என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ. . .
ஹாய் மக்களே. .
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இது வரை விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்து என்னை ஆதரித்து வரும் நல் உள்ளங்களுக்கு நன்றிகள்.
அமைதி வாசக பூக்களே. . மௌனம் கலைந்து விருப்பம் தெரிவிக்க அழைக்க படுகிறீர்கள்...
நன்றி...
“ஜீ பூம் பா
ஹேய் ஹேய் ஜீ பூம் பா
எந்தன் தேவதையை நீ காட்டு....
காட்டினாள்
காதல் கூட்டினால்
அவளை கும்பிடுவேன் பூ போட்டு . . .”
இன்னிசை தென்றல் காற்றின் வழி. . செவியில் நுழைந்து மனதை அழகாய் வருடி சென்றது. . . !
“இது என்ன மாயம்.?! அந்நிய ஆடவன் தொடுகை என்னை ஏன் இப்படி தாக்குகிறது.?!” என்று ஏதேதோ நினைவில் இருந்தவள் கொஞ்சமாய் சுதாரித்துக் கொண்டாள். அவன் தன்னை அணைத்த படி இருந்த அந்த வலிய புஜங்களை தன் பஞ்சு விரல் கொண்டு மெதுவாக பிரித்து விட்டாள். இவள் விலக சொல்கிறாளா? இல்லை இறுக்கி பிடிக்க சொல்கிறாளா. . ?!! அப்படி தான் அவள் விரல்கள் அவன் விரல்களோடு நார்த்தனம் ஆடியது...
"ஹ்ம்ம்..." பெருமூச்சுடன் அவனே விலகி விட்டான்.
பெண்ணவள் கொஞ்சம் முகம் வாடினாளோ . . ?
“ஆர் யு ஓ கே மிஸ் ?” என்றபடி புருவம் உயர்த்தினான்.
அந்த குரலில் மயங்கி போனாள் பெண். "அந்த இரு இமைகளும் ஏன் என்னை இவ்வளவு தூரம் தாக்குகிறது...?!”
அம்சமாய் ஒட்ட வெட்டப்பட்ட தலை முடியும் , அகன்ற நெற்றியும், மொழி பேசும் புருவங்களும், காதல் பேசும் அக்கண்களும் , கூரிய நாசியும்,அழகாய் ட்ரிம் செய்த லேசான தாடியும் , அடர்ந்த மீசை காடும் , சிவந்த அதரங்களும் , மினுமினுக்கும் பற்களும், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றியது..
“இக்கண்களை நான் எங்கோ பார்த்திருக்கிறேனோ. . ?! இவன் தொடுகை எனக்கு ஏன் பரிட்சியமானதாக தோன்றுகிறது....?”
இதை தானே "தேஜா வூ " என்பார்கள். எங்கோ எப்பவோ பார்த்தது போல இருக்கும். ஆனால் இல்லை.. இது நிஜமும் அல்ல கற்பனையும் அல்ல. . . அது ஒரு வகை உணர்வு..
“ஒரு வேளை எனக்கும் தேஜா வூ வந்து விட்டதா. . . ?!”
“ஷ் ஷ் ஷ் .. இது என்ன சிந்தனை..?” தன் மனதை அடக்கிய படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
சிரித்த முகம் மாறாமல் நின்றிருந்தான் .
“யெ....ஸ் . . ஜ ம் ஓ கே .” தடுமாறாமல் பேச கொஞ்சம் தடுமாறினாள் பெண்.
“கொஞ்சம் பார்த்து பறக்க கத்துக்கோங்க மிஸ். இல்லைன்னா சேதாரம் தான்..” என்றவன் குறு நகை புரிந்தான்.
அவள் பேந்த பேந்த விழித்தாள்.
“இப்பொழுது எதற்க்காக பறக்க சொல்கிறான்...? யாருக்கு சேதாரம்.?!” குழம்பி போனாள் பெண்.
அவள் குழப்பத்தை கண்டவன், “இப்படி வேகமா போன எங்கயாவது முட்டி மோத வேண்டியது தான். கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.” அக்கறையுடன் சொன்னான்.
“ஓ .. இவன் ஓடி வந்ததை சொல்கிறானா..?”
சட்டென தான் எதற்காக ஓடி வந்தோம் என்பது நினைவு வர
“ஆமா . . . அந்த பலூன் எங்கே. . ?”
பார்வையை சுழல விட்டாள்.
“அந்த பலூன் என்ன கட்டியா வச்சிருந்தீங்க?!! அப்படியே நிக்கிறதுக்கு.. இந்நேரத்துக்கு அது எங்கயாவது பறந்து போயிருக்கும் விடுங்க மிஸ்....” என்று இப்போதும் அவளது குழப்பத்திற்கு பதில் கூறினான்.
