என் இமைக்குள்.
"நீயில்லை நிஜமில்லை"
ஆம்பத்தில் கதையின் தலைப்பை வாசிக்கவும், 'தன் காதல் கிடைக்காவிடில் தனக்கு ஏது வாழ்க்கை' என்றுதான் என்னுள் தோன்றியது.ஆனால் கதை முடிவில்,
நீயில்லையெனில் நிஜமில்லை என்பது,'நீ இல்லை எனில் தனக்கு நிகழ்காலம் இல்லை' என்பதாய் எனக்கு பொருள் தந்தது.
எதிர்காலம் என்பது இனி தான் வாழும் வாழ்வைக்கொண்டு மாற்றமடையலாம்… என்பதாக எழுத்தாளர் கதையின் கருவுக்கு எதிர்காலத்தை ஆரம்பித்து அதை கதைக்கு முற்றாக இட்டுள்ளார்.
வாசகன் விருப்பப்படி முடிவை அமைத்துக்கொள்ளட்டும் என்பது அவர் நோக்கம் போலும்.
வளர்ப்பு மகனாக கதாநாயகன்.முழு செல்வ செழிப்போடு வளர்ந்து,அன்னை தந்தையின் அன்பை முழுதாய் பெற்று வளர்ந்த அன்பான,மென்மையான ஆண்மகன்.
தந்தையின் உற்ற தோழனின் மகள் தனக்கும் உயிர் தோழியாய்...
அவனுக்கு உயிர் தோழியாய்
ஆனால் அவளுக்கு அவன் உயிரிலும் மேலானவனாய்.
வெளிநாட்டு வாழ்வை விரும்பி சென்று வாழும் நாயகன்,தந்தையின் திடீர் மரணம்.அவரது தொழில் முழுமையாய் தன் நண்பனிடம் நஷ்டத்தின் பெயரில் விற்கப்படுகிறது.தன் தந்தை ஆசையாய் தொழிலை நடத்தக் கேட்டு மகன் மறுத்தும் அதை இயல்பாகவே ஏற்ற தந்தையின் அவசர முடிவு,இறப்பு அவனை மீண்டும் தாய் நாடு திரும்ப வைக்க,தன் கம்பனியிலேயே வேலை செய்யும் நிலை,தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காய்.
அன்னை தந்தையின் உயிரிழப்பு தாங்காதவன்,தன்னை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு தாங்கமுடியாது மனதால் மிக மென்மையானவன்.அம் மென்மையை அழகாய் கையாளதெரிந்தவள் அவன் உற்ற தோழியே.அவளே அவன் தோள் சாய, அவனை திடப்படுத்த துணையாய்.
இருந்தும் அவன் காதல் கொண்டது என்னவோ வேறொருத்தியிடம்.மனம் சிதைந்த உயிர் தோழி தான் கொண்ட காதலை வெளிப்படுத்தாமை அவள் காதலுக்கு அநியாயம் சேர்த்துவிட்டது.தான் கொண்ட நேசம் போல அவனுமே தன்னிடம் கொண்டிருப்பான்,அவனே அதை வெளிப்படுத்தட்டும்,கேட்டு வாங்குவதில்லையே காதல்,அவனின் காதலுக்காக இவள் காத்திருக்க நாயகனோ அவன் காதலை வேறொருத்திக்கு கொடுத்துவிட்டான்.
காதலினால் உயிரானவன் காதலை கழைக்க முயல்கிறாள்,இருந்தும் பின்னே அவன் மனம் அறிந்து தன்னைத்தானே முடியாத போதும் தேற்றிக்கொள்கிறாள். ஆனால் அவளை நாயகனின் காதல் பெண்ணோ நம்ப மறுக்கிறாள்.
நாயகனின் காதலியானவள் தானும் தன் தம்பியுமாய் வாழ்ந்து வர அன்புக்கு ஏங்கியவளாய், தனக்குமட்டுமே மொத்த அன்பும், அக்கறையும் கிடைக்க வேண்டும், என நினைது தன் மீது காதல் கொள்பவனை இவளும் தன் உடலில் பச்சைக்குத்தும் அளவுக்கு காதல் செய்கிறாள்.
காதலிக்கும் உற்ற தோழிக்கும் நடுவே பிரச்சினைகளும் ஏற்பட அதோடு அவர்களிடையே அல்லாடும் நாயகன் பாவம்தான்.
காதல் கொண்டவள் மீது அளவற்ற காதல் செய்கிறான்,அதே வேளை உற்ற தோழியின் மேல் உள்ள உறவு தோழமைக்கும் மேல் அதற்கான பெயர் நானறிய அவனே அறியா நிலைதான்.
தோழிக்கு மூன்று முறை நடத்தப்படும் கொலை முயற்சி,நாயகன் அருகே இருக்க அவை ஏதோ ஓர் வகையில் தோல்வியை தழுவுகிறது.அவளை மட்டுமே குறி வைக்கப்பட காரணம் அதை தேடி அவனும் காவலர்களுடன் தேட அதுவோ கதைக்கு இன்னும் மெருகூட்டியது.
