THAZHAI KANI
அமைச்சர்
“எரியும்
தழல்
என் மொழி
எவன்
எதிர்த்தாலும்
எழுந்திடும்
என் மொழி
கிளையாய் வந்த
மொழிகள்
கீச்சிட்டு கத்தினும்
சிலையாய் நிற்கும்
என் அன்னையின்
அழகிற்கு
ஈடில்லை
அவளை
கொலை செய்ய
துடித்திடும்
மனிதனும்
குற்றுயிராய்
கிடக்கும் வேளையில்
தன்னை அறியாமல்
உதிர்க்கிறான்
அன்னை என
அவள் பெயரை
வீழ்வாளோ
என் தமிழன்னை
வையகத்தில்?”