உன் ஓரவிழி பார்வை ஒன்றுபோதும் ...
என் உணர்வுகளை மொத்தமாய் கட்டவிழ்க்க...!!!
உன் இதழ் பூ பூக்கும் ஒற்றை புன்னகை போகும் ...
என்னை முழுதாய் உன்னுள் சுருட்டிகொள்ள ...!!!
அத்தியாயம் 11 :
“மங்கள வடிவமாக திகழும்
பெண்ணே
உன்னுடன் துவங்கும்
இல்லற
வாழ்வு எனக்கு நன்றாக
அமைய வேண்டும்.
என்னுடையனுக்கு ஜீவன
என்று உறுதி கூறி , இந்த
திரு மாங்கல்ய
கயிறை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன் .
என் இல்லற துணையாக ,
அணைத்து சுக
துக்கங்களிலும்
பங்கேற்று ,
நிறைந்த யோகத்துடன் நீ
என்னுடன்
நூற்றாண்டு காலம்
வாழ்வாயாக !!!!!”
- என
திருமாங்கல்யத்தை தன் கைகளில் வாங்கிய நொடி திருமண மந்திரத்தை தனக்கு தெரிந்த அர்த்தத்தில் தன் கம்பீர குரலை காதலில் குழைத்து பரியாவிடம் சொல்லிய பவனஜ் , மூன்று முடிச்சுகளில்
முதல் முடிச்சியிடும் பொழுது அவள் கண்களை பார்த்தவாரே ,
என் உடல் , பொருள் , ஆவி அனைத்தும் உனக்கு மட்டுமே சொந்தமாய் இருக்குமடி என்றவன் .
இரண்டாம் முடிச்சில் , என் அத்தனை உரிமைகளும் உணர்வுகளும் உன் உரிமையடி என உருதி அளித்து .
என் இறுதி மூச்சு இருக்கும் வரை உன் ஓவ்வொரு ஆசைகளையும் நிறைவேற்றிகொண்டே இருப்பேனடி என பொறுமையாய் ஒவ்வொரு முடிச்சிருக்கும் ஒரு வாக்குறுதி என அவளின் கண்களை பார்த்தாரே மூன்றாம் முடிச்சையும் போட்டான் .
பரியாவோ தன்னவனின் செயலில் , வார்த்தைகளில் கண்கள் கலங்க அதையும் முந்திக்கொண்டு அவனின் காதலை கண்டு அவளின் காதலும் பெருக்கெடுக்க , பவனஜ் என்கிற பவன்புத்ராவை அவளிடம் விழவைத்த விழியோர கண்ணீர்துளிகளுடனான அவளது அச்சிரிப்பை உதிர்த்தாள் .
அன்று அதில் சந்தோசம் கொண்டவனோ இன்று காதல் பெருக்கெடுக்க சுற்றியிருந்தோரை கண்டுகொள்ளாமல் அவளின் சிரிக்கும் இதழ்களை தன் இதழ்களில் புதைத்து கொண்டான் .( அடப்பாவி...இம்புட்டு நாள் நல்லாதானயா இருந்த ) .
நல்லவேளை இவன் செய்த சேட்டையை எவரும்பார்க்க வாய்ப்பின்றி , அருகில் நடக்கும் இன்னொரு திருமணத்திற்க்காய் திரும்பியிருந்தனர் .
( யாருக்கா நீங்களே பாருங்க ).
ரோஜாவண்ண கூரைபுடவையில் ரோஜாவாய் மலர்ந்திருந்த ப்ரியாவின் கழுத்தில் திருமாங்கள்யம் அணிவித்து அந்த ரோஜாப்பூவாய் தன் உரிமையாக்கினான் பவின் .
பவின் வஜ்ரநாகாவின் வளர்ப்பு மகன் , பவன்புத்ராவின் சேட்டைக்கார தம்பி , பன்ரொட்டி( பிரதாப் )யின் அடாவடி ரூல்ஸ் போலீஸ்காரன் . ஆமாங்கோ இவனும் போலீஸ் தான் . ( அவன் அவன் எக்ஸாம்ல பாஸாகாம திரிய இவனுங்க மட்டும் எப்படி பாஸானானுங்க ?? )
தன் அண்ணணை போலவே , முதல் பார்வையிலே... தன்னுயிரில் கலந்தவளின் காதோரமாய் ...
" உன் ப்ரியா என்னும் பெயருக்குறிய பொருளான பிரியங்கள் அனைத்தையும் என்னுடன் கொண்டு என் பெயரின் அர்த்தமாய் என்னை மொத்தமாய் உன்னிடம் அர்ப்பணிக்கிறேன் " என சொல்லியவாரே அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் .
