என்னை சாய்த்தாயே...உயிர் தாராயோ?!
அத்தியாயம் 6
மலர்கள் கூட வெட்க படும் தருணம், சந்திரன் கூட மேகமென்னும் ஆடைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடுகிற வேளை, சில்லென்ற காற்றில் மேனி சிலிர்த்து மெல்லிய நடுக்கம் உண்டாகும் நேரம், மின்மினி பூச்சிகள் தங்கள் இணைக்காக விளக்கு பிடிக்கும் அந்த இரவுக்கு முந்திய ஏகாந்த மாலை மயங்கிய வேளையில் காலார நடந்தபடி, ஆராதனாவின் வீடு நோக்கி ராமும் ஆருவும் வந்து கொண்டிருந்தனர்.
மௌனம் அழகிய மொழி தான். யார் இல்லை என்றது?! அதற்காக வீடு வரும் வரை வாய் மூடி மௌனிக்க நான் என்ன காந்தி சொன்ன மூன்று பொம்மைகளுள் ஒன்றா என்று நினைத்தாளோ ரதியவள் ?!
“ராம்.. உனக்கு தெரியுமா?! என் பக்கத்து வீட்டு தீக்கோழி இருக்காளே”
இவள் யாரை சொல்கிறாள் என்ற ரீதியில் பார்த்தவனை பார்த்து,
“ஹ்ம்ம்.. அவ தான்.. தீ மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் நம்ம ஏரியாவுக்கே டமாரம் அடிப்பாளே. அந்த பொண்ணு இருக்காளே..”
ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தவனை பார்த்து,
“டேய் என்னன்னு கேளேண்டா.”
“கேட்கலானாலும் அம்மையார் விட்ற போறாங்களாக்கும்?” என்று மனதினுள் நினைத்தவன் வெளியே,
“சரி. சொல்லு அவளுக்கு இப்போ என்ன?”
“என்ன ஆசுவாசமா கேட்கிறான். கொஞ்சம் கூட பொறுப்புங்கிறதே இல்லை” மனதினுள் நொந்து கொண்டவள் அவனை பார்த்தும் பார்க்காததுமாய் ஒரு பார்வை பார்த்த படி சொன்னாள்.
“வர வர அவளோட போக்கே சரி இல்லை பார்த்துக்கோ. தீக்கோழி இப்போல்லாம் தண்ணீகோழியாட்டம் நடந்துக்கிறா”.
“புரியிற மாதிரி நீ பேசவே மாட்டியா?”
“கொஞ்சம் ஃப்பயர். . ரு. . ரூ...
கொஞ்சம் வாட்ட..ரு..
ரெண்டும் ஒன்றாக சேர்ந்தால்..”
பாடி விட்டு புருவம் அசைத்து “என்ன புரிந்ததா?” என்று கேட்டாள்.
தலையில் அடித்து கொண்டான் அவன்.
“சரி விடு.. இப்போ இதை கேளு”
“நீரும் நெருப்பும் கொள்ளை கொண்டால் . .
ஹ்ம்ம் ஹ்ம்ம் . .
ம்ம்ம். .ம்ம். .
கொள்ளை கொண்டால்
காதல் என்று அர்த்தம் அர்த்தம்” என்று உச்ச ஸ்துதியில் கத்தினாள்.
“ஷ் ஷ் .. கத்தாதே எருமை. முதல என்ன விஷயம்ன்னு தெளிவா சொல்லு” என்று பட்டென சொன்னான்.
“நம்ம தீக்கோழி இருக்காளேஅவ..” என்று இழுத்தவள் அவன் முகம் போன போக்கை பார்த்தவள்,
“அவ உன்ன லவ் பன்றாளாம்” என பட்டென காதல் மண்பானையை உடைத்து விட்டாள்.
அவன் முகம் எரிமலையிலிருந்து வெளிவரும் லவா குழம்பை ஒத்து சிவந்து போனது கோவத்தால்.
“ஏய்! என்ன சொன்ன? ” என்று பாய்ந்து விட்டான்.
ஒரு நொடி ஆரு நடுங்கி தான் போனாள். இவன் இத்தனை கோவ படுவானா.
“காதலென்று வந்துவிட்டால்
கோபமும் ரோஷமும்
பொத்து கொண்டு வருமோ. .?!
இரண்டும் ரெட்டை பிறவிகளா என்ன . . ?!”
“ஷிட்..” என்று தலையை குலுக்கி தன்னை ஆசுவாச படுத்தியவன்.
“லுக் ஆராதனா. என் மனசுல என்ன இருக்குதுன்னு உனக்கு கண்டிப்பா நான் சொல்லாட்டியும் தெரிஞ்சிருக்கும். அப்படி இருந்தும் நீ இன்னொருத்தி சொன்னான்னு என்ட வந்து சொல்லுற”.
“என்னை பொறுத்த வரை யாரை இந்நாள் வரை மனசுல நினைச்சிட்டு இருக்கிறேனோ அவ தான் என் பொண்டாட்டி. உன் மர மண்டையில புரிஞ்சிதா. ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ணுகிட்ட தெளிவா சொல்லிடு. இந்த காதலுக்கு தூது போறதை இத்தோட நிறுத்திடி..!” விரல் நீட்டி எச்சரித்தான்.
பூம் பூம்.. மாடாய் தலையை ஆட்டிக் கொண்டாள் பெண்ணவள்.
“போ. உள்ளே போ. உன் வீடு வந்தாச்சி” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து விட்டான்.
இப்போ நான் என்னத்த சொல்லிட்டேன்னு இவன் இப்படி கோவிச்சிகிறான்.
“வேற ஒரு பொண்ணு இவனை காதலிக்கிறான்னு சொன்னதையே இவனால் ஏத்துக்க முடியல. . ஹ்ம்ம். பிள்ளைக்கு அந்த அளவு லவ்ஸ் முத்தி போச்சி போல. . நடக்கட்டும் நடக்கட்டும்”.
“காதல் என்றால்
புத்தன் கூட யுத்தம் செய்வானோ?”
வீட்டினுள் வந்த ஆரு ஹாலிற்கு சென்றடைகையில் அ..ப்..ப..டி..யே. . ஷாக் அடித்தது போல் நின்று விட்டாள்.
இவள் எங்கே இங்கே? அதுவும் இந்நேரத்தில்?! ஒரு வேளை. . ஒரு வேளை. . நான் நேற்று புண்ணிய கூத்தை கண்டு பிடித்து விட்டாளோ?!.
