அடேய் என்னடா இப்படி கிளம்பிட்டீங்க... இனிமே என் கட்சிக்காரன்… ஒழுங்காக யூ டி தரவில்லை என்றால் மிளகாய் பொடி, பெப்பர் பொடி தண்டனையாமே…?!!!!!!?
ஒன்றும் அறியா, அப்பாவி குயந்த புள்ளையை இப்படியா மிரட்டுவது...? மிளகாய் பொடி தூவி சாப்பிட அவனென்ன சிக்கென் வறுவலா…? பெப்பர் தூவி சாப்பிட அவனேன்ன முட்டை பொரியலா…?
நேற்று எப்படி எல்லாம் காலில் விழுந்து கதறி அழுதான் என் கட்சிக்காரன்.. இரக்கமில்லையா உனக்கு...
இப்படித்தான் ... 3 மாதத்திற்கு முன்பு இதே எனது கட்சிக்காரன் இதே போன்று லேட்டாக யூடி தந்து மன்னிப்பு கேட்டான்... அப்போது பிள்ளைக்கு வலிக்க கூடாது என்று முன்னாடி சிரித்து விட்டு பின்னாடி போய் அவனை வண்டை வண்டையாக திட்டி தீர்த்து விட்டனர்.. அந்த மனிதாபிமானம் இல்லை தங்களுக்கு...
போற இடங்களில் எல்லாம் gate போட்டால் அவனும் என்னத்தான் செய்வான்...?????????????
வந்தோமா யூ டியை படிச்சோமான்னு போயிக்கிட்டே இருக்கனும்…
வெறித்தனமா உருட்டு கட்டைய வச்சிக்கிட்டு வெறிக்க வெறிக்க பார்க்கிறது…,
கையில் கல்லை எடுத்துகிட்டு கடு கடுன்னு காண்டாகுறது..,
முட்டு சந்துல நின்னுகிட்டு முறை முறைன்னு முறைக்கிறது….
இதுபோல எதுவும் டிரை பண்ண படாது…
ஏன்னா சனி ஞாயிறு க்கு நோ யூடி….
இன்னைக்கு ராத்திரி்யே ஊருக்கு நான் ஓடி…
திங்கள் கிழமை வருவேன் உங்களைத் தேடி….
விடைபெறுகிறேன் ஜெண்டில் லேடி….
சாரல் லாக மாறிய சாரா….
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன். --சாரல்
அத்தியாயம் – 22
வைத்தியநாதன் ,ஒரு கணம் ஸ்தம்பித்து போனார்… இப்போ அவர் நின்று கொண்டிருந்த சூழ்நிலை அவருக்கு புதுசு… இதுவரை எவ்வளவோ அவமானப் பட்டபோதும் ,ஒதுங்கி மட்டுமே போன அவரோட தங்கை வேதவல்லி , ஆராவுக்காக ,எல்லா உறவையும் முடித்து கொள்ளும் அளவுக்கு வந்து விட்டார், என்பது முதல் அதிர்ச்சி...
ஆடிட்டிங்கின் போது ஏற்படும் அஃபிஷ்ஷியல் பிரச்சனையை தவிர, வேறு, எங்கேயும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது இல்லை. அதாவது வந்தாலும் எதிர்த்து நிக்க மாட்டார்… அதுவும் கற்புக்கு வாக்கப்பட்ட பிறகு, அவர் கிட்டயிருந்து எஸ்கேப் ஆகறதுக்கு எழுநூறு வழிகள் மட்டுமே கத்து வச்சிருந்தவருக்கு, முதன் முதலாக பிரச்சனையை எதிர்கொண்டு நின்றாக வேண்டிய சூழல், மனதில் சூறாவளியாக சுழன்றடித்தது…. அதுலயும் கூட பிறந்தவள் வீக் பாய்ண்ட் தேடி அடிச்சதில்… ஓடவும் முடியல ஒளியவும் முடியல…
சீமா கொஞ்சம் அடாவடியாக இருந்தாலும், இளா மேல வச்ச ஆசை தான் , இங்க கொண்டுட்டு வந்துருக்கனும். அந்த பொண்ணு ஆரா மேல எதுக்கு கோவப்பட்டா கற்பகம்… ? ஒன்னியும் புரியலையே…??
முன்னாடியே இளா, சீமா பற்றி கொடுத்த வார்னிங்கை, கொஞ்சம் சீரியஸாக எடுத்திருக்க வேண்டுமோ ….? ரீதியில் ஏதேதோ கேள்விகள் துரத்தியது… மகளுக்கு அந்த இளா பையன் மேல ஆசை… அம்மாக்கு அவன் சொத்து மேல ஆசை… இதுங்களோட ஆசையே என் துன்பத்திற்கு காரணம்…ஒரு வழியா முடிவுக்கு வந்துவிட்டார்.
ஆத்தாளும் மகளும் நம்மள மதிச்சு ஒன்னும் சொல்ல மாட்டாளுங்க… இதுல வேதா , நம்மள கோர்த்து விட்டிட்டுதே…சரி போயி பார்ப்போம்…
வண்டலூர் ஜூ வில் சிங்கத்துக்கு சோறு போட போகும் அப்பரண்டீஸ் பீலிங்கில் , பொண்டாட்டி, பொண்ணு அவளோட அல்லகைன்னு எல்லாரும் முகாமிட்டிருந்த , வேதாவின் அறைக்குள் நுழைந்தார்…..
உள்ளே நுழைந்த வைத்தியநாதனை கண்டதும், கற்பகம்,
“நீங்க எங்க இங்க…..?”
“நீங்க எல்லாம் இங்க வந்ததுனால, வர வேண்டியதா போச்சு…..? லைட்டாக கோபம் கலந்த பார்வை யுடன்..”
(வைத்தி…. என்னய்யா நீ….? இன்னும் நல்லா விறைப்பா முறை……)
“யாரு அந்த கிரிஷும் அவன் பொண்டாட்டி அவனோட அந்த கூஜாவும் வர சொன்னாங்களா….?”
“இல்லை, என் தங்கச்சி, வர சொன்னுச்சு…. நீங்க ரெண்டு பேரும், இப்ப எதுக்கு இங்க வந்தீங்க…வந்து என்ன பிரச்சனை பண்ணின..? எங்க போறன்னு , ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லாமலே காலையில கிளம்பிட்டே…?”
“ஓஹோ வந்துட்டாளா….? என் அருமை நாத்தனார்….. மரியாதை தெரியாதவள்…. எப்படி இருந்த என் பொண்ணை ஒரே ராத்திரியில இப்படி இடிஞ்சு போயி நிக்கிற அளவுக்கு பண்ணிட்டாங்க….என் பொண்ணை இப்படி ஆக்கின அத்தனை, பேரும் எனக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்…ஏன் உங்க தங்கச்சி வீட்டுக்கு நான் வர உரிமை இல்லையா..? உங்க தங்கச்சி மவன் , குத்தி காட்டுறான் இது என் வீடு இல்லைன்னு… அந்த அனாதை கழுத ரோஜா நக்கலடிக்குறா , இன்னும் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கேன்னு… இதையெல்லாம் கேட்க்காம…, ஏன் இங்க வந்தேன்னு என்ன கேக்குறீங்க…? முன்னாடி எனக்கு பதிலை சொல்லுங்க.”
'காலையில கட்டின புருஷனுக்கு காப்பி தண்ணி கூட குடுக்காமா, போயிட்டு வரேன்னு கூட சொல்லிக்காம போயிட்டியேன்னு ஒரு பாவப்பட்ட மனுஷன் , பக்குவமா கேட்கிறாரு…அவருக்கு பதில் சொல்லாம, இந்தம்மாவுக்கு அது கேக்குற கேள்விக்கு வேற தனியா சொல்லனுமாமே பதிலை….'
“என்ன நடந்தது சீமா…..? நீயாவது சொல்லு….?”
“என்கிட்ட எதுவும் கேக்காதீங்கப்பா ..பிளீஸ்….”
ஆத்தாவுக்கு தப்பாமா பொறந்திருக்கு பாரு ஆயா…. ம்கும்….. இது ஆவுற கதை இல்லை… முடிவுக்கு வந்தவராய்….
“என் கூட மாடிக்கு வாங்க, வேதாகிட்ட கொஞ்சம் பேசணும்… பேசிட்டு வீட்டுக்கு கிளம்புவோம்….”
இங்க கெஞ்சி கேட்டாலும் மதிச்சு யாரும் பதில் சொல்ல போறது இல்லை, லீடர்க்கு அடங்காத பசங்கள , மிஸ்சுக்கிட்ட மாட்டி விடறது போல வேதா கிட்டயே , கோர்த்து விடலாம்ன்னு முடிவுக்கு வந்துவிட்டார்… அ தோடு, மாசா மாசம், லம்ப்பாக படியளக்கும், கிருஷ், இளா என்ற இரண்டு பெரிய கைகளை பகைச்சுக்க கூடாது என்ற சுயநலமும் இருந்தது….
“ஏன் உங்க தங்கச்சி மகாராணி ,இறங்கி வந்து என்கிட்ட பேசமாட்டாளாமா…..?”
கேள்வி தோரனையா இருந்தாலும், கிளம்பிட்டாங்க மாடிக்கு, எல்லாரையும் தோரணம் கட்டி தொங்க விடனும்ங்ற முடிவோட…
கிருஷ்ஷின் ரூமுக்கு எல்லாரும் படியேற…..
இன்னொரு ரூமில் ஆரா , இளாவின் கையை பிடித்துகொண்டு , இன்னதென்று சொல்லாமல் அழுகை…. இவ்வளவு அன்பும், பாசமும் கொண்ட இந்த உறவுகள், உரிமை இல்லாமல் போய்விட்டதோன்னு ஆதங்கம்…. எப்போதும் கொடுக்கிறவங்க இயல்பா இருந்தாலும், அதை வாங்கிக்கொள்பவர்களுக்கு என்று ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்….. அதுதான் இப்போது அவளுக்கு… கற்பகத்தின் ஆக்ரோஷம் ,ஆராவிடம் அதீதமாக மன அழுத்தத்தையும், நமக்கே நமக்காய் உரிமை கொண்டாட சொந்தங்கள் இல்லாத அனாதை உணர்வையும் தூண்டிவிட்டிருந்தது… உபயம் மாதவிடாய் ஹார்மோன்கள்…. அது எப்போதும் இருக்கிறதை இல்லைன்னு காட்டுறதுல எக்ஸ்பர்ட் ஆச்சே…
இளா, விற்க்கு , ஆராவை அழ வைத்த கற்பகத்தின் மேல் தான் கொலை வெறி…. எப்போதும் ஆரா இப்படித்தான் ஏதாவது திடீர் அதிர்ச்சி ஏற்பட்டால் , அது அவளை அப்படியே ஸ்விட்ச் ஆஃப் செய்து விடும் என்பதால் அவளை விட்டு நகர மனமில்லாமல் உட்கார்ந்திருந்தான்…
வைத்தி அண்ட் கோ எண்ட்ரி கொடுத்ததும், ரோஜா வந்து ,ஆராவையும் இளாவை யும் அழைத்து போனாள்…
இருவருக்குமே எந்த உள்நாட்டு போரிலும் பங்கேற்க முடியாத மன நிலை…. அழைத்து வர சொன்ன வேதாவிற்காய் போனார்கள்…
ஒன்றும் அறியா, அப்பாவி குயந்த புள்ளையை இப்படியா மிரட்டுவது...? மிளகாய் பொடி தூவி சாப்பிட அவனென்ன சிக்கென் வறுவலா…? பெப்பர் தூவி சாப்பிட அவனேன்ன முட்டை பொரியலா…?
நேற்று எப்படி எல்லாம் காலில் விழுந்து கதறி அழுதான் என் கட்சிக்காரன்.. இரக்கமில்லையா உனக்கு...
இப்படித்தான் ... 3 மாதத்திற்கு முன்பு இதே எனது கட்சிக்காரன் இதே போன்று லேட்டாக யூடி தந்து மன்னிப்பு கேட்டான்... அப்போது பிள்ளைக்கு வலிக்க கூடாது என்று முன்னாடி சிரித்து விட்டு பின்னாடி போய் அவனை வண்டை வண்டையாக திட்டி தீர்த்து விட்டனர்.. அந்த மனிதாபிமானம் இல்லை தங்களுக்கு...
போற இடங்களில் எல்லாம் gate போட்டால் அவனும் என்னத்தான் செய்வான்...?????????????
வந்தோமா யூ டியை படிச்சோமான்னு போயிக்கிட்டே இருக்கனும்…
வெறித்தனமா உருட்டு கட்டைய வச்சிக்கிட்டு வெறிக்க வெறிக்க பார்க்கிறது…,
கையில் கல்லை எடுத்துகிட்டு கடு கடுன்னு காண்டாகுறது..,
முட்டு சந்துல நின்னுகிட்டு முறை முறைன்னு முறைக்கிறது….
இதுபோல எதுவும் டிரை பண்ண படாது…
ஏன்னா சனி ஞாயிறு க்கு நோ யூடி….
இன்னைக்கு ராத்திரி்யே ஊருக்கு நான் ஓடி…
திங்கள் கிழமை வருவேன் உங்களைத் தேடி….
விடைபெறுகிறேன் ஜெண்டில் லேடி….
சாரல் லாக மாறிய சாரா….
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன். --சாரல்
அத்தியாயம் – 22
வைத்தியநாதன் ,ஒரு கணம் ஸ்தம்பித்து போனார்… இப்போ அவர் நின்று கொண்டிருந்த சூழ்நிலை அவருக்கு புதுசு… இதுவரை எவ்வளவோ அவமானப் பட்டபோதும் ,ஒதுங்கி மட்டுமே போன அவரோட தங்கை வேதவல்லி , ஆராவுக்காக ,எல்லா உறவையும் முடித்து கொள்ளும் அளவுக்கு வந்து விட்டார், என்பது முதல் அதிர்ச்சி...
ஆடிட்டிங்கின் போது ஏற்படும் அஃபிஷ்ஷியல் பிரச்சனையை தவிர, வேறு, எங்கேயும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது இல்லை. அதாவது வந்தாலும் எதிர்த்து நிக்க மாட்டார்… அதுவும் கற்புக்கு வாக்கப்பட்ட பிறகு, அவர் கிட்டயிருந்து எஸ்கேப் ஆகறதுக்கு எழுநூறு வழிகள் மட்டுமே கத்து வச்சிருந்தவருக்கு, முதன் முதலாக பிரச்சனையை எதிர்கொண்டு நின்றாக வேண்டிய சூழல், மனதில் சூறாவளியாக சுழன்றடித்தது…. அதுலயும் கூட பிறந்தவள் வீக் பாய்ண்ட் தேடி அடிச்சதில்… ஓடவும் முடியல ஒளியவும் முடியல…
சீமா கொஞ்சம் அடாவடியாக இருந்தாலும், இளா மேல வச்ச ஆசை தான் , இங்க கொண்டுட்டு வந்துருக்கனும். அந்த பொண்ணு ஆரா மேல எதுக்கு கோவப்பட்டா கற்பகம்… ? ஒன்னியும் புரியலையே…??
முன்னாடியே இளா, சீமா பற்றி கொடுத்த வார்னிங்கை, கொஞ்சம் சீரியஸாக எடுத்திருக்க வேண்டுமோ ….? ரீதியில் ஏதேதோ கேள்விகள் துரத்தியது… மகளுக்கு அந்த இளா பையன் மேல ஆசை… அம்மாக்கு அவன் சொத்து மேல ஆசை… இதுங்களோட ஆசையே என் துன்பத்திற்கு காரணம்…ஒரு வழியா முடிவுக்கு வந்துவிட்டார்.
ஆத்தாளும் மகளும் நம்மள மதிச்சு ஒன்னும் சொல்ல மாட்டாளுங்க… இதுல வேதா , நம்மள கோர்த்து விட்டிட்டுதே…சரி போயி பார்ப்போம்…
வண்டலூர் ஜூ வில் சிங்கத்துக்கு சோறு போட போகும் அப்பரண்டீஸ் பீலிங்கில் , பொண்டாட்டி, பொண்ணு அவளோட அல்லகைன்னு எல்லாரும் முகாமிட்டிருந்த , வேதாவின் அறைக்குள் நுழைந்தார்…..
உள்ளே நுழைந்த வைத்தியநாதனை கண்டதும், கற்பகம்,
“நீங்க எங்க இங்க…..?”
“நீங்க எல்லாம் இங்க வந்ததுனால, வர வேண்டியதா போச்சு…..? லைட்டாக கோபம் கலந்த பார்வை யுடன்..”
(வைத்தி…. என்னய்யா நீ….? இன்னும் நல்லா விறைப்பா முறை……)
“யாரு அந்த கிரிஷும் அவன் பொண்டாட்டி அவனோட அந்த கூஜாவும் வர சொன்னாங்களா….?”
“இல்லை, என் தங்கச்சி, வர சொன்னுச்சு…. நீங்க ரெண்டு பேரும், இப்ப எதுக்கு இங்க வந்தீங்க…வந்து என்ன பிரச்சனை பண்ணின..? எங்க போறன்னு , ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லாமலே காலையில கிளம்பிட்டே…?”
“ஓஹோ வந்துட்டாளா….? என் அருமை நாத்தனார்….. மரியாதை தெரியாதவள்…. எப்படி இருந்த என் பொண்ணை ஒரே ராத்திரியில இப்படி இடிஞ்சு போயி நிக்கிற அளவுக்கு பண்ணிட்டாங்க….என் பொண்ணை இப்படி ஆக்கின அத்தனை, பேரும் எனக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்…ஏன் உங்க தங்கச்சி வீட்டுக்கு நான் வர உரிமை இல்லையா..? உங்க தங்கச்சி மவன் , குத்தி காட்டுறான் இது என் வீடு இல்லைன்னு… அந்த அனாதை கழுத ரோஜா நக்கலடிக்குறா , இன்னும் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கேன்னு… இதையெல்லாம் கேட்க்காம…, ஏன் இங்க வந்தேன்னு என்ன கேக்குறீங்க…? முன்னாடி எனக்கு பதிலை சொல்லுங்க.”
'காலையில கட்டின புருஷனுக்கு காப்பி தண்ணி கூட குடுக்காமா, போயிட்டு வரேன்னு கூட சொல்லிக்காம போயிட்டியேன்னு ஒரு பாவப்பட்ட மனுஷன் , பக்குவமா கேட்கிறாரு…அவருக்கு பதில் சொல்லாம, இந்தம்மாவுக்கு அது கேக்குற கேள்விக்கு வேற தனியா சொல்லனுமாமே பதிலை….'
“என்ன நடந்தது சீமா…..? நீயாவது சொல்லு….?”
“என்கிட்ட எதுவும் கேக்காதீங்கப்பா ..பிளீஸ்….”
ஆத்தாவுக்கு தப்பாமா பொறந்திருக்கு பாரு ஆயா…. ம்கும்….. இது ஆவுற கதை இல்லை… முடிவுக்கு வந்தவராய்….
“என் கூட மாடிக்கு வாங்க, வேதாகிட்ட கொஞ்சம் பேசணும்… பேசிட்டு வீட்டுக்கு கிளம்புவோம்….”
இங்க கெஞ்சி கேட்டாலும் மதிச்சு யாரும் பதில் சொல்ல போறது இல்லை, லீடர்க்கு அடங்காத பசங்கள , மிஸ்சுக்கிட்ட மாட்டி விடறது போல வேதா கிட்டயே , கோர்த்து விடலாம்ன்னு முடிவுக்கு வந்துவிட்டார்… அ தோடு, மாசா மாசம், லம்ப்பாக படியளக்கும், கிருஷ், இளா என்ற இரண்டு பெரிய கைகளை பகைச்சுக்க கூடாது என்ற சுயநலமும் இருந்தது….
“ஏன் உங்க தங்கச்சி மகாராணி ,இறங்கி வந்து என்கிட்ட பேசமாட்டாளாமா…..?”
கேள்வி தோரனையா இருந்தாலும், கிளம்பிட்டாங்க மாடிக்கு, எல்லாரையும் தோரணம் கட்டி தொங்க விடனும்ங்ற முடிவோட…
கிருஷ்ஷின் ரூமுக்கு எல்லாரும் படியேற…..
இன்னொரு ரூமில் ஆரா , இளாவின் கையை பிடித்துகொண்டு , இன்னதென்று சொல்லாமல் அழுகை…. இவ்வளவு அன்பும், பாசமும் கொண்ட இந்த உறவுகள், உரிமை இல்லாமல் போய்விட்டதோன்னு ஆதங்கம்…. எப்போதும் கொடுக்கிறவங்க இயல்பா இருந்தாலும், அதை வாங்கிக்கொள்பவர்களுக்கு என்று ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்….. அதுதான் இப்போது அவளுக்கு… கற்பகத்தின் ஆக்ரோஷம் ,ஆராவிடம் அதீதமாக மன அழுத்தத்தையும், நமக்கே நமக்காய் உரிமை கொண்டாட சொந்தங்கள் இல்லாத அனாதை உணர்வையும் தூண்டிவிட்டிருந்தது… உபயம் மாதவிடாய் ஹார்மோன்கள்…. அது எப்போதும் இருக்கிறதை இல்லைன்னு காட்டுறதுல எக்ஸ்பர்ட் ஆச்சே…
இளா, விற்க்கு , ஆராவை அழ வைத்த கற்பகத்தின் மேல் தான் கொலை வெறி…. எப்போதும் ஆரா இப்படித்தான் ஏதாவது திடீர் அதிர்ச்சி ஏற்பட்டால் , அது அவளை அப்படியே ஸ்விட்ச் ஆஃப் செய்து விடும் என்பதால் அவளை விட்டு நகர மனமில்லாமல் உட்கார்ந்திருந்தான்…
வைத்தி அண்ட் கோ எண்ட்ரி கொடுத்ததும், ரோஜா வந்து ,ஆராவையும் இளாவை யும் அழைத்து போனாள்…
இருவருக்குமே எந்த உள்நாட்டு போரிலும் பங்கேற்க முடியாத மன நிலை…. அழைத்து வர சொன்ன வேதாவிற்காய் போனார்கள்…