sakthipriya
SM Exclusive
பிளஸ்டு தேர்வு என்பதால் அன்று பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த மாமா சண்முகநாதன் விரைவாக பள்ளிக்கு சென்று விட்டார். அத்தையும், சந்திராவும் போனில் வாழ்த்து தெரிவித்து விட்டார்கள்.
கயல்செல்வி பற்றி நன்கு அறிந்திருந்த மதியழகன் மட்டும் காலையில் நேரில் வந்து விட்டான்.
"கயல்! பரிட்ச்சைக்கு ரெடியா? பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் ஹால் டிக்கெட் எல்லாம் சரியாக எடுத்து வைச்சிட்டியா?" என்றான் மதியழகன்.
"எடுத்து வைச்சிட்டேன் மாமா." என்றபின் அவளுடைய பாக்சை வாங்கி பேனா இங்க்கை சரி பார்த்துவிட்டு எல்லாவற்றை சரிபார்த்தான்.
"கயல்! புத்தியையும், மனசையும் ரிலாக்ஸ்டா வை. புதுசா எதுவும் படிக்காதே. ரிவைஸ் மட்டும் செய். கேள்விதாளை வாங்கி ஒருமுறை நல்லாபடி. நல்லா தெரிஞ்ச வினாக்களுக்கு முதலில் பதில் அளி அப்புறமாக மத்த கேள்விகளுக்கு பதிலளி. அழகாக எழுத முயற்சி செய். முக்கியமான கருத்துகளை எழுது. பேப்பரை பில் பன்ன முயற்சி செய்யாதே. முக்கிய கருத்துகளை ஹைலைட் பன்னி காட்டு. டைம் கீப் அப் பன்னு. வாட்சை பார்த்து டைம்மை மேனேஜ் பன்னும்மா அவ்வளவுதான்" என்று நீண்ட அறிவுரையை செய்துவிட்டு அவளை பார்த்தான் மதியழகன்.
"ஆல் தி பெஸ்ட் கயல்" என்று மதியழகன் சொன்னதும் "தாங்க்ஸ் மாமா" என்றாள்
"வாப்பா!" என்றபடி குளித்து முடித்து தயாராகி வந்தாள் அன்னலட்சுமி.
"இப்பதான் வந்தேன். கயல்கிட்ட பேசிட்டிருந்தேன்"
"அதான் நீ கயலுக்கு சொன்ன அட்வைஸ் கேட்டேன். வாப்பா சாப்பிடலாம்" என்றாள் அத்தை.
காலையில் சீக்கீரமே ரெடியாகி வந்துவிட்டதால் காலை டிபனை அங்கே முடித்துக் கொண்டான்.
"உன் மாமாவே நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டான். நீ அதை பாலோ பன்னா போதும். சரி வா சாமி கும்பிட்டுட்டு அப்பாகிட்ட சொல்லிட்டு நாம கிளம்பலாம்" என்றாள் அன்னம்.
பூஜையறைக்கு சென்று பூஜை செய்து விபூதி குங்குமம் கயலுக்கு வைத்துவிட்டபின் அவள் அப்பாவின் படத்தின்முன் நின்று ஹால் டிக்கெட்டை வைத்து கும்பிட்ட கயலுக்கு ஆசி வழங்குமாறு வேண்டினாள் அன்னலட்சுமி.
"அம்மா! நீங்க அப்பா படத்துக்கு பக்கத்துல நில்லுங்க" என்று சொல்ல அன்னம் நின்றாள்.
அவள் கால்களில் விழுந்து வணங்க மனம் நெகிழ்ந்த தாய் "நல்லா இரும்மா" என்றாள்.
"மாமா! என்னை ஆசீர்வாதம் பன்னுங்க" என்ற கயலின் தலையில் கைவைத்து "நல்லா பரிட்ச்சை எழுதும்மா" என்று ஆசீர்வாதம் செய்தான் மதியழகன்.
கயலின் பள்ளிவரை வந்த மதியழகன் கடைசியாக ஒருமுறை "ஆல் தி பெஸ்ட் " என்று சொல்லிவிட்டு கைகுலுக்கி சென்றான்.
கயலின் ஒவ்வொரு பரீட்ச்சை அன்றும் தவறாமல் வந்தவன் மாலை அவள் எப்படி எழுதினாள் என்பதை விசாரித்தான்.
"எக்சாம் நல்லா முடிஞ்சாச்சு. ரிசல்ட்டும் நல்லா அடுத்து வந்துடும். நீ என்ன படிக்கப் போறதாக இருக்க கயல்" என்றாள் தாய்.
"அம்மா! நான் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போறேன். சந்திராக்கா படிக்கிற அதே காலேஜ்லதான் படிப்பேன்." என்றாள் கயல்விழி.
"நல்ல முடிவுதான் தாரளமாக செய்" என்றாள் தாய்.
பிளஸ்டு முடிவு அன்று மதியழகனுடன் சந்திராவும் அவள் கூட இருந்தனர்.
கயல்விழி காலை முதல் தேர்வு முடிவுக்காக காத்திருந்தாள்.
மதியழகன் ஆபிசுக்கு அரைநாள் பெர்மிஷன் சொல்லிவிட்டான் ஏனென்றால் ரிசல்ட் வந்ததும் அவன்தான் முதலில் பார்த்து தனக்கு சொல்லவேண்டும் என்பதுதான் கயலின் விருப்பம்.
மதியழகன் தன் செல்போனில் தேர்வு முடிவை பார்த்த அந்த நிமிடம் கயல்விழி கண்களை மூடிக் கொண்டாள்.