“இவனுக்கு எப்படி நாம் மனதில் பேசுவது எல்லாம் கேட்கிறது. இவன் என்ன மந்திரம் படித்தவனா. .? மாயாஜால வித்தை தெரிந்தவனோ . . .?”
“ஹா ஹா ஹா .. அப்படிலாம் இல்லைங்க .. எனக்கு ஒரு மாயாஜாலமும் தெரியாது. உங்க முகம் தான் உங்க மனசை அப்படியே காட்டுது.” என்றபடி அவள் முகம் பார்த்தான்.
“ஓ. . .”
“அந்த குவிந்த இதழ் மொட்டுகளை ஒரு முறை ஸ்பரிசத்தால் என்ன.. ?” பார்வை ஏக்கமாய் படிந்தது மங்கையவள் இதழ் மீது. . கொஞ்சம் அதிகமாகவே. .
தன் நினைப்பை நொடி பொழுதில் தூக்கி எறிந்தவன் அவளுடன் உரையாடலானான்.
“நீங்க தனியாவா வந்தீங்க.?”
“இல்லை . அக்கா ராம் எல்லாம் சேர்ந்து தான் வந்தோம்.” அவளது வாய் தானாக பதில் அளித்தது.
“அவர்கள் எங்கே?”
“இங்க தான் பக்கத்துல இருப்பாங்க.” கைகளை பிசைந்த படி பதிலளித்து கொண்டிருந்தாள்.
“சரி வாங்க. உங்களை உங்க அக்காகிட்ட விட்டுவிட்டு செல்கிறேன்.” என்றபடி அவன் நடந்தான்.
“இல்லை வேண்டாம். நீங்க கிளம்புங்க. நானே போகிறேன் .”
“ஏன்?”
நாணிலிருந்து புறப்பட்ட அம்பாய் சட்டென கேள்வி பிறந்தது அவனிடத்தில்.
“இது என்ன கேள்வி. .?! எனக்கு எங்க அக்காகிட்ட போக தெரியாதா..?? நான் என்ன சின்ன பாப்பாவா...???” கொஞ்சம் கோவம் வந்து விட்டதோ பெண்ணவளுக்கு.
“அப்படியா...?!! சரி போங்க..” வழியை விட்டு நகர்ந்து நின்றான்.
தலையை ஆட்டி விட்டு ஒரு எட்டு வைத்தவள் அப்படியே அதிர்ந்து நின்றாள்.
“ஹைய்யோ இது என்ன .. இங்கே யாரையும் காண வில்லை .. எல்லோரும் எங்கே மாயமாய் போனார்கள்.??!”
“யாரும் எங்கேயும் போகல. நீங்க தான் நானும் பறக்கிறேன்னு ... ஆள் இல்லாத இடம் வரைக்கும் பறந்து வந்திருக்கீறீங்க . . .” நக்கல் தொனித்தது அவன் குரலில்.
“இப்பாவது புரியுதா. .? நான் ஏன் அப்படி சொன்னேன்னு ..?!” குரலில் அழுத்தம் கூடியது அவனுக்கு..
“ச் ச...!” தன் நிலையை நொந்தபடி.
“சாரி .. பட்டுனு பேசுனதுக்கு .. முன்ன பின்ன தெரியாதவங்க கூட எப்படி சேர்ந்து போறதுன்னு ஒரு சின்ன சங்கடம். அதான் வேண்டாம்ன்னு சொன்னேன்.”
சட்டென இறங்கி வந்தாள்.
“புரியுது..” அவன் பதிலும் இலகுவாய் வந்தது..
அவளது இறக்கத்தில் இவன் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டதோ . . ?!
“சரி வாங்க. இந்த பக்கமா போனா பத்து நிமிஷத்துல மெயின் ரோடு வந்திரும். அங்க போனா உங்க அக்காவை பிடிச்சிற்லாம்” என்றபடி அவளோடு இணையாக நடந்து வந்தான்.
“உங்களுக்கு இந்த இடம் ரொம்ப பழக்கமோ... நீங்க அடிக்கடி வருவீங்களா..” இவனுக்கு மட்டும் எப்படி வழி தெரியும் என்றெண்ணத்தில் அப்பாவியாய் கேட்டாள் .
“பழக்கம் தான்.எப்பவாது தான் வருவேன்.” எந்த ஒரு தயக்கமும் இன்றி அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.
“உங்க பெயரை சொல்லலியே .. . .”
“நீங்க கேட்கலையே. .?!” குறும்பாய் புன்னைகைத்தாள் .
அவன் நெளிந்தான்.
பின் அவளே அவன் முகம் பார்த்து சொன்னாள் , “ஆராதனா.”
“உங்க பெயர் என்ன..?”
“ரவி.”