[ பவின் - அர்ப்பணிப்பு ,
ப்ரியா - ப்ரியம் ]
அன்று பவன்புத்ராவிற்கும் - பரியாவிற்கும் நிச்சயம் நடந்த தினம் முழுக்க , அம்மாக்கு ரெண்டு அண்ணா இருக்காங்க . ஒருத்தரோட புள்ள உனக்கு , ஒருத்தர் புள்ள எனக்குன்னு கனவுலாம் கண்டது வீணா போச்சே என விளையாட்டை அழுதவாறு ப்ரியா ப்ரியாவிடம் புலம்ப ,
ஹாஹா ஹாஹா என்ன சொன்ன ரெண்டுப்பையன்ல ஒருத்தன் அவளுக்கு , ஒருத்தன் உனக்கா என கேட்டு பவனஜ் மீண்டும் சிரிக்க ,
ம்ம்ம் ...இந்த புள்ள தலையெழுத்தை இனி யாராலயும் மாத்தமுடியாது என முனங்கிய பன்ரொட்டி , ஏல மாப்பு இன்னும் என்ன இங்கனவே நிக்குறவ. கையோட கையா அதையும் முடிச்சிவிடப்பு என சொன்னான் .
சரிதான் பன்னு , மச்சினிச்சி வருத்தப்பட்டா எந்த மாமனுக்காச்சி பொறுக்குமா என விளையாட்டாய் கண்சிமிட்ட ,
இவர்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் பரியா முழிக்க ,
நம்மளே நம்பளுக்கான ஆப்பு எதையாவது தேடிக்கிட்டோமா என ப்ரியா யோசித்துக்கொண்டிருந்தாள் .
அப்பொழுது அண்ணா என கத்திகொண்டே ஒருவன் கதவை திறக்க , அவன் திறந்த வேகத்தில் அதன் மேல் சாய்ந்திருந்த ப்ரியா விழப்போக அவளை விழாமல் தாங்கிப்பிடிக்க அங்கு ஓர் காதல் உலகின் வாசல் திறந்தது .அதற்க்கு பின் சிறுசிறு குறும்புகளுடன் அவர்களது காதல் உலகத்தில் மகிழ்வாய் உலவினர் .
பவன்புத்ரா - பரியாவிற்கு திருமண தேதி குறிக்கும் நேரத்தில் பவின்-ப்ரியாவின் விஷயம் பவன்புத்ராவால் பெரியவர்களிடம் சென்றது .
பவித்ரா தன் அண்ணண் மகன்களுக்கு தான் தன் பெண்கள் என அவர்களின் சிறுவயது முதலே எண்ணியிருந்ததால் மகிழ்ச்சியாய் தலையசைத்தார் .
பிரபுவோ , மனைவியின் ஆசை புரிந்திருந்தும் தன் மகள்களின் மனத்திற்க்கே முதலிடம் கொடுத்திருக்க , அவரும் ப்ரியாவின் விருப்பம் அறிந்து சரி என்றிருந்தார் .
பவித்ராவின் ஆசைப்படி , பவன்புத்ரா - பரியா மற்றும் பவின் - ப்ரியா இருவரின் திருமணமும் இன்று ஒரே மேடையில் அடுத்தடுத்து நடக்கிறது .
********************************************************
இரண்டு வருடங்களுக்கு பின் :
வயதானவர் என்றும் பார்க்காமல் அவரின் நிலத்திற்காய் அவரை கொன்ற மருதன் என்றவனை கைது செய்ய ஏசிபி பவன்புத்ரா தன் படையுடன் வந்திருந்தான் .
மருதன் சிறு சிறு திருட்டு , வழிப்பறி என ஆரம்பித்து கொலைகளையும் அசால்ட்டாக செய்ய இப்பொழுது அவன் பெயர் போலீசின் என்கவுண்டர் லிஸ்ட்டில் உள்ளது .
அவனும் அவனின் ஆட்களையும் போலீஸ் வளைத்திருக்க , தப்பிக்கும் முயற்சியில் அங்கு ஒரு சிறு போர் நடந்தது .
வழக்கம்போல் சிறிதும் பதறாமல் , தன் பாணியானா பிடித்த படத்தை ரசித்து பார்பதுபோலான உடல்மொழியுடன் தனது பைக்யை நிறுத்தி , அதன் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் பவன்புத்ரா .
