எப்போதும் குடும்ப அமைப்புகளை பல்வேறு பரிணாமங்களில் தன் எழுத்து நடையில் அமர்த்தலாக காண்பிப்பவர் நம் srinavee .
இந்த தென்றலும் அப்படி ஒரு வகையே என்றாலும் இதில் இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சினையை அழகாக கையாண்டு இருக்கிறார்.
தாய் தந்தை இன்றி தன் பாட்டி அன்னபூரணி யின் வளர்ப்பில் அன்பு வார்த்தைகளின்றி வேறு எதுவும் தெரியாது வளர்ந்த நம் நாயகி வைஷாலிக்கும், எதையும் ஆராயாது தன் அவசர புத்தியால் அனைத்தையும் கெடுத்துக் கொள்ளும் நம் நாயகன் அஷோக் கிருஷ்ணாவுக்கும் இடையில் நடக்கும் காதல், சச்சரவுகளை தன் எழுத்து நடையில் அருமையாக கொடுத்து இருக்கிறார் ஆத்தர்ஜி.
தெளிவு இல்லாத நாயகனால் நாமும் தெளிவு இல்லாமல் ஆத்தரை திட்டி இருந்தாலும் இறுதியில் அவனின் பிரச்சினையை அறியும் போது நம் மனம் அவன் மேல் பரிதாபம் கொள்கிறது. பிரச்சினையை தீர்க்க தெரியாமல் , தீர்க்க வேண்டாமல் முரண்டு பிடிக்கும் பொழுது தன் காதலால் அவனை மாற்ற எண்ணி , அதில் வெற்றி பெறும் நம் நாயகி நம்முள் பொறுமையின் முக்கியத்துவத்தை கடத்தி விடுகிறார்.
ஆக தென்றல் புயலாய் மாறுமோ என்று எண்ணி இருக்க இனிய தென்றலாய் நம்மை வருடி செல்கிறது.
நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள் தோழிகளே!!!
இந்த தென்றலும் அப்படி ஒரு வகையே என்றாலும் இதில் இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சினையை அழகாக கையாண்டு இருக்கிறார்.
தாய் தந்தை இன்றி தன் பாட்டி அன்னபூரணி யின் வளர்ப்பில் அன்பு வார்த்தைகளின்றி வேறு எதுவும் தெரியாது வளர்ந்த நம் நாயகி வைஷாலிக்கும், எதையும் ஆராயாது தன் அவசர புத்தியால் அனைத்தையும் கெடுத்துக் கொள்ளும் நம் நாயகன் அஷோக் கிருஷ்ணாவுக்கும் இடையில் நடக்கும் காதல், சச்சரவுகளை தன் எழுத்து நடையில் அருமையாக கொடுத்து இருக்கிறார் ஆத்தர்ஜி.
தெளிவு இல்லாத நாயகனால் நாமும் தெளிவு இல்லாமல் ஆத்தரை திட்டி இருந்தாலும் இறுதியில் அவனின் பிரச்சினையை அறியும் போது நம் மனம் அவன் மேல் பரிதாபம் கொள்கிறது. பிரச்சினையை தீர்க்க தெரியாமல் , தீர்க்க வேண்டாமல் முரண்டு பிடிக்கும் பொழுது தன் காதலால் அவனை மாற்ற எண்ணி , அதில் வெற்றி பெறும் நம் நாயகி நம்முள் பொறுமையின் முக்கியத்துவத்தை கடத்தி விடுகிறார்.
ஆக தென்றல் புயலாய் மாறுமோ என்று எண்ணி இருக்க இனிய தென்றலாய் நம்மை வருடி செல்கிறது.
நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள் தோழிகளே!!!