கடல் மணலில் ஆழ புதைந்த உன் கால்தடத்தை சொந்தம்கொண்டாடி கொண்டுசெல்ல அந்த அலைகள் காத்திருக்கிறது ....
அலை போலே நானும் உன்னை உரிமையாய் கொஞ்சி பேசி ...! உன்னையும் உன்னிதயத்தையும் களவாட காத்திருக்கிறேன் ...!
அத்தியாயம் 7 :
பவனஜ் பரியாவை காதலிப்பது போல் பேச அதிர்ந்த பன்ரொட்டி ,
மாப்பு ஏலே மாப்பு என் வயித்துல புளிய கரைக்க வைச்சிபோட்டு நீ எங்கல போற . உண்மைய சொல்லுல நீ சும்மா காச்சும் தான அப்படி சொன்ன என அவனை தொடர்ந்தவாறு வந்து கேட்டான்.
வெளியே தங்களைத் தவிர நிறைய பேர் இருப்பதை பிறகே உணர்ந்து அமைதியாகினான்.
அதன்பின் வேலைகள் பல அவர்களை தன்னுள் இழுத்துக் கொள்ள அதில் ஒன்றிய இருவருக்கும் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் போனது . ஒரு வழியா அனைத்தும் முடிய மாலை ஆக வண்டியை எடுக்க போன பன்ரொட்டியை தடுத்த பவனஜ் ,
மாப்ள வால நடந்து போவோம் .
ஏய் மாப்பு என்னால , என்ன ஆச்சு உனக்கு ? மோகினி பிசாசு எதுனா அடிச்சுபுடிச்சா. இங்கிருந்து எம்புட்டு தொலவு போனும் நடக்கலாம் சொல்ற.
என்னால தூரம் ஒருமணிநேரம் நடந்தா ஊரு வந்துரபோது வால .
அவனின் முகத்தை பற்றி இந்த பக்கம் அந்த பக்கம் திருப்பி பார்த்த பன்ரொட்டி , பேய் எதுவும் அடிச்சாப்ல கூட தெரிலயே என்றான்.
பவனஜோ ,சே என்ன மாப்ள நம்ம ஊரு எம்புட்டு அழகா இருக்கு அத ரசிச்சிக்கிட்டே போவோம்னு சொன்னா ஏதோ பேசுற . அங்க பாரேன் அந்த சூரியனை எம்புட்டு அழகா ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கு என
பன்ரொட்டி வானத்தை உத்து பார்க்க சூரியனோ சுட்டெரித்தான் .
பவனஜோ மிக ரசனையாய் , ஏலே மாப்ள அங்கிட்டு பாருல அது நம்பள பார்த்து வெட்கப்பட்டு ஒளியுது .
என்னாது சூரியன் வெக்கப்படுதா ??? அதுவும் நம்பளை பார்த்து ? அவனை ஏற இறங்க பார்த்தவன் ஏல என்னல சொல்லுத என்றான்.
பவனஜோ , போ மாப்ள எனக்கு வெக்கவெக்கமா வருது என நெளிய.
ஐய்யயோ கன்ஃபார்ம் மோகினி பிசாசு தாம்ல அடிச்சுற்க்கு . எப்படி உன்ன அதுகிட்ட இருந்து காப்பாத்த போறன்னு தெரிலயே.
வால சீக்கிரம் வீட்டுக்கு போய் நம்ப சௌந்தர்யாகிட்ட சொல்லி விபுதிய போடுவோம் என வேகமாக வண்டியை எடுக்க செல்ல ,
தடுத்து அவனை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் பவனஜ்.
அதன்பின் அவன் ஏதேதோ புலம்புகொண்டிருக்க பவனஜோ உம் கொட்டிவந்தான்.
கடுப்பான பன்ரொட்டியோ அவனை பார்க்க , பவனஜோ ஏதோ இன்று தான் அவ்வூருக்கு முதல்முதலாய் வருவதுபோல அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
எந்த மோகினிப்பிசாசு அடிச்சிதுன்னு தெரிலையே பயபுள்ள பைத்தியம் மாதிரி தெரியுதே . அப்பனே கருப்பசாமி நீதாம்ல என்ற நண்பனை காக்கணும் . என் நண்பன் பழையமாரி ஆனா கப்பு தாத்தா கிட்டசொல்லி உனக்கு படையல் போட சொல்றேன்பா என வேண்டினான்.( நம்ப கப்பீஷ்வரர தாங்க பயபுள்ள அப்டி சொல்லுது .இது மட்டும் அவருக்கு தெரிஞ்சிது உனக்கு சங்குதாண்டி ).
அதுவரை அமைதியாய் வந்தவன் திடீரென பன்ரொட்டியிடம் திரும்பி , ஏல மாப்ள ஒருக்கா நீ பொண்ணா பொறந்துருந்தா என்னைய கட்டிகிட ஒத்துக்கிட்டிருப்பியால .
