அவ்வளவு தான்
ஒரே ஒரு அழுகை தான்...
அந்த அழுகையை வெளியே
தள்ளிவிட்டால் இந்த
நடைபிண வாழ்க்கையில்
இருந்து வெளியே வந்துவிடலாம்....
இப்படி இந்த உலகத்தோடு
எந்த பற்றுதலுமின்றி கிடக்கும்
தன் சலனமற்ற மனதை
சமன் செய்துவிடலாம் என எண்ணி அழுவதற்கான காரணங்களை எல்லாம் தேடிக் கொண்டு இருந்தாள் அவள்....
பிரியத்தின் எச்சங்களாக
மிஞ்சி இருக்கும் நினைவு
வடுக்களை எல்லாம் தன்
கோர நகத்தால்
முதலில் கீறி விட்டாள்....
ஆனால் உள்ளம் வலித்ததே
தவிர அழுகை வரவில்லை....
காலத்தால் உறைந்துப் போன
புகைப்படங்களை எல்லாம்
மீண்டும் எடுத்துப் பார்த்தாள்
ஆனால் கைகள் தடுமாறியதே
தவிர அழுகை வரவில்லை....
கடைசியாக அவனால் சொல்லப்பட்ட அந்த
பிரிவுபரச்சார வார்த்தையை
மீண்டும் நினைவிற்கு
கொண்டு வந்தாள்...
ஆனால் இதயம் துடித்ததே தவிர
அழுகை வரவில்லை...
அழுகை வரவில்லை என்பதே
அவளை இப்போது பெரும்
மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது...
அவளுக்கு தேவை ஒரு பேரழுகை...
அவள் இப்போது வெடித்து அழ வேண்டும்...
மனதில் இருக்கும் தன் கவலைகளை எல்லாம்
சொல்லி கத்தி அழ வேண்டும்...
நடவாது முடிந்த போன
கனவுகளை எல்லாம்
நினைத்து ஏங்கி அழ வேண்டும்...
உள்ளே இருக்கும் மனதின் குமுறல்களை எல்லாம்
கண்ணீரில் தள்ளிவிட்டு
ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட வேண்டும்...
ஆனால் ஏனோ கண்களில்
கண்ணீர் சுரக்கவில்லை....
மனம் காயப்பட்டால் ரணப்பட்டால்
அழுகை வரவேண்டும் தானே
ஆனால் மனமே தகர்ந்துவிட்டால்
அது மரத்துப் போய் விடும்
என அவளுக்கு அப்போது தெரியவில்லை...
இதுவரை துன்பம் என்றால்
அழுவது என்று மட்டுமே நினைத்து இருந்தவளுக்கு அப்போது தான் ஒரு பெரும் உண்மை புரிந்தது...
நிஜத் துன்பம் என்பது
மனம் மரத்துப் போய்
கண்ணீர் வராமல்
எதன் மீதும் நாட்டமில்லாமல்
எதுவும் தன்னை பாதிக்காமல்
வெறுமனே வானத்தைப்
பார்த்துக் கொண்டு இருப்பதென்று...
துன்பத்திற்கு அழுகை மருந்து
என்று அவளுக்கு தெரியும்...
ஆனால் நிஜ துன்பத்திற்கு
யாராவது மருந்தைக் கண்டுபிடியுங்களேன்...
ஒரே ஒரு அழுகை தான்...
அந்த அழுகையை வெளியே
தள்ளிவிட்டால் இந்த
நடைபிண வாழ்க்கையில்
இருந்து வெளியே வந்துவிடலாம்....
இப்படி இந்த உலகத்தோடு
எந்த பற்றுதலுமின்றி கிடக்கும்
தன் சலனமற்ற மனதை
சமன் செய்துவிடலாம் என எண்ணி அழுவதற்கான காரணங்களை எல்லாம் தேடிக் கொண்டு இருந்தாள் அவள்....
பிரியத்தின் எச்சங்களாக
மிஞ்சி இருக்கும் நினைவு
வடுக்களை எல்லாம் தன்
கோர நகத்தால்
முதலில் கீறி விட்டாள்....
ஆனால் உள்ளம் வலித்ததே
தவிர அழுகை வரவில்லை....
காலத்தால் உறைந்துப் போன
புகைப்படங்களை எல்லாம்
மீண்டும் எடுத்துப் பார்த்தாள்
ஆனால் கைகள் தடுமாறியதே
தவிர அழுகை வரவில்லை....
கடைசியாக அவனால் சொல்லப்பட்ட அந்த
பிரிவுபரச்சார வார்த்தையை
மீண்டும் நினைவிற்கு
கொண்டு வந்தாள்...
ஆனால் இதயம் துடித்ததே தவிர
அழுகை வரவில்லை...
அழுகை வரவில்லை என்பதே
அவளை இப்போது பெரும்
மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது...
அவளுக்கு தேவை ஒரு பேரழுகை...
அவள் இப்போது வெடித்து அழ வேண்டும்...
மனதில் இருக்கும் தன் கவலைகளை எல்லாம்
சொல்லி கத்தி அழ வேண்டும்...
நடவாது முடிந்த போன
கனவுகளை எல்லாம்
நினைத்து ஏங்கி அழ வேண்டும்...
உள்ளே இருக்கும் மனதின் குமுறல்களை எல்லாம்
கண்ணீரில் தள்ளிவிட்டு
ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட வேண்டும்...
ஆனால் ஏனோ கண்களில்
கண்ணீர் சுரக்கவில்லை....
மனம் காயப்பட்டால் ரணப்பட்டால்
அழுகை வரவேண்டும் தானே
ஆனால் மனமே தகர்ந்துவிட்டால்
அது மரத்துப் போய் விடும்
என அவளுக்கு அப்போது தெரியவில்லை...
இதுவரை துன்பம் என்றால்
அழுவது என்று மட்டுமே நினைத்து இருந்தவளுக்கு அப்போது தான் ஒரு பெரும் உண்மை புரிந்தது...
நிஜத் துன்பம் என்பது
மனம் மரத்துப் போய்
கண்ணீர் வராமல்
எதன் மீதும் நாட்டமில்லாமல்
எதுவும் தன்னை பாதிக்காமல்
வெறுமனே வானத்தைப்
பார்த்துக் கொண்டு இருப்பதென்று...
துன்பத்திற்கு அழுகை மருந்து
என்று அவளுக்கு தெரியும்...
ஆனால் நிஜ துன்பத்திற்கு
யாராவது மருந்தைக் கண்டுபிடியுங்களேன்...