• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னை ஈன்றெடுத்தவள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
"அறியாத முகமாய் இருந்தாலும்
என்னை அவள் வயிற்றில் அடைகாத்து
ஆயிரம் கதை பேசினாள்"


"நான் அவளுக்கு தந்த வலியெல்லாம்
வாய் நிறைய புன்னகையோடே தாங்கினாள்"


"நான் இப்புவி காண வேண்டி
மரணத்தின் வாயில் அதனை மகிழ்வோடு தாண்டினாள்"



"பசித்து நான் அழுதால் கூட
பதறி போய் நின்றால் அவள்"


"சின்ன சின்ன அலங்காரம் செய்து
என்னை சித்திரம் போல் சிறப்பித்து
அதில் சிறு இன்பம் கொண்டிடுவாள்"


"கண்டிப்பும் காண்பித்தாள்
கட்டளையும் பிறப்பித்தாள்
என் கண்ணில் நீரை கண்டால்
உடைந்த கண்ணாடியாய் நொறுங்கி விட்டாள்"


"ஆசை முத்தம் அவள் தந்தால்
என் ஆயுள் அது கூடுகிறது"


"அவள் மடியில் நான் படுத்திட்டால்
மகிழ்ச்சி தான் கூடுகிறது"


"அறுசுவை உணவுதனை
அன்னை அவள் கையில் அள்ளித் தந்திட்டால்
அகிலத்தில் வேறேதும் ஈடு இல்லை அவள் கைமணத்திற்க்கு"


"கருவறையில் என்னை சுமந்தவளே
உன்னை காலம் முழுக்க என் நெஞ்சில் சுமந்திடுவேன் சுகமாய்"


"ஜென்மம் இன்னொன்று வேண்டும்
உன் சிறு குழந்தையாய் நான் வரும் வரம் வேண்டும்"
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
அழகான அம்மா கவிதை.
அத்தனையும் உண்மை.
நானும் கேட்பேன் ஏழேழு ஜென்மம்.
தாயின் மடியில் உறங்கிட சுகமாய்.
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
அழகான அம்மா கவிதை.
அத்தனையும் உண்மை.
நானும் கேட்பேன் ஏழேழு ஜென்மம்.
தாயின் மடியில் உறங்கிட சுகமாய்.
நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top