ஏலே மாப்பு என பன்ரொட்டி அலற ,
அடச்சீ ! அதில்ல மாப்பு அது ...அது வந்து எனக்கு அந்த புள்ளைய ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள . அந்த பிள்ளைக்கு என்னை பிடிக்குமால.
ஏலே மாப்பு யாருல , உங்க வீட்டுக்கு வந்துருக்கே அந்த புள்ளையால அப்போ நீ நிஜமா தான் சொன்னியால என யோசனையானவன் , உன்னை கட்டிக்கிட யாருக்குல கசக்கும் .
பவனஜோ , ஆனா மாப்ள அந்த புள்ளை போலீஸாவணுமாம்ல டா . அப்போ அது அந்த மாதிரி வீரமான போலீஸ்காரன தான விரும்பும் என சொல்லும்போதே அவன் குரல் இறங்கியது .
அதை கண்டுகொண்ட பன்ரொட்டி அதை மாற்றும் பொருட்டு , அட என்ன மாப்பு நீ இப்டி விவரம் தெரியாம இருக்கீறீரு . மாப்பு இப்போல்லாம் புள்ளைங்களுக்கு சிரிப்பு மூட்ரவனையும் , வெட்டிப்பயலையும் தாம்ல பிடிக்குது . அதுக்காண்டி நீ கவலைப்படாதல என்றான்.
ம்ம்ம் சரி மாப்ள ஆனாலும் நீரு கெட்டிபயல சந்தடில என்னைய வெட்டிப்பய னு சொல்லிபுட்டல.
அய்யகோ நான் போய் உன்ன அப்டி சொல்லுவேனா மாப்பு என பன்ரொட்டி அலற,
ஓவரா நடிக்காதல என பன்ரொட்டியின் தோள்களில் கைபோட்டு இறுக்கி எகிற , இருவரும் ஹாஹா என சிரித்து கொண்டும் விளையாடிக்கொண்டும் சென்றனர்.
***************************************************
என்னக்கா இன்னும் உன் ஆள காணோம் என கேட்டுகொண்டேய வாசலில் காத்திருந்த பரியாவின் அருகில் அமர்ந்தாள் ப்ரியா.
பின்ன அந்த பவனஜ் மாதிரி பத்ரா வெட்டியாவா இருக்காரு . அவர் போலீஸ் டி நிறைய வேலை இருக்கும் என தேவையில்லாமல் ஊடாலே இழுத்தாள். அவளின் பத்ராவின் நினைவை மறக்க செய்யும் பவனஜை வெறுத்தாள் .
அவளை ஒருமார்கமாய் பார்த்த ப்ரியா , அக்கா நீ பத்ரா பத்ரா னு சொல்றியே அவர் இதுவரைக்கும் உன்கிட்ட நேருக்குநேரா எதாவது பேசிர்காரா என கேட்டாள்.
பரியா யோசனையுடன் இல்லை என தலையாட்ட ,
அக்கா எனக்கு நிறைய விஷயங்கள் ரொம்ப குழப்பமா இருக்கு கா . நீ அவசரப்பட்டு எப்பவோ சின்னவயசுல நடந்தத வச்சி அது இப்போ காதலா மாறிடிச்சினு சொல்ரியோ .நீ யே நல்லா யோசி கா .
என்ன ப்ரி குட்டி நீயே இப்டி சொல்ற என சோகமானவள் , ப்ரி நான் அந்த ஒரு சம்பவத்த மட்டும் சொல்லலைடா . ம்ம்ம் நீ சொல்லு நம்ப அம்மா நான் சொன்ன எதுக்குமே மொதல்ல ஒத்துக்காதவங்க அப்றம் எல்லாத்தையுமே நடத்திக்குடுத்தாங்க எப்படி??
அதான நான் கூட கேப்பனே , இதுக்கு நீங்க மொதல்ல ஒத்துர்க்கிட்டிருக்கலாமேனு , அப்பா கூட சொல்றவங்க சொன்னா தான் மா உங்க அம்மா கேப்பாங்கனு .
அதேதான் ப்ரிகுட்டி , ஒவ்வொருவாட்டியும் அவங்க இங்க பேசுனதுகப்ரும் தான் ஒத்துக்கிட்டிருக்காங்க . இங்க என்னோட படிப்பை பதிலாம் பேசுறதுனா அது பத்ராவா தான இருக்கணும் . அதுவுமில்லாம ஒவ்வொரு வருஷம் என் பிறந்தநாள் அப்பவும் அவங்க எனக்காக துணி எடுத்து அனுப்புவாங்க . அம்மா கூட சொல்லுவாங்களே பவன் கண்ணா எடுத்து அனுப்பிருக்கானு என கண்கள் மின்ன சொன்னாள்.
