மெல்லிதழ் காற்றில்...
சலசலக்கும் நீரருவியின் ஓசை தூரமே கேட்டிட...
கூடவே தூரமே ஓடும் ரயில் வண்டிச்சத்தம்...
இருள் சூழ்ந்த நேரம் நிலவொளி வீச...
பூவாசம் படர்ந்த சோலை நடுவே மெல்ல நடைப் பயில ஆசைக் கொண்ட உள்ளங்களுக்கு ... பயணமாய் இங்கு
'அவள் பௌர்ணமி '
திடீரென பூட்டித்திறக்கும் கதவுகளும் திரைச் சீலைக் காற்றில் ஆடியே தீப்பிடித்தெரியும் விந்தை இங்கும் கண்டிடலாம்...
யாரும் உருட்டதா பொருளும் கீழே விழுந்து உருண்டு பிரலலாம் ...
காற்றோடு உருவங்கள் மாறியே தீயின் தகிப்பை அங்கே தந்திடுமாம்...
நம்மோடு நடமாடும் நம்மை யாரோ பார்ப்பதை உணர்ந்திட நுழைத்திடு அவள் மாளிகையில்...
கதைக்கொண்டு அங்கே கதை உருவாக்கப்பட 'நிழல் காதலன்' என நிஜம் அங்கே நிழலாய் காட்சி சாட்சியாய் ...
பேசிட முடியா பாவையவள் முழு நிலவாய் இருள் வானுக்கு ஒளி தந்தது போலவே நாயகன் இருளுக்கு முழு நிலவாய் நின்றே ஒளி பரப்புகிறாள்...
காதல் அங்கே மலர்ந்திட நிலவை சாட்சியாய்க் கொண்டே வளர் பிறையென வளர்ந்திட முழுநிலவில் இருவரும் காதல் தேவர்களாய் காட்சி தந்தே அதை தொடர்ந்து வரும் தேய் பிறைகளென மாறியே போயின...
அவர்கள் வாழ்வினில் உண்டான நிகழ்வு எதிர்பாராத மாற்றம் பௌர்ணமியை ஒளிரச் செய்ததா?
ஒளிர்ந்தே ஒளியை பறித்துக் கொண்டதா? பார்த்திட படிக்கலாம்
"அவள் பௌர்ணமி "
அருமை எழுத்தாளரே.
இவரின் புதிய முயற்சியானது கதைக் களத்தில் அவர் கதைகளில் நல் மாற்றத்தை கொண்டு சேர்த்திருக்கிறார்.
பேய்கள் பற்றி பேசிப்பயனில்லை...
பலர் இல்லையென்பார்கள், சிலர் பார்த்ததாய் கூட கூறுவார்கள், உலகின் சில இடங்கள், குறிப்புக்கள் கூறி அங்கே இருக்கிறது என்றுமே கூறுகின்றனர்.இறந்தவர்களைப்போலவே பலரும் பேசக்கூட செய்வார்கள்.
இவ்வாறிருக்க ஆழ்மனதின் வெளிப்பாடு நம் மனதை நம் கட்டுக்குள் வைத்து எது செய்யினும் அதில் பலன் காணலாம் என்பேன். பேயென்ன கடவுளாய்க் கூட மாறிட மறுக்கமாட்டான் மானிடன்.
கற்பனையாய் ஓர் உயிர் பிரிய,அவ்வுயிர் காரணமே இன்றி அர்த்தமற்று பிரிந்து, அதைக்கொண்டு திருப்தியடையாத ஆன்மாக்களுக்கும்,
தனக்கான உயிர் அநியாயமாய் பறித்தெடுக்கப்பட்டதன் பழியை தன் உயிர் பறித்த உயிரைக் குடித்து தீர்த்துக்கொள்ள வேண்டும் நினைக்கும் ஆன்மாக்களும் அலைந்து திரிவதாய்
இன்றைய பட உலகில், கதை உலகில் யேன் நிஜ உலகிலும் காட்சிப்படுத்துவத்தைக் காணலாம்.
அதனை யதார்த்தத்தை மீறிய ஒன்றாக... நடந்திருந்தால் நன்றாக இருக்குமே என்பதாய் நடத்திக்காட்டுதல் இங்கே கச்சிதமாய் கதைக்குள் கதை புகுத்தி அதில் கரு உருவெடுத்து உயிர் பெற்றிருக்கிறது.