அங்கே ஆருவின் செல்ல எதிரி வதனா அழகு பதுமையாக கொஞ்சம் புதுமை கலந்து அதாவது ஒரு காலை டீப்பாயின் மீதும் மறு காலை தரையில் மடக்கியபடியும் செர்ரி இதழ்களில் ஒன்று திறந்த படியும் அதிலிருந்து தேன் ரசம் வடிந்தும் வடியாமலும் மெய் மறந்து துயில் கொண்டிருந்தாள்.அந்த அழகு பேதை..!
குறுக்கும் நெடுக்குமாய் ஒரு முறை நடந்தவள் வீட்டை தன் முட்டை கண்ணால் ஆராய்ந்தாள். “ஹ்ம்ம்.. எல்லாம் சரி தான். இவா வேற என்னவோ பண்ணிருக்கா? அது என்னவா இருக்கும்?”.
தலையை தட்டி யோசித்தவள் விறு விறுவென மாடி ஏறி தன் அறை கதவை திறந்தாள்.
“இவள் கண்டிப்பாக எனக்கு ஏதாவது ஆப்பு ரெடி பண்ணிக்கியிருக்கணுமே. இல்லாட்டி இவள் ஆருவோட அக்கா இல்லையே? என்ன பண்ணியிருப்பா?” என்று புலம்பிய படியே அவள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளாய் சோதித்து எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று உறுதி செய்து கொண்டாள்.
“அது எப்படி? எல்லாம் அது அது இடத்துல பக்காவா எந்தவித சேதாரமும் இல்லாமல் இருக்கிறது?!”
“ஒரு வேளை..” என்று பதறியவள் நேராக குளியறைக்கு ஓடினாள். ஷாம்பு,பிரஷ் ,பேஸ்ட்,சோப்பு, எல்லாம் கச்சிதமாக இருந்தது.
யோசனையுடன் வெளியே வந்தவள் கண்ணில் சிரித்தது பெட்.
இந்த பெட்சீட் யாரு மாத்தினது. இது சைடுல கிழிஞ்சி போய் இருந்தே அதை யாரு இப்படி போட்டா.. என்ற யோசனையோடே, கிழிசல் எங்கே இருக்கிறது என தேட ஒரு இழு இழுத்தாள். அப்படியே பெட்சீட் தண்ணீரில் மூழ்கி பல்லிலித்தது.
“சரி தான். இது தான் எனக்கான பனிஸ்மெண்டா?! அட லூசு அக்கா. உனக்கு வேற நல்ல ஐடியாவே கிடைக்கலையா?!”
“ஹா ஹா ஹா..” வாய் விட்டு சிரித்தவள், “சரியான வெத்து வேட்டுடி நீ ” என்று கூறிய படியே நொடி பொழுதில் எல்லாவற்றையும் சரி செய்து ஒழுங்கு படுத்தினாள் .
பின் மெதுவாக பூனை நடை போட்டு ஹாலிற்கு வந்தவள், அன்ன நடையிட்டு சென்றாள் வந்தனாவை நோக்கி,
“ஹம்ம்ம்ம்ம்.?!”
“எனக்கே தண்டனையா..? இவளுக்கு ஏதாவது ரீட்டன் கிப்ட் கொடுக்கணுமே”
தாடை தடவி யோசித்தவள் கண்ணில் அந்த மேசையின் மீது இருந்த பொருள் பட்டது. என்னை கொஞ்சம் தொடேன்.. என்று ஆசையாக பார்த்ததோ. .?! சரி போகட்டும் என்றெண்ணி அதன் மேனியை வருடி கொடுத்தாள் அவள்.
“இனி எப்பவுமே எனக்கு எதிரா தூசு கூட தட்ட கூடாது. புரிஞ்சுதா மிஸ்.வதனா தேவேந்திரன்!” என்று சூளுரைத்தவள். பின் மென்மையாக வதனாவின் அழகு முகத்தை வருடினாள்.
______________________________
“எங்கண்ணா. . இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?” என்றபடி வந்தாள் கீதா.
“நம்ம தினேஷ் தம்பி ராஜேஷ் இருக்கிறாம்ல அவனுக்கு புதுசா ஒரு வேலை கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே அவன் நல்ல நிலைக்கு வர சான்ஸ் இருக்கு. அதை கொண்டாட நம்ம போக்கிரில ஸ்வீட்ஸ் கேட்டிருந்தாங்க அவுங்க அம்மா. சோ வீட்டுக்கு வந்து கொடுக்கிறேன்னு சொல்லியிருந்தேன். அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். சரி மா. பாய் . .”
நகர்ந்து விட்டான் அண்ணன், தன் செல்ல தங்கையின் மனதில் பல கோடி மலர்களால் அபிஷேகம் செய்தது தெரியாமல்.
_________________________________
எப்படி தான் இத்தனை விரைவாய் நாட்கள் நகர்ந்ததோ அவனுக்கு. ரவி வர்ம குலோத்துங்கன் இந்தியா வந்து 14 நாட்கள் கடந்து விட்டதை எண்ணி பார்க்கையில் மலைப்பாக இருந்தது.
நாளை யூ எஸ் கிளம்ப வேண்டும் அதற்கு முன் பாட்டிக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல கிப்ட் வாங்க வேண்டும் என்று நினைத்தவன் நேராக அந்த மாலிற்கு சென்றான்.
ஒவ்வொரு கடையாக சென்று பார்த்தவனுக்கு எதிலும் திருப்தி இல்லை. மாமா அத்தை , அத்தை பெத்த ரத்தினங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பரிசை வாங்கி விட்டான். ஆனால் தன் ஆசை பாட்டிக்கு ஒன்றும் அழகாய் மனதிற்கு சாந்தமாய் அமைய வில்லை.
சிறு எரிச்சலுடன் அடுத்த கடைக்கு சென்றான். ஏசி காற்று அவன் ஸ்பரிசத்தை தீண்டி சென்றது. இதமான ஏசி அவனை குளிர்விக்க முயன்றும் முடியாமல் போக சோகத்துடன் முகம் கவிழ்த்து கொண்டதோ. .?!
