ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று எளிது, ஒவ்வொன்று கடிது, தோழி...
நான் இப்போது எழுதும் குறுநாவல் வசனமாகவேதான் செல்கிறது! எனக்கு விவரணையில் கதையை நகர்த்துவது கடினமாக இருக்கிறது!
சரி, நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன், முயன்று பார்த்துவிட்டு வேலை செய்ததா எனச் சொல்லுங்கள்:
வசனம் அமைக்க முதலில் காட்சியில் உரையாடும் கதைமாந்தரின் ‘இயல்பை’ (குணாதிசயம்) குழப்பமின்றி முடிவுசெய்துகொள்ளுங்கள்!
(இதற்குப் பல உத்திகள் உள்ளன: சில:
1. உங்களுக்குத் தெரிந்த நபர்களின் குணங்களை உங்கள் கதைமாந்தருக்குக் கொடுங்கள் (நான் சில கதைகளின் முதல்படியில் யாரை வைத்து ஒரு கதைமாந்தரை உருவாக்குகிறேனோ அவரின் பெயரையே வைப்பேன், பின்னர் மாற்றிக்கொள்வேன்! (பெயரை மாற்ற மறந்தால் சண்டை வரும்! எச்சரிக்கை!))
2. இணையத்தில் இன்னின்ன மாதம், இன்னின்ன இராசியில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற வரையறைகள் (அவை உண்மையோ பொய்யோ!) இருக்கு... அவற்றிலிருந்து உங்கள் கதைமாந்தருக்கு ஒரு பாத்திர படைப்பை உருவாக்கலாம்!
3. ஒரு அடிப்படை குணம் (கோவக்காரன், கலகலப்புப் பேர்விழி...) சில உபரி குணங்கள் என்று அமைத்துக்கொள்ளுங்கள்)
கதைமாந்தரின் இயல்பை முடிவு செய்த பின்னர், அக்காட்சியின் பின்னணி, அக்காட்சி கதையை எங்கு / எப்படி நகர்த்தப் போகிறது என்பதை தீர்மாணித்துக்கொள்ளுங்கள்.
இப்போது அக்காட்சியை உங்கள் கண்முன் ஓட்டிப் பாருங்கள்... உங்கள் கதைமாந்தர் அந்தச் சூழலில் என்ன பேசுவர், எப்படிப் பேசுவர் என்று கற்பனை செய்து பாருங்கள்... (இயன்றால் இடையிடையே குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்)
பின் வசனம் எழுதிப் பாருங்கள்!
நன்றி