அவ்வூரிற்கு வேறொரு பஞ்சாயத்திற்காய் வந்திருந்த பரமேஷ் இதனை கண்டு , " ஆத்தாடி இவனா " என்ற கேள்வியுடன் அன்று போல் இன்றும் மறைந்திருந்து பார்த்தான் .
அவனுடன் வந்திருந்த கைத்தடி ஒருவன் , யாருன்னா இவன் என சத்தமாய் கேட்க ,
அவனின் வாயை மூடியவன் , மெதுவா பேசுடா அவனுக்கு கேற்ற போது என பயத்தில் தந்தியடிக்கும் பற்களை கடித்து , அவன் இருக்கான் பாரு அவனோட நிழல் கூட ஒருத்தன் மேல படாது ஆனா அம்புட்டு பேரையும் அப்படியே போட்ருக்க துணிலயே ***போக வச்சிருவான்டா .
பவன்புத்ரா அன்று போல் இன்றும் தன் அருகில் நின்ருந்தவனிடம் ( பிரதாப் அதுதாங்க நம்ப பன்ரொட்டி ) , ரொம்ப இழுக்குதோ முடிச்சிவிட்ரலாமா என ஒற்றை புருவத்தை தூக்கி கண்காட்டினான் .
பன்ரொட்டி (எ) பிரதாப் தன் பின் சைகை செய்ய ,அடுத்த நொடி அங்கு ஒரு மாருதி வந்து நின்றிருந்தது .
அய்யயோ வந்திடிச்சிடா எமனோடே வாகனம் என அலறிய பரமேஷ் அதற்குமேல் அங்கிருக்காமல் தன் கைத்தடியுடன் மெதுவாய் ஓட , பவனஜ் (எ) பவன்புத்ரா மருதனை தூக்கி வண்டியில் போட்டு கிளப்ப மறுபக்கம் பன்ரொட்டி ஏறிக்கொண்டான் .
சிறிதுநேரம்கழித்து மருதனின் உடல் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருக்க வெறும் சடலமாக அவ்வூரின் முடிவில் எறியப்பட்டது .
********************************************************
"கொடூரமான குற்றவாளியாய் அறிவிக்கப்பட்டு போலிஸாரால் தீவிரமாய் தேடப்பட்ட ரௌடி மருதனை என்கவுண்டர் செய்தார் ஏசிபி பவன்புத்ரா "
- என மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது .
என் உணர்வுகளை மொத்தமாய் கட்டவிழ்க்க...!!!
உன் இதழ் பூ பூக்கும் ஒற்றை புன்னகை போகும் ...
என்னை முழுதாய் உன்னுள் சுருட்டிகொள்ள ...!!!
அத்தியாயம் 11 :
“மங்கள வடிவமாக திகழும்
பெண்ணே
உன்னுடன் துவங்கும்
இல்லற
வாழ்வு எனக்கு நன்றாக
அமைய வேண்டும்.
என்னுடையனுக்கு ஜீவன
என்று உறுதி கூறி , இந்த
திரு மாங்கல்ய
கயிறை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன் .
என் இல்லற துணையாக ,
அணைத்து சுக
துக்கங்களிலும்
பங்கேற்று ,
நிறைந்த யோகத்துடன் நீ
என்னுடன்
நூற்றாண்டு காலம்
வாழ்வாயாக !!!!!”
- என
திருமாங்கல்யத்தை தன் கைகளில் வாங்கிய நொடி திருமண மந்திரத்தை தனக்கு தெரிந்த அர்த்தத்தில் தன் கம்பீர குரலை காதலில் குழைத்து பரியாவிடம் சொல்லிய பவனஜ் , மூன்று முடிச்சுகளில்
முதல் முடிச்சியிடும் பொழுது அவள் கண்களை பார்த்தவாரே ,
என் உடல் , பொருள் , ஆவி அனைத்தும் உனக்கு மட்டுமே சொந்தமாய் இருக்குமடி என்றவன் .
இரண்டாம் முடிச்சில் , என் அத்தனை உரிமைகளும் உணர்வுகளும் உன் உரிமையடி என உருதி அளித்து .
என் இறுதி மூச்சு இருக்கும் வரை உன் ஓவ்வொரு ஆசைகளையும் நிறைவேற்றிகொண்டே இருப்பேனடி என பொறுமையாய் ஒவ்வொரு முடிச்சிருக்கும் ஒரு வாக்குறுதி என அவளின் கண்களை பார்த்தாரே மூன்றாம் முடிச்சையும் போட்டான் .