வாழ்த்துக்கள் எழுத்தாளரே.
நான் கூட கதை இடையே படித்து முடித்து அலைபேசியை விட்டு தலை திருப்பி என் அருகே பார்க்கவும் அஞ்சிய நொடி கதை அங்கே உச்சத்தைத்தொட்டதாய்...
பௌர்ணமி இரவில் காதல் உள்ளங்களின் காதல் வெளிப்பாடு காதலாய் கச்சிதமாய் ...
காதல் இழந்ததால் பயங்கரமே அங்கு அதிரூபமாய்...
அன்புடன், இமையி
'அவள் பௌர்ணமி '
"பேசிட முடியா பாவையவள்...
முழு நிலவாய் இருள் வானுக்கு ஒளி தந்தவள்...
உயிர் பறித்த உயிரைக் குடித்து தீர்த்துக்கொள்ள வருகிறாள்...
மெல்லிதழ் காற்றில்...
சலசலக்கும் நீரருவியின் ஓசை தூரமே கேட்டிட...
கூடவே தூரமே ஓடும் ரயில் வண்டிச்சத்தம்...
இருள் சூழ்ந்த நேரம் நிலவொளி வீச...
பூவாசம் படர்ந்த சோலை நடுவே மெல்ல நடைப் பயில்கிறாள் வஞ்சக்காரி...
திடீரென பூட்டித்திறக்கும் கதவுகள் திரைச் சீலைக் காற்றில் ஆடியே தீப்பிடித்தெரியும் விந்தை இங்கும் கண்டிடலாம்...
யாரும் உருட்டாத பொருளும் கீழே விழுந்து உருண்டு பிரலுமாம் ...
காற்றோடு உருவங்கள் மாறியே தீயின் தகிப்பை அங்கே தந்திடுமாம்...
பௌர்ணமி நிலவாய் ஒளிவீசியவள் ஒளிகொண்டு உயிர்பறித்து ஜனிக்கிறாள்...
நிஜம் அங்கே நிழலாய் 'நிழல் காதலன்' என காட்சி சாட்சியாய் …"
சலசலக்கும் நீரருவியின் ஓசை தூரமே கேட்டிட...
கூடவே தூரமே ஓடும் ரயில் வண்டிச்சத்தம்...
இருள் சூழ்ந்த நேரம் நிலவொளி வீச...
பூவாசம் படர்ந்த சோலை நடுவே மெல்ல நடைப் பயில ஆசைக் கொண்ட உள்ளங்களுக்கு ... பயணமாய் இங்கு
'அவள் பௌர்ணமி '
திடீரென பூட்டித்திறக்கும் கதவுகளும் திரைச் சீலைக் காற்றில் ஆடியே தீப்பிடித்தெரியும் விந்தை இங்கும் கண்டிடலாம்...
யாரும் உருட்டதா பொருளும் கீழே விழுந்து உருண்டு பிரலலாம் ...
காற்றோடு உருவங்கள் மாறியே தீயின் தகிப்பை அங்கே தந்திடுமாம்...
நம்மோடு நடமாடும் நம்மை யாரோ பார்ப்பதை உணர்ந்திட நுழைத்திடு அவள் மாளிகையில்...
கதைக்கொண்டு அங்கே கதை உருவாக்கப்பட 'நிழல் காதலன்' என நிஜம் அங்கே நிழலாய் காட்சி சாட்சியாய் ...
பேசிட முடியா பாவையவள் முழு நிலவாய் இருள் வானுக்கு ஒளி தந்தது போலவே நாயகன் இருளுக்கு முழு நிலவாய் நின்றே ஒளி பரப்புகிறாள்...
காதல் அங்கே மலர்ந்திட நிலவை சாட்சியாய்க் கொண்டே வளர் பிறையென வளர்ந்திட முழுநிலவில் இருவரும் காதல் தேவர்களாய் காட்சி தந்தே அதை தொடர்ந்து வரும் தேய் பிறைகளென மாறியே போயின...
அவர்கள் வாழ்வினில் உண்டான நிகழ்வு எதிர்பாராத மாற்றம் பௌர்ணமியை ஒளிரச் செய்ததா?
ஒளிர்ந்தே ஒளியை பறித்துக் கொண்டதா? பார்த்திட படிக்கலாம்
"அவள் பௌர்ணமி "
அருமை எழுத்தாளரே.
இவரின் புதிய முயற்சியானது கதைக் களத்தில் அவர் கதைகளில் நல் மாற்றத்தை கொண்டு சேர்த்திருக்கிறார்.
பேய்கள் பற்றி பேசிப்பயனில்லை...
பலர் இல்லையென்பார்கள், சிலர் பார்த்ததாய் கூட கூறுவார்கள், உலகின் சில இடங்கள், குறிப்புக்கள் கூறி அங்கே இருக்கிறது என்றுமே கூறுகின்றனர்.இறந்தவர்களைப்போலவே பலரும் பேசக்கூட செய்வார்கள்.
இவ்வாறிருக்க ஆழ்மனதின் வெளிப்பாடு நம் மனதை நம் கட்டுக்குள் வைத்து எது செய்யினும் அதில் பலன் காணலாம் என்பேன். பேயென்ன கடவுளாய்க் கூட மாறிட மறுக்கமாட்டான் மானிடன்.
கற்பனையாய் ஓர் உயிர் பிரிய,அவ்வுயிர் காரணமே இன்றி அர்த்தமற்று பிரிந்து, அதைக்கொண்டு திருப்தியடையாத ஆன்மாக்களுக்கும்,
தனக்கான உயிர் அநியாயமாய் பறித்தெடுக்கப்பட்டதன் பழியை தன் உயிர் பறித்த உயிரைக் குடித்து தீர்த்துக்கொள்ள வேண்டும் நினைக்கும் ஆன்மாக்களும் அலைந்து திரிவதாய்
இன்றைய பட உலகில், கதை உலகில் யேன் நிஜ உலகிலும் காட்சிப்படுத்துவத்தைக் காணலாம்.
அதனை யதார்த்தத்தை மீறிய ஒன்றாக... நடந்திருந்தால் நன்றாக இருக்குமே என்பதாய் நடத்திக்காட்டுதல் இங்கே கச்சிதமாய் கதைக்குள் கதை புகுத்தி அதில் கரு உருவெடுத்து உயிர் பெற்றிருக்கிறது.
வாழ்த்துக்கள் எழுத்தாளரே.
நான் கூட கதை இடையே படித்து முடித்து அலைபேசியை விட்டு தலை திருப்பி என் அருகே பார்க்கவும் அஞ்சிய நொடி கதை அங்கே உச்சத்தைத்தொட்டதாய்...
பௌர்ணமி இரவில் காதல் உள்ளங்களின் காதல் வெளிப்பாடு காதலாய் கச்சிதமாய் ...
காதல் இழந்ததால் பயங்கரமே அங்கு அதிரூபமாய்...
அன்புடன், இமையி
'அவள் பௌர்ணமி '
"பேசிட முடியா பாவையவள்...
முழு நிலவாய் இருள் வானுக்கு ஒளி தந்தவள்...
உயிர் பறித்த உயிரைக் குடித்து தீர்த்துக்கொள்ள வருகிறாள்...
மெல்லிதழ் காற்றில்...
சலசலக்கும் நீரருவியின் ஓசை தூரமே கேட்டிட...
கூடவே தூரமே ஓடும் ரயில் வண்டிச்சத்தம்...
இருள் சூழ்ந்த நேரம் நிலவொளி வீச...
பூவாசம் படர்ந்த சோலை நடுவே மெல்ல நடைப் பயில்கிறாள் வஞ்சக்காரி...
திடீரென பூட்டித்திறக்கும் கதவுகள் திரைச் சீலைக் காற்றில் ஆடியே தீப்பிடித்தெரியும் விந்தை இங்கும் கண்டிடலாம்...
யாரும் உருட்டாத பொருளும் கீழே விழுந்து உருண்டு பிரலுமாம் ...
காற்றோடு உருவங்கள் மாறியே தீயின் தகிப்பை அங்கே தந்திடுமாம்...
பௌர்ணமி நிலவாய் ஒளிவீசியவள் ஒளிகொண்டு உயிர்பறித்து ஜனிக்கிறாள்...
நிஜம் அங்கே நிழலாய் 'நிழல் காதலன்' என காட்சி சாட்சியாய் …"