தங்கையிடம் சொன்னது பாதி தான் இன்னும் நிறைய இவளுக்கே இவளுக்கென்று அவன் அனுப்பிருக்கிறான் . ஒவ்வொரு பரிட்சைக்கு அவனிடமிருந்து வாழ்த்து அட்டை அவளிற்கு வந்துவிடும்.
போனமுறை யுபிஎஸ் க்கு அவனிடமிருந்து வாழ்த்து வரமால் போக அதை பற்றிய நினைவில் அவளால்
சரியாக எழுதமுடியாமல் போக அதில் தேறவில்லை .
ஏனோ மனதால் நெருக்கமாய் இருந்தாலும் , அவன் காவல்துறையில் சேர்ந்தபின் அவனை பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தேடித்தேடி பார்த்தாலும் ஒருமுறை கூட நேரில் பார்க்கமுடியவில்லை .
இந்தமுறை எப்படியும் பார்த்துவிடவேண்டுமென்று தான் பிரபு நேற்று இரவு கால் செய்ததிலிருந்தே யோசித்திருந்தவள் , அங்கு அவர்களது நண்பன் பரத் செய்த சிறுகுளறுபடியை கிளறி சண்டையிட்டு கிளம்பினாள் .
ஊருக்கு சென்றபின் அவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனதினுள் இத்தனை நேரமாய் பேசிக்கொண்டிருந்தவள் ப்ரியாவின் அமைதியில் அவள் புறம் திரும்பினாள் .
என்ன ப்ரிக்குட்டி ! இன்னும் என்ன ? சரி அப்படியே அவர் என்னை விரும்பாலனாலும் இப்போ என்ன ஆகபோது ?.
அப்பா அன்னிக்கு போன்ல சொன்னது நியாபகம் இல்லையா .எப்படியும் அவங்க அண்ணண் பையனுக்கு தான் என்னை கட்டிகுடுப்பாங்கனு சொன்னாருல்ல . அதுமட்டுமில்லை நான் அவங்க அண்ணன் பையன விரும்பறது அப்பாக்கும் தெரியும் சோ டோன்ட் ஒர்ரி .
அச்சோ அக்கா இப்போ என்னோட ஒர்ரியே அந்த அண்ணன் பையன் யாருன்றதுதான் . எனக்கு தெரிஞ்சவரைக்கும் அம்மா எப்பவும் வஜ்ரநாகா மாமாவ விட கோதண்டநாக மாமா பத்திதான் அதிகம் பேசுவாங்க . இப்போ ரெண்டு பேருக்கும் பையன் இருக்க பட்சத்துல உன்னை எப்படி பவன்புத்ராக்கு குடுப்பாங்க .
இதற்க்கு பரியா பதிலை யோசிப்பதற்குள் , கப்பீஷ்வர் பத்ரா என அழைத்து பேசும்குரல் கேட்டது.
அங்கு செல்லும் அவசரத்தில் , அதுக்கென்ன ப்ரிக்குட்டி அதான் நீ அந்த பவனஜை விரும்புரியே சோ ப்ரோப்லேம் சால்வ்ட் என சொல்லி சிட்டாய் பறந்தாள்.
அடியாத்தி நான் விளையாட்டை சொன்னதை இவ உண்மைன்னு நினைச்சிட்டாலோ . அந்த பவனஜ் கண்ணு முழுக்க உன் மேல தான இருக்கு என்ற அக்கா என எண்ணிகொண்டே அவளும் பரியாவின் பின் சென்றாள்.
அங்கு காவலதிகாரி உடையில் பவன்புத்ரா சௌந்தரமாளின் மடியில் தலைவைத்தவாறு கப்பீஷ்வருடன் பேசிக்கொண்டிருந்தான் .
பரியாவோ தன்னவனை பார்த்த சந்தோஷத்தில் சிலையாய் நின்றிருந்தாள் . அதுவும் காற்றில் அலைபாயும் அவனின் முடியை சௌந்தரம்மாள் கோதிக்கொண்டிருக்க அவரை எழுப்பி அங்கு அவருக்கு பதில் தான் அவனை மடியேந்த மாட்டோமா என்ற ஏக்கம் மனதில் ப்ரவாகமெடுத்தது .
பலமுறை அவனை புகைப்படங்களில் கண்டதாலோ ஏனோ புதிதாய் பார்ப்பதுபோல் அவளுக்கு தோண்றவே இல்லை.
அப்பொழுது அங்கு வந்த முனியன் , என்ற மவளுக்கு மேலுக்கு முடிலனு என்ற பொஞ்சாதி சொல்லிவுற்றுக்காமா . பெரிய அத்தா ஒருவார்த்தை சொன்னிங்கன்னா இந்தா போய் ஹாஸ்பத்திரில காட்டிட்டு சட்டுனு வந்துபுடுவேன் மா என பணிவாய் கேட்டவாறு நின்றான்.
