shiyamala sothybalan
இணை அமைச்சர்
- Joined
- Dec 12, 2019
- Messages
- 866
- Reaction score
- 2,640
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான கதை. சாகருக்கு ரெங்கு லக்கி மேல் பொழியிற பாசமும் லக்கி அப்பா மேல் வைச்சிருந்த பாசம் கண்டு பொறாமை வருமே பார்க்க சூப்பரா இருந்தது. அதே நேரம் சாகருக்குப் பாசம் காட்ட ஒருவரும் இல்லாதிருந்தது பாவம் தான். அந்தக் குறைய லக்கி நீக்கி சாகர் மேல் காதலும் அன்பும் பாசமும் மூன்று மடங்கா செலுத்தியதன் பரிசா மூன்று மக்கட் செல்வங்களையும் சாகருக்குப் பெற்றுக்குக் கொடுத்தது சூப்பர். சாகர் கடைசி வரையும் ஆணவம், திமிர், தன்மானம் நிறைந்த நபர் என்பதால் தனது சொந்த உழைப்பிலேயே மனைவி குழந்தைகளுக்கு வீடு மற்றும் பொருட்செலவெல்லாம் செய்வது மிக அருமை. சரோ சிஸ் சொன்ன மாதிரி மனைவி வீட்டிலிருந்து சொத்து சீதனம் வேண்டாம் என்று மறுத்தது சிறப்பு. மனைவி மக்களைப் பிரிந்து வெளிநாட்டில் சாச்சு நோய்வாய்ப் பட்டதும் லக்கி அருமையாகக் காய் நகர்த்தி சாச்சுவ வெளிநாட்டு வேலையை விட வைத்து ஊரில தொழில் தொடங்கி தான் பார்க்க மாட்டேன் என்று மறுத்த ரெங்குவின் தொழிலை லக்கிகாக அவளுக்கு மேல் வைத்த அன்புக்காக சாச்சு அறியாமலே பார்க்க வைத்தது அருமை. அப்பா மகள் பாசத்தைப் புரிந்து கொள்ளாத சாச்சுக்கு ஒண்ணுக்கு இரண்டு மகளாக் கொடுத்து உணர வைச்சாச்சு. முப்பது வயது லக்கியின் விருப்பத்துக்கு இன்னும் ரெங்கு தலையாட்டுதென்றால் சாச்சு ஐந்து வயது சின்னக்குட்டி ஆர்வியின் வீக்கன்ட் பிளானுக்கு ஓட்டமெடிக்காத் தலையாட்டுறார். ஒவ்வொரு பதிவுக்கும் பொருத்தமாப் போட்ட இனியவை நாற்பது பாடல்களும் அருமை. நுவலி சிஸ்க்கு ஸ்பெசல் தாங்ஸ். அமிர்தசாகரின் பெயருக்கு விளக்கம் கூறியதற்கு. ஆரம்பத்தில சூடான தீப்பொறியா இருந்த அமிர் கதை முடிவில் தலைப்புக்கு ஏற்றமாதிரி சில்லென்று தீப்பொறியா மாறினது அருமை. ரொம்ப ரொம்ப சூப்பரான கதை சகோதரி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.