கொலைக்கு காரணம் யார்? குற்றவாளி எங்கோ இருக்க எவரையோ கொண்டு பழி தீர்த்துக்கொள்ள நினைக்கும் கொலையாளியைக் கண்டு கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் தன் காதலை ஒரு துருப்பாக கொண்டாலும் காதல் கொண்டவளை வெறுக்க முடியாது,அவளை தேற்ற பக்குவமும் இல்லாத நாயகன் அவளையும் மீட்டு தன் தோழியையும் காக்க துடிக்கிறான்.
இருந்தும் காதல் பெண்ணோ சுயம் அறியாது தன் வாழ்வில் கண்கொண்டு பார்த்த நிஜங்களும்,தான் வாழ்ந்த வாழ்வையும் கொண்டு தன் குடும்பத்திற்காய் பழி தீர்த்துக்கொண்டாள் இறுதியில் தன்னைத்தானே.
நஷ்டம் என்னவோ அவளுக்கு மட்டுமா? காதலித்தவனுக்கு,தன்னையே சுற்றி வந்த தன் தம்பிக்கு,தன் காதலனை உயிராய் நினைத்து மறுகும் பெண்ணுக்கு.
நாயகன்,மீண்டுமாய் ஓரிழப்பை தாங்க தவிக்க தோழியை நாட மறுக்கிறான். அவனுக்கு தன் காதல் பெண்ணின் சகோதரன் துணையாக,அவனுக்கு இவன் காவலனாக மாறிப்போயினர்.
உற்ற தோழியின் நிலை?
கொலை முயற்சி யாருக்காக?
நாயகனின் காதலியோடு சம்பந்தப்பட அரண்மனை வரலாறு,மூன்றாம் தலைமுறை பழிவாங்கல்,
(இது சற்று கதையோடு இன்னும் கொஞ்சம் அதிகமாய் பயணித்திருக்கலாம்.)
அது எங்கனம் அவன் தோழியை பாதித்தது…
கதையை தொடருங்கள் உங்களுக்கான பதில்.
கதையோ, இறுதியில் அவசரமாக முடிந்தது போன்ற உணர்வு… அதைத்தான் அவருமே விரும்பினார் போலும்.
வாழ்த்துக்கள் யுவகார்த்திகா…
உங்கள் படைப்புகள் இன்னுமாய் நம்மை வந்து சேரட்டும்.
அன்புடன், இமையி.
"நீயில்லை நிஜமில்லை"
ஆம்பத்தில் கதையின் தலைப்பை வாசிக்கவும், 'தன் காதல் கிடைக்காவிடில் தனக்கு ஏது வாழ்க்கை' என்றுதான் என்னுள் தோன்றியது.ஆனால் கதை முடிவில்,
நீயில்லையெனில் நிஜமில்லை என்பது,'நீ இல்லை எனில் தனக்கு நிகழ்காலம் இல்லை' என்பதாய் எனக்கு பொருள் தந்தது.
எதிர்காலம் என்பது இனி தான் வாழும் வாழ்வைக்கொண்டு மாற்றமடையலாம்… என்பதாக எழுத்தாளர் கதையின் கருவுக்கு எதிர்காலத்தை ஆரம்பித்து அதை கதைக்கு முற்றாக இட்டுள்ளார்.
வாசகன் விருப்பப்படி முடிவை அமைத்துக்கொள்ளட்டும் என்பது அவர் நோக்கம் போலும்.
வளர்ப்பு மகனாக கதாநாயகன்.முழு செல்வ செழிப்போடு வளர்ந்து,அன்னை தந்தையின் அன்பை முழுதாய் பெற்று வளர்ந்த அன்பான,மென்மையான ஆண்மகன்.
தந்தையின் உற்ற தோழனின் மகள் தனக்கும் உயிர் தோழியாய்...
அவனுக்கு உயிர் தோழியாய்
ஆனால் அவளுக்கு அவன் உயிரிலும் மேலானவனாய்.
வெளிநாட்டு வாழ்வை விரும்பி சென்று வாழும் நாயகன்,தந்தையின் திடீர் மரணம்.அவரது தொழில் முழுமையாய் தன் நண்பனிடம் நஷ்டத்தின் பெயரில் விற்கப்படுகிறது.தன் தந்தை ஆசையாய் தொழிலை நடத்தக் கேட்டு மகன் மறுத்தும் அதை இயல்பாகவே ஏற்ற தந்தையின் அவசர முடிவு,இறப்பு அவனை மீண்டும் தாய் நாடு திரும்ப வைக்க,தன் கம்பனியிலேயே வேலை செய்யும் நிலை,தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காய்.
அன்னை தந்தையின் உயிரிழப்பு தாங்காதவன்,தன்னை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு தாங்கமுடியாது மனதால் மிக மென்மையானவன்.அம் மென்மையை அழகாய் கையாளதெரிந்தவள் அவன் உற்ற தோழியே.அவளே அவன் தோள் சாய, அவனை திடப்படுத்த துணையாய்.
இருந்தும் அவன் காதல் கொண்டது என்னவோ வேறொருத்தியிடம்.மனம் சிதைந்த உயிர் தோழி தான் கொண்ட காதலை வெளிப்படுத்தாமை அவள் காதலுக்கு அநியாயம் சேர்த்துவிட்டது.தான் கொண்ட நேசம் போல அவனுமே தன்னிடம் கொண்டிருப்பான்,அவனே அதை வெளிப்படுத்தட்டும்,கேட்டு வாங்குவதில்லையே காதல்,அவனின் காதலுக்காக இவள் காத்திருக்க நாயகனோ அவன் காதலை வேறொருத்திக்கு கொடுத்துவிட்டான்.
காதலினால் உயிரானவன் காதலை கழைக்க முயல்கிறாள்,இருந்தும் பின்னே அவன் மனம் அறிந்து தன்னைத்தானே முடியாத போதும் தேற்றிக்கொள்கிறாள். ஆனால் அவளை நாயகனின் காதல் பெண்ணோ நம்ப மறுக்கிறாள்.
நாயகனின் காதலியானவள் தானும் தன் தம்பியுமாய் வாழ்ந்து வர அன்புக்கு ஏங்கியவளாய், தனக்குமட்டுமே மொத்த அன்பும், அக்கறையும் கிடைக்க வேண்டும், என நினைது தன் மீது காதல் கொள்பவனை இவளும் தன் உடலில் பச்சைக்குத்தும் அளவுக்கு காதல் செய்கிறாள்.
காதலிக்கும் உற்ற தோழிக்கும் நடுவே பிரச்சினைகளும் ஏற்பட அதோடு அவர்களிடையே அல்லாடும் நாயகன் பாவம்தான்.
காதல் கொண்டவள் மீது அளவற்ற காதல் செய்கிறான்,அதே வேளை உற்ற தோழியின் மேல் உள்ள உறவு தோழமைக்கும் மேல் அதற்கான பெயர் நானறிய அவனே அறியா நிலைதான்.
தோழிக்கு மூன்று முறை நடத்தப்படும் கொலை முயற்சி,நாயகன் அருகே இருக்க அவை ஏதோ ஓர் வகையில் தோல்வியை தழுவுகிறது.அவளை மட்டுமே குறி வைக்கப்பட காரணம் அதை தேடி அவனும் காவலர்களுடன் தேட அதுவோ கதைக்கு இன்னும் மெருகூட்டியது.
கொலைக்கு காரணம் யார்? குற்றவாளி எங்கோ இருக்க எவரையோ கொண்டு பழி தீர்த்துக்கொள்ள நினைக்கும் கொலையாளியைக் கண்டு கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் தன் காதலை ஒரு துருப்பாக கொண்டாலும் காதல் கொண்டவளை வெறுக்க முடியாது,அவளை தேற்ற பக்குவமும் இல்லாத நாயகன் அவளையும் மீட்டு தன் தோழியையும் காக்க துடிக்கிறான்.
இருந்தும் காதல் பெண்ணோ சுயம் அறியாது தன் வாழ்வில் கண்கொண்டு பார்த்த நிஜங்களும்,தான் வாழ்ந்த வாழ்வையும் கொண்டு தன் குடும்பத்திற்காய் பழி தீர்த்துக்கொண்டாள் இறுதியில் தன்னைத்தானே.
நஷ்டம் என்னவோ அவளுக்கு மட்டுமா? காதலித்தவனுக்கு,தன்னையே சுற்றி வந்த தன் தம்பிக்கு,தன் காதலனை உயிராய் நினைத்து மறுகும் பெண்ணுக்கு.
நாயகன்,மீண்டுமாய் ஓரிழப்பை தாங்க தவிக்க தோழியை நாட மறுக்கிறான். அவனுக்கு தன் காதல் பெண்ணின் சகோதரன் துணையாக,அவனுக்கு இவன் காவலனாக மாறிப்போயினர்.
உற்ற தோழியின் நிலை?
கொலை முயற்சி யாருக்காக?
நாயகனின் காதலியோடு சம்பந்தப்பட அரண்மனை வரலாறு,மூன்றாம் தலைமுறை பழிவாங்கல்,
(இது சற்று கதையோடு இன்னும் கொஞ்சம் அதிகமாய் பயணித்திருக்கலாம்.)
அது எங்கனம் அவன் தோழியை பாதித்தது…
கதையை தொடருங்கள் உங்களுக்கான பதில்.
கதையோ, இறுதியில் அவசரமாக முடிந்தது போன்ற உணர்வு… அதைத்தான் அவருமே விரும்பினார் போலும்.
வாழ்த்துக்கள் யுவகார்த்திகா…
உங்கள் படைப்புகள் இன்னுமாய் நம்மை வந்து சேரட்டும்.
அன்புடன், இமையி.