• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னருகே நீ இருந்தால் #2(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
பிளஸ்டு தேர்வு என்பதால் அன்று பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த மாமா சண்முகநாதன் விரைவாக பள்ளிக்கு சென்று விட்டார். அத்தையும், சந்திராவும் போனில் வாழ்த்து தெரிவித்து விட்டார்கள்.

கயல்செல்வி பற்றி நன்கு அறிந்திருந்த மதியழகன் மட்டும் காலையில் நேரில் வந்து விட்டான்.

"கயல்! பரிட்ச்சைக்கு ரெடியா? பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் ஹால் டிக்கெட் எல்லாம் சரியாக எடுத்து வைச்சிட்டியா?" என்றான் மதியழகன்.

"எடுத்து வைச்சிட்டேன் மாமா." என்றபின் அவளுடைய பாக்சை வாங்கி பேனா இங்க்கை சரி பார்த்துவிட்டு எல்லாவற்றை சரிபார்த்தான்.

"கயல்! புத்தியையும், மனசையும் ரிலாக்ஸ்டா வை. புதுசா எதுவும் படிக்காதே. ரிவைஸ் மட்டும் செய். கேள்விதாளை வாங்கி ஒருமுறை நல்லாபடி. நல்லா தெரிஞ்ச வினாக்களுக்கு முதலில் பதில் அளி அப்புறமாக மத்த கேள்விகளுக்கு பதிலளி. அழகாக எழுத முயற்சி செய். முக்கியமான கருத்துகளை எழுது. பேப்பரை பில் பன்ன முயற்சி செய்யாதே. முக்கிய கருத்துகளை ஹைலைட் பன்னி காட்டு. டைம் கீப் அப் பன்னு. வாட்சை பார்த்து டைம்மை மேனேஜ் பன்னும்மா அவ்வளவுதான்" என்று நீண்ட அறிவுரையை செய்துவிட்டு அவளை பார்த்தான் மதியழகன்.

"ஆல் தி பெஸ்ட் கயல்" என்று மதியழகன் சொன்னதும் "தாங்க்ஸ் மாமா" என்றாள்

"வாப்பா!" என்றபடி குளித்து முடித்து தயாராகி வந்தாள் அன்னலட்சுமி.

"இப்பதான் வந்தேன். கயல்கிட்ட பேசிட்டிருந்தேன்"

"அதான் நீ கயலுக்கு சொன்ன அட்வைஸ் கேட்டேன். வாப்பா சாப்பிடலாம்" என்றாள் அத்தை.

காலையில் சீக்கீரமே ரெடியாகி வந்துவிட்டதால் காலை டிபனை அங்கே முடித்துக் கொண்டான்.

"உன் மாமாவே நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டான். நீ அதை பாலோ பன்னா போதும். சரி வா சாமி கும்பிட்டுட்டு அப்பாகிட்ட சொல்லிட்டு நாம கிளம்பலாம்" என்றாள் அன்னம்.

பூஜையறைக்கு சென்று பூஜை செய்து விபூதி குங்குமம் கயலுக்கு வைத்துவிட்டபின் அவள் அப்பாவின் படத்தின்முன் நின்று ஹால் டிக்கெட்டை வைத்து கும்பிட்ட கயலுக்கு ஆசி வழங்குமாறு வேண்டினாள் அன்னலட்சுமி.

"அம்மா! நீங்க அப்பா படத்துக்கு பக்கத்துல நில்லுங்க" என்று சொல்ல அன்னம் நின்றாள்.

அவள் கால்களில் விழுந்து வணங்க மனம் நெகிழ்ந்த தாய் "நல்லா இரும்மா" என்றாள்.

"மாமா! என்னை ஆசீர்வாதம் பன்னுங்க" என்ற கயலின் தலையில் கைவைத்து "நல்லா பரிட்ச்சை எழுதும்மா" என்று ஆசீர்வாதம் செய்தான் மதியழகன்.

