Bharathi bharathi
நாட்டாமை
அன்று ஞாயிற்றுக்கிழமை நித்யாவும் பாட்டியும் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்றிருக்க ராஜேந்திரனும் அஜய்யும் வெளியில் சென்றிருக்க மதிய தூக்கம் கலைந்து மாலையில் எழுந்து முகம் கழுவி வாசலில் சென்றமர்ந்தாள் வர்ஷினி
வர்ஷினி கல்லூரி சென்றபின் விடுமுறைகளை அவ்வளவாக விரும்புவதில்லை. நண்பர்களின் அரட்டை வாசுவுடனான சந்திப்பு இதையெல்லாம் இழக்கும் அந்த நாட்கள் அத்தனை பிடித்தமில்லை அவளுக்கு. காலையிலிருந்து டி வி முன் அமர்நது மதியம் தூங்கி விழித்து மாலை வரை எப்படியோ இந்த நாளை கடத்தியாயிற்று.
இதுவே கல்லூரி நாளாயிருந்தால் மீராவை கிண்டல் செய்து விளையாடிருப்பாள். அவர்கள் குழுவிலே அப்பாவி என்றால் அது மீரா தான். அவளை கோபப்படுத்தி பார்ப்பதில் அத்தனை சுவாரஸ்யம் இவர்களுக்கு.
தெருவில் போவோர் வருவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் பக்கத்து வீட்டு பொடியன் திருட்டுமுழியுடன் கையில் எதையோ எடு்த்தபடி செல்வது தெரிந்தது. இது போல சிறுவர்களிடம் வம்பளப்பதில் பெருவிருப்பம் நம் கதாநாயகிக்கு. ஆஹா நமக்கொரு எண்டர்டெய்ன்மென்ட் சிக்கிடுச்சி எனும்படி "ரித்திஷ் இங்க வாடா" அன்பொழுக அழைத்தாள்.
இவளைப் பார்த்தவுடன் அவன் சாமார்த்தியமாக கையில் வைத்திருந்த பொருளை முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு என்னக்கா? என்றான்.
வாடா தம்பி நீ வர்ரியா? இல்லை நான் வரவா?
அருகில் வந்தவன் சீக்கிரம் என்னன்னு சொல்லுக்கா எனக்கு வேலையிருக்கு
சார் அப்படி என்ன கலெக்டர் வேலை பார்க்க போறீங்க? கையில என்ன வச்சிருக்கிங்க?
ஒன்னுமில்லையேக்கா என பின்னால் நகர்ந்தவனை ஓடிப் பிடித்து அவன் மறுக்க மறுக்க கையிலிருந்ததை பிடிங்கினாள்.சிறிய
பொருள் அடங்கிய பரிசு அழகிய வைலட் நிறத்தில் கவர் செய்யப்பட்டு மேலே டைரி மில்க் சாக்லேட் ஒட்டப்பட்டிருந்து. மற்றும் ஒரு சிறிய துண்டு பேப்பர் கசங்கலாக இருந்தது. அதை பிரிக்க முயற்சித்தவளை அக்கா அக்கா வேணாம்க்கா அதை படிக்காத குடுத்துடு என தடுக்க வந்தவனை அலட்சியமாக ஒதுக்கியவள் படித்த வார்த்தைகளில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள்.
அந்த கடிதத்தில் "அன்பே திவியா பொருமாள் கோவிலுக்கு வா உனக்கு ஒரூ பரிசு கத்திருக்கிறது" என்று எழுதியிருந்தது.
டேய் ஒழுங்கா நீயே சொல்லிடு யாருடா திவ்யா?
சிறுவன் லேசான வெட்கத்துடன் உடல் நெளிந்துகொண்டே என் ஆளுக்கா தேர்ட்(3d) ஸ்டேண்டர்ட் படிக்கிறா என்றான்.
என்னது உன் ஆஆஆளா? டேய் இதுலாம் உனக்கே ஓவரா முளைச்சு முனு இலை விடல உனக்கு ஆளா?
ஐய்ய கெழவி மாதிரிலாம் பேசாத? ஏன் நீ கூடத்தான் வாசு அண்ணாவ லவ் பண்ற? நீ பண்ணா சரி நான் பண்ண தப்பா? சரியாக குறி பார்த்து அடித்தது அந்த பொடிசு
இது இரண்டாவது அதிர்ச்சி.ஆம் தன் காதல் விடயம் படு ரகசியம். யாருக்கும் தெரியாது என நினைத்திருக்க இந்த பொடிசுக்கு கூட தெரிந்திருக்கிறதே என்று கேட்ட கேள்வியில் கொஞ்சம் தடுமாறினாலும் அடிங்க என் வயசு என்ன உன் வயசு என்ன? இரண்டு லைன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுத தெரியலை அதுக்குள்ள காதலிக்க கெளம்பிட்டாரு சார்? உங்கம்மாகிட்ட சொல்லவா என்றவுடன்
அக்கா அக்கா வேணாம் க்கா ப்ளீஸ் க்கா விட்ருக்கா
ரொம்ப ஓவரா பேசிட்ட அக்காகிட்ட சாரி கேளு பாக்கலாம் என்றாள் தெனாவெட்டாக
ஆமா தப்புதான்க்கா சாரிக்கா சாரிக்கா அதிக பணிவு வந்திருந்தது குரலில். மற்ற நேரமென்றால் போடி என்று போயிருப்பான். ஆனால் இந்த நிகழ்வை அம்மாவிடம் போட்டுக் கொடு்த்துவிட்டால் கண்டிப்பாக விளக்குமாறு பூசைதான்.