“ஓ. கே. ரவி .. ஹீ ஹீ ஹீ .. சும்மா பெயரை சொல்லி பார்த்துக்கிட்டேன். . .”
“இதழ் குவித்து
நீயே உன் பெயரை உச்சரிக்கையில். . .
மோகம் கொள்கிறேனடி . .
இதழசைத்து என் பெயரை
நீ அழைக்கையில் . . .
கதிகலங்கி போகிறேன் நானடி. .”
“என்ன பண்றீங்க ஆராதனா ... படிக்கிறீங்களா.. இல்லை வேலை எதுவும் . . .?”
“இப்போ ரீசன்ட்டா தான் ஒரு கம்பெனில ஜாயின் பண்ணியிருக்கிறேன். பெயிண்டிங்ஸ் டெலிவரி பண்ணனும் . கஸ்டமர் கேட்கிற மாதிரி வடிவமைச்சு குடுக்கிற கம்பெனி அது.”
“ஓ அப்படியா.. அப்போ நீங்க நல்லா வரைவீங்கன்னு சொல்லுங்க. . .”
சிரித்து கொண்டாள் அவள்.
அவன் என்ன பண்ணுகிறான் என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. பேச்சு முழுதும் அவளை சுற்றியே இருந்தது.
காலாரா நடந்தபடி அவர்கள் இப்பொழுது கொஞ்சம் ஆட்கள் இருக்குமிடம் வந்திருந்தனர். அங்கே தின்பண்டங்கள் விற்று கொண்டிருந்த ஒருவனின் கைகளில் மின்னிய அந்த பொருள் “என்னை வாங்கி கொள்ளேன்” என்று ஆருவை பார்த்து கண் சிமிட்டியது. . . யாருக்கும் தெரியாமல். .!
அவள் பட்டென ஓடி சென்று அந்த பையனை நிறுத்தி அந்த பொருளை ஆசையாக வாங்கி சுவைக்க ஆரம்பித்தாள்.
அந்த விரல்கள் நாட்டியம் ஆடியது போல இருந்தது, அவள் அதை எடுத்து வாயில் திணிக்கையில்.! இதழ்களோஆனந்தமாய் சிரித்து . . கொஞ்சம் சுழித்து . . கண்களை மூடி .. அதன் சுவையை அனுபவித்தபடி உண்டு கொண்டிருந்தாள். மெய் மறந்து அவள் சாப்பிடும் அழகை அவன் மனதில் சேகரித்துக் கொண்டான்.
இவள் வளர்ந்தாலும் சிறுபிள்ளை தான்.
“அக்கா.. காசு .” என்று அந்த ஏகாந்த நிலையை கலைத்தான் பையன்.
விழி திறந்தவள் சட்டென பார்த்தாள் பக்கத்திலிருந்தவனை. ..
“என்ன காசு இல்லையா. . ?”
பேந்த பேந்த விழித்தாள் பெண்.
“ஹா ஹா ஹா. . காசு கொடுக்காமையே நல்லா சப்பு கொட்டி சாப்பிடுற. . .! என்ன. .?!” கிண்டல் செய்தான் அவன்.
சங்கட பட்டாள் அவள்.
“சரி விடு. . நானே கொடுக்கிறேன். அப்புறமா தா.”என்றபடி வழக்கை முடித்தான்.
அவன் ஒருமைக்கு தாவியிருந்தான் இப்பொழுது. இவ்வளவு தூரம் அவளுடன் பேசியதன் விளைவோ..?
அவன் அவளை அதிகம் சீண்ட வில்லை. ஏதோ சந்தோஷ மனநிலையில் இருந்தான் போலும்.
அவளும் பின் ஏதும் அவனிடம் பேச வில்லை. கையிலிருந்த பொருளுக்கும் வாயிற்கும் மட்டுமே வேலை கொடுத்தபடி இருந்தாள். . .
பின் சட்டென அவன் புறம் திரும்பி . . “நீங்க ஏதும் வாங்கலையா . . உங்களுக்கு வேணுமா..?” தன் கையில் இருந்ததை காட்டி கேட்டாள். .
அவன் பார்வை கைகளை தாண்டி அவள் இதழோரத்தில் ஒட்டியிருந்த இடத்தை பாசமாய் தீண்டி அப்படியே கூடாரம் போட்டு அமர்ந்து விட்டது.
பெண்ணவள் மீண்டும் கைகளை காட்டி கேட்டாள் அவனிடம்.
தலையை மறுப்பாக ஆட்டினான் அக்கள்வன்.
“உங்களுக்கு தெரியுமா. . இது அவ்வளவு சுவை.. இதை ஒரு முறை சாப்பிட்டா வாழ் நாள் முழுதும் கூடவே ஒட்டிக்கிட்டிருக்கும் .. அப்படியொரு சுவை..!”
“அப்படி என்னம்மா இது. ஆமா இதோட பெயரென்ன ?”
