• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏரிக்கரை 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் தங்கியதற்கு வாடகை செலுத்த முடியாத இடம் "தாயின் கருவறை " ....

ஏரிக்கரை 5 :

கேஸ் என்ன ஆயிற்று என்ற அரசுவின் கேள்விக்கு ...

முகில் , பாஸ் நம்ப போலீஸ்காரங்க ஒழுங்கா விசாரிக்கலைனு நான் சொன்னத நானே வாபஸ் வாங்கிக்குறேன்.

அரசு , டேய் என்னனு ஒழுங்கா சொல்லு .

முகில், பாஸ் தனித்தனியா விசாரிக்கும் போது 5 கேஸும் தற்கொலைதான்னு அடிச்சி சொல்ற மாதிரி தோனிச்சு ...ஆனால் எல்லா கேஸையும் விசாரிச்சுட்டு , இப்ப நீங்க சொல்ரதையும் கேட்க்கும் போது தான் எனக்கு சந்தேகம் வருது ஒருவேளை இது எல்லாம் கொலையா இருக்குமோனு .

அரசு , விசாரணையில் முக்கியமான விஷயம் எதுனா தெரிஞ்சிச்சா முகில் ??.

அதற்கு பதில் சொல்லாமல் அங்கு இருந்த போர்டின் அருகில் சென்று , ஏற்கனவே அரசு எழுந்திருந்ததின் கீழ் ,

7.குழந்தை


என்று எழுதினான்.

அரசு கேள்வியாய் பார்ப்பதை உணர்ந்து , பாஸ் நான் விசாரிச்ச வரைக்கும் இவங்க ஐந்து பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் தெரியாது, சொல்லப்போனா அவங்களுக்குள்ள எந்த சம்மதமும் இல்ல ....ஆனா எல்லோருக்கும் ஒத்து போறது ரெண்டே விஷயம்....ஒன்னு அவங்க எல்லோருமே பெண்கள். இன்னொன்னு அவங்களோட குழந்தை .

அரசு , குழந்தையா.

முகில் , ஆமாம் பாஸ் குழந்தை தான் . இந்த ஐந்து பேர் செத்ததுக்கும் காரணம் இந்த குழந்தைகள் தான்னு அவங்க வீட்ல இருக்கவங்க நினைச்சிருக்காங்க அதுனால தான் அவங்க போலீஸ் விசாரணையில் ஏதோ ஓர் காரணத்தை சொல்லி இது தற்கொலைனு அடிச்சி சொல்லிருக்காங்க அதுக்கு மேல கேசை விசாரிக்க அவங்க ஒத்துழைப்பும் கொடுக்கல .

அரசு , டேய் நீ என்ன பேசுறேன்னு உனக்கு புரியுதா .. குழந்தைங்க எப்படி இவங்க சாவுக்கு காரணம் னு சொல்ற .

முகில் , காரணம் இருக்கு பாஸ் இவங்க ஐந்து பேரும் இறக்குறதுக்கு சரியா ஒரு வாரத்துக்கு முன்னாடி ரெண்டு பேர் குழந்தை காணாம போயிருக்கு மூணு பேர் குழந்தை இறந்து போயிருக்கு .இதுதான் பாஸ் அவங்க எல்லோருக்கும் ஒத்து போற விஷயம் .

அரசு , என்ன ???அந்த குழந்தைங்களுக்கு எல்லாம் என்னாச்சின்னு விசாரிச்சியா ?

முகில் , பாஸ் அத பத்தி விசாரிக்கறதுக்கு தான் இவ்ளோ நேரம் ஆகிடிச்சி . போலீஸ் விசாரணையில தெரிஞ்சதுக்கும் இப்போ கிடைச்சிருக்கத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு என்று சிறிது நேர அமைதியின் பின் ...முதல் முதல நம்மளுக்கு கிடைச்சது அகல்யா என்னும் பெண்ணினுடைய உடல் .அந்த பொண்ணுக்கும் அவங்க புருஷனுக்கும் ஒரு வாரமாவே பிரச்சனை அதிகமா இருந்திருக்கு , அன்னிக்கு அங்க வீட்டுல நடந்த சண்டையில புருஷன் கிட்ட கோச்சிக்கிட்டு அந்த பொண்ணு குழந்தைய தூக்கிட்டு வெளில வந்து எங்க போறதுன்னு தெரியாம போயிருக்காங்க . ஒருவாரமா சரியா சாப்பிடாம இருந்ததுல கைல குழந்தையோட ரோட்ல மயங்கி விழ அப்போ அந்த வழியா வந்தவங்க உதவுனதுல மயக்கம் தெளிஞ்சி எழுந்திரிக்கும் போது அங்க குழந்தை இல்லையாம் பாஸ் .அவங்களுக்கு உதவுனங்கள விசாரிச்சப்போ அவங்க அங்க குழந்தை எதையும் பாக்கல சொல்றாங்க ... போலீஸும் எல்லா விதத்துலையும் தேடிட்டாங்க ஆனா குழந்தை கிடைக்கல ....இது நடந்து ஒரு வாரத்துல தான் இந்த பொண்ணு ஏரில கிடைச்சுது .

ரெண்டாவது கல்பனா ...இவங்க குழந்தை மூணு நாளா காய்ச்சல்ல அவதிபட்டத்துல பக்கத்தில இருந்த ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்க . ஆனாலும் குழந்தைக்கு சரி ஆகாம இறந்து போயிருக்கு .அவங்க சொந்தம் எல்லாம் அந்த ஹாஸ்பிடல்ல தான் சரியாய் டிரீட்மெண்ட் தரல அந்த பொண்ணு புள்ள இறந்த துக்கத்துல இப்டி பண்ணிடுச்சினு சொல்றாங்க .அந்த ஹாஸ்பிடல்க்கு கெட்ட பேர் வரக்கூடாதுன்னு இந்த பொண்ணு வயற்றுவலில இறந்திடிச்சினு அவ புருஷன மிரட்டி சொல்ல வச்சிருக்காங்க .

மூணாவது , பவித்ரா இவங்க தன்னோட புகுந்தவீட்ல ரொம்ப கொடுமைப்படுத்துனதுனால தற்கொலை பண்ணிகிட்டாங்கனு போலீஸ் பைல்லே இருக்கு ...ஆனா பாஸ்... விசாரிச்சதுல இவங்க புகுந்தவீட்டுகாரங்க ரொம்ப அப்பாவிங்க , இந்த பொண்ணு தான் அவங்கள கொடும பண்ணிருக்கும் போல குழந்தை பொறந்தா அழகு போயிடும்னு சொல்லிட்டு இருந்த பொண்ணு கர்ப்பமான அப்போ அந்த குழந்தையை அழிகிறதுக்கு என்ன என்னமோ பண்ணிருக்கு. ஆனாலும் அவங்க புருஷன் சம்மதிக்காததுனால ஒன்னும் பண்ண முடில.. அப்போல இருந்தே குழந்தை மேல வெறுப்பு அதிகமாகி பிறந்த குழந்தைக்கு பால் கூட கொடுக்காம இருப்பாங்களாம் ஒரு நாள் வீட்ல யாரும் இல்லாதப்ப இப்டி தான் நடந்துருக்கு, குழந்தைக்கு அழுத்தழுது வலிப்பு வந்து இறந்துருக்கு .

இவன் சொல்வதை அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த அரசு நடுங்கிய குரலில் என்னடா சொல்லுற அந்த கு..குழந்தை ...எப்படிடா பெத்த தாய் இப்படி பண்ணுவாங்க சே...இதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் தன் குழந்தைக்காக இறந்தாங்கன்னா இந்த பொண்ணு தானே தன் குழந்தைய கொன்னுருக்கு.. ஆம் முகில் , என்ன பொறுத்தவரைக்கும் இது கொலை தான் .ஆனா நீ சொல்றத பார்குறப்ப முன்னாடி ரெண்டும் தற்கொலைனு ஒத்துக்கிட்டாலும் , இந்த பொண்ணு மட்டும் தற்கொலை பண்ணியிருப்பான்றது நம்ப முடிலயே .

முகில் , சரிதான் பாஸ் இந்த பொண்ணோட அப்பா *****கட்சியை சேர்ந்தவராம் அவர் தன் பொண்ணு பேர கெடுக்க கூடாதுனு அவ புகுந்தவீடுமேல கேச திருப்பி விட்ருக்காரு .

அரசு , ம்ம்ம் சரி மீதி ரெண்டு கேஸ் என்னாச்சி ??

முகில், நாலாவது கவிதா இவங்க கேஸ்ல போலீஸ் பைல்ல இருக்கிறது சரி தான் பாஸ் . குழந்தை விளையாடும்போது அங்கிருக்க தண்ணித்தொட்டில விழுந்துருக்கு... இவங்க குழந்தை வெளிய விளையாடுதுனு நினைச்சி வீட்டுக்குள்ள வேலையா இருந்திருக்காங்க .குழந்தை சாவுக்கு காரணம் தன் கவன குறைவு தான்னு நினைச்சி இப்டி ஒரு முடிவு .


கடைசியா மிஸஸ்.சுஜீத்ரா சுரேந்தர் இவங்க குழந்தையும் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் காணாம போயிருக்கு .அந்த குழந்தையை பத்தி போலீஸ் விசாரிச்சிட்டு இருக்காங்க பாஸ் .

அரசு , டேய் நீ சொல்றதெல்லாம் கேக்கறப்போ எனக்கே இதுலாம் தற்கொலை தானான்னு சந்தேகம் வந்துடிச்சி .ஆனா அந்த மூணாவது பொண்ணு , அப்றம் அந்த காயங்கள் அது தான் இடிக்குது .

சிறிது நேரம் யோசித்த அரசு , அப்போ இந்த கொலைகளுக்கும் அவங்களோட குழந்தைகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு சொல்ற ரைட் .
ஓகே முகில் இப்போ நம்ப கேச எப்படி மூவ் பண்ணனும்னு உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் .நடக்கிறது கொலையா இருந்தா இதெல்லாம் செய்யுறவன் யாருனு நம்ப கண்டு பிடிச்சே ஆகணும் . அவன் இனியும் இத தொடருவான்னு என் உள்மனசு சொல்லுது .... முகில் நீ சொன்னமாதிரி இந்த கொலைகளெல்லாம் இணையுற புள்ளி குழந்தையா இருகுற பட்சத்துல இதுவரைக்கும் காணாம போன அத்தனை குழந்தைங்கள பத்தின பைலும் சரியா இருபத்திநாலு மணி நேரத்துகுள்ள என் டேபிள்க்கு வந்தாகணும் .காமன் குயிக் ....நம்ப கிட்ட அதிக நேரம் இல்ல .முக்கியமா போன வாரத்துல காணாம போன குழந்தைகள பத்தின டீடெயில்ஸ் இன்னும் ரெண்டு மணி நேரத்துல எனக்கு தெரிஞ்சாகணும் .


முகில், பாஸ் அது என்ன ஒரு வார கணக்கு .

புன்னகைத்த அரசு, முகில் இந்த கேஸ்ல நீ முக்கியமானது குழந்தைகள்னு சொன்னல அதுல இதையும் சேர்த்துக்கோ ...ஒரு வாரம் ....இந்த ஐந்து கேஸ்லையும் அந்த குழந்தைங்க காணமாவோ இல்ல இறந்தோ போய் சரியா ஒரு வாரத்துல அந்த குழந்தையோட அம்மாக்கள் அந்த ஏரில நமக்கு பிணமா கிடைச்சிருக்காங்க .இதுவரைக்கும் நடந்தது எல்லாம் கொலையா இருந்தா அந்த கொலைகாரன் அடுத்து யாரை கொல்லணும்னு இந்நேரம் முடிவெடுத்துருப்பான் . ஸோ அவன் கொல்றதுக்கு முன்னாடி அது யாருனு நம்ப கண்டுபிடிச்சாகனும்.

முகில் , பாஸ் இப்போ தான் புரியுது நீங்க ஏன் எனக்கு பாஸா இருக்கீங்கன்னு ...இத நான் யோசிக்கவே இல்ல இப்பவே எல்லா போலீஸ் ஸ்டேஷன்க்கும் இன்போர்ம் பண்ணிட்றேன் .

.................................................................



சென்னையின் ஏதோ ஓர் மூலையில் உள்ள வீட்டினின் உள்ளே ,, எட்டு மாத குழந்தையை தன் மடியில் கிடத்தி அதன் நெஞ்சை நீவி கொண்டிருந்தவனின் விழிகளில் பாசம் வழிந்தது . அக்குழந்தையை தூக்கி தன் மார்போடு அனைத்து கொண்டவனின் இதழ்கள் என்றோ கேட்ட ஒரு பாடலை இன்று முனுமுனுத்தது .

" யாரோடு யாரோ
இந்த சொந்தம் என்ன பேரோ
நேற்று வரை நீயும் நானும்
யாரோ யாரோ தானோ
ஒர் ஆளில்லா வானில்
கருமேகங்களின் காதல்
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ
வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ
இது என்ன மாயம்
சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ
நதி வந்து கடல்மீது சேரும்போது
புயல் வந்து மலரோடு மோதும்போது
மழை வந்து வெயிலோடு கூடும்போது
யாரோடு யாருமிங்கே
(வஞ்சம் கொண்ட நெஞ்சம்)
இதயங்கள் சேரும்
நொடிக்காக யாரும்
கடிகாரம் பார்ப்பது இல்லையே
நீரோடு வேரும்
வேரோடு பூவும்
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே
ஓர் உறவும் இல்லாமல்
உணர்வும் சொல்லாமலே
புது முகவரி தேடுதோ
வாய்மொழியும் இல்லாமல்
வழியும் சொல்லாமல்
பாசக்கலவரம் சேர்க்குதோ
ஒரு மின்மினியே
மின்சாரத்தை தேடிவரும்போது
என்ன நியாயம் கூறு
விதிதானே

பறவைக்கு காற்று…"


பாசம் அது உறவுமுறையில் வருவதல்ல...
என்மடியின் பாதுகாப்பை உணர்கையில் நீயும்....
உன்னை உரிமையாய் என் நெஞ்சம் சாய்க்கும் வேளையில் நானும்...
உணர்ந்துகொள்வதே

அது!!!



இன்று பாசத்தில் பளப்பளக்கும் கண்களா அன்று வேட்டையாடும் சிறுத்தையாய் பளபளத்தது ???
------------------------------------------
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top