வாழ்த்து அட்டை,அலங்கார பொம்மை, பூக்கள் அது இது என எல்லாம் கண்ணில் பட்டு காதல் மொழி பேசிட அழைத்தது . ஆனால் அந்த சடை முடி தரித்த முனிவன் அலட்சியத்துடன் அனைத்தையும் தட்டி விட்டான். அய்யோ பாவம் . நொடிக்குள் பூத்து வாடிய காதலால் அவை கலங்கி போனதோ..?!
அவன் வல பக்கத்தில் இருந்த ஷெல்ப்பில் அம்சமாய் தோன்றிய அந்த கண்ணன் மையல் கொண்டு ராதையை பார்த்த படி இருந்த சிற்பம் கொள்ளை கொண்டது அவனை. கைகள் தாமாக சிற்பத்தை தடவி கொடுத்தது.
பரிசு பொருள்கள் எல்லாம் வாங்கி முடித்து அவன் கிளம்ப தயாராகையில் அவன் வல பக்கத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
“ஹேய் . . வர்மா! எப்படிடா இருக்க? பார்த்து எவ்ளோ நாளாச்சு” என்று சிரித்த படி வந்தவனை ஒரு நொடி யோசித்த புருவம் சட்டென அடையாளம் கண்டு கொண்டது.
“டேய்! மாதேஷ் நீயாடா ?! எப்படிடா இருக்க ? ஐ ம் குட் டா”என்று மகிழ்ச்சியில் தன் கல்லுரி தோழனை அணைத்து கொண்டான் ரவி வர்மாவும்.
தங்கள் கல்லூரி நாள்களையும் மற்ற நண்பர்களையும் பற்றி பேசியதில் நேரம் சென்றதே அவர்களுக்கு தெரியவில்லை.
கடைசியில் கிளம்புகையில்“டேய் நாளைக்கு தான கிளம்புற வாயேன் வீட்டுக்கு” அழைப்பு விடுத்தான் தோழன்.
“ஹ்ம்ம்.. வரணும்ம்ன்னு தான் நினைக்கிறேன். பார்ப்போம். வேற ஒர்க் ஏதும் இல்லைனா சொல்றேன்” என்றான் ரவி வர்மா.
“அட.. ஏன்டா பிகு பண்ற? அம்மா அப்பாவை எல்லாம் நீ பார்த்து எவ்ளோ நாள் ஆச்சி. நீ வீட்டுக்கு வந்தா அம்மா ரொம்ப சந்தோஷ படுவாங்க. அலுத்துக்காத. உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது போல இருக்கும்”
“சோ கண்டிப்பா நீ வர!”என்று சொன்னான் தோழன். .
“ஹ்ம்ம்.. இவ்ளோ சொன்ன அப்புறம் நான் வராம இருப்பேனா? இல்ல நீ தான் சும்மா விட்ருவீயா.கை கால் எல்லாம் கட்டி தூக்கிட்டு போனாலும் போய்டுவா போல ?!” என்று பயந்தது போல நடித்தவன் கல கலவென சிரித்தான் ரவி வர்மா.
___________________________________
“அ ம் ம் ம் மா மா. . !”
பெண்ணவள் கத்திய கத்தலில் அந்த ஏரியாவே ஒரு நொடி அதிர்ந்தது என்றாள் மிகையில்லை.
ஆக்ரோஷத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்தாள் வெள்ளச்சி என்னும் வதனா. இல்லை இப்போது காளி. பத்திரகாளியாய்!
சமையல் அறையிலிருந்து வந்த அன்னை கீர்த்தனா இவளை பார்த்ததும் அப்படியே உறைந்து போனாரோ? இல்லை வந்த சிரிப்பை அடக்க வாய் பொத்தி கொண்டாரோ?! அவருக்கு தான் வெளிச்சம்.
“என்னம்மா ?! என்ன ஆச்சு ! ஏன் வது குட்டி இப்படி கத்துற?! என்னடி இது முகமெல்லாம் இப்படி இருக்கு?” என்றபடி வந்தார் அப்பா தேவேந்திரன்.
முதுகு காட்டியபடி நின்ற வதானாவின் பின் புறம் நின்றிருந்த தகப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
அங்கே எதிரே கீர்த்தனா வாயை பொத்தியப் படி இருந்தது தான் பட்டது.
“கீர்த்தனா! என்ன ஆச்சு? நீ ஏன் இப்படி நிக்குற?” என்றார் அவர்.
“நீங்களே இங்க வந்து பாருங்க. உங்க பொண்ணு பண்ணி வச்சியிருக்கிற கூத்தை..”
பார்த்த அவருக்கு பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார். அதிகமாய் சிரித்ததில் ஆனந்த கண்ணீர் வேறு வந்து அந்த தோற்றத்தை மறைத்தது.
இப்போது கீர்த்தனாவும் வாய் விட்டு சிரித்தார்.
காண்டாகி விட்டாள் வதனா.
“அப்பா...” என்று அலறினாள்.
மீண்டும் மீண்டும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி
“ஷ் ஷ் ஷ் . . ஹப்பா . . முடியல மா.
என்னம்மா இது கோலம்? நாடக கம்பெனிக்கு வேஷம் ஏதும் போடுறீயா?!” சிரிப்பின் ஊடே கேட்டார்.
“எல்லாம் உங்க செல்ல மகள் அதான் அந்த ஆராதனா வேலையா தான் இருக்கும். அக்கா தங்கை ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சி!” என்று குறை பாடினார் அம்மா.
“அம்மா நான் எதுவும் பண்ணல. அவ தான் முதல என் ஆபீஸ் பேப்பர்ஸ் எல்லாம் திருடுனது.”
“முதல அவளை கூப்பிடுங்கம்மா. . . இந்த முகத்தை வச்சிக்கிட்டு நான் எப்படிம்மா ஆபீஸ் போவேன்..?!” அழுத படி..கொஞ்சம் நடித்த படி கேட்டாள் பெண்.
“ஆராதனா. . அம்மாடி ஆராதனா. .”
அன்னையின் குரலில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த ஆராதனா சட்டென படுக்கையிலிருந்து எழுந்தாள். முதலில் ஒன்றுமே விளங்கவில்லை. மீண்டும் அன்னையின் குரல் கேட்கவும் அடித்து பிடித்து எழுந்து கீழ் இறங்கினாள்.
“என்னமா எதுக்கு இப்படி கத்துறீங்க” என்று கொட்டாவி விட்ட படி டைனிங் டேபிள் அருகிலிருந்த சேரில் சம்மளம் போட்டபடி ஆசுவாசமாக அமர்ந்தாள்.
தீக்குள் எண்ணெய் இல்லை இல்லை பெட்ரோல் ஊற்றியது போல இருந்தது அவளது செய்கை.
வதனாவிற்கு பொங்கி வந்த ஆத்திரத்தில், அவளை நோக்கி நடந்தவள் , தன் அழகிய நீள்வட்ட முகத்தை வெண்டை பிஞ்சு போன்ற தன் ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டி,
“இது என்னது..? என்னதுன்ன்ன்னு கேட்கிறேன். ஹாங்..?!”
“என்னது என்னதுன்னு என்னைய கேட்டா.. அதான் உனக்கே தெரியுதுல.. நான் தான் செஞ்சேன்னு பின்ன என்ன?”
“ஆராதனா...” கண்டிப்பாய் அழைத்தார் தந்தை.
“அப்படி என்னப்பா நான் செஞ்சேன்.. ஜஸ்ட் ஒரு பெரிய அய்யனார் மீசை. அதுக்கு மேட்ச்சா ரெண்டே ரெண்டு கொஞ்சம் கோரம பல், அப்புறம் நெற்றியிலே வெற்றி திலகம் தானேப்பா வச்சி விட்ருக்கேன். கண்ணு ரெண்டும் மான் போல இருந்தா அதான் வால் மட்டும் குறையுதேன்னு அதையும் போட்டு விட்டேன். இது ஒரு குத்தமா?!”
அவள் வர்ணித்து கேட்ட தினுசில் பெரியவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் கொஞ்சம் அடக்கி கொண்டனர். பின் வதனாவிடம் யார் வாங்கி கட்டி கொள்வது.
“பின்ன குத்தமில்லையா..? எத்தனை வாட்டி கழுவியும் அழியமாட்டுக்குதுடி... முகமெல்லாம் சிவந்து போனது தான் மிச்சம்...!” புலம்பினாள் சகோதரி...
“வேய் பீலிங் டார்லிங்.. கம்மு .”
அருகே இருந்த தேங்காய் எண்ணெய் பாட்டில்லை எடுத்து வதனாவின் கையில் கொடுத்தவள்..
“பெற்றுக் கொள் மகளே. . .
சிவந்த முகம் மீண்டும் வெள்ளையாய் மாற கடவது.
நீ இன்றும் என்றும் வெள்ளச்சி என்றே அழைக்கப்படுவாயாக. . !!!”
என்று ஆசி வழங்குவது போல பாவனை செய்தவள் பின் அவளை பார்த்து. .
“எப்பேர்பட்ட மை..னாலும் சட்டென அழிந்து விடும். பயன்படுத்தி நீடுழி வாழ்வாயாக.!”
என்று கூறி பாவ விமோச்சனம் கொடுத்தவள் அம்மாவின் புறம் திரும்பி…
“அம்மா எனக்கு.. சூ..டா.. ஆவி பறக்க.. அந்த டிஷை எடுத்து வாங்க பார்ப்போம்...!”
“எந்த டிஷ்டி சொல்ற...?”
“சொல்றேன் கேளுங்க.. காலங்காத்தால என் தூக்கத்தை கெடுத்ததுனால நான் நேரடையா சொல்லமாட்டேன். ஆனா சொல்லுவேன், நீங்க கண்டுபிடிச்சி செஞ்சு தரணும். சரியா? என்று டீல் பேசியவள் .. அப்பா. இதுக்கு நீங்க தான் சாட்சி!” என்று அப்பாவையும் துணைக்கு அழைத்து கொண்டாள்.
“சொல்றேன் கேட்டுக்கோங்க. . .” என்றபடி ..
“தாகத்தை தணிக்கும் இதை....” என்று முழு விவரத்தையும் புதிராய் புனைந்தாள் அந்த புதிர்க்காரி.
“என்னம்மா இது. . ??!”
என்றபடி யோசித்தார் அப்பா.
முகத்தை துடைத்தபடி வந்த வதனாவும் “அப்படி என்னதுடி அது...” என்று கேட்டப்படி யோசிக்கலானாள். இப்போது அவள் முகம் கொஞ்சம் பரவாயில்லை .
“ச் ச் ச்சு. இது தானா?! இதோ ஐந்து நிமிஷத்துல ரெடி !!”என்றாள் அன்னை.
தன் முன் சுட சுட ஆவி பறக்க அம்மா நீட்டியதை கண்டதும் வாயடைத்து போயினர் மூவரும். அது அது “லெமன் டீ .!”
புதிரை அவிழ்க்கும் முயற்சியில் வதனா கேட்டாள்.... “அம்மா காய்ந்த சருகு, மஞ்சள் மங்கை அப்படி இப்படின்னு.. இவா என்னன்னவோ சொன்னாளேம்மா... ?!”
“பொறுடி சொல்றேன்....”
என்றபடி அவரும் அருகிலிருந்த சேரில் சாய்வாக அமர்ந்தவர் பின் அவர்களை பார்த்து…
“தாகத்தை தணிப்பது எது..?
தண்ணீர். சரியா..
சூரியன், சூரிய குளியல்ன்னா..
கேஸ் அடுப்பும், சூடும் தான். ..
அப்புறம் பக்குவமா காய்ந்த சருகு..
அப்படி தானே ஆரு..” என வினவினாள் அன்னை. .
“ஆம்” என்பது போல தலையை ஆட்டினாள் அவள்.
“காய்ந்த சருகுன்னா தேயிலை இலை பொடி . . அதை கொதிக்கிற தண்ணீரிலே சரியான அளவுல சேர்த்து...
உடனே கேஸ் ஆப் பண்ணி கொஞ்சம் சூடு ஆற வச்சி. . .அதை தான் குளிர வச்சின்னு இவா சொல்லியிருக்கா..
அப்புறம் மஞ்சள் மங்கைன்னா. .
எலுமிச்சம் பழம். அதை கொஞ்சம் பிழிஞ்சு கலக்கி சுவைத்தா அது ஒரு சுவை. . கூடவே தித்திப்பிற்கு தேன் அல்லது சர்க்கரை சேர்த்தா அது வேறு சுவை ...போதுமா உங்களுக்கு விளக்கம்!” என்றதும் தான் தாமதம்.
“ஹைய்யோ.. இது தானா?!” என்ற வியப்பில் வீடே சிரித்தது...
