12
நெல்லைக்கு வர வர கஜாவின் ஆட்கள் அவனுக்கு கற்பகத்தைப் பற்றி துளசியைப் ற்றி ஏன் தாமரை செல்வனைப் பற்றி கூட சொல்லி இருந்தார்கள்.
அப்போதே லேசு பாசாக துளசியைப் பற்றி விசாரித்து வைத்தான். வயசுப் பொண்ணா? எதுக்கும் ‘சீட்டாட்ட ஜோக்கரா வச்சிக்கலாம்’ என்று நினைத்து வைத்திருந்தான்.
இப்போது அவளைப் பார்க்கவும் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான். வேம்புவை பார்த்து தன் விருப்பம் சொன்னதில் இருந்து அவனுடன் இருந்தது அந்த தாலி. ஒன்று வேம்பு அல்லது திருமலை இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் போடுவது என்று வந்தவன் இப்போதும் சட்டைப்பையில் வைத்திருந்தான்.
அது அவனது தோல்வியின் சின்னம். அவன் வெற்றி பெற்ற பிறகு அதனை தலையை சுற்றி எறிந்து விடலாம் என்று வைத்திருந்தவன் இப்போது தன் வாழ்க்கையில் வழுக்கி விழுந்தான்.
இந்த திருமணம் அவன் வாழ்வை புரட்டிப் போடப் போகிறது என்று தெரியாமல் செய்து விட்டான் பாவம். அவனும் குடும்பம் பிள்ளை குட்டிகள் என்று வாழ கொடுத்து வைத்திருப்பது அந்தத் திருமணத்தால் என்பதை அப்போது மட்டுமல்ல இப்போதும் உணரவில்லை அவன்
இதுவரை யாரையும் மதிக்காத வாழ்க்கை. எதையும் பொருட்படுத்தா வாழ்க்கை. அவன் நினைத்ததை மட்டும் செய்யும் வாழ்க்கை.
தன் அக்கா கணவரிடம் மட்டும் பொண்ணைக் கொடுத்த காரணத்தால் சிறிது விலக்கம் உண்டு. அதுவும் அவனது அப்பா ‘பொண்ணை குடுத்த இடத்துல பார்த்து பதனமா பேசனும்ப்பா’ என்று தலை தலையாக அடித்துக் கொள்வதால்தான். போனால் போகிறதென்று அடக்கி வாசிப்பான்.
------------------------------------------------
தாலியை கட்டிவிட்டு நிமிர்ந்தான் கஜா. துளசியை தன் பிடியில் இருந்து மெல்ல விடுவித்தான். தாலி கட்டி முடித்துவிட்டு கண்களை நிமிர்த்திய போது துளசியின் அழுது சிவந்த குழந்தை முகம் அவன் கண்களில் மட்டும் இல்லாமல் கருத்திலும் பட்டு இம்சித்தது.
கஜாவா? கொக்கா? ‘விட்டுத்தள்ளு விட்டுத்தள்ளு’ என்று அப்போதைக்கு ஒதுக்கினான். அவனுக்கு பைசல் பண்ண வேண்டிய பாக்கி நிறைய இருக்கிறதே? அதை முதலில் முடிக்கலாம். அப்புறம் பார்க்கலாம்.
உடல்வலியும் மன வலியுமாய்த் தவித்தாள் துளசி. வேதனை தாங்க முடியாமல் அவளது வாய் மூச்சுக் காற்றுக்காத் திறந்து திறந்து மூடியது. என்ன நடந்தது என்று ஒரு வழியாக உணர்வு வந்தபோது அவளது கழுத்தில் தங்கத்தாலி இருப்பதைக் கண்டாள்.
“ஐயோ இது எனக்கு வேண்டாம்” என்று அதை கழற்ற முயன்ற அவளை கையைப் பிடித்துத் தடுத்தான் கஜா. “இதைக் கழற்றினா உனக்கு வேற பேர்; கழற்றாம உன் வீட்டுலேயே இருந்தா அதுக்கு ஒரு பேர். ஆனா இதோட இந்த கஜா கூட வந்திட்டன்னா உனக்கு நல்ல பேரு” என்றான் மிரட்டலாக.
இவன்தான் கஜாவா? இவனைப் பற்றி அரசல் புரவலாக அவள் கேள்விப்பட்டதில் தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஏதோ கெடுதல் செய்தவன் என்பது வரை அவளுக்குத் தெரிந்திருந்தது. ஐயய்யோ…இவன் என்ன காரியம் செய்துவிட்டான்? அவள் இனி என்னாவாள்?
“எந்த நொல்ல பேரா இருந்தாலும் பரவாயில்ல. நான் உன்கூட வரவே மாட்டேன்” என்று திமிறினாள் துளசி.
