வணக்கம் தோழமைகளே...
நிறைய கதைகள் பேசும் இத்தளத்தில் கதைகளைப் பற்றிப் பேசியுள்ளீர்களா?
(நெசமாவே தெரியாமத்தான் கேக்குறேன்! நான் முன்னெடுக்க விரும்புவதைப் போன்ற உரையாடல்கள் இதற்கு முன் இங்கு நிகழ்ந்திருந்தால் அருள்கூர்ந்து எனக்குச் சொல்லுங்கள்... அவற்றையும் படித்துவிட்டுத் தொடர்கிறேன்!)
கதை என்றால் என்ன? அதன் வடிவம் என்ன? எது கதை? எது நல்ல கதை?
இப்படியான வினாக்களை சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா?
(அதிலும் அந்தக் கடைசி கேள்வி ரொம்ப ஆபத்தானது! அதனை ஜாக்கரதையாகக் கையாள வேண்டும்! (நாம் சாதரணமாகக் கையாளும் இந்த ‘ஜாக்ரத்’ என்ற வடமொழிச் சொல் வேதத்திலேயே இருக்கிறது! நான் இப்படித்தான், அடிக்கடி ‘டீவியேட்’ ஆவேன், மன்னிச்சூ...!))
இங்கே பலர் அநாயசமாக (இது சமற்கிருதச் சொல்! ‘ஆயசம்’ பெருமுயற்சி, கடினமாகச் செய்யப்படுவது, அநாயசம் அதன் எதிர்பதம், எளிதாகச் செய்வது! ஆங்கிலத்தில் ‘கேக் வாக்’, ‘சைல்ட்ஸ் பிளே’ என்பார்களே? அது போல!) கதைகளை எழுதிவிடுகிறார்கள்.
அவர்களின் ஜீன்ஸிலேயே சுவாரசியமாகக் கதை சொல்லும் வித்தை ஒளிந்திருக்கிறதோ? (ஜீன்ஸ் - இரண்டு வாரம் துவைக்காமல் அணியும் ஆடை அல்ல, நமது மரபணுக்கள்!)
ஆனால், கதையின் கதையை அலசியிருக்கின்றீர்களா?
மேலை நாடுகளில் இது குறித்த பாடங்கள், பட்டங்கள் கூட உள்ளன!
தமிழில்?
நான் முதன்முதலில் சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்றபோது (2003 என்று நினைக்கிறேன்!) வாங்கிய முதல் மற்றும் ஒரே நூல் ரா. கி. ரங்கராஜன் எழுதிய ‘எ.க.எ.’ (எப்படிக் கதை எழுதுவது) என்ற நூல்தான்!
சுஜாதா ‘எப்படிச் சிறுகதை எழுதுவது’ என்று ஒரு சிறுகதை எழுதியுள்ளார், ஆனால், அதில் சிறுகதை எழுதுவதற்கான பாடம் இல்லை! (ஆனால், அவரும் சில குறிப்புகள், விதிகள் கூறியுள்ளார்! அவரது ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்ற நூல் திரைக்கதை எழுதுவதைப் பற்றியதுதான்!)
ஜெயமோகனின் ‘நாவல் இலக்கணம்’ என்ற நூலை வாங்கி வைத்துள்ளேன் இன்னும் படிக்கவில்லை!
இதெல்லாம் இருக்கட்டும், நாம் நமக்குள் பேசுவோமா?
எழுதுதல், கதை / நாவல் குறித்த வரையறைகள், வடிவங்கள், வகைகள்... இப்படி நாம் நமக்குத் தெரிந்ததை இங்கே அலசுவோமா?
(இடையில் நான் எனக்கு மிகப் பிடித்த வகையான ‘அறிவியல் புனைவு’ பற்றியும் பேச விழைகிறேன்! அவ்வாறே நீங்களும் உங்கள் விருப்ப வகைகளைப் பற்றிப் பேசுங்கள்...)
‘நான் வெறும் வாசகி/கன்’ என்று இங்கு உள்நுழையும் அனைவருக்குள்ளும் கட்டாயம் ஏதோ ஒரு நாள் ஒரு கணத்தில் ’நாமும் ஒரு கதை எழுதிப் பார்த்தால் என்ன?’ என்ற பொறி தட்டும்... அதற்கான உந்துதல் நிச்சயம் நீங்கள்தான்! நான் முன்பு சொன்னதைப் போல ‘அநாயச’மாகக் கதைகள் எழுதும் இத்தளத்தின் கதாசிரியர்கள்தான்!
உந்துதலாய் இருந்து ‘எழுதலாம்’ என்ற பொறியைத் தட்ட வைத்த நீங்களே, அவர்களுக்கு இயல்பாய் எழும் அடுத்த வினாவான ‘எப்படி எழுதுவது’ என்பதற்கும் ஒரு விடையைக் கொடுக்க முயன்று பாருங்களேன்?
எச்சரிக்கை: ’நான் சொல்வதுதான் சரி’, ‘எனது வழிமுறை மட்டுமே நல்ல கதையை எழுத வைக்கும்’, ‘நான் எழுதுபவை / நான் சொன்னபடி எழுதுபவை மட்டுமே நல்ல கதை, அதுவே இலக்கியம்’ என்றெல்லாம் போகும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது! நம் தளத்தின் எழுத்தாளர்கள் அப்படிச் செல்லமாட்டார் என்று எனக்கு நூறு சதவீதம் உறுதியாகத் தெரியும். இருந்தாலும், ஏதோவொரு கட்டத்தில் யாரோ ஒருவர் சொல்வது வேறு யாரோ ஒருவருக்கு அப்படித் தோன்றிவிடக் கூடாதல்லவா? அதற்குத்தான் இது!
இங்கே அலசப்படுபவை அவரவர் சொந்தக் கருத்துகள், துய்ப்பின் பாடங்கள்... இதில் சரி தவறு என்பதை எடைபோட நமக்கு உரிமையோ அதிகாரமோ இல்லை!
சரி சொல்லுங்கள், எப்படிக் கதை எழுதுகிறீர்கள்...?
நிறைய கதைகள் பேசும் இத்தளத்தில் கதைகளைப் பற்றிப் பேசியுள்ளீர்களா?
(நெசமாவே தெரியாமத்தான் கேக்குறேன்! நான் முன்னெடுக்க விரும்புவதைப் போன்ற உரையாடல்கள் இதற்கு முன் இங்கு நிகழ்ந்திருந்தால் அருள்கூர்ந்து எனக்குச் சொல்லுங்கள்... அவற்றையும் படித்துவிட்டுத் தொடர்கிறேன்!)
கதை என்றால் என்ன? அதன் வடிவம் என்ன? எது கதை? எது நல்ல கதை?
இப்படியான வினாக்களை சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா?
(அதிலும் அந்தக் கடைசி கேள்வி ரொம்ப ஆபத்தானது! அதனை ஜாக்கரதையாகக் கையாள வேண்டும்! (நாம் சாதரணமாகக் கையாளும் இந்த ‘ஜாக்ரத்’ என்ற வடமொழிச் சொல் வேதத்திலேயே இருக்கிறது! நான் இப்படித்தான், அடிக்கடி ‘டீவியேட்’ ஆவேன், மன்னிச்சூ...!))
இங்கே பலர் அநாயசமாக (இது சமற்கிருதச் சொல்! ‘ஆயசம்’ பெருமுயற்சி, கடினமாகச் செய்யப்படுவது, அநாயசம் அதன் எதிர்பதம், எளிதாகச் செய்வது! ஆங்கிலத்தில் ‘கேக் வாக்’, ‘சைல்ட்ஸ் பிளே’ என்பார்களே? அது போல!) கதைகளை எழுதிவிடுகிறார்கள்.
அவர்களின் ஜீன்ஸிலேயே சுவாரசியமாகக் கதை சொல்லும் வித்தை ஒளிந்திருக்கிறதோ? (ஜீன்ஸ் - இரண்டு வாரம் துவைக்காமல் அணியும் ஆடை அல்ல, நமது மரபணுக்கள்!)
