மடல்களை இதழ் கொண்ட வார்த்தைகளால் வருடி சமரசம் பேசுகிறான்....
கோபத்தால் சிவந்த முகத்தினை வெட்கத்தால் சிவக்க வைத்து விட்டான்...
ஜாலக்காரன் என நினைத்தவன் ஓவியக்காரனாகி போனான்
பல வண்ணங்கள் பூசிய என் அகத்திரையின் வெட்கத்தால்...
என் காதலெனும் ரசனைக்காரன்...
**
இறுக்கமாய் பிடித்திருக்கும் வன்மைக்குள்
இத்தனை மென்மையா..?
கைகளின் ரோமங்கள் தொட்டு உரசிட
சிலிர்த்து போகிறது என் மேனி..
மூச்சு காற்று மோதிடும் தொலைவில்
இமைகள் இரண்டும் படபடத்திடும் நிலையில்
இதழ் தீண்டாமல் மூர்ச்சையாக்குகிறான் அவன்..
அகச்சிறையில் ஒழித்து கைச்சிறையில் அடைக்கிறான் என் மனக் காவல் காரன்…
கோபத்தால் சிவந்த முகத்தினை வெட்கத்தால் சிவக்க வைத்து விட்டான்...
ஜாலக்காரன் என நினைத்தவன் ஓவியக்காரனாகி போனான்
பல வண்ணங்கள் பூசிய என் அகத்திரையின் வெட்கத்தால்...
என் காதலெனும் ரசனைக்காரன்...
**
இறுக்கமாய் பிடித்திருக்கும் வன்மைக்குள்
இத்தனை மென்மையா..?
கைகளின் ரோமங்கள் தொட்டு உரசிட
சிலிர்த்து போகிறது என் மேனி..
மூச்சு காற்று மோதிடும் தொலைவில்
இமைகள் இரண்டும் படபடத்திடும் நிலையில்
இதழ் தீண்டாமல் மூர்ச்சையாக்குகிறான் அவன்..
அகச்சிறையில் ஒழித்து கைச்சிறையில் அடைக்கிறான் என் மனக் காவல் காரன்…