கஜாவின் குணம் ஓரளவு தெரியம் ஆதலால் துளசியின் எதிர்காலம் என்னாகுமோ என்று பயந்தனர் திருமலையும் சண்முகமும். எதுவும் செய்ய முடியாமல் அவர்களை தடுத்த அந்த அடியாட்களைப் போட்டு புரட்டி எடுத்தனர். சிறிதுநேரம் அந்த இடம் ரணகளமாக இருந்தது. கஜா எதிலும் பட்டுக் கொள்ளவில்லை. இவர்கள் அடிப்பதையும் அவர்கள் அடிவாங்குவதையும் பார்த்துக் கொண்டு நின்றான்.
அன்று ஏதோ கோவிலில் விஷேஷம் என்பதால் பெரும்பாலான அண்டை வீட்டார் கோவிலுக்குச் சென்று இருந்தனர். இவர்கள் கோவிலுக்கு முதல் நாளே போய்விட்டு வந்தபடியினால் இன்று வேறு சினிமா செல்வதாக இருந்தனர். வீட்டில் இருந்தது வயசான பெரியவர்களும் அவர்கள் கண்காணிப்பில் இருந்த குழந்தைகளும். ஒரு சில வீடுகளில் வயதுப் பெண்கள் இருந்தனர். எனவே யாரும் வெளியே வரவில்லை. அவர்களுக்குத் தெரியவில்லை.
இந்த சத்ததில் ஒருசில வயதான தலைகள் எட்டிப்ப பார்த்தன. ஆனால் பயத்தில் ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு
.
இந்த அடியாட்களை அடித்து என்ன புண்ணியம்? எலும்புத் துண்டுக்கு வந்தவர்கள் அவர்கள் . அவர்கள் கஜாவிடம் வேலை பார்ப்பவர்கள் . சண்முகத்தைப் பற்றி தெரியும் என்றாலும் சம்பளம் கொடுக்கும் முதலாளியை விட வேறெதுவும் அவர்களுக்குப் பெரிதாகப் படவில்லை.
‘இப்படிபட்ட பொறுக்கியா இந்த அழகுத் தேவதைக்கு கணவனாக வரவேண்டும் ‘ என்று நினைத்த வேம்புவும் கமலாம்மாவும்; விக்கித்து நின்றனர்.
பெற்ற தாய் கற்பகமோ நிலை குலைந்து சரிந்து அமர்ந்து விட்டார். ஏதோ விபரீதம் என்று அவரை ஒண்டிய தாமரை செல்வன் தன் தாயின் முகத்தில் தன் பிஞ்சுக் கரங்களால் தட்டி எழுப்பினான்.
நிலமையின் தீவிரத்தை உணர்ந்த சண்முகம் செய்வதறியாது திகைத்தான்; . அவன் ஆனந்திக்காக பார்ப்பானா? துளசிக்காக பார்ப்பானா? மண வாழ்விழந்து தம் மக்களுக்காக மட்டும் வாழும் மற்ற இரு பெண்களுக்காக பார்ப்பானா?
திருமலை ஏதாவது முடிவு செய்வானா? என்று அவனைப் பார்த்தால் அவனும் கை கால் மரத்த நிலையில் நின்று கொண்டிருந்தான்.
பொறுப்பை தானாக தன் கையில் எடுத்துக் கொண்ட கஜா ,
தான் தாலி கட்டிய துளசியை யார் அனுமதியும் பெறாமல் தனது காரில் ஏற்றப் போனான்ய.
“இதப்பாரு கஜா. அவளுக்கு பதினெட்டு வயசு இன்னும் ஆகலை. அதுக்குள்ள நீ தாலி கட்னது சட்டப்படி தப்பு. “ என்று ஆரம்பித்தார் சண்முகம்.
“அப்படின்னா என்ன பண்ணுவிங்க? அவளுக்கு பதினெட்டு வயசு ஆகிற வரை ஹோம்ல வச்சிருப்பாங்க. என்னை போலிஸ்ல புடிசசுக் குடுப்பிங்க. அவ்வளவுதானே? குடுங்க குடுங்க. நான் எப்படி வெளிய வரணும்னு எனக்குத் தெரியும். ஆனா உங்க பொண்ணு பேரு நாறிப் போயிடும்” என்று முக்கியமான வாhத்தையைக் கூறி அனைவர் வாயையும் அடைத்தான்.
எப்படியோ உணர்விற்கு வந்த கற்பகம் உடனே “ என் கண்ணே” என்று அவளை பார்த்து ஓடி வந்தார்
துளசியும் ஓடிப்போய் தன் தாயை கட்டிக் கொண்டாள். தாமரை செல்வனை கீழே இறக்கி விட்டிருந்தார் அவர். அவன் ஒரு திண்ணையைப் பிடித்துக் கொண்டு நின்று இவர்களை பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இப்போது அனைவரின் குற்றம் சாட்டும் பார்வையும் தன் மீது தான் என்பதாக உணர்ந்தாள் ஆனந்தி. இந்த கஜா அவளை இப்படி தலை குனிய வைத்து விட்டானே? அந்த சிறு பெண்ணிற்கு அவளால் எத்தகைய துன்பம் வந்து விட்டது?
