வேகமாக ஓடிக் கொண்டு
இருக்கும் மனமே,
கொஞ்சம் உன் ஓட்டத்தை
நிறுத்தி திரும்பிப் பார்...
இலக்கை அடைய நினைத்து
நீ வெறும் தூரத்தை தான்
கடந்து கொண்டு இருக்கிறாய்...
நீ பிரயாணப்படவில்லை
வெறுமனே ஓடிக் கொண்டு இருக்கிறாய்...
கடப்பதற்கும் நடப்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறது...
நீ ஒரு பாதையை வேகமாக
கடக்கும் போது இலக்கு மட்டும்
தான் தெரியும்...
மாறாக நடந்து பார்,
இது வரை உன் கண்களுக்கு
அகப்படாத மலரின் தலையசைப்பு தெரியும்...
பாதையின் எழில் தெரியும்...
காற்றின் ஈரப்பதம் புரியும்...
மெதுவாக நடந்து வந்துப் பார்...
வாழ்க்கையின் சின்ன சின்ன
சந்தோஷங்கள் அகப்படும்...
ஓடாதே மனமே பிரயாணப்படு...
கடக்காதே மனமே
வெறுமனே நட...
மெல்லிசையோடு உன் பயணம்
மெதுவாய் தொடரட்டும் பாதையின்
அழகை அசைப்போட்ட படி...
இருக்கும் மனமே,
கொஞ்சம் உன் ஓட்டத்தை
நிறுத்தி திரும்பிப் பார்...
இலக்கை அடைய நினைத்து
நீ வெறும் தூரத்தை தான்
கடந்து கொண்டு இருக்கிறாய்...
நீ பிரயாணப்படவில்லை
வெறுமனே ஓடிக் கொண்டு இருக்கிறாய்...
கடப்பதற்கும் நடப்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறது...
நீ ஒரு பாதையை வேகமாக
கடக்கும் போது இலக்கு மட்டும்
தான் தெரியும்...
மாறாக நடந்து பார்,
இது வரை உன் கண்களுக்கு
அகப்படாத மலரின் தலையசைப்பு தெரியும்...
பாதையின் எழில் தெரியும்...
காற்றின் ஈரப்பதம் புரியும்...
மெதுவாக நடந்து வந்துப் பார்...
வாழ்க்கையின் சின்ன சின்ன
சந்தோஷங்கள் அகப்படும்...
ஓடாதே மனமே பிரயாணப்படு...
கடக்காதே மனமே
வெறுமனே நட...
மெல்லிசையோடு உன் பயணம்
மெதுவாய் தொடரட்டும் பாதையின்
அழகை அசைப்போட்ட படி...
Last edited: