வழி மாறி போகவில்லை கௌதமா, நீ என்று அறிய,
வழிப்பாதையில் வந்த தோழியும் அறியவில்லை,
வழித்துணையாய் வந்த கயல்விழியும் அறியவில்லை,
வாசிக்க வந்த நாங்களும் அறியவில்லை - காரணம்
வஞ்சகமாய் ஆத்தர் வைத்த சஸ்பென்ஸ்
ஆத்தரே என்று அலறவா; கௌதமா என்று கத்தவா
அன்புள்ள அனாமிகா 12!
கௌதம் உடலாலும் உள்ளத்தாலும் நல்லவன் என்று உண்மையை உடைத்து மனம்குளிர வைத்ததற்கு மிக்க நன்றிகள்
மதுமதி பாசத்திற்காக தான் ஏங்கினாள் என்று தீர்மானமான யூகத்திலேயே கதையை படித்தேன்.ஆனால் அவர்களுக்குள் கல்லூரியில் மலர்ந்த காதலை அழகாக சுட்டிக்காட்டி எடுத்துரைத்த விதம் அருமை
எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான். மன்னிப்பு எல்லாவற்றிருகும் தீர்வு ஆகாது. நான் அதை மறுக்கவில்லை.ஆனால் இவர்கள் மனஸ்தாபத்தில், இருபக்கமும் நியாம்-அந்நியாயம் இருக்கிறது. அத்தனை தூரம் வந்த பெண்களை கோபம் குறையும் வரை திட்டித் தீர்த்திருக்கலாம். பின்பு அன்பாக பழகியிருக்கலாம்.
எதிர்காலத்தில் அவனே தவறு செய்தாலும், அவன் மனையாள் நிலாப்பெண் நிச்சயமாக அவனை சரியாக வழிநடத்துவாள் என்று உறுதியாக தெரிந்தபோதும் அவன் விலகி நிற்க எண்ணியது மனதிற்கு கொஞ்சம் கனமாக இருந்தது. நட்பில் மனஸ்தாபங்களும் அழகுதான் அல்லவா
(இது என் தனிப்பட்ட கருத்தே தோழி! தவறு என்றால் மன்னிக்கவும்)
மொத்தத்தில் கதை அருமை! வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்க்கையில் மலரும் நட்பை மிக அழகாக தந்துள்ளீர்.கதையின் தலைப்பு மிகவும் பொருத்தமானது. அட்டகாசமான படைப்பு.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.