பரியாவோ தன்னவனின் செயலில் , வார்த்தைகளில் கண்கள் கலங்க அதையும் முந்திக்கொண்டு அவனின் காதலை கண்டு அவளின் காதலும் பெருக்கெடுக்க , பவனஜ் என்கிற பவன்புத்ராவை அவளிடம் விழவைத்த விழியோர கண்ணீர்துளிகளுடனான அவளது அச்சிரிப்பை உதிர்த்தாள் .
அன்று அதில் சந்தோசம் கொண்டவனோ இன்று காதல் பெருக்கெடுக்க சுற்றியிருந்தோரை கண்டுகொள்ளாமல் அவளின் சிரிக்கும் இதழ்களை தன் இதழ்களில் புதைத்து கொண்டான் .( அடப்பாவி...இம்புட்டு நாள் நல்லாதானயா இருந்த ) .
நல்லவேளை இவன் செய்த சேட்டையை எவரும்பார்க்க வாய்ப்பின்றி , அருகில் நடக்கும் இன்னொரு திருமணத்திற்க்காய் திரும்பியிருந்தனர் .
( யாருக்கா நீங்களே பாருங்க ).
ரோஜாவண்ண கூரைபுடவையில் ரோஜாவாய் மலர்ந்திருந்த ப்ரியாவின் கழுத்தில் திருமாங்கள்யம் அணிவித்து அந்த ரோஜாப்பூவாய் தன் உரிமையாக்கினான் பவின் .
பவின் வஜ்ரநாகாவின் வளர்ப்பு மகன் , பவன்புத்ராவின் சேட்டைக்கார தம்பி , பன்ரொட்டி( பிரதாப் )யின் அடாவடி ரூல்ஸ் போலீஸ்காரன் . ஆமாங்கோ இவனும் போலீஸ் தான் . ( அவன் அவன் எக்ஸாம்ல பாஸாகாம திரிய இவனுங்க மட்டும் எப்படி பாஸானானுங்க ?? )
தன் அண்ணணை போலவே , முதல் பார்வையிலே... தன்னுயிரில் கலந்தவளின் காதோரமாய் ...
" உன் ப்ரியா என்னும் பெயருக்குறிய பொருளான பிரியங்கள் அனைத்தையும் என்னுடன் கொண்டு என் பெயரின் அர்த்தமாய் என்னை மொத்தமாய் உன்னிடம் அர்ப்பணிக்கிறேன் " என சொல்லியவாரே அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் .
[ பவின் - அர்ப்பணிப்பு ,
ப்ரியா - ப்ரியம் ]
அன்று பவன்புத்ராவிற்கும் - பரியாவிற்கும் நிச்சயம் நடந்த தினம் முழுக்க , அம்மாக்கு ரெண்டு அண்ணா இருக்காங்க . ஒருத்தரோட புள்ள உனக்கு , ஒருத்தர் புள்ள எனக்குன்னு கனவுலாம் கண்டது வீணா போச்சே என விளையாட்டை அழுதவாறு ப்ரியா ப்ரியாவிடம் புலம்ப ,
ஹாஹா ஹாஹா என்ன சொன்ன ரெண்டுப்பையன்ல ஒருத்தன் அவளுக்கு , ஒருத்தன் உனக்கா என கேட்டு பவனஜ் மீண்டும் சிரிக்க ,
ம்ம்ம் ...இந்த புள்ள தலையெழுத்தை இனி யாராலயும் மாத்தமுடியாது என முனங்கிய பன்ரொட்டி , ஏல மாப்பு இன்னும் என்ன இங்கனவே நிக்குறவ. கையோட கையா அதையும் முடிச்சிவிடப்பு என சொன்னான் .
சரிதான் பன்னு , மச்சினிச்சி வருத்தப்பட்டா எந்த மாமனுக்காச்சி பொறுக்குமா என விளையாட்டாய் கண்சிமிட்ட ,
இவர்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் பரியா முழிக்க ,
நம்மளே நம்பளுக்கான ஆப்பு எதையாவது தேடிக்கிட்டோமா என ப்ரியா யோசித்துக்கொண்டிருந்தாள் .
அப்பொழுது அண்ணா என கத்திகொண்டே ஒருவன் கதவை திறக்க , அவன் திறந்த வேகத்தில் அதன் மேல் சாய்ந்திருந்த ப்ரியா விழப்போக அவளை விழாமல் தாங்கிப்பிடிக்க அங்கு ஓர் காதல் உலகின் வாசல் திறந்தது .அதற்க்கு பின் சிறுசிறு குறும்புகளுடன் அவர்களது காதல் உலகத்தில் மகிழ்வாய் உலவினர் .