ஏன் முனியண்ணன் ! பொண்ணுக்கு உடம்பு சரிஇல்லன்ரிங்க மொதல்ல கிளம்புங்க நீங்க .அதுலாம் ஒடனே வரவேணாம் நீங்க கூடவே இருங்க என்ற பவன்புத்ரா உள்ளே சென்று சிறுபணமும் எடுத்துவந்து கொடுத்தான் .
அதில்ல தம்பி ! பெரிய ஆத்தா ஜட தைச்சி தரணும்னு சொல்லிருந்தாங்க என தயங்க , தன் அப்பத்தாவை ஓர் பார்வை பார்த்தவன் ஜட தான அத அப்றம் தைச்சிக்கலாம் நீங்க போய் புள்ளைய பாருங்க என்றான்.
அவர் சென்றபின் சௌந்தரம்மாளின் புறம் திரும்பியவன் , ஏன் அப்பத்தா இந்த வயசுல உனக்கு ஜட கேக்குதா என கண்களை உருட்ட ,
அப்படி கேளுடா பேராண்டி , கிழவிக்கு 16 வயசுன்னு நினைப்பாக்கும் என கப்பீஷ்வரும் இடையில் நுழைந்தார் .
அப்பொழுதுதான் அங்குவந்திருந்த பரியா மற்றும் ப்ரியாவை பார்த்த சௌந்தரம்மாள் , ஏன் கண்ணுங்களா அங்கனவே நிக்குறீக இங்க வாங்க என்றழைத்தவர் ,
ஏம்ல என்னய பார்த்த இந்தவயசுலையும் ஜட வச்சிக்கிட்டு திரியுர மாதிரியால தெரியுது . நம்ப பத்ரா கண்ணு அந்த வசந்தி பொண்ணு வச்சிருந்தத அம்புட்டு ஆசையா பார்த்துது.
அதான் முனியன கூப்டு தச்சுத்தர சொன்னேன் . பரி கண்ணு நான் உனக்கு வேற யார்கிட்டேனா சொல்லி தச்சிதாரேன் கண்ணு என்றார்.
அவரை தடுத்த பரியா , இல்லை அம்மாயி பரவால்ல இருக்கட்டும் என்றவளின் பார்வையோ பவன்புத்ராவிடம்.
அவனும் அவளை தான் பார்த்திருந்தான் .
சிறிதுநேரம் அங்கிருந்தபின் மீண்டும் கோதண்டநாக வின் வீட்டிற்கு வந்தார்கள் பரியாவும், ப்ரியாவும்.
அக்கா ஏன் வேண்டாம்னு சொன்ன ஜட வச்சிகணும்னு அவ்ளோ ஆசையா இருந்த.
ஆமா இப்பவும் ஆசையா தான் இருக்கு வச்சிக்கவும் போறேன் தான்.
ஆனாஅக்கா அம்மாயி கிட்ட வேணாம்னு சொன்னியே.
அம்மாயிகிட்ட தான சொன்னேன் . அங்க தான் என் பத்ரா இருந்தாரே. என்னோட எல்லா ஆசையையும் நிறைவேத்துறவரு இந்த ஆசைய மட்டும் எப்படி விடுவாரு என தங்கை பார்த்து கண்ணடித்தவள் ,
நீ வேனா பாரு ப்ரிக்குட்டி நாளைக்கு காலையில எனக்கு ஜட தயாரா இருக்கும் . சரி நான் போய் கனவுல என் ஆள மீட் பண்ணனும் டாடா என சொல்லி சென்றாள்.
மறுநாள் தன் கதிர்களை உலகம் முழுவதும் பரப்பிகொண்டு மெதுவாய் தன் துயில்களைந்து எழுந்தான் கதிரவன்.
அக்கா அக்கா என ப்ரியா உலுக்க, என்னடி என அழுத்துகொண்டே எழுந்தாள் பரியா.
அங்க பாரு என என ப்ரியா காட்ட அங்கு திரும்பி பார்த்தவளின் கண்கள் விரிய , இதழ்களோ மகிழ்ச்சியில் சிறிதாய் மாதுளை சுளை போல் திறந்திருக்க முகம் விகசித்தது .
அவர்கள் முன் ..... வில்லை வைத்து அதை சுற்றி கனகாம்புறமும் , அதன் கீழ் சிறிது சிறிதாய் மணம் பரப்பும் மல்லியும் என அழகாய் ஒருமாற்றி ஒன்று என தைத்துக்கட்டிருந்த ஜடை அவர்களிடம் என் அழகை பார் என்பது போல் சுவற்றில் மாட்டி இருந்தது.