“கஜா…” என்று கர்ஜித்தாள் ஆனந்தி. அதை தூசு போல தட்டிவிட்டு அவளை தெனாவெட்டாகப் பார்த்தான் கஜா.
“என்னடா இது? இந்தப் புள்ளை வாழ்க்கையை கிள்ளு கீரைன்னு நினைச்சியா? இல்ல உன் வாழ்க்கையைத்தான் அப்படி நினைச்சியா? போன வாரம் வரைக்கும் ஏதோ சொல்லிட்டு சுத்தி எங்க உயிரை வாங்கின. இப்ப பைத்தியம் மாதிரி என்ன வேலை இது?” என்று அவள் கேட்க கேட்க அதை மதிக்காமல் அவன் திருமலையைப் பார்த்தான் வேம்புவை அவன் பார்க்கவே இல்லை.
“என்ன திருமலை.. இப்ப உன் தங்கச்சிக்கு நான் பருஷன். உனக்கு மச்சான்.. இதுவரை என்னை நீங்க யாரும் மதிக்கலை. இப்ப என் மதிப்பு வேற. இதை ஒத்துக்காம உன் தங்கச்சியை வீட்டோட வச்சிக்கறதோ வேற கல்யாணம் பண்ணிக் குடுக்கறதோ உன் இஷ்டம். ஆனா அவ வாழ்க்கைல நான் இருக்கேன். அப்ப கண்டிப்பா உன் வாழ்க்கைலயும் நான் இருப்பேன். உன் நெஞ்சுல உறுத்திகிட்டே இருப்பேன்” என்று தெளிவாக பேசவும்
வேம்பு பதட்டத்துடன் திருமலை அருகில் வந்து பயத்தில் ஒட்டி நின்றாள்.
“இல்லன்னா இவ என் தங்கச்சியே இல்லன்ன சொல்லிட்டு ஒதுங்கிடு. அதுதான் புத்திசாலித்தனம்.” என்றான்.
ஏனென்றால், இவ்வளவும் செய்த பின் ‘இவள் என் சொந்த தங்கை இல்லை’ என்று திருமலை கவலையின்றி இருந்து விட்டால் அவன் பட்ட பாடு வீண் அல்லவா? அதனால் முன்கூட்டியே அனைவர் முன்னால் திருமலைக்கு செக் வைத்தான்.
திருமலை பக்கத்து திண்ணையில் தலையில் அறைந்து கொண்டு உட்கார்ந்து விட்டான். அவனால் அல்லவா அவன் சின்ன தங்கைக்கு இத்தனை கொடிய தண்டனை?
அவன் அருகில் தரையில் அமர்ந்த வேம்பு தவித்துப் போனாள். இப்படி ஒரு நிலையை யாரும் எதிர்பார்க்காத போது இப்போது உன்னால்தான் எல்லாம் என்ற மற்றவர்… மற்றவரைப் பற்றி அவளுக்கு என்ன வந்தது? அவள் கணவன் நினைத்து விட்டால்?
அவள் யாரையும் வஞ்சிக்க நினைக்கவில்லையே? நினைவு தெரிந்த நாள் முதல் அவள் விரும்பிய அவள் மாமன் மகனை கட்டிக் கொண்டதில் ஏன் பிறர் இத்தனை பிரச்சனை செய்கிறார்கள்?
துளசி பாவம்! எத்தனை சின்னப் ணெ;. இவள் இங்கு வந்த நாள் முதல் ‘மதனி மதனி ‘என்று இவர்கள் திருமணத்திற்கு முன்பே இவளை தன் அண்ணன் மனைவியாக வைத்துப் பேசி இவளுக்கு நம்பிக்கை ஊட்டிய வண்ணத்துப் பூச்சி. இப்படி இந்த பச்சோந்தி கஜாவின் கையில் சிக்கிக் கொண்டதே?
திருமலையின் அருகில் இன்னொரு பக்கம் அமர்ந்த சண்முகம் “இப்ப பொண்ணுக்கு அண்ணனா நீ ஒரு முடிவு சொல்லு. நாங்க கட்டுப்படறோம்” என்றான்.
“ அடேங்கப்பா! இவன் முடிவைக் கேக்கத்தான் நின்னுகிட்டு இருக்கேனா நான்?” என்று ஏளனம் பேசினான் கஜா.
“இவன் முடிவை எதிர்த்து நீ எதுவும் செய்ய நான் விட மாட்டேன். இதுல உங்க அக்கா பாதிக்கப்பட்டாலும் அதுக்கு நான் கவலைப்பட மாட்டேன்.” ஏன்று பொறுப்பை திருமலைக்கு தள்ளி விட்டவன் அவனுக்கு தான் உறுதுணையாக இருப்பதை உறுதி செய்தான்.