பவன்புத்ரா - பரியாவிற்கு திருமண தேதி குறிக்கும் நேரத்தில் பவின்-ப்ரியாவின் விஷயம் பவன்புத்ராவால் பெரியவர்களிடம் சென்றது .
பவித்ரா தன் அண்ணண் மகன்களுக்கு தான் தன் பெண்கள் என அவர்களின் சிறுவயது முதலே எண்ணியிருந்ததால் மகிழ்ச்சியாய் தலையசைத்தார் .
பிரபுவோ , மனைவியின் ஆசை புரிந்திருந்தும் தன் மகள்களின் மனத்திற்க்கே முதலிடம் கொடுத்திருக்க , அவரும் ப்ரியாவின் விருப்பம் அறிந்து சரி என்றிருந்தார் .
பவித்ராவின் ஆசைப்படி , பவன்புத்ரா - பரியா மற்றும் பவின் - ப்ரியா இருவரின் திருமணமும் இன்று ஒரே மேடையில் அடுத்தடுத்து நடக்கிறது .
********************************************************
இரண்டு வருடங்களுக்கு பின் :
வயதானவர் என்றும் பார்க்காமல் அவரின் நிலத்திற்காய் அவரை கொன்ற மருதன் என்றவனை கைது செய்ய ஏசிபி பவன்புத்ரா தன் படையுடன் வந்திருந்தான் .
மருதன் சிறு சிறு திருட்டு , வழிப்பறி என ஆரம்பித்து கொலைகளையும் அசால்ட்டாக செய்ய இப்பொழுது அவன் பெயர் போலீசின் என்கவுண்டர் லிஸ்ட்டில் உள்ளது .
அவனும் அவனின் ஆட்களையும் போலீஸ் வளைத்திருக்க , தப்பிக்கும் முயற்சியில் அங்கு ஒரு சிறு போர் நடந்தது .
வழக்கம்போல் சிறிதும் பதறாமல் , தன் பாணியானா பிடித்த படத்தை ரசித்து பார்பதுபோலான உடல்மொழியுடன் தனது பைக்யை நிறுத்தி , அதன் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் பவன்புத்ரா .
அவ்வூரிற்கு வேறொரு பஞ்சாயத்திற்காய் வந்திருந்த பரமேஷ் இதனை கண்டு , " ஆத்தாடி இவனா " என்ற கேள்வியுடன் அன்று போல் இன்றும் மறைந்திருந்து பார்த்தான் .
அவனுடன் வந்திருந்த கைத்தடி ஒருவன் , யாருன்னா இவன் என சத்தமாய் கேட்க ,
அவனின் வாயை மூடியவன் , மெதுவா பேசுடா அவனுக்கு கேற்ற போது என பயத்தில் தந்தியடிக்கும் பற்களை கடித்து , அவன் இருக்கான் பாரு அவனோட நிழல் கூட ஒருத்தன் மேல படாது ஆனா அம்புட்டு பேரையும் அப்படியே போட்ருக்க துணிலயே ***போக வச்சிருவான்டா .
பவன்புத்ரா அன்று போல் இன்றும் தன் அருகில் நின்ருந்தவனிடம் ( பிரதாப் அதுதாங்க நம்ப பன்ரொட்டி ) , ரொம்ப இழுக்குதோ முடிச்சிவிட்ரலாமா என ஒற்றை புருவத்தை தூக்கி கண்காட்டினான் .
பன்ரொட்டி (எ) பிரதாப் தன் பின் சைகை செய்ய ,அடுத்த நொடி அங்கு ஒரு மாருதி வந்து நின்றிருந்தது .
அய்யயோ வந்திடிச்சிடா எமனோடே வாகனம் என அலறிய பரமேஷ் அதற்குமேல் அங்கிருக்காமல் தன் கைத்தடியுடன் மெதுவாய் ஓட , பவனஜ் (எ) பவன்புத்ரா மருதனை தூக்கி வண்டியில் போட்டு கிளப்ப மறுபக்கம் பன்ரொட்டி ஏறிக்கொண்டான் .
சிறிதுநேரம்கழித்து மருதனின் உடல் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருக்க வெறும் சடலமாக அவ்வூரின் முடிவில் எறியப்பட்டது .
********************************************************
"கொடூரமான குற்றவாளியாய் அறிவிக்கப்பட்டு போலிஸாரால் தீவிரமாய் தேடப்பட்ட ரௌடி மருதனை என்கவுண்டர் செய்தார் ஏசிபி பவன்புத்ரா "
- என மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது .