நா ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?"
சுனைநாவின் குரலில், ஜனகர் மீண்டார்...
"இல்ல சுனைநா... நீ சரியாத்தான் சொல்றே... நான்தான் மாறணும்..."
பேசிக்கொண்டே வந்தவரின் செவிகளில், வெளியேயிருந்து மிதந்து வந்த "ஷெனாய்" இசை விழுந்தது.
அது ப்ரத்யேகமாக, திருமண ஊர்வலம் என்று சொல்லப்படுகின்ற "பாராத்"தில் மட்டுமே வாசிக்கப்படுகின்ற ஒருசங்கதி. ஜனகரை அது அசைத்தது.
"என்பொண்கள்கூட, திருமண வயச நெருங்கிட்டாளே... இன்னும் எத்தனை நாளைக்கு இவா ரெண்டு பேரையும் என்கிட்டயே வெச்சுக்க முடியும்?" யோசனை மேலிட மனைவியிடம் பேசினார்.
"சுனைநா... நம்ம ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ண வேண்டிய வயசு ஆயிடுத்தேமா... ஒரு நல்லநாளா பாத்து, அவா கல்யாண விஷயத்துக்கு உண்டான முயற்சிய ஆரம்பிக்கணும்மா..."
"நானே ஒங்ககிட்டே அதபத்தி பேசணும்னுதான் நெனச்சுண்டிருந்தேன்...
எதுக்கும் நம்ம குலகுருகிட்ட அவா ரெண்டுபேரோட ஜாதகத்தையும் காட்டி, அவரோடு அபிப்ராயத்த வாங்கிண்டு அதுக்கு மேல ஆரம்பியுங்கோ..."
ஜனகருக்கும் அதுவே சரி என்று பட்டது. எல்லா விஷயத்திலும், தன் குலகுரு அஷ்டவக்கிரரைக் கலந்து ஆலோசிக்காமல், அவர் எதுவுமே செய்ததில்லை! குருவின்மேல் அவ்வளவு நம்பிக்கை ஜனகருக்கு!
அஷ்டவக்கிரரும் ஒருசிறந்த "தீர்க்கதரிசி" மிகுந்த மதிநுட்பமும், ஆச்சர்யமான ஞானமும் உடையவர். அவர்சொல், ஜனகரைப்பொருத்தவரையிலும், "வேதஸத்தியம்"
"அதுவும் சரிதான் சுனைநா... நாளைக்கே நம்ம குலகுருகிட்ட ரெண்டு குழந்தைகளோட ஜாதகத்தையும் காட்டி, அவரோட சம்மதத்தை வாங்கிக்கறேன்..."
அஷ்டவக்கிரரின் திருவாக்கு, எவ்வளவு தூரம் தம்மை நிலைகுலைய வைக்கப் போகிறது என்பதை அறியாதவராய், அரண்மனையை நோக்கி நடந்தார் ஜனகர்....
**************************************
தன்னைத் தேடி தன் ஆஸ்ரமம் வரை, இவ்வளவு விடிகாலையில் வந்த ஜனகரைப் பார்த்து ஆச்சரியமடைந்தார் அஷ்டவக்கிர முனிவர்.
தாள் வணங்கிய சிஷ்யனைக் குளிர நோக்கினார்.
"சொல் ஜனகா! என்ன விஷயமா இவ்ளோ தூரம் வந்திருக்க?"
"குருநாதா... தங்களுக்குத் தெரியாதது ஒன்னுமில்ல... என் ரெண்டு பொண்ணுக்கும் கல்யாண வயசாயிடுத்து... சீக்ரம் அவாளுக்கு விவாகம் பண்ணலாம்னு தோணிடுத்து... ஒங்க உத்தரவு வேணும்..."
"ரொம்ப நல்ல விஷயமாச்சே இது! "சுபஸ்ய சீக்ரம்"னு சொல்வாளே... நடத்திடேன்..."
"அதுக்கில்ல குருநாதா... கொழந்தைகளோட ஜாதகத்தைக் கையோட கொண்டு வந்திருக்கேன்... ஒருக்ஷணம் நீங்க அத பாத்துட்டேள்னா, மேற்கொண்டு ஆரம்பிச்சிடுவேன்..."
"அதுக்கென்ன... கொடுப்பா... பாத்துட்டாபோச்சு... ஈஸ்வரசித்தம் ஒன் விஷயத்தில நன்னாதான்பா இருக்கும்..."
பவ்யமாக ஜாதக ஓலையை, அஷ்டவக்கிரரிடம் அளித்தார் ஜனகர்.
சீதையின் ஜாதகத்தை, மேலெழுந்த வாரியாகப் பார்த்த முனிவர், சட்டென்று அதை தமது சிரசில் வைத்துக்கொண்டு, பின்கண்களில் ஒற்றிஎடுத்தார்...
வியப்புமேலிட, ஜனகர் அவரை நோக்கினார்...
"அடடா... இது இறையம்ஸம் உள்ள ஜாதகம்... சாக்ஷாத் மஹாலக்ஷ்மியோட அம்சமாவே வந்திருக்கா ஒன்பொண்ணு..."
ஜனகரின் முகம் மலர்ந்தது... நேரம் மெல்லமெல்லக் கரைந்து கொண்டிருந்தது.
இத்தனை நேரமும் வாய் மூடி இருந்த முனிவர், இப்பொழுது,
"ஒன்னோட கனிஷ்ட குமாரத்தியோட(இளையமகள்) ஜாதகத்தை கொடு..." என்று வாய் திறந்தார்...
ஜனகர் அதையும் சிரத்தையோடு, குருவிடம் சமர்ப்பித்தார். வெகு நேரத்திற்கு அமைதி நீடித்தது.
கண்களை மூடிய வண்ணம் இருந்த குருநாதர் முன்கைகட்டி அமர்ந்திருந்தார் ஜனகர்.
முனிவர் விழிமலர்ந்த போது, ஜனகர் தம்மையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.
"ஜனகராஜனே... நீ ஒன் கொழந்தைகளுக்கு விவாஹத்துக்கு உண்டான ஏற்பாடெல்லாம் ஆரம்பி... பாக்கலாம்..."
"க்ஷமிக்கணும்... குருநாதா... அவாளோட எதிர்காலம் நன்னா இருக்குமோன்னோ?"
ஒரு தகப்பனுக்குரிய ஆதங்கத்துடன் முனிவரிடம் வினவினார் ஜனகர்.
"அவசியம் தெரிஞ்சுக்கணும்னு நெனச்சா சொல்றேன்..."
"குருநாதா... அடியேன்கிட்ட சொல்லலாம்னு ஒங்க மனசுக்குப் பட்டுதுன்னா சொல்லுங்கோ..." சிஷ்யனுக்குரிய சகல லக்ஷணங்களுடன் பதிலளித்த ஜனகரை ஏறிட்டார் அஷ்டவக்கிரர். மெல்ல அந்த ரகசியத்தை, ஜனகரிடம் பகிர்ந்தார்.
"அரசபோகம் உண்டு; அனுபவிக்கும் யோகம்இல்லை!.."
"கரம்பிடிக்கும் கணவன் உண்டு;கல்யாண சுகம்தான் இல்லை!."
"தரமான சுற்றம் உண்டு; தாங்க ஓர்சொந்தம் இல்லை!.."
"வரம் போலும் வாழ்வு உண்டு; வாழத்தான் விதி இல்லை!.."
முனிவரிடமிருந்து வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், ஜனகரைத் தீயாய்ச் சுட்டது.
******************************
மெல்ல, தன்னைச் சமாதானம் செய்து கொண்டார் ஜனகர்..."கு..ரு...நா...தா..." அதற்குமேல்பேசஇயலாமல்தடுமாறினார்.
அவரையும் மீறி கண்களில் நீர் வழிந்தது.
"வேந்தனே... என்னஇது? என்சிஷ்யன் ஒரு சிறந்த ஞானி என்று எண்ணியிருந்தேனே... இறுதியில் நீயும் ஒரு சராசரி மானிடனாய் ஆனாயோ?"
சுதாரித்தார் ஜனகர்...
"க்ஷமிக்கணும் குருநாதா... குருதியில் பந்தபாசம் இன்னமும் கொஞ்சம் ஒட்டியிருப்பதால், அடியேன் உறுதி சற்றே சரிகிறது.
தமது சிஷ்யன் என்று சொல்லிக்கொண்டு தம்மையே அவமானப்படுத்துவதாக உணர்கிறேன் குருநாதா..." தன்னிரக்கத்தோடு தலைகவிழ்ந்தார்..
மனக் கொந்தளிப்போடு இருக்கின்ற ஜனகரை, சமாதானப்படுத்தும் விதமாய், அஷ்டவக்கிரர் பேசஆரம்பித்தார்.
"வேந்தே, எத்தனை முறை ஸத்விஷயம் பேசியிருப்போம்! எத்தனைமுறை இந்த அழிகின்ற உடலைப் பற்றியும், அழியாத ஆன்ம ஸ்வரூபத்தைப் பற்றிய விளக்கங்களையும் கண்டிருப்போம்? எல்லாம் மறந்தாயோ? நீ ராஜாவாக இருந்தாலும், தன்னை அறிந்தவனாய் இருப்பதால்தானே, உனக்கு, "ராஜரிஷி" என்று பட்டமே சூட்டினேன்! இந்த அஷ்டவக்கிரனின் கணிப்பும் பொய்யானதோ?" குற்ற உணர்வோடு, முனிவரை ஏறிட்டார் ஜனகர்.
"ஜனகனே...
சாதகமாக இருக்கும்போது சிலிர்த்து எழுவதும், பாதகமாய் இருக்கும்போது பதறிவிழுவதும், சாதாரண மனித ஸ்வபாவம்! ஆனால், நீ பற்றுகளை எல்லாம் விட்டொழித்தவன் என்பதை, நானே ஆராய்ந்து அறிந்திருக்கிறேன்!
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
ஒரு சமயம், நீயும் எனது மற்ற சீடர்களும் அமர்ந்து என்னிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அப்பொழுது உன் வேலையாள் ஒருவன் ஓடிவந்து, உன் அரண்மனை தீப்பற்றி எரிவதாகவும், பொருள் சேதம் அதிகமாக ஆகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தான். அன்று அவன்மேல் உனக்கு மகாகோபம் வந்தது!
"அதனாலென்ன? எரிந்து விட்டுப் போகட்டுமே.. ஸத்விஷயங்களை அறிந்து கொண்டிருக்கும் என்னிடம் இதுபற்றி இந்நேரம் பேசவேண்டிய அவசியம் என்ன?" என்று அவனைக் கடிந்து கொண்ட உன்னைப் பார்த்து, அன்று நான் உண்மையிலேயே பூரித்துப்போனேன்! அப்படிப்பட்டவனா, இன்று ஆசாபாசவலையில் அகப்பட்டாய்?"
"தவறுதான் குருநாதா... எங்கோ மனம் உரிமை கொண்டாடுகிறது...
"நான், என்னுடையது..." இவையெல்லாம் அடியேனை விட்டு இன்னமும் மொத்தமாய் நீங்கவில்லை என்றே தோன்றுகிறது.
எந்தப் பரிகாரம் செய்தால், என் குழந்தைகள் இந்தச் சிக்கலில் இருந்து மீள்வார்கள் என்றறியவே, என்னுள்ளம் இப்போது விழைகிறது.
ஞானம் இருந்த இடத்தை, பாசம் வந்து மூடிக்கொண்டது குருநாதா..."
அஷ்டவக்கிரர் பலமாய்ச் சிரித்தார்...
"பலகாலம் சேர்த்த வினைக்கு, பரிகாரமும் ஏது?
விதி வழியே உன்வாழ்க்கை! மதி வெல்லுமோ உன்வழக்கை?"
"குருநாதா... இருவர் வாழ்க்கையுமா அப்படி அமைந்திருக்கிறது?" ஆதங்கத்தோடு வினவினார் ஜனகர்.
"இருவேறு விதமாய்
இவ்விருவரின் பாதை...
இருந்தாலும் ஊர்பேசும்
இவர்களது காதை!"
குருநாதர் கூறுவதன் உட்பொருளை அறிய முயன்று தோற்றார் ஜனகர்.
மீண்டும் அஷ்டவக்கிரர் பேசினார்...
"ஒருத்திக்கு வனவாசம்...
ஒருத்திக்கு வெறும் ஸ்வாஸம்...
மறுமார்க்கம் இல்லையாம்!
திருமார்பன் எண்ணமாம்!"
கடைசியாக முனிவர் பேசிய வார்த்தைகளில், ஜனகரின் விவேகம் மெல்லத் தலைதூக்கியது.
"அவன் தீர்மானத்தை இவன் திருத்திவிட முடியுமா என்ன? எவ்வளவு அறிவீனனாய் ஆனேன்! அடியேனைப் பொறுத்தருளுங்கள் குருநாதா.."
கண்ணீரோடு விண்ணப்பித்த ஜனகரை, கைதூக்கி ஆசீர்வதித்தார் முனிவர்...
*****************************