ஆனந்திக்கு எதுவென்றாலும் கஜா பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. என்றே அனைவரும் நம்பினர், ஆனந்தி உட்பட. எனவே தனது ஆற்றாமையை முடிந்த அளவு மறைத்துக் கொண்டு அமைதியாக நின்றாள் ஆனந்தி. அவளஒ; கண்களில் தெரிந்த கலவரத்தை கண்டு கொண்டான் திருமலை. ஆனுந்திக்கும் எந்த பாதகமும் வரக்கூடாது என்பது அவன் முடிவு.
திருமலை கற்பகத்தைப் பார்த்தான். அவர் கண்களில் பயம் கலந்த சம்மதம் தெரியவே சற்று அதிசயித்தான்.
மகள் தன்னை நோக்கி வந்த போது அவள் கழுத்தில் மின்னிய மாங்கல்யம் அவரை வெகுவாகப் பாதித்தது. தன் மகள் தொங்கத் தொங்கத் தாலி கட்டிக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என்பது எல்லோரையும் போல அவரது ஆசையும்தான். . ஆனால் அவர் அதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்று நிம்மதியாக இருந்தார். மாப்பிள்ளை தேட வேண்டுமே? தன் தகுதிக்கு இப்போதே ஒரு ஒரு இடமாக மனதில் கணித்துக் கொண்டு இருந்தார். அந்த மாப்பிள்ளைகள் எல்லாம் கூலி வேலை செய்பவர்கள். அதில் ஒருவனுக்கு மகளை கல்யாணம் செய்து கொடுத்து வீட்டோடு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்.
ஆனால் இந்தத் திருமணத்தை உடைக்க அவருக்கு மனம் வரவில்லை. அதே நேரம் மகள் அவனிடம் துன்பப்பட நேரிடுமோ? என்ற பயம் வேறு அவரை நிலை குலைய வைத்தது.
அவரை கண்களால் கேள்வி கேட்ட திருமலைக்கு தன் மனநிலையைக் கண்களாலேயே கடத்தி இருந்தார்.
முடிவை தான் சொல்வதை விட சண்முகம் சொல்வதுதான் சரி என்று முடிவுக்க வந்தவன் கற்பகம் கடத்திய செயதியை சண்முகத்திற்கு கடத்தினான். ஆதை சரியாக் புரிந்து கொண்ட சண்முகம்
“கஜா , துளசி இனி உன் சம்சாரம்தான். அதுக்கு மாறு சொல்லலை. ஆனா அந்த புள்ளையை நீ எந்தக் கொடுமையும் செய்திரக் கூடாது. எங்களால கூட இருந்து பார்க்கவா முடியும்? துளசிக்கு எந்தக் கெடுதலும் வராதுன்னு செல்லிட்டு நீ அவளை கூப்பிட்டுப் போ. துளசி அதுக்கு சம்மதிக்கலைன்னா அது உன் பாடு.
இது எது நடந்தாலும் சரி நடக்கலைனாலும் சரி. இனி நீ அக்கா மாமான்னு சொல்லிகிட்டு என் வீட்டுப் பக்கம் வந்திராதே.” என்று முடித்தான்.
---------------------------------------------------------
துளசி கீழே தரையில் அமர்ந்து விட்டாள்.
இவன் இந்த முரடன் அவளுக்கு எந்த தீங்கும் செய்துவிடக் கூடாது என்று மனதில் எத்தனை சாமியை வேண்டிக் கொண்டு ஓடினாள்?ஆனால் எல்லா சாமியும் அவளை கைவிட்டு விட்டனவே?
அவளது மெல்லுடல் மட்டும் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் தன்னைப் போல் அவள் உடம்போடு ஒட்டி இருந்தது. அவன் கட்டிய தாலியினை ஏதோ அசிங்கம் அவள் உடம்பில் பட்டதுபோல் உணர்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுப் புறம் உரைத்தது அவளுக்கு. அவள் பொருட்டு ஏதோ பேச்சு நடக்கிறதே? கஜா பேசிக் கொண்டு இருந்தான்.
“இனி இந்தத் துளசி என் சம்சாரம். அவளை நான் ஏன் கஷ்டப்படுத்தப் போறேன்? என் பொண்டாட்டியை நான் எப்படி வச்சிருக்கேன்னு பார்த்து தெரிஞ்சுக்குங்க.
அப்புறம் என்ன? உங்க வீட்டுக்கு வரக் கூடாதாமா? இல்லனா மட்டும் உங்க வீட்டுக்கு வர துடியாத்தான் இருக்கேனாக்கும்? நீங்க இங்க வந்த இத்தனை நாளும் உங்க தொழிலை அங்க நான் எந்தக் குறைவும் இல்லாம கவனிச்சுகிட்டதுக்கு நல்ல பதிலடிதான் இது. பரவாயில்லை.
நெல்லைக்கு வர வர கஜாவின் ஆட்கள் அவனுக்கு கற்பகத்தைப் பற்றி துளசியைப் ற்றி ஏன் தாமரை செல்வனைப் பற்றி கூட சொல்லி இருந்தார்கள்.
அப்போதே லேசு பாசாக துளசியைப் பற்றி விசாரித்து வைத்தான். வயசுப் பொண்ணா? எதுக்கும் ‘சீட்டாட்ட ஜோக்கரா வச்சிக்கலாம்’ என்று நினைத்து வைத்திருந்தான்.
இப்போது அவளைப் பார்க்கவும் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான். வேம்புவை பார்த்து தன் விருப்பம் சொன்னதில் இருந்து அவனுடன் இருந்தது அந்த தாலி. ஒன்று வேம்பு அல்லது திருமலை இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் போடுவது என்று வந்தவன் இப்போதும் சட்டைப்பையில் வைத்திருந்தான்.
அது அவனது தோல்வியின் சின்னம். அவன் வெற்றி பெற்ற பிறகு அதனை தலையை சுற்றி எறிந்து விடலாம் என்று வைத்திருந்தவன் இப்போது தன் வாழ்க்கையில் வழுக்கி விழுந்தான்.
இந்த திருமணம் அவன் வாழ்வை புரட்டிப் போடப் போகிறது என்று தெரியாமல் செய்து விட்டான் பாவம். அவனும் குடும்பம் பிள்ளை குட்டிகள் என்று வாழ கொடுத்து வைத்திருப்பது அந்தத் திருமணத்தால் என்பதை அப்போது மட்டுமல்ல இப்போதும் உணரவில்லை அவன்
இதுவரை யாரையும் மதிக்காத வாழ்க்கை. எதையும் பொருட்படுத்தா வாழ்க்கை. அவன் நினைத்ததை மட்டும் செய்யும் வாழ்க்கை.
தன் அக்கா கணவரிடம் மட்டும் பொண்ணைக் கொடுத்த காரணத்தால் சிறிது விலக்கம் உண்டு. அதுவும் அவனது அப்பா ‘பொண்ணை குடுத்த இடத்துல பார்த்து பதனமா பேசனும்ப்பா’ என்று தலை தலையாக அடித்துக் கொள்வதால்தான். போனால் போகிறதென்று அடக்கி வாசிப்பான்.
------------------------------------------------
தாலியை கட்டிவிட்டு நிமிர்ந்தான் கஜா. துளசியை தன் பிடியில் இருந்து மெல்ல விடுவித்தான். தாலி கட்டி முடித்துவிட்டு கண்களை நிமிர்த்திய போது துளசியின் அழுது சிவந்த குழந்தை முகம் அவன் கண்களில் மட்டும் இல்லாமல் கருத்திலும் பட்டு இம்சித்தது.
கஜாவா? கொக்கா? ‘விட்டுத்தள்ளு விட்டுத்தள்ளு’ என்று அப்போதைக்கு ஒதுக்கினான். அவனுக்கு பைசல் பண்ண வேண்டிய பாக்கி நிறைய இருக்கிறதே? அதை முதலில் முடிக்கலாம். அப்புறம் பார்க்கலாம்.
உடல்வலியும் மன வலியுமாய்த் தவித்தாள் துளசி. வேதனை தாங்க முடியாமல் அவளது வாய் மூச்சுக் காற்றுக்காத் திறந்து திறந்து மூடியது. என்ன நடந்தது என்று ஒரு வழியாக உணர்வு வந்தபோது அவளது கழுத்தில் தங்கத்தாலி இருப்பதைக் கண்டாள்.
“ஐயோ இது எனக்கு வேண்டாம்” என்று அதை கழற்ற முயன்ற அவளை கையைப் பிடித்துத் தடுத்தான் கஜா. “இதைக் கழற்றினா உனக்கு வேற பேர்; கழற்றாம உன் வீட்டுலேயே இருந்தா அதுக்கு ஒரு பேர். ஆனா இதோட இந்த கஜா கூட வந்திட்டன்னா உனக்கு நல்ல பேரு” என்றான் மிரட்டலாக.
இவன்தான் கஜாவா? இவனைப் பற்றி அரசல் புரவலாக அவள் கேள்விப்பட்டதில் தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஏதோ கெடுதல் செய்தவன் என்பது வரை அவளுக்குத் தெரிந்திருந்தது. ஐயய்யோ…இவன் என்ன காரியம் செய்துவிட்டான்? அவள் இனி என்னாவாள்?
“எந்த நொல்ல பேரா இருந்தாலும் பரவாயில்ல. நான் உன்கூட வரவே மாட்டேன்” என்று திமிறினாள் துளசி.
கஜாவின் குணம் ஓரளவு தெரியம் ஆதலால் துளசியின் எதிர்காலம் என்னாகுமோ என்று பயந்தனர் திருமலையும் சண்முகமும். எதுவும் செய்ய முடியாமல் அவர்களை தடுத்த அந்த அடியாட்களைப் போட்டு புரட்டி எடுத்தனர். சிறிதுநேரம் அந்த இடம் ரணகளமாக இருந்தது. கஜா எதிலும் பட்டுக் கொள்ளவில்லை. இவர்கள் அடிப்பதையும் அவர்கள் அடிவாங்குவதையும் பார்த்துக் கொண்டு நின்றான்.
அன்று ஏதோ கோவிலில் விஷேஷம் என்பதால் பெரும்பாலான அண்டை வீட்டார் கோவிலுக்குச் சென்று இருந்தனர். இவர்கள் கோவிலுக்கு முதல் நாளே போய்விட்டு வந்தபடியினால் இன்று வேறு சினிமா செல்வதாக இருந்தனர். வீட்டில் இருந்தது வயசான பெரியவர்களும் அவர்கள் கண்காணிப்பில் இருந்த குழந்தைகளும். ஒரு சில வீடுகளில் வயதுப் பெண்கள் இருந்தனர். எனவே யாரும் வெளியே வரவில்லை. அவர்களுக்குத் தெரியவில்லை.
இந்த சத்ததில் ஒருசில வயதான தலைகள் எட்டிப்ப பார்த்தன. ஆனால் பயத்தில் ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு
.
இந்த அடியாட்களை அடித்து என்ன புண்ணியம்? எலும்புத் துண்டுக்கு வந்தவர்கள் அவர்கள் . அவர்கள் கஜாவிடம் வேலை பார்ப்பவர்கள் . சண்முகத்தைப் பற்றி தெரியும் என்றாலும் சம்பளம் கொடுக்கும் முதலாளியை விட வேறெதுவும் அவர்களுக்குப் பெரிதாகப் படவில்லை.
‘இப்படிபட்ட பொறுக்கியா இந்த அழகுத் தேவதைக்கு கணவனாக வரவேண்டும் ‘ என்று நினைத்த வேம்புவும் கமலாம்மாவும்; விக்கித்து நின்றனர்.
பெற்ற தாய் கற்பகமோ நிலை குலைந்து சரிந்து அமர்ந்து விட்டார். ஏதோ விபரீதம் என்று அவரை ஒண்டிய தாமரை செல்வன் தன் தாயின் முகத்தில் தன் பிஞ்சுக் கரங்களால் தட்டி எழுப்பினான்.
நிலமையின் தீவிரத்தை உணர்ந்த சண்முகம் செய்வதறியாது திகைத்தான்; . அவன் ஆனந்திக்காக பார்ப்பானா? துளசிக்காக பார்ப்பானா? மண வாழ்விழந்து தம் மக்களுக்காக மட்டும் வாழும் மற்ற இரு பெண்களுக்காக பார்ப்பானா?
திருமலை ஏதாவது முடிவு செய்வானா? என்று அவனைப் பார்த்தால் அவனும் கை கால் மரத்த நிலையில் நின்று கொண்டிருந்தான்.
பொறுப்பை தானாக தன் கையில் எடுத்துக் கொண்ட கஜா ,
தான் தாலி கட்டிய துளசியை யார் அனுமதியும் பெறாமல் தனது காரில் ஏற்றப் போனான்ய.
“இதப்பாரு கஜா. அவளுக்கு பதினெட்டு வயசு இன்னும் ஆகலை. அதுக்குள்ள நீ தாலி கட்னது சட்டப்படி தப்பு. “ என்று ஆரம்பித்தார் சண்முகம்.
“அப்படின்னா என்ன பண்ணுவிங்க? அவளுக்கு பதினெட்டு வயசு ஆகிற வரை ஹோம்ல வச்சிருப்பாங்க. என்னை போலிஸ்ல புடிசசுக் குடுப்பிங்க. அவ்வளவுதானே? குடுங்க குடுங்க. நான் எப்படி வெளிய வரணும்னு எனக்குத் தெரியும். ஆனா உங்க பொண்ணு பேரு நாறிப் போயிடும்” என்று முக்கியமான வாhத்தையைக் கூறி அனைவர் வாயையும் அடைத்தான்.
எப்படியோ உணர்விற்கு வந்த கற்பகம் உடனே “ என் கண்ணே” என்று அவளை பார்த்து ஓடி வந்தார்
துளசியும் ஓடிப்போய் தன் தாயை கட்டிக் கொண்டாள். தாமரை செல்வனை கீழே இறக்கி விட்டிருந்தார் அவர். அவன் ஒரு திண்ணையைப் பிடித்துக் கொண்டு நின்று இவர்களை பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இப்போது அனைவரின் குற்றம் சாட்டும் பார்வையும் தன் மீது தான் என்பதாக உணர்ந்தாள் ஆனந்தி. இந்த கஜா அவளை இப்படி தலை குனிய வைத்து விட்டானே? அந்த சிறு பெண்ணிற்கு அவளால் எத்தகைய துன்பம் வந்து விட்டது?