-பண்ணிடுவோம் .
அலை போலே நானும் உன்னை உரிமையாய் கொஞ்சி பேசி ...! உன்னையும் உன்னிதயத்தையும் களவாட காத்திருக்கிறேன் ...!
அத்தியாயம் 7 :
பவனஜ் பரியாவை காதலிப்பது போல் பேச அதிர்ந்த பன்ரொட்டி ,
மாப்பு ஏலே மாப்பு என் வயித்துல புளிய கரைக்க வைச்சிபோட்டு நீ எங்கல போற . உண்மைய சொல்லுல நீ சும்மா காச்சும் தான அப்படி சொன்ன என அவனை தொடர்ந்தவாறு வந்து கேட்டான்.
வெளியே தங்களைத் தவிர நிறைய பேர் இருப்பதை பிறகே உணர்ந்து அமைதியாகினான்.
அதன்பின் வேலைகள் பல அவர்களை தன்னுள் இழுத்துக் கொள்ள அதில் ஒன்றிய இருவருக்கும் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் போனது . ஒரு வழியா அனைத்தும் முடிய மாலை ஆக வண்டியை எடுக்க போன பன்ரொட்டியை தடுத்த பவனஜ் ,
மாப்ள வால நடந்து போவோம் .
ஏய் மாப்பு என்னால , என்ன ஆச்சு உனக்கு ? மோகினி பிசாசு எதுனா அடிச்சுபுடிச்சா. இங்கிருந்து எம்புட்டு தொலவு போனும் நடக்கலாம் சொல்ற.
என்னால தூரம் ஒருமணிநேரம் நடந்தா ஊரு வந்துரபோது வால .
அவனின் முகத்தை பற்றி இந்த பக்கம் அந்த பக்கம் திருப்பி பார்த்த பன்ரொட்டி , பேய் எதுவும் அடிச்சாப்ல கூட தெரிலயே என்றான்.
பவனஜோ ,சே என்ன மாப்ள நம்ம ஊரு எம்புட்டு அழகா இருக்கு அத ரசிச்சிக்கிட்டே போவோம்னு சொன்னா ஏதோ பேசுற . அங்க பாரேன் அந்த சூரியனை எம்புட்டு அழகா ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கு என
பன்ரொட்டி வானத்தை உத்து பார்க்க சூரியனோ சுட்டெரித்தான் .
பவனஜோ மிக ரசனையாய் , ஏலே மாப்ள அங்கிட்டு பாருல அது நம்பள பார்த்து வெட்கப்பட்டு ஒளியுது .
என்னாது சூரியன் வெக்கப்படுதா ??? அதுவும் நம்பளை பார்த்து ? அவனை ஏற இறங்க பார்த்தவன் ஏல என்னல சொல்லுத என்றான்.
பவனஜோ , போ மாப்ள எனக்கு வெக்கவெக்கமா வருது என நெளிய.
ஐய்யயோ கன்ஃபார்ம் மோகினி பிசாசு தாம்ல அடிச்சுற்க்கு . எப்படி உன்ன அதுகிட்ட இருந்து காப்பாத்த போறன்னு தெரிலயே.
வால சீக்கிரம் வீட்டுக்கு போய் நம்ப சௌந்தர்யாகிட்ட சொல்லி விபுதிய போடுவோம் என வேகமாக வண்டியை எடுக்க செல்ல ,
தடுத்து அவனை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் பவனஜ்.
அதன்பின் அவன் ஏதேதோ புலம்புகொண்டிருக்க பவனஜோ உம் கொட்டிவந்தான்.
கடுப்பான பன்ரொட்டியோ அவனை பார்க்க , பவனஜோ ஏதோ இன்று தான் அவ்வூருக்கு முதல்முதலாய் வருவதுபோல அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
எந்த மோகினிப்பிசாசு அடிச்சிதுன்னு தெரிலையே பயபுள்ள பைத்தியம் மாதிரி தெரியுதே . அப்பனே கருப்பசாமி நீதாம்ல என்ற நண்பனை காக்கணும் . என் நண்பன் பழையமாரி ஆனா கப்பு தாத்தா கிட்டசொல்லி உனக்கு படையல் போட சொல்றேன்பா என வேண்டினான்.( நம்ப கப்பீஷ்வரர தாங்க பயபுள்ள அப்டி சொல்லுது .இது மட்டும் அவருக்கு தெரிஞ்சிது உனக்கு சங்குதாண்டி ).
அதுவரை அமைதியாய் வந்தவன் திடீரென பன்ரொட்டியிடம் திரும்பி , ஏல மாப்ள ஒருக்கா நீ பொண்ணா பொறந்துருந்தா என்னைய கட்டிகிட ஒத்துக்கிட்டிருப்பியால .