கயலின் பள்ளிவரை வந்த மதியழகன் கடைசியாக ஒருமுறை "ஆல் தி பெஸ்ட் " என்று சொல்லிவிட்டு கைகுலுக்கி சென்றான்.

கயலின் ஒவ்வொரு பரீட்ச்சை அன்றும் தவறாமல் வந்தவன் மாலை அவள் எப்படி எழுதினாள் என்பதை விசாரித்தான்.

"எக்சாம் நல்லா முடிஞ்சாச்சு. ரிசல்ட்டும் நல்லா அடுத்து வந்துடும். நீ என்ன படிக்கப் போறதாக இருக்க கயல்" என்றாள் தாய்.

"அம்மா! நான் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போறேன். சந்திராக்கா படிக்கிற அதே காலேஜ்லதான் படிப்பேன்." என்றாள் கயல்விழி.

"நல்ல முடிவுதான் தாரளமாக செய்" என்றாள் தாய்.

பிளஸ்டு முடிவு அன்று மதியழகனுடன் சந்திராவும் அவள் கூட இருந்தனர்.

கயல்விழி காலை முதல் தேர்வு முடிவுக்காக காத்திருந்தாள்.

மதியழகன் ஆபிசுக்கு அரைநாள் பெர்மிஷன் சொல்லிவிட்டான் ஏனென்றால் ரிசல்ட் வந்ததும் அவன்தான் முதலில் பார்த்து தனக்கு சொல்லவேண்டும் என்பதுதான் கயலின் விருப்பம்.

மதியழகன் தன் செல்போனில் தேர்வு முடிவை பார்த்த அந்த நிமிடம் கயல்விழி கண்களை மூடிக் கொண்டாள்.

"கயல்! நீ 1150 எடுத்து இருக்கடி. மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரில சென்டம்டி நீ" என்று சத்தமாக சொல்ல "அப்படியா!" என்றபடி கண்களை திறந்தாள்.

Message…
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
கயலின் கண்கள் விரிய பார்த்து ரசித்தவளின் கன்னங்களில் முத்தம் பதித்தாள் சந்திரா.

"தாங்க்ஸ் அக்கா" என்று சந்திராவைக் கட்டிக் கொண்ட கயல் பின்னர் அருகிலிருந்த தாய் அன்னலட்சுமி கேக் ஊட்ட வாங்கி கொண்டு தாயை கட்டி முத்தமிட்டாள்.

"சாதிச்சிட்ட கயல்" என்ற மதி மாமாவிடம் "தாங்க்ஸ் மாமா" என்றாள்.

கயலுக்கு அதன்பின் மாமா, அத்தை, நண்பர்கள் என செல்போன் வாழ்த்துக்கள் வர ஆரம்பிக்க அவள் பிசியாகி விட்டாள்.

கயல்விழி பி.இ சேர வேண்டிய விண்ணப்பம் போடும் வேலைகளை சந்திராவும், மதியழகனும் செய்து முடித்தார்கள்.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த சேர்க்கை கலந்தாய்வுக்கு அவளுடன் சந்திரா, அம்மா அன்னத்துடன் மதியழகனும் சென்றார்கள்.

கயல்விழி தான் சொல்லியபடி சந்திரா படிக்கும் கல்லூரியில் அவள் விரும்பிய பி.இ. கம்ப்யுட்டர் சயின்ஸ் தேர்வு செய்துவிட்டாள்.

கயல்விழி எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வந்ததுடன் காதல் பற்றி சமீபகாலமாக அவள் பேசாது இருந்தது மதியழகனை பொறுத்தவரையில் குழப்பமாக இருந்தாலும் நிம்மதியாக இருந்தான்.

"கயல்! நீ சொன்னபடி மார்க் வாங்கி நான் படிச்ச காலேஜ்ல என் கோர்ஸ்ல சேர போறே." என்றான் மதியழகன்.

"நீங்கதான் என் காதலுக்கு டார்கெட் வைக்கீறிங்களே. உங்களை ஐ லவ் யூ சொல்ல வைக்க நான் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கு" என்றாள் கயல்விழி.

"அப்ப நீ" என்று அதிர்ச்சியில் தடுமாறிய மதியழகனிடம் "மாமா! என் காதலை நான் மறக்கலை. நீங்க கேட்டதை செஞ்சிட்டு கண்டிப்பா உங்களை நான் சம்மதிக்க வைப்பேன்" என்றாள் கயல்விழி.

"சரி கயல்... ஆல் தி பெஸ்ட்" என்றான் மதியழகன்.

கயல்விழியின் கல்லூரியின் முதல்நாள் அன்று மதியழகன் வந்துவிட்டான். அவள் தாயிடம் ஆசி வாங்கியபின்னர் அவள் மதியழகனிடம் வந்தாள்.

"கயல்! அந்த காலேஜ்ல நான் படிச்சப்ப காலேஜ்ல எல்லா விஷயத்திலும் நான்தான் டாப். இப்ப சந்திராதான் டாப்பா இருக்காள். நீ நல்லா படிச்சு என் பேரையும், சந்திரா பேரையும் காப்பாற்றனும்" என்றான்.

"சரி மாமா" என்ற அவளிடம் "ஆல் தி பெஸ்ட்" என்று கைகுலுக்கி அனுப்பி வைத்தான்.

சந்திரா தன்னுடன் அழைத்து சென்றதாலும், அவளே ஸ்டுடன்ட் சேர்மனாக இருந்த காரணத்தால் கயல்விழிக்கு ரேகிங் பிரச்சனை இல்லை.

கயல்விழி கல்லுரி வாழ்க்கை சந்தோசமாக ஆரம்பிக்க எப்படியாவது இந்த படிப்பை முடித்து மாமாவை கரம்பிடிக்க திட்டமிட்டாள்.

கயல்விழியின் பள்ளி தோழி சம்யுக்தாவும் அவள் வகுப்பில் சேர்ந்துவிட்டதால் அவளுக்கு புதிதாக தோழி தேடும் பிரச்சனை இல்லை.

கயல்விழி வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி தோழிகள் ஆனார்கள்.

மதியான இடைவேளையில் கயலும், சம்யுக்தாவும் சாப்பாடு முடித்து அமர்ந்திருந்தார்கள்.

"நீங்க மதியழகன் ரிலேட்டிவ் கயல்விழிதானே?" என்று கேட்டபடி அவள் அருகில் வந்தான் ஒர் இளைஞன்.

"ஆமா" என்று கயல்விழி அவனை பார்க்க "ஐ எம் பிரேம் ஜோஸ். எங்க அண்ணா டேனியல் ஆபிராகமும் அவரும் கிளாஸ்மேட்ஸ். போனவாரம் அண்ணாகிட்ட பேசிட்டிருந்தப்ப உங்களை பற்றி சொன்னாரு" என்றான் பிரேம் ஜோஸ்.

"சரிங்க" என்று கயல்விழி சொல்ல "சரிங்க கயல் நாமளும் அவங்களை மாதிரி நல்ல பிரண்ட்ஸா இருப்போம்" என்றான் பிரேம் ஜோஸ்.

"சரிங்க பிரேம் அப்புறம் இவ சம்யுக்தா என் பிரண்ட்" என்று தோழியை அறிமுகப் படுத்தி வைத்தாள் கயல்விழி.

பிரேம் ஜோசுக்கு அவள் ஹாய் சொல்ல மூவரும் பரஸ்பர அறிமுகம் முடித்துக் கொண்ட பின்னர் பிரேம ஜோஸ் விடை பெற்று சென்றான்.

பிரேம ஜோஸ் அவள் வாழ்வில் ஏற்படுத்த இருக்கும் மாற்றம் அவள் அறியவில்லை.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
இரண்டாம் பத்தி புதிய செய்தி எதிர் பார்ப்பு
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
இரண்டாம் பத்தி புதிய செய்தி எதிர் பார்ப்பு
இப்பதான் நம்ம பிரேம் உள்ளே வந்திருக்காரு இனிதான் கதையில் மாற்றங்கள் வரும் நன்றி சிஸ்டர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top