“கஜா…” என்று கர்ஜித்தாள் ஆனந்தி. அதை தூசு போல தட்டிவிட்டு அவளை தெனாவெட்டாகப் பார்த்தான் கஜா.
“என்னடா இது? இந்தப் புள்ளை வாழ்க்கையை கிள்ளு கீரைன்னு நினைச்சியா? இல்ல உன் வாழ்க்கையைத்தான் அப்படி நினைச்சியா? போன வாரம் வரைக்கும் ஏதோ சொல்லிட்டு சுத்தி எங்க உயிரை வாங்கின. இப்ப பைத்தியம் மாதிரி என்ன வேலை இது?” என்று அவள் கேட்க கேட்க அதை மதிக்காமல் அவன் திருமலையைப் பார்த்தான் வேம்புவை அவன் பார்க்கவே இல்லை.
“என்ன திருமலை.. இப்ப உன் தங்கச்சிக்கு நான் பருஷன். உனக்கு மச்சான்.. இதுவரை என்னை நீங்க யாரும் மதிக்கலை. இப்ப என் மதிப்பு வேற. இதை ஒத்துக்காம உன் தங்கச்சியை வீட்டோட வச்சிக்கறதோ வேற கல்யாணம் பண்ணிக் குடுக்கறதோ உன் இஷ்டம். ஆனா அவ வாழ்க்கைல நான் இருக்கேன். அப்ப கண்டிப்பா உன் வாழ்க்கைலயும் நான் இருப்பேன். உன் நெஞ்சுல உறுத்திகிட்டே இருப்பேன்” என்று தெளிவாக பேசவும்
வேம்பு பதட்டத்துடன் திருமலை அருகில் வந்து பயத்தில் ஒட்டி நின்றாள்.
“இல்லன்னா இவ என் தங்கச்சியே இல்லன்ன சொல்லிட்டு ஒதுங்கிடு. அதுதான் புத்திசாலித்தனம்.” என்றான்.
ஏனென்றால், இவ்வளவும் செய்த பின் ‘இவள் என் சொந்த தங்கை இல்லை’ என்று திருமலை கவலையின்றி இருந்து விட்டால் அவன் பட்ட பாடு வீண் அல்லவா? அதனால் முன்கூட்டியே அனைவர் முன்னால் திருமலைக்கு செக் வைத்தான்.
திருமலை பக்கத்து திண்ணையில் தலையில் அறைந்து கொண்டு உட்கார்ந்து விட்டான். அவனால் அல்லவா அவன் சின்ன தங்கைக்கு இத்தனை கொடிய தண்டனை?
அவன் அருகில் தரையில் அமர்ந்த வேம்பு தவித்துப் போனாள். இப்படி ஒரு நிலையை யாரும் எதிர்பார்க்காத போது இப்போது உன்னால்தான் எல்லாம் என்ற மற்றவர்… மற்றவரைப் பற்றி அவளுக்கு என்ன வந்தது? அவள் கணவன் நினைத்து விட்டால்?
அவள் யாரையும் வஞ்சிக்க நினைக்கவில்லையே? நினைவு தெரிந்த நாள் முதல் அவள் விரும்பிய அவள் மாமன் மகனை கட்டிக் கொண்டதில் ஏன் பிறர் இத்தனை பிரச்சனை செய்கிறார்கள்?
துளசி பாவம்! எத்தனை சின்னப் ணெ;. இவள் இங்கு வந்த நாள் முதல் ‘மதனி மதனி ‘என்று இவர்கள் திருமணத்திற்கு முன்பே இவளை தன் அண்ணன் மனைவியாக வைத்துப் பேசி இவளுக்கு நம்பிக்கை ஊட்டிய வண்ணத்துப் பூச்சி. இப்படி இந்த பச்சோந்தி கஜாவின் கையில் சிக்கிக் கொண்டதே?
திருமலையின் அருகில் இன்னொரு பக்கம் அமர்ந்த சண்முகம் “இப்ப பொண்ணுக்கு அண்ணனா நீ ஒரு முடிவு சொல்லு. நாங்க கட்டுப்படறோம்” என்றான்.
“ அடேங்கப்பா! இவன் முடிவைக் கேக்கத்தான் நின்னுகிட்டு இருக்கேனா நான்?” என்று ஏளனம் பேசினான் கஜா.
“இவன் முடிவை எதிர்த்து நீ எதுவும் செய்ய நான் விட மாட்டேன். இதுல உங்க அக்கா பாதிக்கப்பட்டாலும் அதுக்கு நான் கவலைப்பட மாட்டேன்.” ஏன்று பொறுப்பை திருமலைக்கு தள்ளி விட்டவன் அவனுக்கு தான் உறுதுணையாக இருப்பதை உறுதி செய்தான்.
ஆனந்திக்கு எதுவென்றாலும் கஜா பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. என்றே அனைவரும் நம்பினர், ஆனந்தி உட்பட. எனவே தனது ஆற்றாமையை முடிந்த அளவு மறைத்துக் கொண்டு அமைதியாக நின்றாள் ஆனந்தி. அவளஒ; கண்களில் தெரிந்த கலவரத்தை கண்டு கொண்டான் திருமலை. ஆனுந்திக்கும் எந்த பாதகமும் வரக்கூடாது என்பது அவன் முடிவு.
திருமலை கற்பகத்தைப் பார்த்தான். அவர் கண்களில் பயம் கலந்த சம்மதம் தெரியவே சற்று அதிசயித்தான்.
மகள் தன்னை நோக்கி வந்த போது அவள் கழுத்தில் மின்னிய மாங்கல்யம் அவரை வெகுவாகப் பாதித்தது. தன் மகள் தொங்கத் தொங்கத் தாலி கட்டிக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என்பது எல்லோரையும் போல அவரது ஆசையும்தான். . ஆனால் அவர் அதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்று நிம்மதியாக இருந்தார். மாப்பிள்ளை தேட வேண்டுமே? தன் தகுதிக்கு இப்போதே ஒரு ஒரு இடமாக மனதில் கணித்துக் கொண்டு இருந்தார். அந்த மாப்பிள்ளைகள் எல்லாம் கூலி வேலை செய்பவர்கள். அதில் ஒருவனுக்கு மகளை கல்யாணம் செய்து கொடுத்து வீட்டோடு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்.
ஆனால் இந்தத் திருமணத்தை உடைக்க அவருக்கு மனம் வரவில்லை. அதே நேரம் மகள் அவனிடம் துன்பப்பட நேரிடுமோ? என்ற பயம் வேறு அவரை நிலை குலைய வைத்தது.
அவரை கண்களால் கேள்வி கேட்ட திருமலைக்கு தன் மனநிலையைக் கண்களாலேயே கடத்தி இருந்தார்.
முடிவை தான் சொல்வதை விட சண்முகம் சொல்வதுதான் சரி என்று முடிவுக்க வந்தவன் கற்பகம் கடத்திய செயதியை சண்முகத்திற்கு கடத்தினான். ஆதை சரியாக் புரிந்து கொண்ட சண்முகம்
“கஜா , துளசி இனி உன் சம்சாரம்தான். அதுக்கு மாறு சொல்லலை. ஆனா அந்த புள்ளையை நீ எந்தக் கொடுமையும் செய்திரக் கூடாது. எங்களால கூட இருந்து பார்க்கவா முடியும்? துளசிக்கு எந்தக் கெடுதலும் வராதுன்னு செல்லிட்டு நீ அவளை கூப்பிட்டுப் போ. துளசி அதுக்கு சம்மதிக்கலைன்னா அது உன் பாடு.
இது எது நடந்தாலும் சரி நடக்கலைனாலும் சரி. இனி நீ அக்கா மாமான்னு சொல்லிகிட்டு என் வீட்டுப் பக்கம் வந்திராதே.” என்று முடித்தான்.
---------------------------------------------------------
துளசி கீழே தரையில் அமர்ந்து விட்டாள்.
இவன் இந்த முரடன் அவளுக்கு எந்த தீங்கும் செய்துவிடக் கூடாது என்று மனதில் எத்தனை சாமியை வேண்டிக் கொண்டு ஓடினாள்?ஆனால் எல்லா சாமியும் அவளை கைவிட்டு விட்டனவே?
அவளது மெல்லுடல் மட்டும் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் தன்னைப் போல் அவள் உடம்போடு ஒட்டி இருந்தது. அவன் கட்டிய தாலியினை ஏதோ அசிங்கம் அவள் உடம்பில் பட்டதுபோல் உணர்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுப் புறம் உரைத்தது அவளுக்கு. அவள் பொருட்டு ஏதோ பேச்சு நடக்கிறதே? கஜா பேசிக் கொண்டு இருந்தான்.
“இனி இந்தத் துளசி என் சம்சாரம். அவளை நான் ஏன் கஷ்டப்படுத்தப் போறேன்? என் பொண்டாட்டியை நான் எப்படி வச்சிருக்கேன்னு பார்த்து தெரிஞ்சுக்குங்க.
அப்புறம் என்ன? உங்க வீட்டுக்கு வரக் கூடாதாமா? இல்லனா மட்டும் உங்க வீட்டுக்கு வர துடியாத்தான் இருக்கேனாக்கும்? நீங்க இங்க வந்த இத்தனை நாளும் உங்க தொழிலை அங்க நான் எந்தக் குறைவும் இல்லாம கவனிச்சுகிட்டதுக்கு நல்ல பதிலடிதான் இது. பரவாயில்லை.