பத்தலை. உனக்கு ஏதாவது பனிஷ்மென்ட் தரணுமே என்றவள் கிப்ட் கவர் மேல் ஒட்டப்படிருந்த சாக்லேட்டை எடு்த்து சாப்பிட்டாள் செம்ம டேஸ்டா என்று சப்பு கொட்டியபடியே.
அதில் கடுப்பான சிறுவன் லேசான விசும்பலுடன் ஓசியில சாப்பிட்டா அப்படித்தான்டீ இருக்கும் தீனிமூட்டை என்றான். பின்னே அவன் ஆசையாக ஒருத்திக்கு வாங்கி கொடுக்க நினைத்ததல்லவா. அவன் கஷ்டம் அவனுக்கு
ஏஏ என்னடா மரியாதை குறையுது? அப்போ உங்கம்மாகிட்ட சொல்லிடலாமா
நீ என்னடி எங்கம்மாகிட்ட சொல்றது உன் லவ் மேட்டர உங்க அப்பன்கிட்ட போட்டு குடுக்குறன் பாருடீ என்று கண்ணை கசக்கியபடி கூற
ஆஹா வில்லங்கத்த விலை குடுத்து வாங்கிட்டோம் போலயே எனப் பதறியவள்
அவனை சமாதனப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள். ஹே என்னடா தம்பி கோபம்லாம் படுற. நம்மலாம் அப்டியா பழகியிருக்கோம். நீ சீரியஸா எடுத்துகிட்ட போல அக்கா சும்மா சொன்னேன்டா உங்கம்மாகிட்ட சொல்லிடுவேன்னு நான் சொல்ல மாட்டேன் அது நீயும் என் லவ் மேட்டர அப்பாகிட்ட சொல்லாத என்ன? பிராமிஸ் என பேரம் பேசியபடி இருக்கையில்
என்ன நடக்கிறது இங்க என சட்டென கேட்ட ஆண்குரலால் தூக்கிவாரிப்போட்டது வர்ஷினிக்கு.
இன்னும் பண்ணுவோம்.
வர்ஷினி கல்லூரி சென்றபின் விடுமுறைகளை அவ்வளவாக விரும்புவதில்லை. நண்பர்களின் அரட்டை வாசுவுடனான சந்திப்பு இதையெல்லாம் இழக்கும் அந்த நாட்கள் அத்தனை பிடித்தமில்லை அவளுக்கு. காலையிலிருந்து டி வி முன் அமர்நது மதியம் தூங்கி விழித்து மாலை வரை எப்படியோ இந்த நாளை கடத்தியாயிற்று.
இதுவே கல்லூரி நாளாயிருந்தால் மீராவை கிண்டல் செய்து விளையாடிருப்பாள். அவர்கள் குழுவிலே அப்பாவி என்றால் அது மீரா தான். அவளை கோபப்படுத்தி பார்ப்பதில் அத்தனை சுவாரஸ்யம் இவர்களுக்கு.
தெருவில் போவோர் வருவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் பக்கத்து வீட்டு பொடியன் திருட்டுமுழியுடன் கையில் எதையோ எடு்த்தபடி செல்வது தெரிந்தது. இது போல சிறுவர்களிடம் வம்பளப்பதில் பெருவிருப்பம் நம் கதாநாயகிக்கு. ஆஹா நமக்கொரு எண்டர்டெய்ன்மென்ட் சிக்கிடுச்சி எனும்படி "ரித்திஷ் இங்க வாடா" அன்பொழுக அழைத்தாள்.
இவளைப் பார்த்தவுடன் அவன் சாமார்த்தியமாக கையில் வைத்திருந்த பொருளை முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு என்னக்கா? என்றான்.
வாடா தம்பி நீ வர்ரியா? இல்லை நான் வரவா?
அருகில் வந்தவன் சீக்கிரம் என்னன்னு சொல்லுக்கா எனக்கு வேலையிருக்கு
சார் அப்படி என்ன கலெக்டர் வேலை பார்க்க போறீங்க? கையில என்ன வச்சிருக்கிங்க?
ஒன்னுமில்லையேக்கா என பின்னால் நகர்ந்தவனை ஓடிப் பிடித்து அவன் மறுக்க மறுக்க கையிலிருந்ததை பிடிங்கினாள்.சிறிய
பொருள் அடங்கிய பரிசு அழகிய வைலட் நிறத்தில் கவர் செய்யப்பட்டு மேலே டைரி மில்க் சாக்லேட் ஒட்டப்பட்டிருந்து. மற்றும் ஒரு சிறிய துண்டு பேப்பர் கசங்கலாக இருந்தது. அதை பிரிக்க முயற்சித்தவளை அக்கா அக்கா வேணாம்க்கா அதை படிக்காத குடுத்துடு என தடுக்க வந்தவனை அலட்சியமாக ஒதுக்கியவள் படித்த வார்த்தைகளில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள்.
அந்த கடிதத்தில் "அன்பே திவியா பொருமாள் கோவிலுக்கு வா உனக்கு ஒரூ பரிசு கத்திருக்கிறது" என்று எழுதியிருந்தது.
டேய் ஒழுங்கா நீயே சொல்லிடு யாருடா திவ்யா?
சிறுவன் லேசான வெட்கத்துடன் உடல் நெளிந்துகொண்டே என் ஆளுக்கா தேர்ட்(3d) ஸ்டேண்டர்ட் படிக்கிறா என்றான்.
என்னது உன் ஆஆஆளா? டேய் இதுலாம் உனக்கே ஓவரா முளைச்சு முனு இலை விடல உனக்கு ஆளா?
ஐய்ய கெழவி மாதிரிலாம் பேசாத? ஏன் நீ கூடத்தான் வாசு அண்ணாவ லவ் பண்ற? நீ பண்ணா சரி நான் பண்ண தப்பா? சரியாக குறி பார்த்து அடித்தது அந்த பொடிசு
இது இரண்டாவது அதிர்ச்சி.ஆம் தன் காதல் விடயம் படு ரகசியம். யாருக்கும் தெரியாது என நினைத்திருக்க இந்த பொடிசுக்கு கூட தெரிந்திருக்கிறதே என்று கேட்ட கேள்வியில் கொஞ்சம் தடுமாறினாலும் அடிங்க என் வயசு என்ன உன் வயசு என்ன? இரண்டு லைன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுத தெரியலை அதுக்குள்ள காதலிக்க கெளம்பிட்டாரு சார்? உங்கம்மாகிட்ட சொல்லவா என்றவுடன்
அக்கா அக்கா வேணாம் க்கா ப்ளீஸ் க்கா விட்ருக்கா
ரொம்ப ஓவரா பேசிட்ட அக்காகிட்ட சாரி கேளு பாக்கலாம் என்றாள் தெனாவெட்டாக
ஆமா தப்புதான்க்கா சாரிக்கா சாரிக்கா அதிக பணிவு வந்திருந்தது குரலில். மற்ற நேரமென்றால் போடி என்று போயிருப்பான். ஆனால் இந்த நிகழ்வை அம்மாவிடம் போட்டுக் கொடு்த்துவிட்டால் கண்டிப்பாக விளக்குமாறு பூசைதான்.
பத்தலை. உனக்கு ஏதாவது பனிஷ்மென்ட் தரணுமே என்றவள் கிப்ட் கவர் மேல் ஒட்டப்படிருந்த சாக்லேட்டை எடு்த்து சாப்பிட்டாள் செம்ம டேஸ்டா என்று சப்பு கொட்டியபடியே.
அதில் கடுப்பான சிறுவன் லேசான விசும்பலுடன் ஓசியில சாப்பிட்டா அப்படித்தான்டீ இருக்கும் தீனிமூட்டை என்றான். பின்னே அவன் ஆசையாக ஒருத்திக்கு வாங்கி கொடுக்க நினைத்ததல்லவா. அவன் கஷ்டம் அவனுக்கு
ஏஏ என்னடா மரியாதை குறையுது? அப்போ உங்கம்மாகிட்ட சொல்லிடலாமா
நீ என்னடி எங்கம்மாகிட்ட சொல்றது உன் லவ் மேட்டர உங்க அப்பன்கிட்ட போட்டு குடுக்குறன் பாருடீ என்று கண்ணை கசக்கியபடி கூற
ஆஹா வில்லங்கத்த விலை குடுத்து வாங்கிட்டோம் போலயே எனப் பதறியவள்
அவனை சமாதனப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள். ஹே என்னடா தம்பி கோபம்லாம் படுற. நம்மலாம் அப்டியா பழகியிருக்கோம். நீ சீரியஸா எடுத்துகிட்ட போல அக்கா சும்மா சொன்னேன்டா உங்கம்மாகிட்ட சொல்லிடுவேன்னு நான் சொல்ல மாட்டேன் அது நீயும் என் லவ் மேட்டர அப்பாகிட்ட சொல்லாத என்ன? பிராமிஸ் என பேரம் பேசியபடி இருக்கையில்
என்ன நடக்கிறது இங்க என சட்டென கேட்ட ஆண்குரலால் தூக்கிவாரிப்போட்டது வர்ஷினிக்கு.
இன்னும் பண்ணுவோம்.