"கயல்! நீ 1150 எடுத்து இருக்கடி. மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரில சென்டம்டி நீ" என்று சத்தமாக சொல்ல "அப்படியா!" என்றபடி கண்களை திறந்தாள்.
Message…
கயல்செல்வி பற்றி நன்கு அறிந்திருந்த மதியழகன் மட்டும் காலையில் நேரில் வந்து விட்டான்.
"கயல்! பரிட்ச்சைக்கு ரெடியா? பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் ஹால் டிக்கெட் எல்லாம் சரியாக எடுத்து வைச்சிட்டியா?" என்றான் மதியழகன்.
"எடுத்து வைச்சிட்டேன் மாமா." என்றபின் அவளுடைய பாக்சை வாங்கி பேனா இங்க்கை சரி பார்த்துவிட்டு எல்லாவற்றை சரிபார்த்தான்.
"கயல்! புத்தியையும், மனசையும் ரிலாக்ஸ்டா வை. புதுசா எதுவும் படிக்காதே. ரிவைஸ் மட்டும் செய். கேள்விதாளை வாங்கி ஒருமுறை நல்லாபடி. நல்லா தெரிஞ்ச வினாக்களுக்கு முதலில் பதில் அளி அப்புறமாக மத்த கேள்விகளுக்கு பதிலளி. அழகாக எழுத முயற்சி செய். முக்கியமான கருத்துகளை எழுது. பேப்பரை பில் பன்ன முயற்சி செய்யாதே. முக்கிய கருத்துகளை ஹைலைட் பன்னி காட்டு. டைம் கீப் அப் பன்னு. வாட்சை பார்த்து டைம்மை மேனேஜ் பன்னும்மா அவ்வளவுதான்" என்று நீண்ட அறிவுரையை செய்துவிட்டு அவளை பார்த்தான் மதியழகன்.
"ஆல் தி பெஸ்ட் கயல்" என்று மதியழகன் சொன்னதும் "தாங்க்ஸ் மாமா" என்றாள்
"வாப்பா!" என்றபடி குளித்து முடித்து தயாராகி வந்தாள் அன்னலட்சுமி.
"இப்பதான் வந்தேன். கயல்கிட்ட பேசிட்டிருந்தேன்"
"அதான் நீ கயலுக்கு சொன்ன அட்வைஸ் கேட்டேன். வாப்பா சாப்பிடலாம்" என்றாள் அத்தை.
காலையில் சீக்கீரமே ரெடியாகி வந்துவிட்டதால் காலை டிபனை அங்கே முடித்துக் கொண்டான்.
"உன் மாமாவே நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டான். நீ அதை பாலோ பன்னா போதும். சரி வா சாமி கும்பிட்டுட்டு அப்பாகிட்ட சொல்லிட்டு நாம கிளம்பலாம்" என்றாள் அன்னம்.
பூஜையறைக்கு சென்று பூஜை செய்து விபூதி குங்குமம் கயலுக்கு வைத்துவிட்டபின் அவள் அப்பாவின் படத்தின்முன் நின்று ஹால் டிக்கெட்டை வைத்து கும்பிட்ட கயலுக்கு ஆசி வழங்குமாறு வேண்டினாள் அன்னலட்சுமி.
"அம்மா! நீங்க அப்பா படத்துக்கு பக்கத்துல நில்லுங்க" என்று சொல்ல அன்னம் நின்றாள்.
அவள் கால்களில் விழுந்து வணங்க மனம் நெகிழ்ந்த தாய் "நல்லா இரும்மா" என்றாள்.
"மாமா! என்னை ஆசீர்வாதம் பன்னுங்க" என்ற கயலின் தலையில் கைவைத்து "நல்லா பரிட்ச்சை எழுதும்மா" என்று ஆசீர்வாதம் செய்தான் மதியழகன்.
கயலின் பள்ளிவரை வந்த மதியழகன் கடைசியாக ஒருமுறை "ஆல் தி பெஸ்ட் " என்று சொல்லிவிட்டு கைகுலுக்கி சென்றான்.
கயலின் ஒவ்வொரு பரீட்ச்சை அன்றும் தவறாமல் வந்தவன் மாலை அவள் எப்படி எழுதினாள் என்பதை விசாரித்தான்.
"எக்சாம் நல்லா முடிஞ்சாச்சு. ரிசல்ட்டும் நல்லா அடுத்து வந்துடும். நீ என்ன படிக்கப் போறதாக இருக்க கயல்" என்றாள் தாய்.
"அம்மா! நான் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போறேன். சந்திராக்கா படிக்கிற அதே காலேஜ்லதான் படிப்பேன்." என்றாள் கயல்விழி.
"நல்ல முடிவுதான் தாரளமாக செய்" என்றாள் தாய்.
பிளஸ்டு முடிவு அன்று மதியழகனுடன் சந்திராவும் அவள் கூட இருந்தனர்.
கயல்விழி காலை முதல் தேர்வு முடிவுக்காக காத்திருந்தாள்.
மதியழகன் ஆபிசுக்கு அரைநாள் பெர்மிஷன் சொல்லிவிட்டான் ஏனென்றால் ரிசல்ட் வந்ததும் அவன்தான் முதலில் பார்த்து தனக்கு சொல்லவேண்டும் என்பதுதான் கயலின் விருப்பம்.
மதியழகன் தன் செல்போனில் தேர்வு முடிவை பார்த்த அந்த நிமிடம் கயல்விழி கண்களை மூடிக் கொண்டாள்.
"கயல்! நீ 1150 எடுத்து இருக்கடி. மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரில சென்டம்டி நீ" என்று சத்தமாக சொல்ல "அப்படியா!" என்றபடி கண்களை திறந்தாள்.
Message…
Last edited: