selvipandiyan
மண்டலாதிபதி
ஶ்ரீ நவீயின் சரணாலயம்.
ஒரு அழகான குடும்பத்தை காட்டுவதிலிருந்து கதைதொடங்குகிறது.சரண்யா சசிசேகரன் தம்பதியின் அழகான வாழ்க்கை.தலை கீழாக கதை ஆரம்பிப்பதே சுவாரஸ்யம்!
கதையும் பழைய நினைவுகளை மீட்டுகிறது.
வாத்தியாராக இருந்தாலும் சிவபூஷணம் பிள்ளைகளின் வளர்ப்பில் தவறி விடுகிறார்.ஆண் பிள்ளைகளின் அட்டகாசம் ,சரண்யாவின் வாழ்க்கையில் அண்ணன்களின் அடக்குமுறை,அவளின் பிடிவாதம்,தனக்கு வேண்டியதை தானே கேட்டு பெற போராடுவது என சிக்கலான குடும்ப சூழலில் ,சசிசேகரனின் குடும்பம் இவர்களிடம் வேலை செய்வதிலிருந்து துளசியிடம் வெற்றிவேல் அத்துமீறுவதும் சரண்யாவின் காதலும் என குடும்பங்களில் பிளவு ஏற்பட சசிசேகரன் தங்கையுடன் தனித்து கமலாலயா லட்சுமி இவர்களின் ஆதரவில் தன் படிப்பையும் முடித்து பொறுப்புடன் கடமைகளை நிறைவேற்றி சரண்யாவை கரம் பிடிக்கிறான்.
ஊரே வேண்டாம் என இவர்கள் மும்பையில் செட்டில் ஆக அண்ணன்களின் அழைப்பில் தந்தையை பற்றி அவர்கள் சொல்லும் அவதூறில் ஊருக்கு வருகிறார்கள்.
அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.எந்த வயதிலிருந்தாலும் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருந்தாலோ உதவிகள் செய்தாலோ வரும் அவதூறுகள் குறைவதே இல்லை.கிராமமா இருந்தாலும் நகரமா இருந்தாலும் மக்கள் ஒன்றுதான்!சோட்டுவை யாருக்குதான் பிடிக்காது!அவன் கேள்விகளும் குறும்புகளும் அழகு! சரணாலயம் பண்ணைக்காடுகள் அதன் மற்றைய கிளைகள் மனதை கொள்ளையிடுகிறது.எனக்கு கதையில் பிடித்தது கமலாலயா பாத்திரம் தான்!என்ன ஒரு ஆளுமையான் பெண்.
ஒரு அழகான குடும்பத்தை காட்டுவதிலிருந்து கதைதொடங்குகிறது.சரண்யா சசிசேகரன் தம்பதியின் அழகான வாழ்க்கை.தலை கீழாக கதை ஆரம்பிப்பதே சுவாரஸ்யம்!
கதையும் பழைய நினைவுகளை மீட்டுகிறது.
வாத்தியாராக இருந்தாலும் சிவபூஷணம் பிள்ளைகளின் வளர்ப்பில் தவறி விடுகிறார்.ஆண் பிள்ளைகளின் அட்டகாசம் ,சரண்யாவின் வாழ்க்கையில் அண்ணன்களின் அடக்குமுறை,அவளின் பிடிவாதம்,தனக்கு வேண்டியதை தானே கேட்டு பெற போராடுவது என சிக்கலான குடும்ப சூழலில் ,சசிசேகரனின் குடும்பம் இவர்களிடம் வேலை செய்வதிலிருந்து துளசியிடம் வெற்றிவேல் அத்துமீறுவதும் சரண்யாவின் காதலும் என குடும்பங்களில் பிளவு ஏற்பட சசிசேகரன் தங்கையுடன் தனித்து கமலாலயா லட்சுமி இவர்களின் ஆதரவில் தன் படிப்பையும் முடித்து பொறுப்புடன் கடமைகளை நிறைவேற்றி சரண்யாவை கரம் பிடிக்கிறான்.
ஊரே வேண்டாம் என இவர்கள் மும்பையில் செட்டில் ஆக அண்ணன்களின் அழைப்பில் தந்தையை பற்றி அவர்கள் சொல்லும் அவதூறில் ஊருக்கு வருகிறார்கள்.
அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.எந்த வயதிலிருந்தாலும் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருந்தாலோ உதவிகள் செய்தாலோ வரும் அவதூறுகள் குறைவதே இல்லை.கிராமமா இருந்தாலும் நகரமா இருந்தாலும் மக்கள் ஒன்றுதான்!சோட்டுவை யாருக்குதான் பிடிக்காது!அவன் கேள்விகளும் குறும்புகளும் அழகு! சரணாலயம் பண்ணைக்காடுகள் அதன் மற்றைய கிளைகள் மனதை கொள்ளையிடுகிறது.எனக்கு கதையில் பிடித்தது கமலாலயா பாத்திரம் தான்!என்ன ஒரு ஆளுமையான் பெண்.