ஆனால், கதையின் கதையை அலசியிருக்கின்றீர்களா?
மேலை நாடுகளில் இது குறித்த பாடங்கள், பட்டங்கள் கூட உள்ளன!
தமிழில்?
நான் முதன்முதலில் சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்றபோது (2003 என்று நினைக்கிறேன்!) வாங்கிய முதல் மற்றும் ஒரே நூல் ரா. கி. ரங்கராஜன் எழுதிய ‘எ.க.எ.’ (எப்படிக் கதை எழுதுவது) என்ற நூல்தான்!
சுஜாதா ‘எப்படிச் சிறுகதை எழுதுவது’ என்று ஒரு சிறுகதை எழுதியுள்ளார், ஆனால், அதில் சிறுகதை எழுதுவதற்கான பாடம் இல்லை! (ஆனால், அவரும் சில குறிப்புகள், விதிகள் கூறியுள்ளார்! அவரது ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்ற நூல் திரைக்கதை எழுதுவதைப் பற்றியதுதான்!)
ஜெயமோகனின் ‘நாவல் இலக்கணம்’ என்ற நூலை வாங்கி வைத்துள்ளேன் இன்னும் படிக்கவில்லை!
இதெல்லாம் இருக்கட்டும், நாம் நமக்குள் பேசுவோமா?
எழுதுதல், கதை / நாவல் குறித்த வரையறைகள், வடிவங்கள், வகைகள்... இப்படி நாம் நமக்குத் தெரிந்ததை இங்கே அலசுவோமா?
(இடையில் நான் எனக்கு மிகப் பிடித்த வகையான ‘அறிவியல் புனைவு’ பற்றியும் பேச விழைகிறேன்! அவ்வாறே நீங்களும் உங்கள் விருப்ப வகைகளைப் பற்றிப் பேசுங்கள்...)
‘நான் வெறும் வாசகி/கன்’ என்று இங்கு உள்நுழையும் அனைவருக்குள்ளும் கட்டாயம் ஏதோ ஒரு நாள் ஒரு கணத்தில் ’நாமும் ஒரு கதை எழுதிப் பார்த்தால் என்ன?’ என்ற பொறி தட்டும்... அதற்கான உந்துதல் நிச்சயம் நீங்கள்தான்! நான் முன்பு சொன்னதைப் போல ‘அநாயச’மாகக் கதைகள் எழுதும் இத்தளத்தின் கதாசிரியர்கள்தான்!
உந்துதலாய் இருந்து ‘எழுதலாம்’ என்ற பொறியைத் தட்ட வைத்த நீங்களே, அவர்களுக்கு இயல்பாய் எழும் அடுத்த வினாவான ‘எப்படி எழுதுவது’ என்பதற்கும் ஒரு விடையைக் கொடுக்க முயன்று பாருங்களேன்?
எச்சரிக்கை: ’நான் சொல்வதுதான் சரி’, ‘எனது வழிமுறை மட்டுமே நல்ல கதையை எழுத வைக்கும்’, ‘நான் எழுதுபவை / நான் சொன்னபடி எழுதுபவை மட்டுமே நல்ல கதை, அதுவே இலக்கியம்’ என்றெல்லாம் போகும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது! நம் தளத்தின் எழுத்தாளர்கள் அப்படிச் செல்லமாட்டார் என்று எனக்கு நூறு சதவீதம் உறுதியாகத் தெரியும். இருந்தாலும், ஏதோவொரு கட்டத்தில் யாரோ ஒருவர் சொல்வது வேறு யாரோ ஒருவருக்கு அப்படித் தோன்றிவிடக் கூடாதல்லவா? அதற்குத்தான் இது!
இங்கே அலசப்படுபவை அவரவர் சொந்தக் கருத்துகள், துய்ப்பின் பாடங்கள்... இதில் சரி தவறு என்பதை எடைபோட நமக்கு உரிமையோ அதிகாரமோ இல்லை!
சரி சொல்லுங்கள், எப்படிக் கதை எழுதுகிறீர்கள்...?
(தொடர்வோம்!)