“அதுவா.. .?!” என்றபடி அவள் ஆர்வமாய் விளக்க ஆரம்பித்தாள் .
“ஒரு ரூபாய் காயின் அளவே
இருந்தாலும். .
பனைமர நொங்கை போல
தித்திப்பானது தானது தான். .
நாக்கில் பட்டவனுடன். .
அதன் பாட்டிற்கு
சுவை ஊற்றெடுக்கும் . ..
இதன் மூலப்பொருள் இல்லாத இல்லமே இல்லை. .
சுவைகளில் இரண்டை கலந்து. . .
அழகாய் ஜொலிக்கும். . .!
சூப்பர் ஸ்டார் ரஜினியை போல
தகதகவென மின்னும். ..
மின்னுமையா மின்னும். . . .
சும்மா தக தகவென மின்னும்...!”
“இப்போ சொல்லுங்க . . ? அது என்ன பெயர். இந்த தின்பண்ட பொருளின் பெயர் என்ன...?”
(என்ன மக்களே . .
ரெடியா..? சீக்கிரம் யோசித்து சொல்லுங்க... பார்ப்போம் யாரு கண்டு பிடிக்கிறாங்கன்னு. பதில் சொன்னா . . . . எல்லோருக்கும்….?!!! )
என்று சொல்லியவள் கலகலவென புன்னகைத்தாள் . . .
அழகாய் வாய் விட்டு தெத்துப்பல் தெரிய மலர்ந்தாள் பெண்ணவள்.
அப்ப. . .டி. . .யே. . . உள்ளத்தை கொள்ளை கொண்டது அப்புன்னகை.
“இவ. . ளை. . இ. . வ. . ளை என்ன செய்தால் தகும். . . இம்சிக்கிறாளே. . .?!! ஹ்ம்ம்ம்.... முடியாது.. இனி தாக்கு பிடிக்க முடியாது. . .”
அவள் புறம் சட்டென நெருங்கி . . அவள் நீட்டிய கைகளை பிடித்து . . . கொஞ்சம் மங்கையின் வாசத்தை உள்ளிழுத்து கொண்டே. . . அவள் இடை வளைத்தான் . .
சிரிப்பொலி நின்று பெண்ணவள் விழி விரித்து அதிர்ந்து பார்த்தாள் ..
பார்வை முழுதும் அவனே ஆக்கிரமித்திருந்தான். “இது எ . . ன். . ன . . ? இவன். . என்ன செய்கிறான். .” இதயம் துடித்தது. . யுவராஜ் சிங் மட்டையில் பட்ட பந்தாக. . . !
அவன் கண்கள். . இவள் கண்களோடு கலந்து. . . மாய உலகத்திற்கு அழைத்து சென்றது. அவன் மூச்சு காற்று இவள் நாசியில் பட்டு சிலிர்த்து அடங்கியது.. பேதையவள் வசமிழக்க தொடங்கினாள். மீசை முடி அவள் மூக்கின் நுனி பட்டும் படாமலும் இதமாய் தீண்டி சென்றது.. இதழ்கள் அவள் இதழை நெருங்கி ஏதோ பாஷை பேச காத்திருந்தது வேறு அவளை சுகமாய் போதை கொள்ள செய்தது. .
இதோ. .இதோ. . .தீண்ட போகிறது.. . இன்னும் கொஞ்சம் கடந்தால் போதும். . . அவ்விதழ்கள் இரண்டும் இணையவிருந்த வேளையில். . .
அவன் கண் திறந்து. . பெண்ணவளை விழி மூடாமல் ரசித்து பார்த்தான். . . இதழ்கள் தானாக மலர்ந்தது. . . அவன் நுனி விரல் கொண்டு அவள் இதழோரமாய் ஒட்டியிருந்தவற்றை மெதுவாக துடைத்து விட்டான்.
ஏதோ மாயவலை அறுபட்ட உணர்வில் விழி திறந்தாள் அவள்.
“இ…வ்…ளோ… விலாவரியா பேசுனா மட்டும் போதாது கண்ணு. .. ஒழுங்கா சாப்பிட தெரியணும்....” என்று நகைத்தபடி. . மீண்டும் ஒரு முறை அவளிதழை துடைத்து விட்டான்.
பெண்ணவள் கொஞ்சம் குழம்பி போனாள்.
“ஹேய். . ஆரு. . . .” தூரத்தில் வதனா அழைப்பது கேட்டது.. .
“உங்க அக்கா இவங்க தானா. . சரி அப்போ நான் கிளம்புறேன். . பாய். . .”
கை ஆட்டி விட்டு சென்று விட்டான் அவன். அவன் அவளின் தேஜா வூ. அவள் கைகள் தானாக கழுத்து சங்கிலியை தடவி கொடுத்தது. . .
#################
ஹாய் மக்களே. .
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இது வரை விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்து என்னை ஆதரித்து வரும் நல் உள்ளங்களுக்கு நன்றிகள்.
அமைதி வாசக பூக்களே. . மௌனம் கலைந்து விருப்பம் தெரிவிக்க அழைக்க படுகிறீர்கள்...
நன்றி...
“ஜீ பூம் பா
ஹேய் ஹேய் ஜீ பூம் பா
எந்தன் தேவதையை நீ காட்டு....
காட்டினாள்
காதல் கூட்டினால்
அவளை கும்பிடுவேன் பூ போட்டு . . .”
இன்னிசை தென்றல் காற்றின் வழி. . செவியில் நுழைந்து மனதை அழகாய் வருடி சென்றது. . . !
“இது என்ன மாயம்.?! அந்நிய ஆடவன் தொடுகை என்னை ஏன் இப்படி தாக்குகிறது.?!” என்று ஏதேதோ நினைவில் இருந்தவள் கொஞ்சமாய் சுதாரித்துக் கொண்டாள். அவன் தன்னை அணைத்த படி இருந்த அந்த வலிய புஜங்களை தன் பஞ்சு விரல் கொண்டு மெதுவாக பிரித்து விட்டாள். இவள் விலக சொல்கிறாளா? இல்லை இறுக்கி பிடிக்க சொல்கிறாளா. . ?!! அப்படி தான் அவள் விரல்கள் அவன் விரல்களோடு நார்த்தனம் ஆடியது...
"ஹ்ம்ம்..." பெருமூச்சுடன் அவனே விலகி விட்டான்.
பெண்ணவள் கொஞ்சம் முகம் வாடினாளோ . . ?
“ஆர் யு ஓ கே மிஸ் ?” என்றபடி புருவம் உயர்த்தினான்.
அந்த குரலில் மயங்கி போனாள் பெண். "அந்த இரு இமைகளும் ஏன் என்னை இவ்வளவு தூரம் தாக்குகிறது...?!”
அம்சமாய் ஒட்ட வெட்டப்பட்ட தலை முடியும் , அகன்ற நெற்றியும், மொழி பேசும் புருவங்களும், காதல் பேசும் அக்கண்களும் , கூரிய நாசியும்,அழகாய் ட்ரிம் செய்த லேசான தாடியும் , அடர்ந்த மீசை காடும் , சிவந்த அதரங்களும் , மினுமினுக்கும் பற்களும், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றியது..
“இக்கண்களை நான் எங்கோ பார்த்திருக்கிறேனோ. . ?! இவன் தொடுகை எனக்கு ஏன் பரிட்சியமானதாக தோன்றுகிறது....?”
இதை தானே "தேஜா வூ " என்பார்கள். எங்கோ எப்பவோ பார்த்தது போல இருக்கும். ஆனால் இல்லை.. இது நிஜமும் அல்ல கற்பனையும் அல்ல. . . அது ஒரு வகை உணர்வு..
“ஒரு வேளை எனக்கும் தேஜா வூ வந்து விட்டதா. . . ?!”
“ஷ் ஷ் ஷ் .. இது என்ன சிந்தனை..?” தன் மனதை அடக்கிய படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
சிரித்த முகம் மாறாமல் நின்றிருந்தான் .
“யெ....ஸ் . . ஜ ம் ஓ கே .” தடுமாறாமல் பேச கொஞ்சம் தடுமாறினாள் பெண்.
“கொஞ்சம் பார்த்து பறக்க கத்துக்கோங்க மிஸ். இல்லைன்னா சேதாரம் தான்..” என்றவன் குறு நகை புரிந்தான்.
அவள் பேந்த பேந்த விழித்தாள்.
“இப்பொழுது எதற்க்காக பறக்க சொல்கிறான்...? யாருக்கு சேதாரம்.?!” குழம்பி போனாள் பெண்.
அவள் குழப்பத்தை கண்டவன், “இப்படி வேகமா போன எங்கயாவது முட்டி மோத வேண்டியது தான். கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.” அக்கறையுடன் சொன்னான்.
“ஓ .. இவன் ஓடி வந்ததை சொல்கிறானா..?”
சட்டென தான் எதற்காக ஓடி வந்தோம் என்பது நினைவு வர
“ஆமா . . . அந்த பலூன் எங்கே. . ?”
பார்வையை சுழல விட்டாள்.
“அந்த பலூன் என்ன கட்டியா வச்சிருந்தீங்க?!! அப்படியே நிக்கிறதுக்கு.. இந்நேரத்துக்கு அது எங்கயாவது பறந்து போயிருக்கும் விடுங்க மிஸ்....” என்று இப்போதும் அவளது குழப்பத்திற்கு பதில் கூறினான்.