ஏலே மாப்பு என பன்ரொட்டி அலற ,
அடச்சீ ! அதில்ல மாப்பு அது ...அது வந்து எனக்கு அந்த புள்ளைய ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள . அந்த பிள்ளைக்கு என்னை பிடிக்குமால.
ஏலே மாப்பு யாருல , உங்க வீட்டுக்கு வந்துருக்கே அந்த புள்ளையால அப்போ நீ நிஜமா தான் சொன்னியால என யோசனையானவன் , உன்னை கட்டிக்கிட யாருக்குல கசக்கும் .
பவனஜோ , ஆனா மாப்ள அந்த புள்ளை போலீஸாவணுமாம்ல டா . அப்போ அது அந்த மாதிரி வீரமான போலீஸ்காரன தான விரும்பும் என சொல்லும்போதே அவன் குரல் இறங்கியது .
அதை கண்டுகொண்ட பன்ரொட்டி அதை மாற்றும் பொருட்டு , அட என்ன மாப்பு நீ இப்டி விவரம் தெரியாம இருக்கீறீரு . மாப்பு இப்போல்லாம் புள்ளைங்களுக்கு சிரிப்பு மூட்ரவனையும் , வெட்டிப்பயலையும் தாம்ல பிடிக்குது . அதுக்காண்டி நீ கவலைப்படாதல என்றான்.
ம்ம்ம் சரி மாப்ள ஆனாலும் நீரு கெட்டிபயல சந்தடில என்னைய வெட்டிப்பய னு சொல்லிபுட்டல.
அய்யகோ நான் போய் உன்ன அப்டி சொல்லுவேனா மாப்பு என பன்ரொட்டி அலற,
ஓவரா நடிக்காதல என பன்ரொட்டியின் தோள்களில் கைபோட்டு இறுக்கி எகிற , இருவரும் ஹாஹா என சிரித்து கொண்டும் விளையாடிக்கொண்டும் சென்றனர்.
***************************************************
என்னக்கா இன்னும் உன் ஆள காணோம் என கேட்டுகொண்டேய வாசலில் காத்திருந்த பரியாவின் அருகில் அமர்ந்தாள் ப்ரியா.
பின்ன அந்த பவனஜ் மாதிரி பத்ரா வெட்டியாவா இருக்காரு . அவர் போலீஸ் டி நிறைய வேலை இருக்கும் என தேவையில்லாமல் ஊடாலே இழுத்தாள். அவளின் பத்ராவின் நினைவை மறக்க செய்யும் பவனஜை வெறுத்தாள் .
அவளை ஒருமார்கமாய் பார்த்த ப்ரியா , அக்கா நீ பத்ரா பத்ரா னு சொல்றியே அவர் இதுவரைக்கும் உன்கிட்ட நேருக்குநேரா எதாவது பேசிர்காரா என கேட்டாள்.
பரியா யோசனையுடன் இல்லை என தலையாட்ட ,
அக்கா எனக்கு நிறைய விஷயங்கள் ரொம்ப குழப்பமா இருக்கு கா . நீ அவசரப்பட்டு எப்பவோ சின்னவயசுல நடந்தத வச்சி அது இப்போ காதலா மாறிடிச்சினு சொல்ரியோ .நீ யே நல்லா யோசி கா .
என்ன ப்ரி குட்டி நீயே இப்டி சொல்ற என சோகமானவள் , ப்ரி நான் அந்த ஒரு சம்பவத்த மட்டும் சொல்லலைடா . ம்ம்ம் நீ சொல்லு நம்ப அம்மா நான் சொன்ன எதுக்குமே மொதல்ல ஒத்துக்காதவங்க அப்றம் எல்லாத்தையுமே நடத்திக்குடுத்தாங்க எப்படி??
அதான நான் கூட கேப்பனே , இதுக்கு நீங்க மொதல்ல ஒத்துர்க்கிட்டிருக்கலாமேனு , அப்பா கூட சொல்றவங்க சொன்னா தான் மா உங்க அம்மா கேப்பாங்கனு .
அதேதான் ப்ரிகுட்டி , ஒவ்வொருவாட்டியும் அவங்க இங்க பேசுனதுகப்ரும் தான் ஒத்துக்கிட்டிருக்காங்க . இங்க என்னோட படிப்பை பதிலாம் பேசுறதுனா அது பத்ராவா தான இருக்கணும் . அதுவுமில்லாம ஒவ்வொரு வருஷம் என் பிறந்தநாள் அப்பவும் அவங்க எனக்காக துணி எடுத்து அனுப்புவாங்க . அம்மா கூட சொல்லுவாங்களே பவன் கண்ணா எடுத்து அனுப்பிருக்கானு என கண்கள் மின்ன சொன்னாள்.
