• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் பார்வையில் இனிய தென்றலே.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
ஸ்ரீ நவீயின் இனிய தென்றலே.
மனச்சிக்கலில்தவிக்கும் ஒரு ஆணின் கதை.
அன்னபூரணி பாட்டியும் பேத்தி வைஷாலியும் ஒருவருக்கொருவர் துணையாய் வாழ்கின்றனர்.பேத்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து அஷோக்கை தேர்ந்தெடுக்கிறார்.அவனோ பெண் பார்த்துவிட்டு முடிவு சொல்வதற்குள் கல்யாணத்தில் விருப்பமில்லையென வைஷாலி சொல்ல அவனும் தனக்கும் விருப்பமில்லை என சொல்கிறான்!
ஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளில் அவன் பெண்களுடன் சுற்றுவதை அவள் பார்க்கிறாள்.இவளின் தோழிகளும் இவளை உசுப்பிவிட இருவரின் சந்திப்பில் அஷோக் தன் வார்த்தைகளில் அவளின் வெறுப்பிற்கு ஆளாகிறான்!தெளிவாக பேசவும் தெரியாமல் அவனும் ,முதிர்ச்சியில்லாமல் அவளுமாய் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ள இருவருக்கும் திருமணமும் நடக்கிறது!அவன் சொதப்பும் செயல்களில் நமக்கே கடுப்பாகுது!அவனின் பிரச்சினை தெரிய வரும்போது அட பாவமேன்னு இருக்கு.முதலில் அவனை ஹேண்டில் பண்ண தெரியாமல் முழித்தாலும் பின் அவனை சமாளிக்கும் வைஷாலி அருமை.அஷோக்கின்பிரச்சினைகள் அவனை எந்த அளவுக்கு கொண்டு போயி வைக்குதுன்னு படிக்கும்போதே பாவமா இருக்கு.
வெளிப்பார்வைக்கு பெண்களுடன் திரிபவன் என பேரை கெடுத்துகிட்டு மன அழுத்தத்துடன் வாழ்கிறான்.மருத்துவரிடம் ஆலொசனை கேட்டு சரிப்படுத்துவது சிறப்பு.அந்த விபரங்கள் நல்லா இருக்கு .நல்ல ஒரு உளவியல் கதை.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,972
Location
madurai
மிகவும் நன்றி அக்கா?? உங்க விமர்சனம் என் கதைக்கு இன்னுமொரு சிறப்பு. நிறைய உற்சாகம் கொடுக்குது. Thank-you very much ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top