“இவனுக்கு எப்படி நாம் மனதில் பேசுவது எல்லாம் கேட்கிறது. இவன் என்ன மந்திரம் படித்தவனா. .? மாயாஜால வித்தை தெரிந்தவனோ . . .?”
“ஹா ஹா ஹா .. அப்படிலாம் இல்லைங்க .. எனக்கு ஒரு மாயாஜாலமும் தெரியாது. உங்க முகம் தான் உங்க மனசை அப்படியே காட்டுது.” என்றபடி அவள் முகம் பார்த்தான்.
“ஓ. . .”
“அந்த குவிந்த இதழ் மொட்டுகளை ஒரு முறை ஸ்பரிசத்தால் என்ன.. ?” பார்வை ஏக்கமாய் படிந்தது மங்கையவள் இதழ் மீது. . கொஞ்சம் அதிகமாகவே. .
தன் நினைப்பை நொடி பொழுதில் தூக்கி எறிந்தவன் அவளுடன் உரையாடலானான்.
“நீங்க தனியாவா வந்தீங்க.?”
“இல்லை . அக்கா ராம் எல்லாம் சேர்ந்து தான் வந்தோம்.” அவளது வாய் தானாக பதில் அளித்தது.
“அவர்கள் எங்கே?”
“இங்க தான் பக்கத்துல இருப்பாங்க.” கைகளை பிசைந்த படி பதிலளித்து கொண்டிருந்தாள்.
“சரி வாங்க. உங்களை உங்க அக்காகிட்ட விட்டுவிட்டு செல்கிறேன்.” என்றபடி அவன் நடந்தான்.
“இல்லை வேண்டாம். நீங்க கிளம்புங்க. நானே போகிறேன் .”
“ஏன்?”
நாணிலிருந்து புறப்பட்ட அம்பாய் சட்டென கேள்வி பிறந்தது அவனிடத்தில்.
“இது என்ன கேள்வி. .?! எனக்கு எங்க அக்காகிட்ட போக தெரியாதா..?? நான் என்ன சின்ன பாப்பாவா...???” கொஞ்சம் கோவம் வந்து விட்டதோ பெண்ணவளுக்கு.
“அப்படியா...?!! சரி போங்க..” வழியை விட்டு நகர்ந்து நின்றான்.
தலையை ஆட்டி விட்டு ஒரு எட்டு வைத்தவள் அப்படியே அதிர்ந்து நின்றாள்.
“ஹைய்யோ இது என்ன .. இங்கே யாரையும் காண வில்லை .. எல்லோரும் எங்கே மாயமாய் போனார்கள்.??!”
“யாரும் எங்கேயும் போகல. நீங்க தான் நானும் பறக்கிறேன்னு ... ஆள் இல்லாத இடம் வரைக்கும் பறந்து வந்திருக்கீறீங்க . . .” நக்கல் தொனித்தது அவன் குரலில்.
“இப்பாவது புரியுதா. .? நான் ஏன் அப்படி சொன்னேன்னு ..?!” குரலில் அழுத்தம் கூடியது அவனுக்கு..
“ச் ச...!” தன் நிலையை நொந்தபடி.
“சாரி .. பட்டுனு பேசுனதுக்கு .. முன்ன பின்ன தெரியாதவங்க கூட எப்படி சேர்ந்து போறதுன்னு ஒரு சின்ன சங்கடம். அதான் வேண்டாம்ன்னு சொன்னேன்.”
சட்டென இறங்கி வந்தாள்.
“புரியுது..” அவன் பதிலும் இலகுவாய் வந்தது..
அவளது இறக்கத்தில் இவன் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டதோ . . ?!
“சரி வாங்க. இந்த பக்கமா போனா பத்து நிமிஷத்துல மெயின் ரோடு வந்திரும். அங்க போனா உங்க அக்காவை பிடிச்சிற்லாம்” என்றபடி அவளோடு இணையாக நடந்து வந்தான்.
“உங்களுக்கு இந்த இடம் ரொம்ப பழக்கமோ... நீங்க அடிக்கடி வருவீங்களா..” இவனுக்கு மட்டும் எப்படி வழி தெரியும் என்றெண்ணத்தில் அப்பாவியாய் கேட்டாள் .
“பழக்கம் தான்.எப்பவாது தான் வருவேன்.” எந்த ஒரு தயக்கமும் இன்றி அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.
“உங்க பெயரை சொல்லலியே .. . .”
“நீங்க கேட்கலையே. .?!” குறும்பாய் புன்னைகைத்தாள் .
அவன் நெளிந்தான்.
பின் அவளே அவன் முகம் பார்த்து சொன்னாள் , “ஆராதனா.”
“உங்க பெயர் என்ன..?”
“ரவி.”
“ஓ. கே. ரவி .. ஹீ ஹீ ஹீ .. சும்மா பெயரை சொல்லி பார்த்துக்கிட்டேன். . .”
“இதழ் குவித்து
நீயே உன் பெயரை உச்சரிக்கையில். . .
மோகம் கொள்கிறேனடி . .
இதழசைத்து என் பெயரை
நீ அழைக்கையில் . . .
கதிகலங்கி போகிறேன் நானடி. .”
“என்ன பண்றீங்க ஆராதனா ... படிக்கிறீங்களா.. இல்லை வேலை எதுவும் . . .?”
“இப்போ ரீசன்ட்டா தான் ஒரு கம்பெனில ஜாயின் பண்ணியிருக்கிறேன். பெயிண்டிங்ஸ் டெலிவரி பண்ணனும் . கஸ்டமர் கேட்கிற மாதிரி வடிவமைச்சு குடுக்கிற கம்பெனி அது.”
“ஓ அப்படியா.. அப்போ நீங்க நல்லா வரைவீங்கன்னு சொல்லுங்க. . .”
சிரித்து கொண்டாள் அவள்.
அவன் என்ன பண்ணுகிறான் என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. பேச்சு முழுதும் அவளை சுற்றியே இருந்தது.
காலாரா நடந்தபடி அவர்கள் இப்பொழுது கொஞ்சம் ஆட்கள் இருக்குமிடம் வந்திருந்தனர். அங்கே தின்பண்டங்கள் விற்று கொண்டிருந்த ஒருவனின் கைகளில் மின்னிய அந்த பொருள் “என்னை வாங்கி கொள்ளேன்” என்று ஆருவை பார்த்து கண் சிமிட்டியது. . . யாருக்கும் தெரியாமல். .!
அவள் பட்டென ஓடி சென்று அந்த பையனை நிறுத்தி அந்த பொருளை ஆசையாக வாங்கி சுவைக்க ஆரம்பித்தாள்.
அந்த விரல்கள் நாட்டியம் ஆடியது போல இருந்தது, அவள் அதை எடுத்து வாயில் திணிக்கையில்.! இதழ்களோஆனந்தமாய் சிரித்து . . கொஞ்சம் சுழித்து . . கண்களை மூடி .. அதன் சுவையை அனுபவித்தபடி உண்டு கொண்டிருந்தாள். மெய் மறந்து அவள் சாப்பிடும் அழகை அவன் மனதில் சேகரித்துக் கொண்டான்.
இவள் வளர்ந்தாலும் சிறுபிள்ளை தான்.
“அக்கா.. காசு .” என்று அந்த ஏகாந்த நிலையை கலைத்தான் பையன்.
விழி திறந்தவள் சட்டென பார்த்தாள் பக்கத்திலிருந்தவனை. ..
“என்ன காசு இல்லையா. . ?”
பேந்த பேந்த விழித்தாள் பெண்.
“ஹா ஹா ஹா. . காசு கொடுக்காமையே நல்லா சப்பு கொட்டி சாப்பிடுற. . .! என்ன. .?!” கிண்டல் செய்தான் அவன்.
சங்கட பட்டாள் அவள்.
“சரி விடு. . நானே கொடுக்கிறேன். அப்புறமா தா.”என்றபடி வழக்கை முடித்தான்.
அவன் ஒருமைக்கு தாவியிருந்தான் இப்பொழுது. இவ்வளவு தூரம் அவளுடன் பேசியதன் விளைவோ..?
அவன் அவளை அதிகம் சீண்ட வில்லை. ஏதோ சந்தோஷ மனநிலையில் இருந்தான் போலும்.
அவளும் பின் ஏதும் அவனிடம் பேச வில்லை. கையிலிருந்த பொருளுக்கும் வாயிற்கும் மட்டுமே வேலை கொடுத்தபடி இருந்தாள். . .
பின் சட்டென அவன் புறம் திரும்பி . . “நீங்க ஏதும் வாங்கலையா . . உங்களுக்கு வேணுமா..?” தன் கையில் இருந்ததை காட்டி கேட்டாள். .
அவன் பார்வை கைகளை தாண்டி அவள் இதழோரத்தில் ஒட்டியிருந்த இடத்தை பாசமாய் தீண்டி அப்படியே கூடாரம் போட்டு அமர்ந்து விட்டது.
பெண்ணவள் மீண்டும் கைகளை காட்டி கேட்டாள் அவனிடம்.
தலையை மறுப்பாக ஆட்டினான் அக்கள்வன்.
“உங்களுக்கு தெரியுமா. . இது அவ்வளவு சுவை.. இதை ஒரு முறை சாப்பிட்டா வாழ் நாள் முழுதும் கூடவே ஒட்டிக்கிட்டிருக்கும் .. அப்படியொரு சுவை..!”
“அப்படி என்னம்மா இது. ஆமா இதோட பெயரென்ன ?”
“அதுவா.. .?!” என்றபடி அவள் ஆர்வமாய் விளக்க ஆரம்பித்தாள் .
“ஒரு ரூபாய் காயின் அளவே
இருந்தாலும். .
பனைமர நொங்கை போல
தித்திப்பானது தானது தான். .
நாக்கில் பட்டவனுடன். .
அதன் பாட்டிற்கு
சுவை ஊற்றெடுக்கும் . ..
இதன் மூலப்பொருள் இல்லாத இல்லமே இல்லை. .
சுவைகளில் இரண்டை கலந்து. . .
அழகாய் ஜொலிக்கும். . .!
சூப்பர் ஸ்டார் ரஜினியை போல
தகதகவென மின்னும். ..
மின்னுமையா மின்னும். . . .
சும்மா தக தகவென மின்னும்...!”
“இப்போ சொல்லுங்க . . ? அது என்ன பெயர். இந்த தின்பண்ட பொருளின் பெயர் என்ன...?”
(என்ன மக்களே . .
ரெடியா..? சீக்கிரம் யோசித்து சொல்லுங்க... பார்ப்போம் யாரு கண்டு பிடிக்கிறாங்கன்னு. பதில் சொன்னா . . . . எல்லோருக்கும்….?!!! )
என்று சொல்லியவள் கலகலவென புன்னகைத்தாள் . . .
அழகாய் வாய் விட்டு தெத்துப்பல் தெரிய மலர்ந்தாள் பெண்ணவள்.
அப்ப. . .டி. . .யே. . . உள்ளத்தை கொள்ளை கொண்டது அப்புன்னகை.
“இவ. . ளை. . இ. . வ. . ளை என்ன செய்தால் தகும். . . இம்சிக்கிறாளே. . .?!! ஹ்ம்ம்ம்.... முடியாது.. இனி தாக்கு பிடிக்க முடியாது. . .”
அவள் புறம் சட்டென நெருங்கி . . அவள் நீட்டிய கைகளை பிடித்து . . . கொஞ்சம் மங்கையின் வாசத்தை உள்ளிழுத்து கொண்டே. . . அவள் இடை வளைத்தான் . .
சிரிப்பொலி நின்று பெண்ணவள் விழி விரித்து அதிர்ந்து பார்த்தாள் ..
பார்வை முழுதும் அவனே ஆக்கிரமித்திருந்தான். “இது எ . . ன். . ன . . ? இவன். . என்ன செய்கிறான். .” இதயம் துடித்தது. . யுவராஜ் சிங் மட்டையில் பட்ட பந்தாக. . . !
அவன் கண்கள். . இவள் கண்களோடு கலந்து. . . மாய உலகத்திற்கு அழைத்து சென்றது. அவன் மூச்சு காற்று இவள் நாசியில் பட்டு சிலிர்த்து அடங்கியது.. பேதையவள் வசமிழக்க தொடங்கினாள். மீசை முடி அவள் மூக்கின் நுனி பட்டும் படாமலும் இதமாய் தீண்டி சென்றது.. இதழ்கள் அவள் இதழை நெருங்கி ஏதோ பாஷை பேச காத்திருந்தது வேறு அவளை சுகமாய் போதை கொள்ள செய்தது. .
இதோ. .இதோ. . .தீண்ட போகிறது.. . இன்னும் கொஞ்சம் கடந்தால் போதும். . . அவ்விதழ்கள் இரண்டும் இணையவிருந்த வேளையில். . .
அவன் கண் திறந்து. . பெண்ணவளை விழி மூடாமல் ரசித்து பார்த்தான். . . இதழ்கள் தானாக மலர்ந்தது. . . அவன் நுனி விரல் கொண்டு அவள் இதழோரமாய் ஒட்டியிருந்தவற்றை மெதுவாக துடைத்து விட்டான்.
ஏதோ மாயவலை அறுபட்ட உணர்வில் விழி திறந்தாள் அவள்.
“இ…வ்…ளோ… விலாவரியா பேசுனா மட்டும் போதாது கண்ணு. .. ஒழுங்கா சாப்பிட தெரியணும்....” என்று நகைத்தபடி. . மீண்டும் ஒரு முறை அவளிதழை துடைத்து விட்டான்.
பெண்ணவள் கொஞ்சம் குழம்பி போனாள்.
“ஹேய். . ஆரு. . . .” தூரத்தில் வதனா அழைப்பது கேட்டது.. .
“உங்க அக்கா இவங்க தானா. . சரி அப்போ நான் கிளம்புறேன். . பாய். . .”
கை ஆட்டி விட்டு சென்று விட்டான் அவன். அவன் அவளின் தேஜா வூ. அவள் கைகள் தானாக கழுத்து சங்கிலியை தடவி கொடுத்தது. . .
#################