தங்கையிடம் சொன்னது பாதி தான் இன்னும் நிறைய இவளுக்கே இவளுக்கென்று அவன் அனுப்பிருக்கிறான் . ஒவ்வொரு பரிட்சைக்கு அவனிடமிருந்து வாழ்த்து அட்டை அவளிற்கு வந்துவிடும்.
போனமுறை யுபிஎஸ் க்கு அவனிடமிருந்து வாழ்த்து வரமால் போக அதை பற்றிய நினைவில் அவளால்
சரியாக எழுதமுடியாமல் போக அதில் தேறவில்லை .
ஏனோ மனதால் நெருக்கமாய் இருந்தாலும் , அவன் காவல்துறையில் சேர்ந்தபின் அவனை பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தேடித்தேடி பார்த்தாலும் ஒருமுறை கூட நேரில் பார்க்கமுடியவில்லை .
இந்தமுறை எப்படியும் பார்த்துவிடவேண்டுமென்று தான் பிரபு நேற்று இரவு கால் செய்ததிலிருந்தே யோசித்திருந்தவள் , அங்கு அவர்களது நண்பன் பரத் செய்த சிறுகுளறுபடியை கிளறி சண்டையிட்டு கிளம்பினாள் .
ஊருக்கு சென்றபின் அவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனதினுள் இத்தனை நேரமாய் பேசிக்கொண்டிருந்தவள் ப்ரியாவின் அமைதியில் அவள் புறம் திரும்பினாள் .
என்ன ப்ரிக்குட்டி ! இன்னும் என்ன ? சரி அப்படியே அவர் என்னை விரும்பாலனாலும் இப்போ என்ன ஆகபோது ?.
அப்பா அன்னிக்கு போன்ல சொன்னது நியாபகம் இல்லையா .எப்படியும் அவங்க அண்ணண் பையனுக்கு தான் என்னை கட்டிகுடுப்பாங்கனு சொன்னாருல்ல . அதுமட்டுமில்லை நான் அவங்க அண்ணன் பையன விரும்பறது அப்பாக்கும் தெரியும் சோ டோன்ட் ஒர்ரி .
அச்சோ அக்கா இப்போ என்னோட ஒர்ரியே அந்த அண்ணன் பையன் யாருன்றதுதான் . எனக்கு தெரிஞ்சவரைக்கும் அம்மா எப்பவும் வஜ்ரநாகா மாமாவ விட கோதண்டநாக மாமா பத்திதான் அதிகம் பேசுவாங்க . இப்போ ரெண்டு பேருக்கும் பையன் இருக்க பட்சத்துல உன்னை எப்படி பவன்புத்ராக்கு குடுப்பாங்க .
இதற்க்கு பரியா பதிலை யோசிப்பதற்குள் , கப்பீஷ்வர் பத்ரா என அழைத்து பேசும்குரல் கேட்டது.
அங்கு செல்லும் அவசரத்தில் , அதுக்கென்ன ப்ரிக்குட்டி அதான் நீ அந்த பவனஜை விரும்புரியே சோ ப்ரோப்லேம் சால்வ்ட் என சொல்லி சிட்டாய் பறந்தாள்.
அடியாத்தி நான் விளையாட்டை சொன்னதை இவ உண்மைன்னு நினைச்சிட்டாலோ . அந்த பவனஜ் கண்ணு முழுக்க உன் மேல தான இருக்கு என்ற அக்கா என எண்ணிகொண்டே அவளும் பரியாவின் பின் சென்றாள்.
அங்கு காவலதிகாரி உடையில் பவன்புத்ரா சௌந்தரமாளின் மடியில் தலைவைத்தவாறு கப்பீஷ்வருடன் பேசிக்கொண்டிருந்தான் .
பரியாவோ தன்னவனை பார்த்த சந்தோஷத்தில் சிலையாய் நின்றிருந்தாள் . அதுவும் காற்றில் அலைபாயும் அவனின் முடியை சௌந்தரம்மாள் கோதிக்கொண்டிருக்க அவரை எழுப்பி அங்கு அவருக்கு பதில் தான் அவனை மடியேந்த மாட்டோமா என்ற ஏக்கம் மனதில் ப்ரவாகமெடுத்தது .
பலமுறை அவனை புகைப்படங்களில் கண்டதாலோ ஏனோ புதிதாய் பார்ப்பதுபோல் அவளுக்கு தோண்றவே இல்லை.
அப்பொழுது அங்கு வந்த முனியன் , என்ற மவளுக்கு மேலுக்கு முடிலனு என்ற பொஞ்சாதி சொல்லிவுற்றுக்காமா . பெரிய அத்தா ஒருவார்த்தை சொன்னிங்கன்னா இந்தா போய் ஹாஸ்பத்திரில காட்டிட்டு சட்டுனு வந்துபுடுவேன் மா என பணிவாய் கேட்டவாறு நின்றான்.
ஏன் முனியண்ணன் ! பொண்ணுக்கு உடம்பு சரிஇல்லன்ரிங்க மொதல்ல கிளம்புங்க நீங்க .அதுலாம் ஒடனே வரவேணாம் நீங்க கூடவே இருங்க என்ற பவன்புத்ரா உள்ளே சென்று சிறுபணமும் எடுத்துவந்து கொடுத்தான் .
அதில்ல தம்பி ! பெரிய ஆத்தா ஜட தைச்சி தரணும்னு சொல்லிருந்தாங்க என தயங்க , தன் அப்பத்தாவை ஓர் பார்வை பார்த்தவன் ஜட தான அத அப்றம் தைச்சிக்கலாம் நீங்க போய் புள்ளைய பாருங்க என்றான்.
அவர் சென்றபின் சௌந்தரம்மாளின் புறம் திரும்பியவன் , ஏன் அப்பத்தா இந்த வயசுல உனக்கு ஜட கேக்குதா என கண்களை உருட்ட ,
அப்படி கேளுடா பேராண்டி , கிழவிக்கு 16 வயசுன்னு நினைப்பாக்கும் என கப்பீஷ்வரும் இடையில் நுழைந்தார் .
அப்பொழுதுதான் அங்குவந்திருந்த பரியா மற்றும் ப்ரியாவை பார்த்த சௌந்தரம்மாள் , ஏன் கண்ணுங்களா அங்கனவே நிக்குறீக இங்க வாங்க என்றழைத்தவர் ,
ஏம்ல என்னய பார்த்த இந்தவயசுலையும் ஜட வச்சிக்கிட்டு திரியுர மாதிரியால தெரியுது . நம்ப பத்ரா கண்ணு அந்த வசந்தி பொண்ணு வச்சிருந்தத அம்புட்டு ஆசையா பார்த்துது.
அதான் முனியன கூப்டு தச்சுத்தர சொன்னேன் . பரி கண்ணு நான் உனக்கு வேற யார்கிட்டேனா சொல்லி தச்சிதாரேன் கண்ணு என்றார்.
அவரை தடுத்த பரியா , இல்லை அம்மாயி பரவால்ல இருக்கட்டும் என்றவளின் பார்வையோ பவன்புத்ராவிடம்.
அவனும் அவளை தான் பார்த்திருந்தான் .
சிறிதுநேரம் அங்கிருந்தபின் மீண்டும் கோதண்டநாக வின் வீட்டிற்கு வந்தார்கள் பரியாவும், ப்ரியாவும்.
அக்கா ஏன் வேண்டாம்னு சொன்ன ஜட வச்சிகணும்னு அவ்ளோ ஆசையா இருந்த.
ஆமா இப்பவும் ஆசையா தான் இருக்கு வச்சிக்கவும் போறேன் தான்.
ஆனாஅக்கா அம்மாயி கிட்ட வேணாம்னு சொன்னியே.
அம்மாயிகிட்ட தான சொன்னேன் . அங்க தான் என் பத்ரா இருந்தாரே. என்னோட எல்லா ஆசையையும் நிறைவேத்துறவரு இந்த ஆசைய மட்டும் எப்படி விடுவாரு என தங்கை பார்த்து கண்ணடித்தவள் ,
நீ வேனா பாரு ப்ரிக்குட்டி நாளைக்கு காலையில எனக்கு ஜட தயாரா இருக்கும் . சரி நான் போய் கனவுல என் ஆள மீட் பண்ணனும் டாடா என சொல்லி சென்றாள்.
மறுநாள் தன் கதிர்களை உலகம் முழுவதும் பரப்பிகொண்டு மெதுவாய் தன் துயில்களைந்து எழுந்தான் கதிரவன்.
அக்கா அக்கா என ப்ரியா உலுக்க, என்னடி என அழுத்துகொண்டே எழுந்தாள் பரியா.
அங்க பாரு என என ப்ரியா காட்ட அங்கு திரும்பி பார்த்தவளின் கண்கள் விரிய , இதழ்களோ மகிழ்ச்சியில் சிறிதாய் மாதுளை சுளை போல் திறந்திருக்க முகம் விகசித்தது .
அவர்கள் முன் ..... வில்லை வைத்து அதை சுற்றி கனகாம்புறமும் , அதன் கீழ் சிறிது சிறிதாய் மணம் பரப்பும் மல்லியும் என அழகாய் ஒருமாற்றி ஒன்று என தைத்துக்கட்டிருந்த ஜடை அவர்களிடம் என் அழகை பார் என்பது போல் சுவற்றில் மாட்டி இருந்தது.
-பண்ணிடுவோம் .