• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் காதல் அரசன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
மடல்களை இதழ் கொண்ட வார்த்தைகளால் வருடி சமரசம் பேசுகிறான்....
கோபத்தால் சிவந்த முகத்தினை வெட்கத்தால் சிவக்க வைத்து விட்டான்...
ஜாலக்காரன் என நினைத்தவன் ஓவியக்காரனாகி போனான்
பல வண்ணங்கள் பூசிய என் அகத்திரையின் வெட்கத்தால்...

என் காதலெனும் ரசனைக்காரன்...



**

இறுக்கமாய் பிடித்திருக்கும் வன்மைக்குள்
இத்தனை மென்மையா..?
கைகளின் ரோமங்கள் தொட்டு உரசிட
சிலிர்த்து போகிறது என் மேனி..
மூச்சு காற்று மோதிடும் தொலைவில்
இமைகள் இரண்டும் படபடத்திடும் நிலையில்
இதழ் தீண்டாமல் மூர்ச்சையாக்குகிறான் அவன்..

அகச்சிறையில் ஒழித்து கைச்சிறையில் அடைக்கிறான் என் மனக் காவல் காரன்…
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
காதல் அரசன் அழகாக இருக்கிறான் கற்பனையில்
நிஜத்திலோ கானல் நீராக இருக்கிறான்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"வன்மைக்குள் இத்தனை
மென்மையா...?
"அகச்சிறையில் ஒழித்து
கைச்சிறையில் அடைக்கிறான்
என் மனக் காவல் காரன்"

அருமையான வரிகள்,
அருமையான கவிதை,
ஆதிரா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top