_______________________
Continued..
அத்தியாயம் 6
மலர்கள் கூட வெட்க படும் தருணம், சந்திரன் கூட மேகமென்னும் ஆடைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடுகிற வேளை, சில்லென்ற காற்றில் மேனி சிலிர்த்து மெல்லிய நடுக்கம் உண்டாகும் நேரம், மின்மினி பூச்சிகள் தங்கள் இணைக்காக விளக்கு பிடிக்கும் அந்த இரவுக்கு முந்திய ஏகாந்த மாலை மயங்கிய வேளையில் காலார நடந்தபடி, ஆராதனாவின் வீடு நோக்கி ராமும் ஆருவும் வந்து கொண்டிருந்தனர்.
மௌனம் அழகிய மொழி தான். யார் இல்லை என்றது?! அதற்காக வீடு வரும் வரை வாய் மூடி மௌனிக்க நான் என்ன காந்தி சொன்ன மூன்று பொம்மைகளுள் ஒன்றா என்று நினைத்தாளோ ரதியவள் ?!
“ராம்.. உனக்கு தெரியுமா?! என் பக்கத்து வீட்டு தீக்கோழி இருக்காளே”
இவள் யாரை சொல்கிறாள் என்ற ரீதியில் பார்த்தவனை பார்த்து,
“ஹ்ம்ம்.. அவ தான்.. தீ மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் நம்ம ஏரியாவுக்கே டமாரம் அடிப்பாளே. அந்த பொண்ணு இருக்காளே..”
ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தவனை பார்த்து,
“டேய் என்னன்னு கேளேண்டா.”
“கேட்கலானாலும் அம்மையார் விட்ற போறாங்களாக்கும்?” என்று மனதினுள் நினைத்தவன் வெளியே,
“சரி. சொல்லு அவளுக்கு இப்போ என்ன?”
“என்ன ஆசுவாசமா கேட்கிறான். கொஞ்சம் கூட பொறுப்புங்கிறதே இல்லை” மனதினுள் நொந்து கொண்டவள் அவனை பார்த்தும் பார்க்காததுமாய் ஒரு பார்வை பார்த்த படி சொன்னாள்.
“வர வர அவளோட போக்கே சரி இல்லை பார்த்துக்கோ. தீக்கோழி இப்போல்லாம் தண்ணீகோழியாட்டம் நடந்துக்கிறா”.
“புரியிற மாதிரி நீ பேசவே மாட்டியா?”
“கொஞ்சம் ஃப்பயர். . ரு. . ரூ...
கொஞ்சம் வாட்ட..ரு..
ரெண்டும் ஒன்றாக சேர்ந்தால்..”
பாடி விட்டு புருவம் அசைத்து “என்ன புரிந்ததா?” என்று கேட்டாள்.
தலையில் அடித்து கொண்டான் அவன்.
“சரி விடு.. இப்போ இதை கேளு”
“நீரும் நெருப்பும் கொள்ளை கொண்டால் . .
ஹ்ம்ம் ஹ்ம்ம் . .
ம்ம்ம். .ம்ம். .
கொள்ளை கொண்டால்
காதல் என்று அர்த்தம் அர்த்தம்” என்று உச்ச ஸ்துதியில் கத்தினாள்.
“ஷ் ஷ் .. கத்தாதே எருமை. முதல என்ன விஷயம்ன்னு தெளிவா சொல்லு” என்று பட்டென சொன்னான்.
“நம்ம தீக்கோழி இருக்காளேஅவ..” என்று இழுத்தவள் அவன் முகம் போன போக்கை பார்த்தவள்,
“அவ உன்ன லவ் பன்றாளாம்” என பட்டென காதல் மண்பானையை உடைத்து விட்டாள்.
அவன் முகம் எரிமலையிலிருந்து வெளிவரும் லவா குழம்பை ஒத்து சிவந்து போனது கோவத்தால்.
“ஏய்! என்ன சொன்ன? ” என்று பாய்ந்து விட்டான்.
ஒரு நொடி ஆரு நடுங்கி தான் போனாள். இவன் இத்தனை கோவ படுவானா.
“காதலென்று வந்துவிட்டால்
கோபமும் ரோஷமும்
பொத்து கொண்டு வருமோ. .?!
இரண்டும் ரெட்டை பிறவிகளா என்ன . . ?!”
“ஷிட்..” என்று தலையை குலுக்கி தன்னை ஆசுவாச படுத்தியவன்.
“லுக் ஆராதனா. என் மனசுல என்ன இருக்குதுன்னு உனக்கு கண்டிப்பா நான் சொல்லாட்டியும் தெரிஞ்சிருக்கும். அப்படி இருந்தும் நீ இன்னொருத்தி சொன்னான்னு என்ட வந்து சொல்லுற”.
“என்னை பொறுத்த வரை யாரை இந்நாள் வரை மனசுல நினைச்சிட்டு இருக்கிறேனோ அவ தான் என் பொண்டாட்டி. உன் மர மண்டையில புரிஞ்சிதா. ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ணுகிட்ட தெளிவா சொல்லிடு. இந்த காதலுக்கு தூது போறதை இத்தோட நிறுத்திடி..!” விரல் நீட்டி எச்சரித்தான்.
பூம் பூம்.. மாடாய் தலையை ஆட்டிக் கொண்டாள் பெண்ணவள்.
“போ. உள்ளே போ. உன் வீடு வந்தாச்சி” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து விட்டான்.
இப்போ நான் என்னத்த சொல்லிட்டேன்னு இவன் இப்படி கோவிச்சிகிறான்.
“வேற ஒரு பொண்ணு இவனை காதலிக்கிறான்னு சொன்னதையே இவனால் ஏத்துக்க முடியல. . ஹ்ம்ம். பிள்ளைக்கு அந்த அளவு லவ்ஸ் முத்தி போச்சி போல. . நடக்கட்டும் நடக்கட்டும்”.
“காதல் என்றால்
புத்தன் கூட யுத்தம் செய்வானோ?”
வீட்டினுள் வந்த ஆரு ஹாலிற்கு சென்றடைகையில் அ..ப்..ப..டி..யே. . ஷாக் அடித்தது போல் நின்று விட்டாள்.
இவள் எங்கே இங்கே? அதுவும் இந்நேரத்தில்?! ஒரு வேளை. . ஒரு வேளை. . நான் நேற்று புண்ணிய கூத்தை கண்டு பிடித்து விட்டாளோ?!.
அங்கே ஆருவின் செல்ல எதிரி வதனா அழகு பதுமையாக கொஞ்சம் புதுமை கலந்து அதாவது ஒரு காலை டீப்பாயின் மீதும் மறு காலை தரையில் மடக்கியபடியும் செர்ரி இதழ்களில் ஒன்று திறந்த படியும் அதிலிருந்து தேன் ரசம் வடிந்தும் வடியாமலும் மெய் மறந்து துயில் கொண்டிருந்தாள்.அந்த அழகு பேதை..!
குறுக்கும் நெடுக்குமாய் ஒரு முறை நடந்தவள் வீட்டை தன் முட்டை கண்ணால் ஆராய்ந்தாள். “ஹ்ம்ம்.. எல்லாம் சரி தான். இவா வேற என்னவோ பண்ணிருக்கா? அது என்னவா இருக்கும்?”.
தலையை தட்டி யோசித்தவள் விறு விறுவென மாடி ஏறி தன் அறை கதவை திறந்தாள்.
“இவள் கண்டிப்பாக எனக்கு ஏதாவது ஆப்பு ரெடி பண்ணிக்கியிருக்கணுமே. இல்லாட்டி இவள் ஆருவோட அக்கா இல்லையே? என்ன பண்ணியிருப்பா?” என்று புலம்பிய படியே அவள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளாய் சோதித்து எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று உறுதி செய்து கொண்டாள்.
“அது எப்படி? எல்லாம் அது அது இடத்துல பக்காவா எந்தவித சேதாரமும் இல்லாமல் இருக்கிறது?!”
“ஒரு வேளை..” என்று பதறியவள் நேராக குளியறைக்கு ஓடினாள். ஷாம்பு,பிரஷ் ,பேஸ்ட்,சோப்பு, எல்லாம் கச்சிதமாக இருந்தது.
யோசனையுடன் வெளியே வந்தவள் கண்ணில் சிரித்தது பெட்.
இந்த பெட்சீட் யாரு மாத்தினது. இது சைடுல கிழிஞ்சி போய் இருந்தே அதை யாரு இப்படி போட்டா.. என்ற யோசனையோடே, கிழிசல் எங்கே இருக்கிறது என தேட ஒரு இழு இழுத்தாள். அப்படியே பெட்சீட் தண்ணீரில் மூழ்கி பல்லிலித்தது.
“சரி தான். இது தான் எனக்கான பனிஸ்மெண்டா?! அட லூசு அக்கா. உனக்கு வேற நல்ல ஐடியாவே கிடைக்கலையா?!”
“ஹா ஹா ஹா..” வாய் விட்டு சிரித்தவள், “சரியான வெத்து வேட்டுடி நீ ” என்று கூறிய படியே நொடி பொழுதில் எல்லாவற்றையும் சரி செய்து ஒழுங்கு படுத்தினாள் .
பின் மெதுவாக பூனை நடை போட்டு ஹாலிற்கு வந்தவள், அன்ன நடையிட்டு சென்றாள் வந்தனாவை நோக்கி,
“ஹம்ம்ம்ம்ம்.?!”
“எனக்கே தண்டனையா..? இவளுக்கு ஏதாவது ரீட்டன் கிப்ட் கொடுக்கணுமே”
தாடை தடவி யோசித்தவள் கண்ணில் அந்த மேசையின் மீது இருந்த பொருள் பட்டது. என்னை கொஞ்சம் தொடேன்.. என்று ஆசையாக பார்த்ததோ. .?! சரி போகட்டும் என்றெண்ணி அதன் மேனியை வருடி கொடுத்தாள் அவள்.
“இனி எப்பவுமே எனக்கு எதிரா தூசு கூட தட்ட கூடாது. புரிஞ்சுதா மிஸ்.வதனா தேவேந்திரன்!” என்று சூளுரைத்தவள். பின் மென்மையாக வதனாவின் அழகு முகத்தை வருடினாள்.
______________________________
“எங்கண்ணா. . இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?” என்றபடி வந்தாள் கீதா.
“நம்ம தினேஷ் தம்பி ராஜேஷ் இருக்கிறாம்ல அவனுக்கு புதுசா ஒரு வேலை கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே அவன் நல்ல நிலைக்கு வர சான்ஸ் இருக்கு. அதை கொண்டாட நம்ம போக்கிரில ஸ்வீட்ஸ் கேட்டிருந்தாங்க அவுங்க அம்மா. சோ வீட்டுக்கு வந்து கொடுக்கிறேன்னு சொல்லியிருந்தேன். அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். சரி மா. பாய் . .”
நகர்ந்து விட்டான் அண்ணன், தன் செல்ல தங்கையின் மனதில் பல கோடி மலர்களால் அபிஷேகம் செய்தது தெரியாமல்.
_________________________________
எப்படி தான் இத்தனை விரைவாய் நாட்கள் நகர்ந்ததோ அவனுக்கு. ரவி வர்ம குலோத்துங்கன் இந்தியா வந்து 14 நாட்கள் கடந்து விட்டதை எண்ணி பார்க்கையில் மலைப்பாக இருந்தது.
நாளை யூ எஸ் கிளம்ப வேண்டும் அதற்கு முன் பாட்டிக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல கிப்ட் வாங்க வேண்டும் என்று நினைத்தவன் நேராக அந்த மாலிற்கு சென்றான்.
ஒவ்வொரு கடையாக சென்று பார்த்தவனுக்கு எதிலும் திருப்தி இல்லை. மாமா அத்தை , அத்தை பெத்த ரத்தினங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பரிசை வாங்கி விட்டான். ஆனால் தன் ஆசை பாட்டிக்கு ஒன்றும் அழகாய் மனதிற்கு சாந்தமாய் அமைய வில்லை.
சிறு எரிச்சலுடன் அடுத்த கடைக்கு சென்றான். ஏசி காற்று அவன் ஸ்பரிசத்தை தீண்டி சென்றது. இதமான ஏசி அவனை குளிர்விக்க முயன்றும் முடியாமல் போக சோகத்துடன் முகம் கவிழ்த்து கொண்டதோ. .?!
வாழ்த்து அட்டை,அலங்கார பொம்மை, பூக்கள் அது இது என எல்லாம் கண்ணில் பட்டு காதல் மொழி பேசிட அழைத்தது . ஆனால் அந்த சடை முடி தரித்த முனிவன் அலட்சியத்துடன் அனைத்தையும் தட்டி விட்டான். அய்யோ பாவம் . நொடிக்குள் பூத்து வாடிய காதலால் அவை கலங்கி போனதோ..?!
அவன் வல பக்கத்தில் இருந்த ஷெல்ப்பில் அம்சமாய் தோன்றிய அந்த கண்ணன் மையல் கொண்டு ராதையை பார்த்த படி இருந்த சிற்பம் கொள்ளை கொண்டது அவனை. கைகள் தாமாக சிற்பத்தை தடவி கொடுத்தது.
பரிசு பொருள்கள் எல்லாம் வாங்கி முடித்து அவன் கிளம்ப தயாராகையில் அவன் வல பக்கத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
“ஹேய் . . வர்மா! எப்படிடா இருக்க? பார்த்து எவ்ளோ நாளாச்சு” என்று சிரித்த படி வந்தவனை ஒரு நொடி யோசித்த புருவம் சட்டென அடையாளம் கண்டு கொண்டது.
“டேய்! மாதேஷ் நீயாடா ?! எப்படிடா இருக்க ? ஐ ம் குட் டா”என்று மகிழ்ச்சியில் தன் கல்லுரி தோழனை அணைத்து கொண்டான் ரவி வர்மாவும்.
தங்கள் கல்லூரி நாள்களையும் மற்ற நண்பர்களையும் பற்றி பேசியதில் நேரம் சென்றதே அவர்களுக்கு தெரியவில்லை.
கடைசியில் கிளம்புகையில்“டேய் நாளைக்கு தான கிளம்புற வாயேன் வீட்டுக்கு” அழைப்பு விடுத்தான் தோழன்.
“ஹ்ம்ம்.. வரணும்ம்ன்னு தான் நினைக்கிறேன். பார்ப்போம். வேற ஒர்க் ஏதும் இல்லைனா சொல்றேன்” என்றான் ரவி வர்மா.
“அட.. ஏன்டா பிகு பண்ற? அம்மா அப்பாவை எல்லாம் நீ பார்த்து எவ்ளோ நாள் ஆச்சி. நீ வீட்டுக்கு வந்தா அம்மா ரொம்ப சந்தோஷ படுவாங்க. அலுத்துக்காத. உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது போல இருக்கும்”
“சோ கண்டிப்பா நீ வர!”என்று சொன்னான் தோழன். .
“ஹ்ம்ம்.. இவ்ளோ சொன்ன அப்புறம் நான் வராம இருப்பேனா? இல்ல நீ தான் சும்மா விட்ருவீயா.கை கால் எல்லாம் கட்டி தூக்கிட்டு போனாலும் போய்டுவா போல ?!” என்று பயந்தது போல நடித்தவன் கல கலவென சிரித்தான் ரவி வர்மா.
___________________________________
“அ ம் ம் ம் மா மா. . !”
பெண்ணவள் கத்திய கத்தலில் அந்த ஏரியாவே ஒரு நொடி அதிர்ந்தது என்றாள் மிகையில்லை.
ஆக்ரோஷத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்தாள் வெள்ளச்சி என்னும் வதனா. இல்லை இப்போது காளி. பத்திரகாளியாய்!
சமையல் அறையிலிருந்து வந்த அன்னை கீர்த்தனா இவளை பார்த்ததும் அப்படியே உறைந்து போனாரோ? இல்லை வந்த சிரிப்பை அடக்க வாய் பொத்தி கொண்டாரோ?! அவருக்கு தான் வெளிச்சம்.
“என்னம்மா ?! என்ன ஆச்சு ! ஏன் வது குட்டி இப்படி கத்துற?! என்னடி இது முகமெல்லாம் இப்படி இருக்கு?” என்றபடி வந்தார் அப்பா தேவேந்திரன்.
முதுகு காட்டியபடி நின்ற வதானாவின் பின் புறம் நின்றிருந்த தகப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
அங்கே எதிரே கீர்த்தனா வாயை பொத்தியப் படி இருந்தது தான் பட்டது.
“கீர்த்தனா! என்ன ஆச்சு? நீ ஏன் இப்படி நிக்குற?” என்றார் அவர்.
“நீங்களே இங்க வந்து பாருங்க. உங்க பொண்ணு பண்ணி வச்சியிருக்கிற கூத்தை..”
பார்த்த அவருக்கு பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார். அதிகமாய் சிரித்ததில் ஆனந்த கண்ணீர் வேறு வந்து அந்த தோற்றத்தை மறைத்தது.
இப்போது கீர்த்தனாவும் வாய் விட்டு சிரித்தார்.
காண்டாகி விட்டாள் வதனா.
“அப்பா...” என்று அலறினாள்.
மீண்டும் மீண்டும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி
“ஷ் ஷ் ஷ் . . ஹப்பா . . முடியல மா.
என்னம்மா இது கோலம்? நாடக கம்பெனிக்கு வேஷம் ஏதும் போடுறீயா?!” சிரிப்பின் ஊடே கேட்டார்.
“எல்லாம் உங்க செல்ல மகள் அதான் அந்த ஆராதனா வேலையா தான் இருக்கும். அக்கா தங்கை ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சி!” என்று குறை பாடினார் அம்மா.
“அம்மா நான் எதுவும் பண்ணல. அவ தான் முதல என் ஆபீஸ் பேப்பர்ஸ் எல்லாம் திருடுனது.”
“முதல அவளை கூப்பிடுங்கம்மா. . . இந்த முகத்தை வச்சிக்கிட்டு நான் எப்படிம்மா ஆபீஸ் போவேன்..?!” அழுத படி..கொஞ்சம் நடித்த படி கேட்டாள் பெண்.
“ஆராதனா. . அம்மாடி ஆராதனா. .”
அன்னையின் குரலில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த ஆராதனா சட்டென படுக்கையிலிருந்து எழுந்தாள். முதலில் ஒன்றுமே விளங்கவில்லை. மீண்டும் அன்னையின் குரல் கேட்கவும் அடித்து பிடித்து எழுந்து கீழ் இறங்கினாள்.
“என்னமா எதுக்கு இப்படி கத்துறீங்க” என்று கொட்டாவி விட்ட படி டைனிங் டேபிள் அருகிலிருந்த சேரில் சம்மளம் போட்டபடி ஆசுவாசமாக அமர்ந்தாள்.
தீக்குள் எண்ணெய் இல்லை இல்லை பெட்ரோல் ஊற்றியது போல இருந்தது அவளது செய்கை.
வதனாவிற்கு பொங்கி வந்த ஆத்திரத்தில், அவளை நோக்கி நடந்தவள் , தன் அழகிய நீள்வட்ட முகத்தை வெண்டை பிஞ்சு போன்ற தன் ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டி,
“இது என்னது..? என்னதுன்ன்ன்னு கேட்கிறேன். ஹாங்..?!”
“என்னது என்னதுன்னு என்னைய கேட்டா.. அதான் உனக்கே தெரியுதுல.. நான் தான் செஞ்சேன்னு பின்ன என்ன?”
“ஆராதனா...” கண்டிப்பாய் அழைத்தார் தந்தை.
“அப்படி என்னப்பா நான் செஞ்சேன்.. ஜஸ்ட் ஒரு பெரிய அய்யனார் மீசை. அதுக்கு மேட்ச்சா ரெண்டே ரெண்டு கொஞ்சம் கோரம பல், அப்புறம் நெற்றியிலே வெற்றி திலகம் தானேப்பா வச்சி விட்ருக்கேன். கண்ணு ரெண்டும் மான் போல இருந்தா அதான் வால் மட்டும் குறையுதேன்னு அதையும் போட்டு விட்டேன். இது ஒரு குத்தமா?!”
அவள் வர்ணித்து கேட்ட தினுசில் பெரியவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் கொஞ்சம் அடக்கி கொண்டனர். பின் வதனாவிடம் யார் வாங்கி கட்டி கொள்வது.
“பின்ன குத்தமில்லையா..? எத்தனை வாட்டி கழுவியும் அழியமாட்டுக்குதுடி... முகமெல்லாம் சிவந்து போனது தான் மிச்சம்...!” புலம்பினாள் சகோதரி...
“வேய் பீலிங் டார்லிங்.. கம்மு .”
அருகே இருந்த தேங்காய் எண்ணெய் பாட்டில்லை எடுத்து வதனாவின் கையில் கொடுத்தவள்..
“பெற்றுக் கொள் மகளே. . .
சிவந்த முகம் மீண்டும் வெள்ளையாய் மாற கடவது.
நீ இன்றும் என்றும் வெள்ளச்சி என்றே அழைக்கப்படுவாயாக. . !!!”
என்று ஆசி வழங்குவது போல பாவனை செய்தவள் பின் அவளை பார்த்து. .
“எப்பேர்பட்ட மை..னாலும் சட்டென அழிந்து விடும். பயன்படுத்தி நீடுழி வாழ்வாயாக.!”
என்று கூறி பாவ விமோச்சனம் கொடுத்தவள் அம்மாவின் புறம் திரும்பி…
“அம்மா எனக்கு.. சூ..டா.. ஆவி பறக்க.. அந்த டிஷை எடுத்து வாங்க பார்ப்போம்...!”
“எந்த டிஷ்டி சொல்ற...?”
“சொல்றேன் கேளுங்க.. காலங்காத்தால என் தூக்கத்தை கெடுத்ததுனால நான் நேரடையா சொல்லமாட்டேன். ஆனா சொல்லுவேன், நீங்க கண்டுபிடிச்சி செஞ்சு தரணும். சரியா? என்று டீல் பேசியவள் .. அப்பா. இதுக்கு நீங்க தான் சாட்சி!” என்று அப்பாவையும் துணைக்கு அழைத்து கொண்டாள்.
“சொல்றேன் கேட்டுக்கோங்க. . .” என்றபடி ..
“தாகத்தை தணிக்கும் இதை....” என்று முழு விவரத்தையும் புதிராய் புனைந்தாள் அந்த புதிர்க்காரி.
“என்னம்மா இது. . ??!”
என்றபடி யோசித்தார் அப்பா.
முகத்தை துடைத்தபடி வந்த வதனாவும் “அப்படி என்னதுடி அது...” என்று கேட்டப்படி யோசிக்கலானாள். இப்போது அவள் முகம் கொஞ்சம் பரவாயில்லை .
“ச் ச் ச்சு. இது தானா?! இதோ ஐந்து நிமிஷத்துல ரெடி !!”என்றாள் அன்னை.
தன் முன் சுட சுட ஆவி பறக்க அம்மா நீட்டியதை கண்டதும் வாயடைத்து போயினர் மூவரும். அது அது “லெமன் டீ .!”
புதிரை அவிழ்க்கும் முயற்சியில் வதனா கேட்டாள்.... “அம்மா காய்ந்த சருகு, மஞ்சள் மங்கை அப்படி இப்படின்னு.. இவா என்னன்னவோ சொன்னாளேம்மா... ?!”
“பொறுடி சொல்றேன்....”
என்றபடி அவரும் அருகிலிருந்த சேரில் சாய்வாக அமர்ந்தவர் பின் அவர்களை பார்த்து…
“தாகத்தை தணிப்பது எது..?
தண்ணீர். சரியா..
சூரியன், சூரிய குளியல்ன்னா..
கேஸ் அடுப்பும், சூடும் தான். ..
அப்புறம் பக்குவமா காய்ந்த சருகு..
அப்படி தானே ஆரு..” என வினவினாள் அன்னை. .
“ஆம்” என்பது போல தலையை ஆட்டினாள் அவள்.
“காய்ந்த சருகுன்னா தேயிலை இலை பொடி . . அதை கொதிக்கிற தண்ணீரிலே சரியான அளவுல சேர்த்து...
உடனே கேஸ் ஆப் பண்ணி கொஞ்சம் சூடு ஆற வச்சி. . .அதை தான் குளிர வச்சின்னு இவா சொல்லியிருக்கா..
அப்புறம் மஞ்சள் மங்கைன்னா. .
எலுமிச்சம் பழம். அதை கொஞ்சம் பிழிஞ்சு கலக்கி சுவைத்தா அது ஒரு சுவை. . கூடவே தித்திப்பிற்கு தேன் அல்லது சர்க்கரை சேர்த்தா அது வேறு சுவை ...போதுமா உங்களுக்கு விளக்கம்!” என்றதும் தான் தாமதம்.
“ஹைய்யோ.. இது தானா?!” என்ற வியப்பில் வீடே சிரித்தது...
_______________________
Continued..