ஹாய் பிரிண்ட்ஸ்,
"கண்ணனின் குரலோசை! ராதையின் இதழோசை!" கதைக்கு முதல் Teaser உடன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இதில் யாரு கண்ணன் யார் ராதை என்று நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க. உங்களோட கருத்துகளை மறக்காமல் பகிருங்கள்..
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
அவனின் அழுத்தமான காலடி ஓசை தன்னை நெருங்க அவளின் மனம் பந்தைய குதிரையின் வேகத்தில் ஓடத் தொடங்கியது. அவளின் அருகே சென்றவனின் கைகள் அவனின் அனுமதியின்றி அவளின் கன்னத்தைப் பதம் பார்த்தது..
“பாளர்” என்ற சத்தம் அங்கிருந்த அனைவரையும் கதிகலங்க செய்தது.. அவனின் கைகள் தன் கன்னத்தைப் பதம் பார்க்கும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. அவளோ கைகளால் கன்னத்தைப் பிடித்தபடியே சிலையென நின்றிருந்தாள். அந்தச் சத்தம்கேட்டு நிர்மலாவும், விஷ்ணுவும் அவனின் அறைக்கு வந்தனர்.
அவனிடம் இப்படியொரு கோபத்தை எதிர்பார்க்காதவன், “என்னோட கண் முன்னாடியே என்னோட தங்கச்சியை அடிக்கிற..” என்று அவனிடம் சண்டைக்கு வந்தான்.
அவனின் பேச்சைக் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. அவனின் கவனம் முழுக்க அவளின் மீதே நிலைத்தது. அவன் அடித்த அடியில் அவளின் கன்னங்கள் சிவக்கவே விழிநீர் முத்துகள் விழியிலிருந்து உதிர அவனையே இமைக்காமல் பார்த்தாள் மதுமதி..
அவளை அடித்தபிறகு தன்னோடு கையில் வலியை உணர்ந்தான் கிருஷ்ணா. விழிநீரோடு நிற்கும் மனையாளைப் பார்க்கும்பொழுது அவனின் மனமும் கலங்கத்தான் செய்தது. ஆனால் அதற்காக அவன் அமைதியாக இருந்தால் இத்தனை நாள் பிரிவிற்கும், காத்திருப்பிற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே என்றது அவனின் மனம்!
"கண்ணனின் குரலோசை! ராதையின் இதழோசை!" கதைக்கு முதல் Teaser உடன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இதில் யாரு கண்ணன் யார் ராதை என்று நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க. உங்களோட கருத்துகளை மறக்காமல் பகிருங்கள்..
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
அவனின் அழுத்தமான காலடி ஓசை தன்னை நெருங்க அவளின் மனம் பந்தைய குதிரையின் வேகத்தில் ஓடத் தொடங்கியது. அவளின் அருகே சென்றவனின் கைகள் அவனின் அனுமதியின்றி அவளின் கன்னத்தைப் பதம் பார்த்தது..
“பாளர்” என்ற சத்தம் அங்கிருந்த அனைவரையும் கதிகலங்க செய்தது.. அவனின் கைகள் தன் கன்னத்தைப் பதம் பார்க்கும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. அவளோ கைகளால் கன்னத்தைப் பிடித்தபடியே சிலையென நின்றிருந்தாள். அந்தச் சத்தம்கேட்டு நிர்மலாவும், விஷ்ணுவும் அவனின் அறைக்கு வந்தனர்.
அவனிடம் இப்படியொரு கோபத்தை எதிர்பார்க்காதவன், “என்னோட கண் முன்னாடியே என்னோட தங்கச்சியை அடிக்கிற..” என்று அவனிடம் சண்டைக்கு வந்தான்.
அவனின் பேச்சைக் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. அவனின் கவனம் முழுக்க அவளின் மீதே நிலைத்தது. அவன் அடித்த அடியில் அவளின் கன்னங்கள் சிவக்கவே விழிநீர் முத்துகள் விழியிலிருந்து உதிர அவனையே இமைக்காமல் பார்த்தாள் மதுமதி..
அவளை அடித்தபிறகு தன்னோடு கையில் வலியை உணர்ந்தான் கிருஷ்ணா. விழிநீரோடு நிற்கும் மனையாளைப் பார்க்கும்பொழுது அவனின் மனமும் கலங்கத்தான் செய்தது. ஆனால் அதற்காக அவன் அமைதியாக இருந்தால் இத்தனை நாள் பிரிவிற்கும், காத்திருப்பிற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே என்றது அவனின் மனம்!